வியாழன், 16 ஜூலை, 2026

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM

நாகர்கோவில்,

நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் சேர்ந்து, அவரை கட்டி வைத்து தாக்கியதாக 8 கைதிகளும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர், பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி இவரது கடையில் தென்தாமரைக்குளம் போலீஸார் சோதனை நடத்தியபோது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்ததாக பறிமுதல் செய்யப்பட்டன. அவரைக் கைது செய்த போலீஸார், நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி காலை சிறையில் இருந்த சபரிவர்மன் இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சபரிவர்மனின் தாயார், மனைவி ஆகியோர் அவரது உடலை பார்வையிட்டபோது, உடலில் பலத்த காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால், சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சபரிவர்மன் மரணம் குறித்து, அவரது உறவினர்களிடமும், நாகர்கோவில் கிளைச்சிறை காவலர்கள் மற்றும் கைதிகளிடமும், நாகர்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி,மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் விசாரணை நடத்தினார். சிறையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் ஆதாரங்கள் திரட்டப்பட்டன.

19 இடங்களில் பலத்த காயம்

இந்நிலையில், சபரிவர்மனின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் மாலை வெளியானது. அதில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் பலமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நேசமணிநகர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில் கிளைச்சிறை தலைமை வார்டனான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்த திருமலைநம்பி, வார்டன்களான கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடத்தைச் சேர்ந்த சிவகுமார், தேங்காப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெகன் ஆகிய 3 பேரை. நேற்று முன்தினம் இரவில் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நேசமணிநகர் காவல் நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியிருப்பதாவது: சபரிவர்மன் சிறைக்கு வந்த நாளில் இருந்து, அவருக்கும் சக கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை சிறை வார்டன்கள் சமரசம் செய்துள்ளனர். 12-ம் தேதி இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைதிகள் சிலர் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.

மேலும், சபரிவர்மனின் கை, கால்களைக் கட்டி வைத்து, வார்டன்களுடன் சேர்ந்து கைதிகளும். அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சபரிவர்மன் சிறைக்குள்ளேயே இறந்துவிட்டார்.

உடலை வாங்க மறுப்பு

கைதான வார்டன்கள் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கைதிகளான விஷ்ணு, ஜெகன், சாரதி, பெருமாள், சரத், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 பேர் மீது போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து. அவர்களை நேற்று கைது செய்தனர்.

இதனிடையே, சபரிவர்மனின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் 94981 80936 வாட்ஸ்-அப்பில் புகார் கொடுக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.00 AM

சென்னை,

அரசு அலு​வல​கங்​களில் யாராவது லஞ்​சம் கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக புகார் அளிக்​கும் வித​மாக புதிய வாட்​ஸ்​-அப் எண்ணை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான தவெக அரசு பொறுப்​பேற்​ற​தில் இருந்து லஞ்​சம், ஊழலை ஒழிக்க பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

அதன்​படி, அரசு அலு​வலர்​கள் யாராவது லஞ்​சம் கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக 94981 80936 என்ற வாட்​ஸ்​-அப் எண்​ணில் புகார் கொடுக்​கலாம் என்று அரசு தற்​போது அறி​வித்​துள்​ளது. ஊழலைத் தடுக்​கும் நடவடிக்​கைகளை மேலும் வலுப்​படுத்​தும் நோக்​கில் இந்த வசதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அறிவிப்பு பலகை

இதுகுறித்து அனைத்து துறை​களின் செயலர்​கள், இயக்​குநர்​கள், மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: மாநிலம் முழு​வதும் உள்ள அனைத்து அரசு அலு​வல​கங்​கள் மற்​றும் பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் லஞ்ச ஒழிப்பு விழிப்​புணர்வு அறி​விப்பு பலகைகளை கட்​டா​யம் காட்​சிப்​படுத்த வேண்​டும்.

அதில், ‘லஞ்​சம் வாங்​கு​வதும், கொடுப்​பதும் குற்​றம்’ என்ற வாசகம் தெளி​வாக​வும், மக்​கள் பார்க்​கும் வகை​யிலும் காட்​சிப்​படுத்​தப்பட வேண்​டும். இதுத​விர, தமிழிலும், ஆங்​கிலத்​தி​லும் புகார் அளிக்​கும் நடை​முறை​கள் இடம்​பெற்ற மாதிரி அறி​விப்பு பலகை​யும் அலு​வல​கங்​களில் வைக்​கப்பட வேண்​டும்.

அரசுத் துறை​களின் அதி​காரப்​பூர்வ இணை​யதளங்​களி​லும் வாட்​ஸ்​-அப் புகார் எண் மற்​றும் லஞ்ச ஒழிப்​புத் துறை​யின் (ஊழல் தடுப்​பு, கண்​காணிப்பு இயக்​குநரகம் - DVAC) இணை​யதள முகவரியை வெளி​யிட வேண்​டும்.

