பதிவு: வியாழக்கிழமை, மே 07, 2026, சித்திரை, 24, பாரபவ வருடம் 04:25 AM
சென்னை,
தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்எல்ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்' (தவெக), தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது.
அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் தவெக கோரியிருந்தது. இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய், நேற்று பிற்பகல் 1 மணியளவில் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில், ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் நிபந்தனைகளை எப்படிக் கையாள்வது, அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்களிப்பு வழங்குவது மற்றும் பதவியேற்பு விழா குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் குழுவினர் நேரில் வந்து தமது ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.
ஆலோசனை முடிந்து பிற்பகல் 3 மணியளவில் பனையூர் அலுவலகத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். சரியாக 3.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை அவர் அடைந்தார். அங்கு ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் பூங்கொத்து கொடுத்து விஜய்யை வரவேற்றார். தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்த விஜய்க்கு, ஆளுநர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், 108 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் விஜய் முறைப்படி சமர்ப்பித்தார்.
புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளுநருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு முக்கிய சட்ட நடைமுறையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அதாவது, தவெக.வுக்கு ஆதரவு அளிக்கும் 118 எம்எல்ஏக்கள் அடங்கிய பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்தப் பட்டியலை ஆய்வு செய்த பிறகே, முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தவெகவை பொறுத்த வரை பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு, அதன்பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், ஆளுநர் முழு பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்ததால், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று 7-ம் தேதி விஜய் முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறாமல் தள்ளிப்போகிறது.
எனினும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆளுநர் எம்எல்ஏ.க்களின் முழு பட்டியலைக் கேட்டுள்ளதால், அதை தயாரித்து வழங்கும் பணிகளில் தவெக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து திரும்பிய விஜய், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து ஆதரவு கடிதங்களைப் பெற்று, ஓரிரு தினங்களில் முழு பட்டியலையும் ஆளுநரிடம் வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆளுநரின் அழைப்பு எப்போது வரும்? அடுத்தகட்டமாகப் பதவியேற்பு விழா எந்தத் தேதியில் அமையும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று தவெக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விஜய் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட ஆலோசனைக் குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் நேற்று இரவு தவெக சட்ட ஆலோசனைக் குழுவினர் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை 2-வது முறையாகச் சந்தித்துப் பேசினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஆட்சி அமைப்பதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வியாழன், 7 மே, 2026
தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க அ.தி.மு.க. தீவிரம் - தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை
பதிவு: வியாழக்கிழமை, மே 07, 2026, சித்திரை, 24, பாரபவ வருடம் 03:15 AM
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல் த.வெ.க. உள்ளது. இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த சூழலில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க.வில் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என தகவல் வெளியானது.
இதனையொட்டி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது.
ஆனால் திடீரென இந்த கூட்டம் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. . இந்த நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் நேற்று காலை தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ., பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பிறகு கே.பி. முனுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, அ.தி.மு.க. பெரிய இயக்கம் என்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆதரவு கிடையாது என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
இந்த சூழலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே உயர்மட்ட அளவில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
காலை முதலே கட்சியின் மூத்த தலைவர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது என கூறப்படுகிறது.
த.வெ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அ.தி.மு.க.வுக்கு வெளியில் இருந்து தி.மு.க. ஆதரவு அளிக்க முடிவு என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனினும் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இதனால், அக்கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. பக்கம் சென்று விடுவர்.
அந்த வகையில், தி.மு.க.வுக்கு 68 இடங்கள் இருக்கும். எனினும், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்போது, மொத்த எண்ணிக்கை 121 ஆக இருக்கும். பெரும்பான்மையாக ஆட்சியமைக்க 118 இடங்கள் வேண்டும்.
அந்த வகையில், போதிய அளவிலான இடங்களை இந்த கூட்டணி கொண்டிருக்கும். இதனால், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் உள்ளது.
