புதன், 6 மே, 2026

தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு - கூட்டணி ஆட்சி? தவெக தரப்பில் துவங்கியது தீவிர பேச்​சு​வார்த்தை

பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 05:25 AM

சென்னை,

சட்டப்பேரவையில் பெரும்​பான்​மை​யைப் பெறு​வதற்​காக அதிமுக, காங்கிரஸுடன் தவெக தீவிர பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​யின் தவெக 108 இடங்​களி​லும், திமுக கூட்​டணி 73 இடங்​களி​லும், அதி​முக கூட்​டணி 53 இடங்​களி​லும் வெற்றி பெற்​றுள்​ளன. ஆட்சி அமைக்​கத் தேவை​யான 118 இடங்​கள் தவெக​வுக்கு கிடைக்​க​வில்​லை.

தவிர, பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்ள விஜய் இதில் ஏதேனும் ஒரு தொகு​தி​யில் ராஜி​னாமா செய்ய வேண்​டும். இதனால், தவெக பலம் 107 ஆக குறை​யும். இந்த சூழலில், பெரும்​பான்​மையை நிரூபிக்க இன்​னும் 11 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவைப்​படு​வ​தால், அதி​முக​வுடன் தவெக தரப்பு தீவிர பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வ​தாக தெரி​கிறது.

இதுகுறித்து விவரம் அறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பெரும்​பான்​மையை நிரூபிக்க ஆதரவு கோரி முதலில் காங்கிரஸ் கட்​சி​யுடன்​தான் தவெக பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. அவர்​களிடம் 5 எம்​எல்​ஏக்​கள் மட்டுமே உள்ள நிலை​யில், முஸ்​லிம் லீக் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளை ஒருங்​கிணைக்க காங்​கிரஸ் முயன்​றது. ஆனால், திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி, தவெக​வுக்கு ஆதரவு அளிக்க இக்​கட்​சிகளில் ஒரு​மித்த கருத்து ஏற்​பட​வில்லை என்று கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, அதி​முக​வில் இருந்து 20 எம்​எல்​ஏக்​கள் தவெக​வுக்கு ஆதரவு அளிப்​பார்​களா என்று எஸ்​.பி.வேலுமணி​யிட​மும், பின்​னர் சி.​வி.சண்​முகத்​திட​மும் செங்​கோட்​டையன் தரப்​பில் பேச்​சு​வார்த்தை நடந்​த​தாககூறப்​படு​கிறது. அமைச்​சர் பதவி வழங்​கு​வ​தாக​வும் வாக்​குறுதி அளித்​த​தாக தெரி​கிறது.

இதை அறிந்த பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தனது ஆதர​வாளர்​களு​டன் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டுள்​ளார். அதி​முக சார்​பாகவே நேரடி​யாக தவெக​வுக்கு ஆதரவு தரலாம் என்ற முடிவுக்கு அவர் வந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. ஆனால், பிரச்​சா​ரத்​தின்​போது பாஜகவை தங்​கள் கொள்கை எதிரி என்று விஜய் கூறிவந்​தார்.

அப்​படி இருக்க, பாஜக​வுடன் கூட்​ட​ணி​யில் இருந்​து​கொண்டே தவெகவை ஆதரிப்​பது சரி​யாக இருக்​காது என்​ப​தால், கட்​சி​யின் புதிய எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்தை பழனி​சாமி இன்று கூட்​டி​யுள்​ளார். தவெக​வுக்கு ஆதரவு தரு​வது தொடர்​பாக இக்​கூட்​டத்​தில் முக்​கிய முடிவு எடுக்​கப்​படும்​ என தெரிகிறது.

காங்கிரஸுடன் பேச்சு

இதற்​கிடையே, தமிழகத்​தில் ஆட்​சி​யமைக்க விஜய் தங்​களிடம் ஆதரவு கோரி​யுள்​ள​தாக அகில இந்​திய காங்​கிரஸ் அமைப்​புப் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் தெரி​வித்​துள்​ளார். 

இதுதொடர்​பாக டெல்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: 

தமிழகத்​தில் ஆட்​சி​யமைக்க ஆதரவு கோரி இந்​திய தேசிய காங்​கிரஸிடம் தவெக தலை​வர் விஜய் கோரிக்கை விடுத்​துள்​ளார். தமிழகத்​தில் அரசி​யலமைப்பை அதன் உணர்​வின்​படி பாது​காக்க உறு​திபூண்ட ஒரு மதச்​சார்​பற்ற அரசாங்​கத்​துக்கே மக்​கள் அதி​காரம் அளித்​துள்​ளனர். இதில் காங்​கிரஸ் தெளி​வாக இருக்​கிறது.

எந்த வகை​யிலும் பாஜக​வும், அதன் கைப்​பாவை​களும் தமிழக அரசை நடத்​து​வதை காங்​கிரஸ் அனு​ம​திக்​காது என்​ப​தி​லும் உறு​தி​யாக உள்​ளது. அதன்​படி, தேர்​தல் தீர்ப்​பில் பிர​திபலித்​துள்ள மாநிலத்​தின் உணர்​வு​களைக் கருத்​தில் கொண்​டு, விஜய்​யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்​கு​மாறு தமிழக காங்​கிரஸ் கமிட்​டிக்கு காங்​கிரஸ் தலைமை உத்​தர​விட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

அதிமுகவுடன் பேச்சு

இந்த சூழலில், திருச்சி லால்​குடி தொகு​தி​யில் அதிமுக சார்பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்​டின் சென்னையில் பழனி​சாமியை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். 

