பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்திய அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு வந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவரது மறைவின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர் பூமியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன். உங்கள் போதனைகள், உங்கள் விழுமியங்கள், உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதில் ராஜீவ் காந்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அளித்துள்ளார். இளம் இந்தியாவின் ஆற்றலை முழுமையாக நம்பிய அவர், வாக்களிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். கிராம அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தார்.
தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கணினி மயமாக்கல் ஆகியற்றின் வாயிலாக இந்தியாவை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி வழிநடத்தினார். அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் வாயிலாக நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அஞ்சலிகள்” என தெரிவித்துள்ளார்.
வியாழன், 21 மே, 2026
ஞாயிறு, 17 மே, 2026
தமிழக அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள் என்னென்ன..? - ஓர் அலசல்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே 17, 2026, வைகாசி, 03, பாரபவ வருடம் 10:30 AM
சென்னை,
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின் படி, ஒரு மாநிலத்தில் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது.
அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியேற்கலாம்.
தற்போது முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 பேர் மட்டுமே பதவியேற்றுள்ளதால், இன்னும் 25 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வாய்ப்பு உள்ளது.
அதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன.
இந்த நிலையில்,முதல்-அமைச்சர் மற்றும் 9 அமைச்சர்களுக்கும் நேற்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை, பெண்கள் நலன் உள்ளிட்ட துறைகளும், ஊரக வளர்ச்சித்துறை ஆனந்துக்கும், பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனாவுக்கும், சுகாதாரம் அருண்ராஜுக்கும், செங்கோட்டையனுக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு முக்கிய துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அந்த வகையில் வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள், சமூக நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுலா, கைத்தறி, வணிகவரி, போக்குவரத்து, இந்துசமய அறநிலையத்துறை, உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகள் இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளன.
இந்த துறைகளும் இன்னும் சில நாட்களில் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அதில் த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் அளிக்கப்பட உள்ளதாக த.வெ.க. வட்டாரத்தில் கூறப்பட்டது.
சென்னை,
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின் படி, ஒரு மாநிலத்தில் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது.
அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியேற்கலாம்.
தற்போது முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 பேர் மட்டுமே பதவியேற்றுள்ளதால், இன்னும் 25 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வாய்ப்பு உள்ளது.
அதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன.
இந்த நிலையில்,முதல்-அமைச்சர் மற்றும் 9 அமைச்சர்களுக்கும் நேற்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை, பெண்கள் நலன் உள்ளிட்ட துறைகளும், ஊரக வளர்ச்சித்துறை ஆனந்துக்கும், பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனாவுக்கும், சுகாதாரம் அருண்ராஜுக்கும், செங்கோட்டையனுக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு முக்கிய துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அந்த வகையில் வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள், சமூக நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுலா, கைத்தறி, வணிகவரி, போக்குவரத்து, இந்துசமய அறநிலையத்துறை, உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகள் இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளன.
இந்த துறைகளும் இன்னும் சில நாட்களில் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அதில் த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் அளிக்கப்பட உள்ளதாக த.வெ.க. வட்டாரத்தில் கூறப்பட்டது.
கேரள முதல்-மந்திரியாகிறார், வி.டி.சதீசன்- தமிழக முதல்வர் விஜய், ராகுல்காந்தி, பங்கேற்பு - நாளை பதவி ஏற்பு
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மே 17, 2026, வைகாசி, 03, பாரபவ வருடம் 09:30 AM
திருவனந்தபுரம், கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந்தேதி வெளியானது.
மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
காங்கிரஸ் 63 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 தொகுதிகளை கைப்பற்றியது.
மேலும் கேரள காங்கிரஸ்(ஜோசப்) 7 இடங்களிலும், புரட்சி சோஷியலிஸ்ட் கட்சி(ஆர்.எஸ்.பி.) 3 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கேரள மாநில கட்சி (சி.எம்.பி.கே.எஸ்.சி.) தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள்(காங்கிரஸ் ஆதரவு) 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா முதன் முறையாக 3 தொகுதிகளிலும் வென்றது.
காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றி மூலம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பதவி காலம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவியது.
10 நாட்கள் இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது..
இதையடுத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகரை, வி.டி.சதீசன் சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டு கொண்டார்.
அதற்கேற்ப கவர்னரும் அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் பதவி ஏற்பு விழாவை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அரியணையில் அமர உள்ளதால், பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் சித்தராமையா (கர்நாடகம்), ரேவந்த்ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சிங் சுகு (இமாசல பிரதேசம்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம், கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந்தேதி வெளியானது.
மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
காங்கிரஸ் 63 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 தொகுதிகளை கைப்பற்றியது.