தி.மு.க. வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுவதால், அரசு அமைப்பதற்கு ஆதரவு கோரி அதிமுக தரப்பு திமுகவிடம் மறைமுகமான தூதுகளை அனுப்பியதாக தகவல்கள் வெளியானது.
எனினும், அதிமுகவின் இந்த முன்மொழிவை திமுக தலைமை நிராகரித்துவிட்டதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் திமுக உறுதியாக உள்ளது என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
திமுக - அதிமுக கூட்டணி எனும் திகில் கிளப்பும் செய்தி றெக்கை கட்டி பறக்கும் நிலையில், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காங்கிரஸ் கட்சி (மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள்) இழைத்த துரோகத்தையும் மீறி, ஒரு வலிமையான எதிர்க்கட்சியாகச் செயல்படவே திமுக முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்குமாறு அதிமுக தரப்பு பாஜகவை வற்புறுத்தி வருகிறது. இது மக்களின் தேர்தல் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகம் வெல்லும் என்று நம்புவோம்’ எனத் தெரிவித்து இப்போது பந்தினை அதிமுக பக்கம் தள்ளிவிட்டுள்ளார்.
ஒரு பக்கம் திமுக - அதிமுக கூட்டணி பற்றிய தகவல்கள் தடதடக்கும் நிலையில், மறுபக்கம் திமுக இந்த செய்திகளை புறந்தள்ளியுள்ளது. ஆனாலும், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து என்னவேண்டுமானாலும் நடக்கும் என்பதால், எதிர்பார்ப்புகள் இப்போதே எகிறத் தொடங்கிவிட்டது.
புதன், 6 மே, 2026
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகிற 8-ந்தேதி வெளியாகுமா? - பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை முக்கிய தகவல்
பதிவு: புதன்கிழமை, மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 09:15 AM
சென்னை,
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 8-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
மாணவ- மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை சார்ந்த சில அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலை பெறவேண்டும்.
இதனால் திட்டமிட்டபடி வருகிற 8-ந்தேதி பிளஸ்-2 முடிவுகளை வெளியிட முடியாது.
புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றனர்.
தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக முடிவு - இன்று அவசர ஆலோசனை
பதிவு: புதன்கிழமை, மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 09:10 AM
சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
ஆனால் 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம். மேலும், சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்கெடுப்பும் நடைபெறும்.
இதில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ள முடியும்; இதனால் ஒரு தொகுதியை த.வெ.க. இழக்கும். எனவே த.வெ.க.வுக்கு சட்டசபையில் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும்.
பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும். தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும்.
த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய அரசியல் நிலவரப்படி, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு தர வாய்ப்பு அதிகம்.
ஏனெனில் காங்கிரசின் ஒரு பிரிவு முன்பே த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. மேலும் த.வெ.க. வெற்றிக்குப்பின் ராகுல் காந்தி, விஜய்க்கு தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதன்படி அ.தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகளையும் இணைக்க வேண்டிய நிலை த.வெ.க.வுக்கு உள்ளது. அதில் 4 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள பா.ம.க., த.வெ.க.வுடன் கூட்டணி சேர ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. எனவே எந்த நேரத்திலும் அன்புமணி ராமதாஸ்-விஜய் சந்திப்பு நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே த.வெ.க.வுடன் சேர்ந்தால் அமைச்சரவை பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்த கட்சிகளிடம் எல்லாம் உள்ளது. எனவே அமைச்சர் பதவி இல்லாமல் இந்த கட்சிகள் த.வெ.க.வுடன் இணைய வாய்ப்பு மிக குறைவு.
இவ்வாறு கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்கப்பட்டால், தமிழக அரசியலில் இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.
இதனிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் அந்தஸ்தை இழந்ததுடன், மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. எனவே அரசியலில் தங்களது நிலையை வலுப்படுத்தவும், மக்களுக்கான பணிகளை தொடரவும் விஜய்க்கு ஒரு ஆண்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்தும் அந்த கட்சிக்குள் நிலவுகிறது.
