செவ்வாய், 30 ஜூன், 2026

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - காலி தொகுதிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது


பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஜூன்  30, 2026,  ஆனி  16, பாரபவ வருடம்  00.50 AM

சென்னை,

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.

கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ராஜி​னாமா செய்​துள்​ளார். இதன்​மூலம் காலி தொகு​தி​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக படு​தோல்வி அடைந்​தது. இதையடுத்து அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்கு எதி​ராக எஸ்​.பி.வேலுமணி தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் போர்க்​கொடி தூக்​கினர். 

சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி நடை​பெற்ற நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் 25 பேரும் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். இதனால், அவர்​களின் கட்சிப் பொறுப்​பு​கள் பறிக்​கப்​பட்​டன. அதைத் தொடர்ந்​து, பழனி​சாமி​யுடன் சமா​தான​மாகினர்.

இருப்​பினும் அவர்​கள் ஏற்​கெனவே வகித்த கட்​சிப் பதவி​கள் திரும்ப வழங்​கப்​பட​வில்​லை. இதற்​கிடையே மரகதம் குமர​வேல், ஜெயக்​கு​மார், சத்​ய​பா​மா, இசக்கி சுப்​பையா ஆகியோர் தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து, தவெக​வில் இணைந்​தனர். தொடர்ந்து விராலிமலை எம்​எல்ஏ சி.​விஜய​பாஸ்​கரும் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். அவரும் தவெக​வில் இணை​ய உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அதிமுகவில் இருந்து 6-வது எம்எல்ஏ: இந்​நிலை​யில், கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நேற்று ராஜி​னாமா செய்​தார். இதற்​கான கடிதத்தை சென்னை தலை​மைச் செயல​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகரிடம் வழங்​கி​னார். அவரின் ராஜி​னாமா கடிதத்தை ஏற்​ப​தாக பேர​வைத் ​தலை​வர் பிர​பாகரும் உடனே அறி​வித்​தார்.

இதுகுறித்து சட்​டப்​பேர​வைத் தலை​வர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், 

‘‘சட்​டப்​பேரவை விதி 21-ன்​ படி கரூர் தொகுதி எம்​எல்ஏ எம்​.ஆர்​.​ விஜய​பாஸ்​கர், தனது பதவி வில​கல் கடிதத்​தை, தனது கைப்பட எழுதி என்​னிடம் அளித்​துள்​ளார். 

அந்த கடிதம் பேரவை விதி 22-ன்​படிமுறை​யாக உள்​ள​தால் ஏற்​றுக் கொள்​கிறேன்’’ என்று கூறப்​பட்​டுள்​ளது. சில நாட்​களுக்கு முன்பு எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரை அதி​முக​வின் கொள்​கைப் பரப்பு இணைச் செய​லா​ள​ராக பழனி​சாமி நியமித்​தார்.

ஆனாலும், கரூர் மாவட்​டச் செய​லா​ளர் பதவி அவருக்கு வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக கடும் அதிருப்​தி​யில் இருந்த அவர், தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். விரை​வில் தவெக​வில் அவர் சேர​உள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. 

எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ராஜி​னாமா மூலம், சட்​டப்​பேர​வை​யில் அதி​முக எம்​எல்​ஏக்​களின் பலம் 41 ஆக குறைந்​துள்​ளது. காலி​யான தொகு​தி​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

 
பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஜூன்  30, 2026,  ஆனி  16, பாரபவ வருடம்  00.40 AM

சென்னை,

“வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் அரசு சேவைகள் மக்களிடம் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டுக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள் மாநாடு இன்று காலை முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது. அதில் அவர் பேசியது: “வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் முடிவு செய்துதான், நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சினை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.

மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும், அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.

மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.

மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த் துறை, காவல் துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும், சமரசமும் இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்ப்படுகளை செய்தே ஆக வேண்டும்.

மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வி என்பது ஒரு கொண்டாட்டம். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும்.

மேலும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துச் செயல்பட வேண்டும். ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.

மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

வெளிப்படைத் தன்மை என்பது அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும். அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித் துறை கண்காணிக்க வேண்டும்.

கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுப்பணித் துறை (PWD), அறநிலையத் துறை, தீயணைப்பு - மீட்பு மற்றும் வருவாய்த் துறைகள் அனைத்து முக்கிய நிகழ்வுகளின்போதும் காவல்துறையுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான காயப்படுத்தல் வழக்குகள் மற்றும் கொலைகளுக்கு, நில தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரமைக்கப்பட்டு இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் மதிப்பாய்வு நடத்தி அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கவரேஜ் இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் சிசிடிவி நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு, சிசிடிவி கவரேஜ் ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

அதேபோல் CoP/IGP/DIG/SP ஆகியோர் ஆய்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவையிலுள்ள விசாரணை வழக்குகளின் நிலை ஆகியவற்றையும் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் எப்ஐஆர் பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித் துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி (JJ) சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.

கள்ளச் சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் (Illicit distillation) இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை அமலாக்கம் மட்டுமே தீர்க்க முடியாது - போதைப்பொருள் தேவை குறைப்புக்கும் (Drug Demand to be eliminated) சம கவனம் செலுத்தப்பட வேண்டும். சுகாதாரத் துறை அனைத்து மாவட்டங்களிலும் போதைமுறிவு முகாம்களை நடத்த வேண்டும். பழக்கத்திற்கு உள்ளாக்கும் போதை மருந்துகளாக சில மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கலால் துறை அதிகாரிகள் அனைவரும் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். NCORD கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும்.

திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை மண்டலங்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களிடையே கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப்பொருள்களின் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகளில் இலக்கு கொண்ட விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் நடத்தப்பட வேண்டும்.

காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் திருட்டை கண்டறிந்து சுரங்க, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய, சமூகங்களை ஏமாற்றும் PONZI மற்றும் பலமட்ட சந்தைப்படுத்தல் திட்டங்கள் தொடர்கின்றன.

சட்டங்களைக் கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்த, தொடர்புடைய அனைத்து துறைகளும் திறம்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் உரிய கால இடைவெளியில் தணிக்கை செய்ய பொறுப்பேற்கப்பட வேண்டும். உரிமம் இல்லாமல் எந்த அலகும் இயங்கவே கூடாது.

புயலால் பாதிக்கப்படும் கடலோர மாவட்டங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, பேரிடர் தயார்நிலை பற்றி கட்டமைக்கப்பட்ட தணிக்கை நடத்தப்பட வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பருவமழை காலத்திற்கு முன் மீட்பு உள்கட்டமைப்பில் உள்ள தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பது வருத்தமாக உள்ளது. விபத்து அதிகமாக நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உரிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தலைக்கவசம் அணிவது, சீட்பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். புலம்பெயர்ந்தோர், தாக்குதல் அல்லது சுரண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கட்டாயப் பதிவு அமல்படுத்தப்பட வேண்டும்.

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களை குறிவைத்து டிஜிட்டல் கைது மோசடி, ஓடிபி மோசடி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி அதிகரித்துள்ளன. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து சைபர் குற்ற காவல் நிலையங்களும், குற்றங்களைத் தடுக்க மற்றும் கண்டறிய தீவிரமாக பணியாற்றிட வேண்டும்.

காவல் துறை ஆணையர் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொலை, போக்சோ மற்றும் பிற முக்கியமான வழக்குகள் தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுடனும் மாதந்தோறும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். முந்தைய மாதத்திற்கான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆவணப்படுத்தப்பட வேண்டும்; இது மூத்த காவல் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும். 

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். தெளிவும், வெளிப்படைத் தன்மையும் இருக்க வேண்டும்” என்று முதல்வர் விஜய் கூறினார்.
 

திங்கள், 29 ஜூன், 2026

50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் - தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் முகாம்

பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  29, 2026,  ஆனி  15, பாரபவ வருடம்  03.10 AM

சென்னை,

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​கள், அங்​கன்​வாடி மையங்​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், பள்​ளி​கள் என மொத்​தம் 43,051 மையங்​களில் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் சுமார் 50 லட்​சம் பேருக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்​டது. சென்னை பால​வாக்​கத்​தில் குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்​கி, முகாமை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​தார்.

இந்​தி​யா​வில் போலியோவை (இளம்​ பிள்ளை வாதம்) ஒழிப்​ப​தற்​காக 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்கு ஆண்​டு​தோறும் 2 தவணை​களில் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வந்​தது. இதையடுத்​து, போலியோ ஒழிக்​கப்​பட்ட நாடு​கள் பட்​டியலில் இந்​தி​யா​வும் சேர்ந்​துள்​ளது. இதன்​பிறகு, போலியோ பாதிப்பு மீண்​டும் ஏற்​ப​டா​மல் தடுக்​கும் வித​மாக, ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​படு​கிறது. அதன்​படி, இந்த ஆண்​டுக்​கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழு​வதும் நேற்று நடை​பெற்​றது.