மேலும் கேரள காங்கிரஸ்(ஜோசப்) 7 இடங்களிலும், புரட்சி சோஷியலிஸ்ட் கட்சி(ஆர்.எஸ்.பி.) 3 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கேரள மாநில கட்சி (சி.எம்.பி.கே.எஸ்.சி.) தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள்(காங்கிரஸ் ஆதரவு) 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா முதன் முறையாக 3 தொகுதிகளிலும் வென்றது.
காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றி மூலம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பதவி காலம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவியது.
10 நாட்கள் இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது..
இதையடுத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகரை, வி.டி.சதீசன் சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டு கொண்டார்.
அதற்கேற்ப கவர்னரும் அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் பதவி ஏற்பு விழாவை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அரியணையில் அமர உள்ளதால், பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் சித்தராமையா (கர்நாடகம்), ரேவந்த்ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சிங் சுகு (இமாசல பிரதேசம்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனி, 16 மே, 2026
தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு - முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - முழு விபரம்
பதிவு: சனிக்கிழமை, மே 16, 2026, வைகாசி, 02, பாரபவ வருடம் 05:30 PM
சென்னை,
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார்.
அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.
இந்த சூழலில் இன்று முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், கவர்னர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகள் பின்வருமாறு;-.
முதல்-அமைச்சர் விஜய் - பொது நிர்வாகத்துறை, உள்துறை, காவல் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல்.
அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி, குடும்பநலத்துறை
அமைச்சர் ஆனந்த் - ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அமைச்சர் செங்கோட்டையன் - நிதித்துறை
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமர் - மின்சாரம், மற்றும் நீதித்துறை
அமைச்சர் கீர்த்தனா - தொழில்துறை
அமைச்சர் டி.கே.பிரபு - இயற்கை வளத்துறை
அமைச்சர் ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை
அமைச்சர் வெங்கராமன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
சென்னை,
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார்.
அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.
இந்த சூழலில் இன்று முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், கவர்னர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகள் பின்வருமாறு;-.
முதல்-அமைச்சர் விஜய் - பொது நிர்வாகத்துறை, உள்துறை, காவல் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல்.
அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி, குடும்பநலத்துறை
அமைச்சர் ஆனந்த் - ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அமைச்சர் செங்கோட்டையன் - நிதித்துறை
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமர் - மின்சாரம், மற்றும் நீதித்துறை
அமைச்சர் கீர்த்தனா - தொழில்துறை
அமைச்சர் டி.கே.பிரபு - இயற்கை வளத்துறை
அமைச்சர் ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை
அமைச்சர் வெங்கராமன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - 17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள்
பதிவு: சனிக்கிழமை, மே 16, 2026, வைகாசி, 02, பாரபவ வருடம் 03:30 PM
சென்னை,
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்று, த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் ஒரு இடத்தை எதிர்பார்ப்பதால் அதுகுறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த 3 நாட்களில் இந்தப் பணிகளை எல்லாம் முடித்து, அமைச்சரவை பட்டியலை தயாரிக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது.
அந்த வகையில், ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு அமைச்சரவையில் 26 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை முடிவு செய்யப்பட்ட பிறகு துறைகளும் ஒதுக்கப்படும்.
அதன்பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் ஆரம்பமாகும்.
கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததுடன், அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் உரை வழங்குவார்.
அதன்பின்னர், 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த முறை ஒரே பட்ஜெட்டாக இருக்குமா, அல்லது வேளாண்மைக்கும் தனியாக தாக்கல் செய்யப்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு அதன் மீதான விவாதம் நடைபெறும்.
தொடர்ந்து, நிதி அமைச்சர் பதில் உரை வழங்குவார். அதன்பிறகு, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.
எப்படியும், 40 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்பதால், புதிய அரசு எப்படி செயல்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகளையும் தாண்டி, பொதுமக்களிடமும் இருக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்று, த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் ஒரு இடத்தை எதிர்பார்ப்பதால் அதுகுறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த 3 நாட்களில் இந்தப் பணிகளை எல்லாம் முடித்து, அமைச்சரவை பட்டியலை தயாரிக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது.
அந்த வகையில், ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு அமைச்சரவையில் 26 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை முடிவு செய்யப்பட்ட பிறகு துறைகளும் ஒதுக்கப்படும்.
அதன்பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் ஆரம்பமாகும்.
கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததுடன், அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் உரை வழங்குவார்.
அதன்பின்னர், 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த முறை ஒரே பட்ஜெட்டாக இருக்குமா, அல்லது வேளாண்மைக்கும் தனியாக தாக்கல் செய்யப்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு அதன் மீதான விவாதம் நடைபெறும்.
தொடர்ந்து, நிதி அமைச்சர் பதில் உரை வழங்குவார். அதன்பிறகு, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.
எப்படியும், 40 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்பதால், புதிய அரசு எப்படி செயல்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகளையும் தாண்டி, பொதுமக்களிடமும் இருக்கிறது.