ஒருவேளை அ.தி.மு.க. ஆதரவு அளித்தால் த.வெ.க. மற்ற கட்சிகளின் ஆதரவு எதுவும் தேவைப்படாது. அதே நேரத்தில் த.வெ.க.வும் யாருக்கும் ஆட்சியில் பங்கு தரதேவையில்லை. சுயமாகவே ஆட்சியை நடத்தலாம்.
‘ஜோசப் விஜய் ஆகிய நான்..’ - நாளை முதல்-அமைச்சராக பதவியேற்கிறார் - கவர்னருடன் இன்று சந்திப்பு
பதிவு: புதன்கிழமை, மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 08:55 AM
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.
இதனிடையே த.வெ.க. தலைவர் விஜய், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் வெற்றி குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் (50 சதவீதம் + 1) 118 தொகுதிகளை தனிக்கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் 108 தொகுதிகளை மட்டுமே வைத்துக் கொண்டு மற்ற கட்சிகளின் ஆதரவை பெற த.வெ.க. தீவிரமாக முயற்சித்து வருகிறது. எனவே தங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் கேட்டு, கவர்னருக்கு விஜய் இ-மெயில் அனுப்பியுள்ளார்.
விஜய், 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே (பெரம்பூர், திருச்சி கிழக்கு) வெற்றி பெற்றிருக்கிறார்.
அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டு வருகிறது.
எனவே அதில் ஒரு தொகுதி குறைந்து 107 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அடுத்ததாக சபாநாயகராக ஒருவரை நியமிக்க வேண்டும். அதிலும் ஒரு சீட் குறைந்து 106 ஆக குறைகிறது.
எனவே த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 12 இடங்கள் வேண்டும். இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் ஆதரவுத.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் டெல்லி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஏற்ப தாங்கள் செயல்படுவோம் என்று எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கிரிஷ் சோடங்கர் டெல்லி சென்று இந்த விவரத்தை தலைமையிடம் தெரிவித்தார். இதனையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் நேற்று இரவு ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டின் அரசியல் சூழல், குறிப்பாக தேர்தலுக்கு பிந்தைய நிலைமை குறித்து விவாதிக்க கூட்டம் நடத்தினோம்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவளிக்குமாறு த.வெ.க. தலைவர் விஜய், அகில இந்திய தேசிய காங்கிரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கிடைத்த மக்கள் ஆணை, அரசியலமைப்பை அதன் எழுத்து மற்றும் உணர்வின்படி பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு மதசார்பற்ற அரசாங்கத்துக்கே என்பதில் இந்திய தேசிய காங்கிரஸ் தெளிவாக உள்ளது.
எந்த வகையிலும் பா.ஜனதாவும், அதன் கைப்பாவைகளும் தமிழ் நாடு அரசை நடத்துவதை இந்திய தேசிய காங்கிரஸ் அனுமதிக்காது என் பதில் உறுதியாக உள்ளது.
அதன்படி, தேர்தல் தீர்ப்பில் பிரதிபலித்துள்ள மாநிலத்தின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (புதன்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடக்கிறது. இதில் முடிவில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
பெரும்பாலும் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆத ரவுக்கரம் நீட்டும் என்றே தெரிகிறது.கவர்னருடன் சந்திப்புஇந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் இன்று (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வரவுள்ளார்.
அதிக இடங்களை வென்ற கட்சி என்ற முறையில் விஜய்க்கு கவர்னர் அழைப்பு விடுப்பார். அப்போது புதிய அமைச்சரவை பதவி ஏற்புக்கான அனுமதியை கவர்னர் வழங்குவார். மற்ற கட்சிகளின் ஆதரவுக் கடிதமோ. அறிக்கையோ இருந்தால், அதை கவர்னரிடம் விஜய் அளிப்பார்.
முழு பெரும்பான்மை பெறாத கட்சி, மற்ற கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை கொடுத்து பெரும்பான்மையை கவர்னரிடம் காட்டினாலும், பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்துக்காட்ட வேண்டியது கட்டாயமாகும். எனவே 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தாலும், த.வெ.க.வால் அரியணை ஏற முடியும்.