தமிழகத்​தில் 5 வயதுக்கு உட்​பட்ட 52.91 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், அரசு மருத்​து​வ​மனை​கள், அங்​கன்​வாடி மையங்​கள், சத்​துணவு மையங்​கள், பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 43,051 மையங்​களில் முகாம் அமைக்​கப்​பட்​டிருந்​தது.

சென்னை பால​வாக்​கத்​தில் உள்ள அரசு ஆதி​தி​ரா​விடர் நல உயர்​நிலைப் பள்​ளி​யில் நடை​பெற்ற முகாமில் முதல்​வர் விஜய் கலந்​து​கொண்​டு, குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கி​யும், அவர்​களுக்கு பிடித்த ‘டெடி பியர்’ பொம்​மை​களை பரி​சாக கொடுத்​தும் போலியோ சொட்டு மருந்துமுகாமைத் தொடங்கி வைத்​தார்.

சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகா​தா​ரம், நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்​குநர் சோமசுந்​தரம், சோழிங்​கநல்​லூர் தொகுதி எம்​எல்ஏ சரவணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். வில்​லி​வாக்​கம் தொகு​திக்கு உட்​பட்ட ராஜமங்​கலம் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யம், அயனாவரம் மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் குழந்​தைகளுக்கு அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா போலியோ சொட்டு மருந்து வழங்​கி​னார்.

தமிழகம் முழு​வதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடை​பெற்​றது. பெற்​றோர் தங்​களது குழந்​தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்​டுச் சென்றனர். அழுது அடம்​பிடித்த குழந்​தைகளுக்கு விளை​யாட்டு காட்​டி​யும், சாக்​லேட், பொம்​மை​கள் வழங்​கி​யும் மருந்து வழங்​கப்​பட்​டது.

பயணத்​தில் இருக்​கும் குழந்​தைகளின் வசதிக்​காக பேருந்​து, ரயில், விமான நிலை​யங்​கள், சோதனைச் சாவடிகளி​லும் மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தது. தொலை​தூரம் மற்​றும் எளி​தில் வந்து செல்ல முடி​யாத பகு​தி​களுக்கு நடமாடும் குழு​வினர் சென்​று, அங்​குள்ள குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்​கினர். இந்த பணி​யில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக​னங்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டன.

பிற மாநிலங்​களில் இருந்து வந்து தமிழகத்​தில் வசிப்​பவர்​களின் குழந்​தைகளுக்​கும் மருந்து வழங்​கப்​பட்​டது. விடு​படும் குழந்​தைகளை அடை​யாளம் காண, சொட்டு மருந்து வழங்​கப்​பட்ட குழந்​தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்​கப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கும் பணி​யில் சுகா​தா​ரப் பணி​யாளர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், ஆசிரியர்​கள், தன்​னார்​வலர்​கள் என 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் ஈடு​படுத்​தப்​பட்​டனர். சென்​னை​யில் 5 வயதுக்கு உட்​பட்ட 5.56 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,646 மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இப்​பணி​யில் 6,564 பேர் ஈடு​பட்​டனர்.

சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 50 லட்​சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்​பட்​டுள்​ளது. விடு​பட்ட குழந்​தைகளுக்கு ஒரு வாரத்​துக்​குள் செவிலியர்​கள்​ வீடு வீடாக வந்​து சொட்​டு மருந்​து வழங்​கு​வார்​கள். இன்​றும், நாளை​யும் தற்​காலிக மையங்​களில் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என்​று அதிகாரிகள் தெரி​வித்​தனர்.

பி.டி அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி - பின்னணி குறித்து விசாரணை தீவிரம்


 பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  29, 2026,  ஆனி  15, பாரபவ வருடம்  03.00 AM