வெள்ளி, 15 மே, 2026
மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் - திட்டத்தை மறுசீரமைக்க முடிவு - புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1,000 வழங்கப்பட்டது
பதிவு: வெள்ளிக்கிழமை, மே 15, 2026, வைகாசி, 01, பாரபவ வருடம் 02:30 AM
சென்னை,
தலைமைச் செயலகத்தில் தொழில், வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சாய்குமார், துறை செயலர் அருண் ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் உயர்கல்வியைத் தொடர்வதற்காக புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய கல்வி உதவித் தொகை திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.
அதன்படி, புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும் மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி இந்த தொகை வரவு வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளது. முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உதவித் தொகை அனைத்து மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று வரவு வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதம் 15-ம் தேதியும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,
‘மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. நடப்பு மே மாதத்துக்கான உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முதல்வரின் அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில்,
‘திமுக அரசின் திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் சொன்னீர்கள்? மகளிர் உரிமைத் தொகையை மே 15-ம் தேதி வரவு வைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள திட்டத்தை தொடர எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்யப் போகிறீர்கள்? மாதம் ரூ.2,500 தருவதாக வாக்குறுதி தந்துவிட்டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் உங்கள் மாற்றமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஆலோசனை
அரசின் நிதிநிலையைப் பொருத்து நலத் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும். அரசின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கடந்த 10-ம் தேதி முதல்வராக பதவியேற்ற விழாவிலேயே விஜய் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக துறைசார்ந்த உயர் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலர் சாய்குமார், நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட், புதிய திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடு, முந்தைய திமுக ஆட்சியில் நிதிசார் செயல்பாடுகள் தொடர்பான வெள்ளை அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
சென்னை,
தலைமைச் செயலகத்தில் தொழில், வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சாய்குமார், துறை செயலர் அருண் ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் உயர்கல்வியைத் தொடர்வதற்காக புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய கல்வி உதவித் தொகை திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.
அதன்படி, புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும் மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி இந்த தொகை வரவு வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளது. முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உதவித் தொகை அனைத்து மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று வரவு வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதம் 15-ம் தேதியும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,
‘மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. நடப்பு மே மாதத்துக்கான உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முதல்வரின் அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில்,
‘திமுக அரசின் திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் சொன்னீர்கள்? மகளிர் உரிமைத் தொகையை மே 15-ம் தேதி வரவு வைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள திட்டத்தை தொடர எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்யப் போகிறீர்கள்? மாதம் ரூ.2,500 தருவதாக வாக்குறுதி தந்துவிட்டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் உங்கள் மாற்றமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஆலோசனை
அரசின் நிதிநிலையைப் பொருத்து நலத் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும். அரசின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கடந்த 10-ம் தேதி முதல்வராக பதவியேற்ற விழாவிலேயே விஜய் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக துறைசார்ந்த உயர் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலர் சாய்குமார், நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட், புதிய திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடு, முந்தைய திமுக ஆட்சியில் நிதிசார் செயல்பாடுகள் தொடர்பான வெள்ளை அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
வியாழன், 14 மே, 2026
நம்பிக்கை தீர்மானத்துக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு - வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி - திமுக அணியினர் வெளிநடப்பு
பதிவு: வியாழக்கிழமை, மே 14, 2026, சித்திரை, 31, பாரபவ வருடம் 02:55 AM
சென்னை,
சட்டப்பேரவையில் நடைபெற்ற பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் விஜய்யின் தவெக அரசு வெற்றி பெற்றது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க மொத்தம் 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையி்ல், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 13 உறுப்பினர்களின் ஆதரவைத் தவெக பெற்றது. இதையடுத்து 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
கடந்த 10-ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, ஆளுநர் அறிவுறுத்தலின்படி, சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் கேட்டுக்கொண்டபடி. நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
தொடர்ந்து, எஸ்.ராஜேஷ் குமார் (காங்கிரஸ்), ஆர்.செல்லசுவாமி (மார்க்சிஸ்ட்), வன்னியரசு (விசிக), அ.மு.ஷாஜகான் (ஐயூஎம்எல்), அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.காமராஜ் (சுயேச்சை), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் அரசுக்கு ஆதரவாக பேசினர்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக), தமிமுன் அன்சாரி (மஜக), நித்தியானந்தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். போஜராஜன் (பாஜக), சவுமியா அன்புமணி (பாமக) ஆகியோர் நடுநிலை வகிப்பதாக தெரிவித்தனர்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்கள் 2 அணிகளாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு, அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவின் சி.வி.சண்முகம் தரப்பில் எஸ்.பி.வேலுமணி பேச வாய்ப்பு தரப்பட்டது. அதற்கு பழனிசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவைத் தலைவர் அனுமதி அளித்ததை அடுத்து, வேலுமணி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘பெரும்பான்மை மக்கள் தவெகவுக்கு வாக்களிக்கவில்லை’ என்று பேசியதுடன், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். திமுகவுடன் தேமுதிக, மஜக, கொமதேக, மமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து முதல்வர் விஜய் பேசும்போது, ‘‘இந்த அரசு நிச்சயம் மதச்சார்பற்ற அரசாகத்தான் செயல்படும். குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபடவில்லை. குதிரை வேகத்தில் செயல்படுகிறது. தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து இம்மியளவும் விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும். எனவே, நான் முன்மொழிந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்’’ என்றார்.