நாளை அமைச்சரவை பதவி ஏற்புஅந்த வகையில்தான் நாளை அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார் போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை நேற்று அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நாளை காலையில் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதற்கு 5 ஆயிரம் பேரை அழைக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
“ஜோசப் விஜய் எனும் நான்..”பதவி ஏற்பு நிகழ்ச்சியில், அமைச்சரவைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு தலைமைச்செயலாளர் அழைப்பு விடுப்பார்.
முதலில் விஜய் மேடைக்கு வந்து, 'சி.ஜோசப் விஜய் எனும் நான்...' என்று முதல்-அமைச்சருக்கான பதவிப்பிரமாணத்தையும், ரகசியகாப்பு பிரமாணத்தையும் ஏற்றுக்கொள்வார்.
அதன்பின்னர் ஒவ்வொரு அமைச்சராக வந்து பதவி ஏற்றுக்கொள்வார்கள். அமைச்சர்கள் பதவி ஏற்பு முடிந்ததும், யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை கவர்னர் மாளிகை, செய்திக்குறிப்பாக வெளியிடும்.
முதல்-அமைச்சர் விஜய்அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக விஜய் சென்னை கோட்டைக்கு வந்து, அவருக்கென்று தயார்படுத்தப்பட்டுள்ள அறைக்கு வந்து அரசு அலுவல்களை தொடங்குவார்.
அவருடன் அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கு வந்து தங்களின் அறைக்கு வருவார்கள். பின்னர் முதல்-அமைச்சர் விஜய், இடைக்கால சபாநாயகரை நியமித்து உத்தரவிடுவார்.
இடைக்கால சபாநாயகருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளிலும் உள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சட்டசபைக்கு வர அழைப்புவிடுக்கப்படும்.
இடைக்கால சபாநாயகர் குறிப்பிட்ட நாளில் அவர்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொள்வார்கள்.
இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் தமிழக பொதுத்துறை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.
இதனிடையே த.வெ.க. தலைவர் விஜய், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் வெற்றி குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் (50 சதவீதம் + 1) 118 தொகுதிகளை தனிக்கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் 108 தொகுதிகளை மட்டுமே வைத்துக் கொண்டு மற்ற கட்சிகளின் ஆதரவை பெற த.வெ.க. தீவிரமாக முயற்சித்து வருகிறது. எனவே தங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் கேட்டு, கவர்னருக்கு விஜய் இ-மெயில் அனுப்பியுள்ளார்.
விஜய், 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே (பெரம்பூர், திருச்சி கிழக்கு) வெற்றி பெற்றிருக்கிறார்.
அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டு வருகிறது.
எனவே அதில் ஒரு தொகுதி குறைந்து 107 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அடுத்ததாக சபாநாயகராக ஒருவரை நியமிக்க வேண்டும். அதிலும் ஒரு சீட் குறைந்து 106 ஆக குறைகிறது.
எனவே த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 12 இடங்கள் வேண்டும். இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் ஆதரவுத.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் டெல்லி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஏற்ப தாங்கள் செயல்படுவோம் என்று எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கிரிஷ் சோடங்கர் டெல்லி சென்று இந்த விவரத்தை தலைமையிடம் தெரிவித்தார். இதனையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் நேற்று இரவு ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டின் அரசியல் சூழல், குறிப்பாக தேர்தலுக்கு பிந்தைய நிலைமை குறித்து விவாதிக்க கூட்டம் நடத்தினோம்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவளிக்குமாறு த.வெ.க. தலைவர் விஜய், அகில இந்திய தேசிய காங்கிரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கிடைத்த மக்கள் ஆணை, அரசியலமைப்பை அதன் எழுத்து மற்றும் உணர்வின்படி பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு மதசார்பற்ற அரசாங்கத்துக்கே என்பதில் இந்திய தேசிய காங்கிரஸ் தெளிவாக உள்ளது.