வாட்​ஸ்​-அப் மட்​டுமின்​றி, dvac@nic.in என்ற மின்​னஞ்​சல் முகவரி மூல​மாக​வும், 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்​கள் மூல​மாக​வும் பொது​மக்​கள் லஞ்​சம் தொடர்​பான புகார்​களை தெரிவிக்​கலாம்.

எழுத்​துப்​பூர்​வ​மான புகார்​களை ‘இயக்​குநர், லஞ்ச ஒழிப்​புத் துறை, 293, எம்​கேஎன் சாலை, ஆலந்​தூர், சென்​னை-16’ என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்​சல் மூல​மாகவோ அனுப்​பலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

புதன், 15 ஜூலை, 2026

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி - பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பதிவு: புதன்கிழமை, ஜூலை  15, 2026,  ஆனி  31, பாரபவ வருடம்  01.15 AM

சென்னை,

தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் கைது செய்​யப்​பட்ட பி.டி.அரசகு​மார், குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

புதுக்​கோட்​டையைச் சேர்ந்த பி.டி.அரசகு​மார், சென்னை சாலிகி​ராமத்​தைத் தலை​மை​யிட​மாகக் கொண்​டு, ‘தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்​கம்’ என்ற பதிவு செய்​யப்​ப​டாத அமைப்பை நடத்தி வந்​தார். 

திமுக​வின் செய்​தித் தொடர்பு குழுத் துணைத் தலை​வ​ராக இருந்த அரசகு​மார், தனது அரசி​யல் செல்​வாக்​கைப் பயன்​படுத்தி தமிழகம் முழு​வதும் உள்ள தனி​யார் பள்​ளி​களை அணுகி​யுள்​ளார்.

பள்​ளி​களுக்​கான அங்​கீ​காரம், தரம் உயர்த்​துதல் மற்​றும் சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​தின் சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி, பல பள்ளி நிர்வாகி​களிடம் பெரு​மளவு பணம் வசூலித்​துள்​ளார். 

அந்த வகை​யில், ரூ.100 கோடிக்​கும் மேல் மோசடி செய்​த​தாகப் பாதிக்​கப்​பட்ட பள்ளி நிர்​வாகி​கள் புகார் அளித்​துள்​ளனர். அதன் அடிப்​படை​யில், சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார், பி.டி.அரசகு​மாரைக் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

அதைத் தொடர்ந்து அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி ஆதா​ரங்​களை​யும் திரட்​டினர். இந்த மோசடி தொடர்​பாகத் தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து இது​வரை 59 தனி​யார் பள்​ளி​கள் மத்​திய குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​துள்​ளன. 

பி.டி.அரசகு​மாரின் தொடர் மோசடி நடவடிக்​கைகளைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில், சென்னை காவல் ஆணை​யர் அவரை குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைக்க உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். இதற்​கான நகல் சிறை​யில் உள்ள பி.டி.அரசகு​மாரிடம்​ வழங்​கப்​பட்​டது.

செவ்வாய், 14 ஜூலை, 2026

பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண்ணை கொடூரமாக கொன்று பெண் கொலை - 15 சவரன் நகை கொள்ளை

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூலை  14, 2026,  ஆனி  30, பாரபவ வருடம்  07.00 AM

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்து 15 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மளிகை கடைக்காரர் மனைவி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 

இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வனஜா (வயது 55) வீட்டில் இட்லி மாவு விற்பனை செய்து வந்தார். 

இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், ராதாகிருஷ்ணன் மற்றும் வனஜா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

கழுத்தில் கத்திக்குத்து நேற்று காலை ராதாகிருஷ்ணன் வழக்கம்போல் தனது மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வனஜா, கடைக்கு சென்று கணவருக்கு டீ கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். 

மதிய உணவு இடைவேளையின்போது ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டை திறந்து உள்ளே சென்றபோது, வனஜா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்..15 சவரன் நகை கொள்ளைஅவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்து, திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இட்லி மாவு வாங்குவது போல் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வனஜாவை கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட சுமார் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்தனர். பின்னர், வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் அச்சம்மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

வீட்டில் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழவேற்காடு பகுதியில் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 13 ஜூலை, 2026

2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்_ அண்ணாமலை பேச்சு


 பதிவு: திங்கட்கிழமை,  ஜூலை  13, 2026,  ஆனி  29, பாரபவ வருடம்  05.20 AM

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் வி த லீடர்ஸ் மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:-

ஒரு அரசியல் இயக்கம்38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். 

இது என் குடும்ப கட்சி இல்லை. ஜூன் 5-ல் ஆரம்பிக்கப்பட்ட வி த லீடர்ஸ் அமைப்பு ஒரு அரசியல் இயக்கம். 