சென்னை,

தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் பெற்​றுத் தரு​வ​தாக ரூ.100 கோடி மோசடி விவ​காரத்​தில் திமுக நிர்வாகி கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், பின்​னணி​யில் உள்​ளவர்​கள் குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்​னை, தி.நகரில் செயல்​பட்டு வரும் தனி​யார் பள்ளி சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் அண்​மை​யில் புகார் ஒன்று அளிக்​கப்​பட்​டது. அதில், ‘கடந்த 2 ஆண்​டு​களாக தமிழகத்​தில் உள்ள தனி​யார் பள்ளி நிர்​வாகி​கள் தங்​கள் பள்​ளி​களுக்​கான அங்​கீ​காரம், தரம் உயர்த்​துதல் மற்​றும் திட்ட அனு​மதி ஆகிய​வற்​றைப் பெறு​வ​தில் சிரமங்​களை எதிர் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, சென்​னை, சாலிகி​ராமத்​தில் ‘தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்​கம்’ என்ற பெயரில் பதிவு செய்​யப்​ப​டாத சங்​கத்தை நடத்தி வந்த சாலிகி​ராமம், மெஜஸ்​டிக் காலனியைச் சேர்ந்த பி.டி அரசகு​மார் (59) என்​பவர் தனக்​குள்ள அரசி​யல் மற்​றும் அதி​கார தொடர்​பு​களைப் பயன்​படுத்தி தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்ளி தரம் உயர்​வு, திட்ட அனு​மதி உள்பட பிற சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி தமிழகம் முழு​வதும் உள்ள பல தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிட​மிருந்து பணம் பெற்​றுக் கொண்​டு,உறு​தி​யளித்​த​படி அனு​ம​தி​கள் பெற்​றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்​கும் அதி​க​மான தொகையை வசூலித்து ஏமாற்றி உள்​ளார்.

எனவே, பி.டி அரசகு​மார் மற்​றும் அதன் நிர்​வாகி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என புகாரில் தெரிவிக்​கப்​பட்டு இருந்​தது. இதுகுறித்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, புகாருக்​குள்​ளான திமுக நிர்​வாகி​யான பி.டி.அரசகு​மாரை நேற்​று​முன்​தினம் கைது செய்​தனர். இவரது பின்​னணி​யில் முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வரும், மேலும் சிலரும் இருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதையடுத்​து, இந்த மோசடி​யின் பின்​னணி​யில் வேறு யார்? யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது என்ற பெயர் பட்​டியலை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர். அதன் அடிப்​படை​யில் அடுத்​தக்​கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என போலீ​ஸார்​ தெரி​வித்​துள்​ளனர்​.

ஞாயிறு, 28 ஜூன், 2026

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் - 2 மதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலக மறுப்பு: வைகோ அதிர்ச்சி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  05.05 AM

சென்னை,

தி​முக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக, மதி​முக பொதுக்​குழுக் கூட்​டத்​தின் முடி​வில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ அறி​வித்​தார். இந்​நிலை​யில், மதி​முக​வின் 2 எம்​எல்​ஏக்​களும் ராஜி​னாமா செய்ய மறுத்​துள்​ள​தால் வைகோ அதிர்ச்சி அடைந்​துள்​ளார்.

மதி​முக​வின் 32-வது பொதுக்​குழு கூட்​டம் சென்னை அண்ணா நகரில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் அவைத் தலை​வர் ஆடிட்​டர் ஆ.அர்​ஜுன​ராஜ் தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில், பொதுச் செய​லா​ளர் வைகோ, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி., பொருளாளர் செந்​தில​திபன் முன்​னிலை வகித்​தனர். துணைப் பொதுச் செய​லா​ளர்​கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்​டர் ரொஹை​யா, பூமி​நாதன், ஜீவன், டாக்​டர் சி.கிருஷ்ணன் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்ட பொதுக்​குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​ட நிலை​யில், 2 எம்​எல்​ஏக்​கள் செந்​தில் செல்​வன், தி.​மு.​ராஜேந்​திரன் மட்​டும் கூட்​டத்​துக்கு வரவில்​லை.

பொதுக்​குழு​வில் திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் இருந்து மதி​முக வில​கு​வ​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறிவித்து, அதற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. தமிழகத்​தில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசுக்கு வாழ்த்​து, மேகே​தாட்டு அணைப் பிரச்​சினை​யில் புதிய நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என்ற கோரிக்​கையை அரசு திரும்​பப் பெற வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 23 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

​பின்னர், செய்​தி​யாளர்​களிடம் வைகோ கூறிய​தாவது: திமுக கூட்​ட​ணி​யில் இருந்து மதிமுக உடனடி​யாக வெளி​யேற வேண்​டும் என்ற கருத்தை பொதுக்​குழு உறுப்​பினர்​கள் அனை​வரும் ஒரு​மன​தாக வலி​யுறுத்​தினர். அவர்​களது விருப்​பத்​துக்கு இணங்க, கூட்​ட​ணி​யில் இருந்து வில​கும் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

தமிழகத்​தில் பாஜக​வின் ஆதிக்​கம் ஊடுரு​வக் கூடாது என்ற ஒரே காரணத்​துக்​காகவே, கடந்த 9 ஆண்​டு​களாக திமுக கூட்​ட​ணி​யில் உறு​தி​யாக நீடித்​தோம்.

தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு, அதி​முக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முயன்​ற​தாக பரவலாக செய்​தி​கள் வெளிவந்​தன. பரஸ்​பரம் எதிர் துரு​வங்​களாக இருந்த இரு கட்​சிகளும் இப்​படி ஒரு ரகசிய உடன்​படிக்​கையை மேற்​கொண்​டது உண்​மை​யாக இருக்​கு​மா​னால், அதை​விட பெரிய அரசி​யல் மோசடி வேறு இருக்க முடி​யாது. இந்த தகவலை அறிந்த உடனேயே திமுக உடனான உறவை முறித்​துக் கொள்ள முடிவு செய்​தோம்.

மதி​முக சார்​பில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர்​களில், சீர்​காழி எம்​எல்ஏ செந்தில் செல்​வன் ஏற்​கெனவே திமுக​வில் இணைந்​து​விட்​டார். கடையநல்​லூர் எம்​எல்ஏ ராஜேந்​திரன் பொதுக்​குழு​வில் பங்கேற்காவிட்டாலும், மதி​முக​விலேயே தொடர்​வ​தாக உறுதி அளித்​துள்​ளார்.

மதி​முக​வில் இருந்து வெளி​யேறிய முன்​னாள் துணைப் பொதுச் செய​லா​ளர், என் மீதும், என் மகன் துரை வைகோ மீதும் அபாண்​ட​மான குற்​றச்​சாட்​டு​களை சுமத்தி வரு​கிறார். முதல்​வர் விஜய்​யிடம் நான் ரூ.50 கோடி வாங்​கிய​தாக​வும், சென்னை ஓஎம்​ஆர், அண்ணா சாலை​யில் பிரம்​மாண்ட கட்​டிடங்​களை வாங்​கி​யுள்​ள​தாக​வும் கூறப்​படும் புகார்​கள் முற்​றி​லும் பொய்​யானவை.

இந்த பழிச்​சொற்​களுக்​குப் பின்​னால் இருந்து யாரோ ஒரு சிலர் அவரை இயக்​கு​கின்​றனர். எனவே, இதுதொடர்​பான செய்​தியை வெளி​யிட்ட நாளிதழ் மற்​றும் புகார் கூறிய நபர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்​ளேன். திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறி​யுள்ள நாங்​கள், முதல்​வர் விஜய் தலை​மையி​லான ஆட்​சிக்கு ஆதரவு அளிக்​கிறோம். வரவிருக்​கும் இடைத்​தேர்​தலில் தவெகவை ஆதரிப்​போம்.

உள்​ளாட்​சித் தேர்​தலிலும் தவெக​வுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்​ளது. தவெக ஆட்​சி​யில் ஊழல் ஒழிக்​கப்​பட்​டுள்​ளது. சமூக நீதி மற்​றும் இரு​மொழிக் கொள்​கை​யில் அவர்​கள் உறு​தி​யாக உள்​ளனர். அண்​ணா​வின் கொள்​கைகளைப் பின்​பற்றி வரு​வ​தால், தவெக அரசின் செயல்​பாடு​கள் எங்​களுக்கு திருப்தி அளிக்​கின்​றன.

எங்​கள் கட்சி எம்​எல்​ஏவை திமுக தன் பக்​கம் இழுத்​திருப்​பது ஆரோக்​கிய​மான அரசி​யல் அல்ல. இதை ‘குதிரை பேரம்’ என்று சொல்​வ​தா, ‘ஒட்டக பேரம்’ என்று சொல்​வதா எனத் தெரிய​வில்​லை. மேலும், எங்​களது 2 எம்​எல்​ஏக்​களும் ராஜி​னாமா செய்​தால், அவர்​களுக்கு ஆதர​வாக இடைத்​தேர்​தலில் பிரச்​சா​ரம் செய்​வேன் என விஜய் கூறி​யிருந்​தார். ஆனால், எதிர்​வரும் இடைத்​தேர்​தலில் மதி​முக போட்​டி​யிடாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதற்​கிடையே, திமுக கூட்​ட​ணியில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற மதி​முக​வின் 2 எம்​எல்​ஏக்​களும் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்ய மறுப்பு தெரி​வித்​துள்​ளனர். இதனால், வைகோ மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