எந்த வகையிலும் பா.ஜனதாவும், அதன் கைப்பாவைகளும் தமிழ் நாடு அரசை நடத்துவதை இந்திய தேசிய காங்கிரஸ் அனுமதிக்காது என் பதில் உறுதியாக உள்ளது.
அதன்படி, தேர்தல் தீர்ப்பில் பிரதிபலித்துள்ள மாநிலத்தின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (புதன்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடக்கிறது. இதில் முடிவில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
பெரும்பாலும் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆத ரவுக்கரம் நீட்டும் என்றே தெரிகிறது.கவர்னருடன் சந்திப்புஇந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் இன்று (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வரவுள்ளார்.
அதிக இடங்களை வென்ற கட்சி என்ற முறையில் விஜய்க்கு கவர்னர் அழைப்பு விடுப்பார். அப்போது புதிய அமைச்சரவை பதவி ஏற்புக்கான அனுமதியை கவர்னர் வழங்குவார். மற்ற கட்சிகளின் ஆதரவுக் கடிதமோ. அறிக்கையோ இருந்தால், அதை கவர்னரிடம் விஜய் அளிப்பார்.
முழு பெரும்பான்மை பெறாத கட்சி, மற்ற கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை கொடுத்து பெரும்பான்மையை கவர்னரிடம் காட்டினாலும், பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்துக்காட்ட வேண்டியது கட்டாயமாகும். எனவே 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தாலும், த.வெ.க.வால் அரியணை ஏற முடியும்.
நாளை அமைச்சரவை பதவி ஏற்புஅந்த வகையில்தான் நாளை அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார் போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை நேற்று அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நாளை காலையில் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதற்கு 5 ஆயிரம் பேரை அழைக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
“ஜோசப் விஜய் எனும் நான்..”பதவி ஏற்பு நிகழ்ச்சியில், அமைச்சரவைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு தலைமைச்செயலாளர் அழைப்பு விடுப்பார்.
முதலில் விஜய் மேடைக்கு வந்து, 'சி.ஜோசப் விஜய் எனும் நான்...' என்று முதல்-அமைச்சருக்கான பதவிப்பிரமாணத்தையும், ரகசியகாப்பு பிரமாணத்தையும் ஏற்றுக்கொள்வார்.
அதன்பின்னர் ஒவ்வொரு அமைச்சராக வந்து பதவி ஏற்றுக்கொள்வார்கள். அமைச்சர்கள் பதவி ஏற்பு முடிந்ததும், யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை கவர்னர் மாளிகை, செய்திக்குறிப்பாக வெளியிடும்.
முதல்-அமைச்சர் விஜய்அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக விஜய் சென்னை கோட்டைக்கு வந்து, அவருக்கென்று தயார்படுத்தப்பட்டுள்ள அறைக்கு வந்து அரசு அலுவல்களை தொடங்குவார்.
அவருடன் அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கு வந்து தங்களின் அறைக்கு வருவார்கள். பின்னர் முதல்-அமைச்சர் விஜய், இடைக்கால சபாநாயகரை நியமித்து உத்தரவிடுவார்.
இடைக்கால சபாநாயகருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளிலும் உள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சட்டசபைக்கு வர அழைப்புவிடுக்கப்படும்.
இடைக்கால சபாநாயகர் குறிப்பிட்ட நாளில் அவர்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொள்வார்கள்.
இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் தமிழக பொதுத்துறை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? - கே.சி.வேணுகோபால், வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா? - காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிர பரிசீலனை
பதிவு: புதன்கிழமை, மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 05:25 AM
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
கேரள மாநில சட்டப் பேரவைக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(யுடிஎஃப்) 102 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. கடந்த 2016 முதல் 2010 வரை ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி(எல்டிஎஃப்) 35 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் கைப்பற்றியது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள் படு உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே முதல்வர் பதவியில் அமரப் போகும் காங்கிரஸ் தலைவர் யார் என்ற போட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த தலைவருமான வி.டி.சதீஷன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, மாநிலங்களவை எம்.பி. கே.சி.வேணுகோபால் ஆகியோர் முதல்வர் பதவியை பெறுவதற்கான பந்தயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் ஆட்சியை அமைப்பதற்கான பணியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், கேரள மாநில பொறுப்பாளருமான தீபா தாஸ் முன்ஷி உள்ளிட்டோர் திருவனந்தபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
அவர்கள் கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு எம்எல்ஏவை யும் தனித்தனியாக அழைத்துப் பேசவும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐயுஎம்எல்) தலைவர்களையும், மேலிடத் தலைவர்கள் சந்தித்து ஆலோசிக்கவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கேரள முதல்வரைத் தேர்வு செய்யும் முடிவை காங்கிரஸ் மேலிடத்துக்கு வழங்கும் தீர்மானம் இயற்றப்படும் என்று மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.
தோல்வி யாரால்?
இதனிடையே எல்டிஎஃப் கூட்டணி தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். எல்டிஎஃப் அரசில் இருந்த 13 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி கண்டுள்ளனர். இதுதொடர்பாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சார்பில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. மேலும் தோல்விக்குப் பின்னர் பத்திரிகையாளர்களை முதல்வர் பினராயி விஜயன் சந்திக்கவில்லை. விரைவில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளிப்பார் எனத் தெரிகிறது.
தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு - கூட்டணி ஆட்சி? தவெக தரப்பில் துவங்கியது தீவிர பேச்சுவார்த்தை
பதிவு: புதன்கிழமை, மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 05:25 AM
சென்னை,
சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக அதிமுக, காங்கிரஸுடன் தவெக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்கவில்லை.
தவிர, பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், தவெக பலம் 107 ஆக குறையும். இந்த சூழலில், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதால், அதிமுகவுடன் தவெக தரப்பு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு கோரி முதலில் காங்கிரஸ் கட்சியுடன்தான் தவெக பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களிடம் 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயன்றது. ஆனால், திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுக்கு ஆதரவு அளிக்க இக்கட்சிகளில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பார்களா என்று எஸ்.பி.வேலுமணியிடமும், பின்னர் சி.வி.சண்முகத்திடமும் செங்கோட்டையன் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்ததாககூறப்படுகிறது. அமைச்சர் பதவி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.
இதை அறிந்த பொதுச் செயலாளர் பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக சார்பாகவே நேரடியாக தவெகவுக்கு ஆதரவு தரலாம் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பிரச்சாரத்தின்போது பாஜகவை தங்கள் கொள்கை எதிரி என்று விஜய் கூறிவந்தார்.
அப்படி இருக்க, பாஜகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே தவெகவை ஆதரிப்பது சரியாக இருக்காது என்பதால், கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தை பழனிசாமி இன்று கூட்டியுள்ளார். தவெகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
காங்கிரஸுடன் பேச்சு
இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சியமைக்க விஜய் தங்களிடம் ஆதரவு கோரியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி இந்திய தேசிய காங்கிரஸிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசியலமைப்பை அதன் உணர்வின்படி பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்துக்கே மக்கள் அதிகாரம் அளித்துள்ளனர். இதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது.
எந்த வகையிலும் பாஜகவும், அதன் கைப்பாவைகளும் தமிழக அரசை நடத்துவதை காங்கிரஸ் அனுமதிக்காது என்பதிலும் உறுதியாக உள்ளது. அதன்படி, தேர்தல் தீர்ப்பில் பிரதிபலித்துள்ள மாநிலத்தின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்குமாறு தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவுடன் பேச்சு
இந்த சூழலில், திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டின் சென்னையில் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் லீமா ரோஸ் கூறியதாவது...
லால்குடியில் நான் (அதிமுக), வில்லிவாக்கத்தில் எனது மருமகன் ஆதவ் அர்ஜுனா (தவெக), புதுச்சேரி காமராஜ் நகரில் எனது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (லஜக) என்று ஒரே குடும்பத்தில் 3 பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியிருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இது இறைவன் கொடுத்த பரிசு ஆகும். எங்கள் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக - தவெக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என்று நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக ஆதரவு இல்லை?