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் லீமா ரோஸ் கூறிய​தாவது...

லால்​குடி​யில் நான் (அதி​முக), வில்​லி​வாக்​கத்​தில் எனது மரு​மகன் ஆதவ் அர்​ஜுனா (தவெக), புதுச்​சேரி காம​ராஜ் நகரில் எனது மகன் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் (லஜக) என்று ஒரே குடும்​பத்​தில் 3 பேர் வெற்றி பெற்று சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஆகி​யிருப்​பது மகிழ்ச்​சியை கொடுக்​கிறது.

இது இறைவன் கொடுத்த பரிசு ஆகும். எங்​கள் குடும்​பத்தை சேர்ந்த மூன்று பேரும் வெற்றி பெறு​வோம் என்று நாங்​கள் எதிர்​பார்க்​க​வில்​லை. இது எங்​களுக்கு இன்ப அதிர்ச்​சி​யாக அமைந்​துள்​ளது. தவெக​வுக்கு பெரும்பான்மை இல்​லாத​தால், ஆதரவு அளிப்​பது தொடர்​பாக அதி​முக - தவெக இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. விரை​வில் பேச்​சு​வார்த்தை நல்​லபடி​யாக முடி​யும் என்று நினைக்​கிறேன்.இவ்​வாறு அவர்​ கூறினார்.

அதிமுக ஆதரவு இல்லை?

இந்த நிலையில், பழனிசாமியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. இந்த சூழலில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது’’ என்றார்.

பிரதமர், ராகுலுக்கு நன்றி

இதற்​கிடையே, தேர்​தல் வெற்​றிக்​காக வாழ்த்​திய தலை​வர்​களுக்கு விஜய் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நன்றி தெரி​வித்​துள்​ளார். அதில் அவர் கூறி​யுள்​ள​தாவது: பிரதமர் மோடி​யின் வாழ்த்​துகளுக்கு நன்​றி. மக்​களின் நலனே எங்​களது ஒரே இலக்​கு.

அரசி​யல் வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்​டு, தமிழகத்​தின் முன்​னேற்​றம் மற்​றும் தமிழக மக்​களின் நலனில் நாங்​கள் முழு கவனம் செலுத்​து​வோம். இந்த முயற்​சி​யில் மத்​திய அரசின் ஆதரவை நாங்​கள் எதிர்​நோக்​கு​கிறோம்.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யின் தொலைபேசி அழைப்பு மற்​றும் அன்​பான வாழ்த்​துகளுக்கு எனது மனமார்ந்த நன்​றி. மக்​கள் சேவை​யில் சிறந்து விளங்​கு​வ​தி​லும், கூட்டு ஒத்​துழைப்பு அவசி​ய​மான நமது மாநிலத்​தின் பண்​பாட்டு விழு​மி​யங்​களைப் பாது​காப்​ப​தி​லும் உறு​தி​யுடன் இருப்​போம். அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டு, தமிழக மக்​களின் நலனுக்கே நாங்​கள் முன்​னுரிமை அளிப்​போம்.

இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில், தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது. அதற்கு தேவையான ஆதரவை பெற, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம், விஜய் தரப்பில் பேச்சு துவங்கியுள்ளது. 

இதற்கிடையில், சென்னையில் நேற்று நடந்த த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக விஜய், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. வெற்றி பெற்ற த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள், சென்னை பனையூர் கட்சி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை சந்திக்க, விஜய் தன் நீலாங்கரை வீட்டில் இருந்து, முதல்வருக்கான போலீஸ் பாதுகாப்பு அணிவகுப்போடு பனையூர் அலுவலகம் வந்தார்.

தேர்தல் வெற்றிக்கு பின், முதல்முறையாக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜய்க்கு, அங்கு கூடியிருந்த த.வெ.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து விஜய் வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர், அவர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்களை பெற்றுக் கொண்டார். அதன் அடிப்படையில், த.வெ.க.,வின் சட்டசபை குழு தலைவராக விஜய் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, தவெக தலைவர் விஜய் பேசியதாவது: 

நாம் சந்தித்த முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து, நமக்கு ஓட்டு போட்டுள்ளனர். நான் ஏற்கனவே சொன்னது போல, தமிழக மக்கள் பணபலத்தையும், அதிகார பலத்தையும் துாக்கி வீசி உள்ளனர். சத்தமில்லாமல் 'விசில்' புரட்சி நடந்திருக்கிறது. வெற்றி பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அதே நேரத்தில், இனி தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற மமதை நமக்கு ஒரு துளிகூட இருக்கக் கூடாது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை நமக்கு இருக்கிறது. எனவே, நம்பிக்கையோடு இருங்கள். 

நான் ஏற்கனவே சொன்னது போல, நம்மோடு வருவோருக்கு நாம் தான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

அதேபோல, 'ஆட்சி அமைக்கும் வரை, சென்னையை விட்டு எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வெளியூர் செல்லக்கூடாது' என, தவெக தலைவர் விஜய் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு - முதல்வர் விஜய் அறிவிப்பு

பதிவு: சனிக்கிழமை,  ஜூன்  13, 2026, வைகாசி, 30, பாரபவ வருடம் 02:20 AM சென்னை, நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்​டூர் அணை திறக்​கப்​ப​டாத நில...