கடையநல்​லூர் எம்​எல்ஏ ராஜேந்​திரன் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: தொகுதி மக்​கள் நாள்​தோறும் என்​னிடம் வெளிப்​படுத்தி வரும் உணர்வை மதித்​தும், தலை​வர் வைகோ மீதோ, எம்​எல்​ஏ​வான என் மீதோ களங்​கம் படர்​வதைத் தவிர்க்​கும் பொருட்​டும் பதவி வில​கல் என்ற முடிவை தலைமை இப்​போது மேற்​கொள்ள வேண்​டாம். குறைந்​த​பட்​சம் 6 மாதம் பொறுத்​திருப்​போம். கூட்​டணி குறித்து தாங்​களும், கட்​சி​யும் எடுக்​கும் முடிவை மதிக்​கிறேன். எனவே, பதவி வில​கல் தொடர்​பாக வைகோ​விடம் இருந்து கிடைக்​கப்​பெற்ற உத்​தர​வை, என்​னால் செயல்​படுத்த இயலாது. அதனால், பொதுக்​குழு​வில் கலந்து கொள்​ள​வில்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் - செல்வப்பெருந்தகை மாற்றம்


 பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  05.00 AM

சென்னை,

தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராக விருதுநகர் எம்​.பி. மாணிக்​கம் தாகூரை நியமித்து காங்​கிரஸ் தேசிய பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

தமிழக காங்​கிரஸ் கமிட்டி தலை​வ​ராக செல்​வப்​பெருந்​தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டார். நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது அவரது செயல்​பாடு​களால் மூத்த தலை​வர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்​த​தாக கூறப்​படு​கிறது.

இதன் காரண​மாக அவர், எந்த நேரத்​தி​லும் மாற்​றப்​படலாம் என்ற பேச்சு எழுந்​தது. பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​ட​தாக அவரும் தொடர்ந்து கூறி வந்த நிலை​யில், தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராக விருதுநகர் எம்​.பி. மாணிக்​கம் தாகூரை நியமித்து அகில இந்​திய காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

இதுகுறித்து சத்​தி​யமூர்த்தி பவன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: 

நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 35 தொகு​தியி​லா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார். ஆனால், ப.சிதம்​பரத்தை கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்டு வந்து, தேசி​யத் தலை​மையை 28 இடங்​களுக்கு ஒப்​புக்​கொள்ள வைத்​தார் செல்​வப்​பெருந்​தகை. இதுத​விர, வேட்​பாளர்​கள் தேர்​வில் குளறு​படி நடந்​த​தாக தமிழக மகளிர் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ஹசீனா சையத் கிளப்​பிய குற்​றச்​சாட்டு சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதன் அடிப்​படை​யிலேயே, செல்​வப்​பெருந்​தகையை மாற்ற டெல்லி தலைமை முடிவு எடுத்​தது.

மாநிலத் தலை​வர் பதவியைக் கைப்​பற்ற கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, செல்​லக்​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோ​ரும் தீவிர​மாக முயற்சி மேற்​கொண்டு வந்​தனர். இந்த நிலை​யில், அகில இந்​திய காங்​கிரஸ் நிர்​வாகி பிர​வீன் சக்​ர​வர்த்​தி​யின் முழு ஆதர​வுடன் மாநிலத் தலை​வர் பதவியை மாணிக்​கம் தாகூர் கைப்​பற்​றி​யுள்​ளார். இவ்​வாறு காங்​கிரஸ் வட்​டாரங்​கள் கூறுகின்​றன.

சிவகங்​கை​யில் பிறந்த மாணிக்​கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்​கிரஸ் கட்​சி​யின் மாணவர் அமைப்​பில் (என்​எஸ்​யூஐ) இணைந்​தார். கடந்த 2009, 2019, 2024 மக்​களவை பொதுத் தேர்​தல்​களில் விருதுநகர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்று எம்​.பி.​யா​னார். 2014 பொதுத் தேர்​தலில் இத்​தொகு​தி​யில் தோல்​வியடைந்​தார். கட்​சி​யின் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களி​லும், பிற மாநிலங்​களின் தேர்​தல் பொறுப்​பாள​ராக​வும் பணி​யாற்​றி​யுள்​ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரக் களத்​தில் இருந்தே திமுகவை இவர் கடுமை​யாக விமர்​சித்து வரு​கிறார். 