இந்த நிலையில், பழனிசாமியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. இந்த சூழலில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது’’ என்றார்.
பிரதமர், ராகுலுக்கு நன்றி
இதற்கிடையே, தேர்தல் வெற்றிக்காக வாழ்த்திய தலைவர்களுக்கு விஜய் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி. மக்களின் நலனே எங்களது ஒரே இலக்கு.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழக மக்களின் நலனில் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம். இந்த முயற்சியில் மத்திய அரசின் ஆதரவை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றி. மக்கள் சேவையில் சிறந்து விளங்குவதிலும், கூட்டு ஒத்துழைப்பு அவசியமான நமது மாநிலத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் உறுதியுடன் இருப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில், தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது. அதற்கு தேவையான ஆதரவை பெற, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம், விஜய் தரப்பில் பேச்சு துவங்கியுள்ளது.
இதற்கிடையில், சென்னையில் நேற்று நடந்த த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக விஜய், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. வெற்றி பெற்ற த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள், சென்னை பனையூர் கட்சி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை சந்திக்க, விஜய் தன் நீலாங்கரை வீட்டில் இருந்து, முதல்வருக்கான போலீஸ் பாதுகாப்பு அணிவகுப்போடு பனையூர் அலுவலகம் வந்தார்.
தேர்தல் வெற்றிக்கு பின், முதல்முறையாக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜய்க்கு, அங்கு கூடியிருந்த த.வெ.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், அவர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்களை பெற்றுக் கொண்டார். அதன் அடிப்படையில், த.வெ.க.,வின் சட்டசபை குழு தலைவராக விஜய் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
நாம் சந்தித்த முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து, நமக்கு ஓட்டு போட்டுள்ளனர். நான் ஏற்கனவே சொன்னது போல, தமிழக மக்கள் பணபலத்தையும், அதிகார பலத்தையும் துாக்கி வீசி உள்ளனர். சத்தமில்லாமல் 'விசில்' புரட்சி நடந்திருக்கிறது. வெற்றி பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில், இனி தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற மமதை நமக்கு ஒரு துளிகூட இருக்கக் கூடாது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை நமக்கு இருக்கிறது. எனவே, நம்பிக்கையோடு இருங்கள்.
நான் ஏற்கனவே சொன்னது போல, நம்மோடு வருவோருக்கு நாம் தான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல, 'ஆட்சி அமைக்கும் வரை, சென்னையை விட்டு எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வெளியூர் செல்லக்கூடாது' என, தவெக தலைவர் விஜய் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக அதிமுக, காங்கிரஸுடன் தவெக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்கவில்லை.
தவிர, பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், தவெக பலம் 107 ஆக குறையும். இந்த சூழலில், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதால், அதிமுகவுடன் தவெக தரப்பு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு கோரி முதலில் காங்கிரஸ் கட்சியுடன்தான் தவெக பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களிடம் 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயன்றது. ஆனால், திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுக்கு ஆதரவு அளிக்க இக்கட்சிகளில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பார்களா என்று எஸ்.பி.வேலுமணியிடமும், பின்னர் சி.வி.சண்முகத்திடமும் செங்கோட்டையன் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்ததாககூறப்படுகிறது. அமைச்சர் பதவி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.
இதை அறிந்த பொதுச் செயலாளர் பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக சார்பாகவே நேரடியாக தவெகவுக்கு ஆதரவு தரலாம் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பிரச்சாரத்தின்போது பாஜகவை தங்கள் கொள்கை எதிரி என்று விஜய் கூறிவந்தார்.
அப்படி இருக்க, பாஜகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே தவெகவை ஆதரிப்பது சரியாக இருக்காது என்பதால், கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தை பழனிசாமி இன்று கூட்டியுள்ளார். தவெகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
காங்கிரஸுடன் பேச்சு
இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சியமைக்க விஜய் தங்களிடம் ஆதரவு கோரியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி இந்திய தேசிய காங்கிரஸிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசியலமைப்பை அதன் உணர்வின்படி பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்துக்கே மக்கள் அதிகாரம் அளித்துள்ளனர். இதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது.