இதையடுத்து, பிரிவு வாரியாக உறுப்பினர்களை எழுந்து நிற்கச்செய்து, ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், நடுநிலை வகிப்பவர்கள் என எண்ணிக் கணிக்குமாறு பேரவைச் செயலர் கி.சீனிவாசனுக்குப் பேரவைத் தலைவர் அறிவுறுத்தினார்.
அதன்படி, பிரிவு வாரியாக உறுப்பினர்கள் எண்ணிக் கணிக்கப்பட்டனர். உறுப்பினர்களை எழுந்து நிற்கக்கூறி, பெயர் வாசிக்கப்பட்டு அவர்கள் நிலைப்பாடு கணக்கில் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, வாக்கெடுப்பு விவரத்தை பேரவைத் தலைவர் அறிவித்தார். அதன்படி, 144 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளிப்பதாகவும், 22 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததாகவும், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்ததாகவும் அறிவித்தார். இதன்மூலம் வாக்கெடுப்பில் தவெக அரசு பெரும்பான்மை பெற்றுள்ளதாகவும் அறிவித்தார். இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.
சென்னை,
சட்டப்பேரவையில் நடைபெற்ற பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் விஜய்யின் தவெக அரசு வெற்றி பெற்றது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க மொத்தம் 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையி்ல், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 13 உறுப்பினர்களின் ஆதரவைத் தவெக பெற்றது. இதையடுத்து 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
கடந்த 10-ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, ஆளுநர் அறிவுறுத்தலின்படி, சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் கேட்டுக்கொண்டபடி. நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
தொடர்ந்து, எஸ்.ராஜேஷ் குமார் (காங்கிரஸ்), ஆர்.செல்லசுவாமி (மார்க்சிஸ்ட்), வன்னியரசு (விசிக), அ.மு.ஷாஜகான் (ஐயூஎம்எல்), அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.காமராஜ் (சுயேச்சை), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் அரசுக்கு ஆதரவாக பேசினர்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக), தமிமுன் அன்சாரி (மஜக), நித்தியானந்தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். போஜராஜன் (பாஜக), சவுமியா அன்புமணி (பாமக) ஆகியோர் நடுநிலை வகிப்பதாக தெரிவித்தனர்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்கள் 2 அணிகளாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு, அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவின் சி.வி.சண்முகம் தரப்பில் எஸ்.பி.வேலுமணி பேச வாய்ப்பு தரப்பட்டது. அதற்கு பழனிசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவைத் தலைவர் அனுமதி அளித்ததை அடுத்து, வேலுமணி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘பெரும்பான்மை மக்கள் தவெகவுக்கு வாக்களிக்கவில்லை’ என்று பேசியதுடன், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். திமுகவுடன் தேமுதிக, மஜக, கொமதேக, மமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து முதல்வர் விஜய் பேசும்போது, ‘‘இந்த அரசு நிச்சயம் மதச்சார்பற்ற அரசாகத்தான் செயல்படும். குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபடவில்லை. குதிரை வேகத்தில் செயல்படுகிறது. தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து இம்மியளவும் விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும். எனவே, நான் முன்மொழிந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்’’ என்றார்.
இதையடுத்து, பிரிவு வாரியாக உறுப்பினர்களை எழுந்து நிற்கச்செய்து, ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், நடுநிலை வகிப்பவர்கள் என எண்ணிக் கணிக்குமாறு பேரவைச் செயலர் கி.சீனிவாசனுக்குப் பேரவைத் தலைவர் அறிவுறுத்தினார்.
அதன்படி, பிரிவு வாரியாக உறுப்பினர்கள் எண்ணிக் கணிக்கப்பட்டனர். உறுப்பினர்களை எழுந்து நிற்கக்கூறி, பெயர் வாசிக்கப்பட்டு அவர்கள் நிலைப்பாடு கணக்கில் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, வாக்கெடுப்பு விவரத்தை பேரவைத் தலைவர் அறிவித்தார். அதன்படி, 144 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளிப்பதாகவும், 22 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததாகவும், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்ததாகவும் அறிவித்தார். இதன்மூலம் வாக்கெடுப்பில் தவெக அரசு பெரும்பான்மை பெற்றுள்ளதாகவும் அறிவித்தார். இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...