முன்​னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை விரை​வில் காங்​கிரஸில் இருந்து விலகி திமுக​வில் இணைய உள்​ள​தாக​ தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

‘திரைக்கதை மன்னன்’ - கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  04.50 AM

சென்னை,

‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி

பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்று காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பிரபல இயக்​குநரும் நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ், மாரடைப்​பால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் ஸ்​டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள், ரஜினி​காந்த், கமல்​ஹாசன் உள்​ளிட்ட திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்​தினர். அரசு மரியாதையுடன் இறு​திச் சடங்​கு​கள் இன்று நடை​பெறுகின்​றன.

இயக்​குநர் கே.​பாக்​ய​ராஜ் 2 நாட்​களுக்கு முன்பு கோவா​வில் நடந்த நடிகை குஷ்பு மகள் திரு​மணத்​தில் கலந்​து​கொண்​டார். பின்​னர் சென்னை திரும்​பிய

அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்​கொண்ட பிறகு வீட்​டுக்கு வந்​தார். அப்​போது அவருக்கு திடீரென நெஞ்​சுவலி ஏற்​பட்​டுள்​ளது. உடனடி​யாக சென்னை கிரீம்ஸ் சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்​றி, அவர் உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, பாக்​யராஜ் உடல் மருத்​து​வ​மனை​யில் இருந்து நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அவரது வீட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது. அங்கு அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தி​னார். பின்​னர் பாக்​ய​ராஜின் மனைவி பூர்​ணி​மா, மகன் சாந்​தனு, மகள் சரண்யா வுக்கு ஆறு​தல் கூறி​னார்.

திமுக தலை​வர் ஸ்​டா​லின், எம்​.பி.க்​கள் டி.ஆர்.​பாலு, ஆ.ராசா ஆகியோ​ரும் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்தி, குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவித்தனர்.

அமைச்​சர்​கள் ராஜ்மோகன், வன்​னியரசு, விசிக தலை​வர் திரு​மாவளவன், புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம், காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார், மநீம தலை​வர் கமல்​ஹாசன், நடிகர் ரஜினி​காந்த், பிரபு, விக்​ரம்​பிரபு, ஜெய​ராம், சார்​லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்​குநர்​கள் மணிரத்​னம், பார்த்​திபன், ஆர்.சுந்​தர்​ராஜன், பி.​வாசு, பாண்​டிய​ராஜன், சமுத்​திரக்​கனி, ஹெச்​.​வினோத், லோகேஷ் கனக​ராஜ், சுசீந்​திரன். சந்​தான​பார​தி, இசை அமைப்​பாளர் தேவா உள்​ளிட்​டோர் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர்.

பெண்​கள் உட்பட ஏராள​மான பொது​மக்​கள், ரசிகர்​கள் நீண்ட வரிசை​யில் வந்து அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர். பாக்​ய​ராஜின் திரைப்​படக் காட்​சிகள், பிரபல வசனங்​களை பலரும் சமூக வலை​தளங்​களில் பகிர்ந்​து, அவரது நினை​வு​களை சோகத்​துடன் பகிர்ந்து வரு​கின்​றனர். பாக்​ய​ராஜ் மறைவையொட்டி முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்த் திரை​யுல​கின் தலைசிறந்த இயக்​குநர், நடிகர், திரைக்​கதை ஆசிரியர், வசனகர்த்​தா, இசை அமைப்​பாளர் என பன்​முகத் திறமை​யால் முத்​திரை பதித்த கே.​பாக்​ய​ராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்​சி​யும், ஆழ்ந்த வேதனை​யும் அடைந்​தேன்.

தனித்​து​வ​மான கதை​யாக்​கம், நகைச்​சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்​வியல் மற்​றும் குடும்ப உறவு​களின் ஆழமான உணர்​வு​களைப் பிர​திபலிக்​கும் திரைப்​படங்​கள் மூலம் தமிழ் மக்​களின் மனதில் நீங்கா இடம்​பிடித்த கே.​பாக்​ய​ராஜின் பங்​களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்​பரிய​தாகும். அவரது ஒவ்​வொரு படைப்​பும் பொழுது​போக்​கோடு, மனித நேயம் மற்​றும் சமூக விழு​மி​யங்​களைப் பேசும்; காலத்​தால் அழி​யாத நினை​வு​களாக என்​றும் நிலைத்​திருக்​கும். அவரது மறைவு தமிழ்த் திரை​உல​குக்கு ஈடு​செய்ய முடி​யாத பேரிழப்​பாகும். அவரை இழந்து வாடும் குடும்​பத்​தினர், உறவினர்​கள், நண்​பர்​கள், திரைத்​துறை​யினர், ரசிகர்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை​யும், அனு​தாபங்​களை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அவரது ஆன்மா இறைவன் திரு​வடி​யில் இளைப்​பாறப் பிரார்த்​திக்​கிறேன்.