எந்த வகையிலும் பாஜகவும், அதன் கைப்பாவைகளும் தமிழக அரசை நடத்துவதை காங்கிரஸ் அனுமதிக்காது என்பதிலும் உறுதியாக உள்ளது. அதன்படி, தேர்தல் தீர்ப்பில் பிரதிபலித்துள்ள மாநிலத்தின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்குமாறு தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவுடன் பேச்சு
இந்த சூழலில், திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டின் சென்னையில் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் லீமா ரோஸ் கூறியதாவது...
லால்குடியில் நான் (அதிமுக), வில்லிவாக்கத்தில் எனது மருமகன் ஆதவ் அர்ஜுனா (தவெக), புதுச்சேரி காமராஜ் நகரில் எனது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (லஜக) என்று ஒரே குடும்பத்தில் 3 பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியிருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இது இறைவன் கொடுத்த பரிசு ஆகும். எங்கள் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக - தவெக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என்று நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக ஆதரவு இல்லை?
இந்த நிலையில், பழனிசாமியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. இந்த சூழலில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது’’ என்றார்.
பிரதமர், ராகுலுக்கு நன்றி
இதற்கிடையே, தேர்தல் வெற்றிக்காக வாழ்த்திய தலைவர்களுக்கு விஜய் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி. மக்களின் நலனே எங்களது ஒரே இலக்கு.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழக மக்களின் நலனில் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம். இந்த முயற்சியில் மத்திய அரசின் ஆதரவை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றி. மக்கள் சேவையில் சிறந்து விளங்குவதிலும், கூட்டு ஒத்துழைப்பு அவசியமான நமது மாநிலத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் உறுதியுடன் இருப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில், தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது. அதற்கு தேவையான ஆதரவை பெற, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம், விஜய் தரப்பில் பேச்சு துவங்கியுள்ளது.
இதற்கிடையில், சென்னையில் நேற்று நடந்த த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக விஜய், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. வெற்றி பெற்ற த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள், சென்னை பனையூர் கட்சி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை சந்திக்க, விஜய் தன் நீலாங்கரை வீட்டில் இருந்து, முதல்வருக்கான போலீஸ் பாதுகாப்பு அணிவகுப்போடு பனையூர் அலுவலகம் வந்தார்.
தேர்தல் வெற்றிக்கு பின், முதல்முறையாக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜய்க்கு, அங்கு கூடியிருந்த த.வெ.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், அவர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்களை பெற்றுக் கொண்டார். அதன் அடிப்படையில், த.வெ.க.,வின் சட்டசபை குழு தலைவராக விஜய் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
நாம் சந்தித்த முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து, நமக்கு ஓட்டு போட்டுள்ளனர். நான் ஏற்கனவே சொன்னது போல, தமிழக மக்கள் பணபலத்தையும், அதிகார பலத்தையும் துாக்கி வீசி உள்ளனர். சத்தமில்லாமல் 'விசில்' புரட்சி நடந்திருக்கிறது. வெற்றி பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில், இனி தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற மமதை நமக்கு ஒரு துளிகூட இருக்கக் கூடாது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை நமக்கு இருக்கிறது. எனவே, நம்பிக்கையோடு இருங்கள்.
நான் ஏற்கனவே சொன்னது போல, நம்மோடு வருவோருக்கு நாம் தான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல, 'ஆட்சி அமைக்கும் வரை, சென்னையை விட்டு எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வெளியூர் செல்லக்கூடாது' என, தவெக தலைவர் விஜய் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு - முதல்வர் விஜய் அறிவிப்பு
பதிவு: சனிக்கிழமை, ஜூன் 13, 2026, வைகாசி, 30, பாரபவ வருடம் 02:20 AM சென்னை, நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்டூர் அணை திறக்கப்படாத நில...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...