இன்றுடன் 38-வது நாள். பெண்கள், கல்லூரி மாணவிகளை பார்க்கும்போது நம் இலக்கில் 50 சதவீதம் தாண்டிவிட்டோம் என தெரிகிறது. 

அமைப்பில் சேர்ந்துள்ள 19 லட்சம் பேரில் 17 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். இது நம் வெற்றி. 

இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான். தமிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள். இங்கு எல்லாருமே தன்னார்வலர்கள்தான். இங்கு அனைவரும் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம்.

பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடு அனைவரும் நின்றுகொண்டிருக்கிறோம். நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படும். ஆட்சி மாற்றம்6 மாதங்களும் 6 முக்கிய பிரச்சினைகளை எடுத்து வி த லீடர்ஸ் அமைப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளது. 2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம். மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படபோகிறது. தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள். ஆகஸ்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நாம் நடத்துகிறோம். மது எல்லா இடங்களிலும் கலந்துவிட்டது. தைரியமாக மது குடிக்கும் காலம் வந்திருத்துகிறது.இன்னொரு கட்சியை திட்டுவதற்கு, தலைவர்களை குறை கூறுவதற்கான மாநாடு இது அல்ல.  எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அமைப்பு இருக்கிறதோ அதுவரை ஜூலையில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடக்கும்.  5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது. 

5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது.  

கஞ்சாவை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களை நாங்கள் தடுக்க இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடிதமிழ்நாட்டில் ஒரு ரேஷன் கார்டுக்கு 4.15 லட்சம் கடன் இருக்கிறது. பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை இதில் இருந்து காப்பாற்ற முடியாது.  

இந்த ஆண்டு தவெக அரசு 85 ஆயிரம் கோடிக்கு குறையாமல் கடன் வாங்கும். இந்த தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 14 முதல் 15 லட்சம் கோடியாக இருக்கும். அதனை நாம் சரி செய்ய வேண்டும். அதற்கு அந்த இடத்திற்கு நல்ல தலைவர்களை கொண்டு வரவேண்டும்.வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும்  “யார் நம்மைப் பிரித்தாலும், சேவை, தமிழ்நாட்டின் மாற்றம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் இணைந்திருக்கிறோம். நல்ல தலைவர்களை, தன்னார்வலர்களை நாம் கீழே அடிமட்டத்தில் இருந்து எடுக்கப்போகிறோம். அவர்களை மக்களின் வேட்பாளராக நிற்கவைத்து, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, எம்.பி.யாக மாற்றப்போகிறோம். வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறப்போகிறது. .நான் முதலில் இந்தியன்நாட்டிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம். மதுவை ஒழிப்பது மட்டும் நோக்கம் அல்ல, மது குடிப்பவர்களை திருத்துவோம்.  நான் தேசியவாதி, நான் முதலில் இந்தியன், இரண்டாவது தமிழன்.பண்பாட்டு மீட்சி, ஆட்சியிலே புரட்சி என்பதும் எங்களின் தாரக மந்திரம். 

தவெகவில் அனைவரும் புதியவர்கள்கோவில் நிலத்தை வைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திமுகவினர் அரசியல் செய்தனர். கரூரில் கோவில் நிலத்தில் குடியிருந்தவர்களுக்கு தவெக அரசு அதை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. 

மதத்தின் அடிப்படையில் நான் இந்து. உங்களுக்கு உங்கள் மதம் பெரிது. எனக்கு என் மதம் பெரிது. ஆனால் அது வீட்டில் மட்டுமே. சாதி, மதம், சாதியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு அனைவருக்கும் பொதுவானவராக வருகிறேன். வி த லீடர்ஸ் -ல் தலைவர் கிடையாது. பேனர், புகைப்பட கலாசாரம் இல்லை. தவெகவில் அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள், தடுமாறுவார்கள். அவர்களை நாம் தூக்கிவிடத்தான் வேண்டும். மூர்க்கத்தனமாக, அதிகாரத்தை பிடிக்க நாம் வரவில்லை. நல்ல நோக்கத்துடன் நம் அரசியல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்..முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது உட்பட 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் பாடல் அண்ணாமலை மாநாட்டில் ஒளிபரப்பட்டது.  அண்ணாமலை தொடங்கிய வி த லீடர்ஸ் அமைப்பின் செயலி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அண்ணாமலை வி த லீடர்ஸ் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர்.  

போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

“நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை” - சென்னை திரும்பிய எ.வ.வேலு பேச்சு

பதிவு: திங்கட்கிழமை,  ஜூலை  13, 2026,  ஆனி  29, பாரபவ வருடம்  05.100 AM

சென்னை,

“சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள்” என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுகவுக்கு பழக்கம் இல்லை. அரசியலை, அரசியலாக சந்திப்பதில் திமுக சளைத்தது இல்லை. இதயப் பிரச்சினைக்காக 2016ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், மருத்துவர் ஜெயராமனிடம் சிகிச்சைப் பெற்று வருகிறேன்.

2023ல் அதே மருத்துவமனையில் இரண்டாம் முறையாக உடல் பரிசோதனை மேற்கொண்டேன். இப்போது மீண்டும் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என கடந்த ஜூன் 15ம் தேதி விசாவுக்கு விண்ணபித்து, ஜூன் 17ம் தேதி விசா வழங்கினர். 17ம் தேதியே ஜூன் 25ம் தேதி சிங்கப்பூர் செல்ல டிக்கெட் புக் செய்தேன்.

ஆனால், ஜூன் 25ம் தேதி காலையில் என் வீட்டுக்கு காவல்துறை நண்பர்கள் வந்து, சோதனை மேற்கொள்வதாக சொன்னார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். பின்னர் ஜூன் 26ம் தேதி மீண்டும் டிக்கெட் புக்செய்து சிங்கப்பூர் சென்றேன். அங்கு எனக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

எனக்கு ஒவ்வாமை, நரம்பு பிரச்சினை, இதயப் பிரச்சினை என மூன்று பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பாக தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைகள் எனக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த முறை என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது என ரிப்போர்ட் என்னிடம் உள்ளது.

அப்போது என்னை ஜூன் 3ம் தேதி வரச்சொல்லி என் வீட்டில் சம்மன் ஒட்டியதாக எனக்கு தகவல் சொன்னார்கள். அதனை பேக்ஸில் அனுப்ப சொல்லி, நான் மருத்துவ பரிசோதனைகள் முடித்து 10 நாட்களில் வந்துவிடுவேன் என அந்த சம்மனுக்கு பதில் அளித்தேன்.

ஆனால், மீண்டும் 9ம் தேதி வரச்சொல்லி சம்மன் அனுப்பினார்கள். மருத்துவ பரிசோதனைகள் முடித்து நான் ஜூலை 12ம் தேதி சென்னை வந்துவிடுவேன், அதன் பின்னர் எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கடிதம் அனுப்பினேன்.

சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன், முழு ஒத்துழைப்பு தருவதாகவும் சொன்னேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள். நான் மருத்துவத்துக்காக சென்றேனே தவிர, சுற்றுலா செல்லவில்லை. ஆனால், அவரவர் கற்பனைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

திமுகவின் சட்டப்பேரவை கொறடாவாக நான் உள்ளேன். சமீபத்தில் 3 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகமான வினாக்களை நான் தான் எழுப்பினேன். அது என்னுடைய கடமை. நான் பேசவே கூடாது என அவர்கள் நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. இனி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை, குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது” என்றார்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதிலடி

பதிவு: திங்கட்கிழமை,  ஜூலை  13, 2026,  ஆனி  29, பாரபவ வருடம்  05.00 AM

தெஹ்ரான்,

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி போர் நிறுத்​தம் தொடர்​பான அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்​பட்​டது. ஆனால், ஈரான் கடலோர பகு​தி​யில் உள்ள வழித்​தடத்​தில்​தான் செல்ல வேண்​டும், ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்​றால் தாக்​குதல் நடத்தப்படும் என்று தொடர்ந்து ஈரான் பிடிவாதம் காட்டியது.

இந்​நிலை​யில், மார்​ஷல் தீவு எண்​ணெய் கப்​பல் அல் ரெஹா​யத், சவுதி கப்​பல் வெட்​யான், லைபீரியா கப்​பல் சைப்​ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்​ணெய் கப்​பல்​கள் ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தியை சமீபத்தில் கடந்​தன. அவற்​றின் மீது ஈரான் ராணுவத்​தினர் தாக்​குதல் நடத்​தினர். பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்​குதல் நடத்தியது.

இந்த சூழலில், அனுமதிக்கப்படாத பாதையில் சென்றதாக ஒரு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. இதுகுறித்து ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘ ஹார்முஸ் ஜலசந்தி அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும், இப்பகுதியில் அமெரிக்கத் தலையீடுகள் முடிவுக்கு வரும் வரையிலும் மூடப்பட்டிருக்கும்; எந்தக் கப்பலும் இதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஹார்முஸ் வழியாகச் சென்ற சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கொள்கலன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடங்கியது.

நேற்று அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கின என்றும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது. ‘சுமார் நான்கு மணி நேரம் கழித்து, தாக்குதல்கள் நிறைவடைந்தன. இந்த முறை சுமார் 140 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என அமெரிக்க ராணுவ கட்டளை மையமான சென்ட்காம் கூறியது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
 

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...