இறுதிச் சடங்கில் அரசு மரியாதை: திரைத்​துறை​யில் கே.​பாக்​ய​ராஜின் பங்​களிப்​பைப் போற்​றி, அஞ்​சலி செலுத்​தும் வகை​யில் அவரது இறு​திப் பயணத்​துக்கு அரசு மரி​யாதை வழங்​கப்​படும். இவ்​வாறு முதல்​வர் அறி​வித்​துள்​ளார். யதார்த்​த​மான நடிகர், இயக்​குநர் என்று அறியப்​பட்​ட​வர் கே.​பாக்​ய​ராஜ். அது மட்​டுமின்​றி, தனது தனிச் சிறப்​பான பாணி​யால் எதிர்​பா​ராத, அதே​நேரம் ரசிக்​கக்​கூடிய திருப்​பங்​களைக் கொண்ட திரைக்​கதை அமைப்​ப​தில் வல்​ல​வ​ராகத் திகழ்ந்​தவர்.

அவர் இயக்​கிய படங்​கள் தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி என பல மொழிகளி​லும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்​றன. அதனால், இந்​திய அளவில் ‘திரைக்​கதை மன்​னன்’ என்று கொண்​டாடப்​பட்​டார். முக்​கிய பிர​முகர்​கள், திரை​யுல​கினர், ரசிகர்​கள், பொது​மக்​களின் இறுதி அஞ்​சலிக்கு பிறகு, பாக்​ய​ராஜ் உடல் இன்று நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் இருந்து ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​பட்​டு, பெசன்ட்​நகர் மின் மயானத்​தில் இறு​திச் சடங்​கு​கள் நடை​பெற உள்​ளன.

இயக்​குநர் பார​தி​ராஜா கடந்த 10-ம் தேதி கால​மா​னார். தனது குரு​வான பார​தி​ராஜா மறைந்த 17-வது நாளி​ல் பாக்​ய​ராஜ் மறைந்​தது ரசிகர்​கள்​, திரை​யுல​கினர்​ மத்​தி​யில்​ சோகத்​தை ஏற்​படுத்​தியுள்​ளது.

சனி, 27 ஜூன், 2026

போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி 3 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் - அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட 15,000 பேர் பங்கேற்பு

பதிவு: சனிக்கிழமை,  ஜூன்  27, 2026,  ஆனி  13, பாரபவ வருடம்  01.50 AM

சென்னை,

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார். ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சர்​வ​தேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்​தையொட்டி சென்​னை​யில் நடை​பெற்ற மாரத்​தான் ஓட்​டத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​து, அதில் பங்​கேற்​றார். அவருடன் அமைச்​சர்​கள், தலை​மைச் செயலர், டிஜிபி உள்​ளிட்ட அதி​காரி​களும் மாரத்​தானில் கலந்​து​கொண்​டனர்.

சர்​வ​தேச போதைப் பொருள் ஒழிப்​பு, சட்​ட​விரோத கடத்​தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, மாணவர்​கள், இளைஞர்​கள், பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் சென்​னை​யில் ‘ஸ்​டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்​ஸ்’ என்ற கருத்​துடன் நேற்று மாரத்​தான் ஓட்​டம் நடத்​தப்​பட்​டது.

நிகழ்ச்​சிக்கு தலைமை வகித்த முதல்​வர் விஜய், விழிப்​புணர்​வுப் பலகை​யில் ‘ஸ்​டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்​ஸ், ஸ்போர்ட்ஸை எடு, ட்ரக்ஸை விடு’ என்று எழுதி கையெழுத்​திட்​டார். அவரது தலை​மை​யில் அனை​வரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறு​தி​மொழி ஏற்​றுக்​கொண்​டனர். இதன்​பிறகு, மெரினா காம​ராஜர் சாலை​யில் உள்ள அண்ணா நினை​விடத்​தில் இருந்து தீவுத்​திடல் வரை மாரத்​தான் ஓட்​டம் தொடங்​கியது.

முதல்​வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். 
6 கி.மீ. தூரம் நடை​பெற்ற ஓட்​டத்​தில், ஒலிம்​பிக் மற்​றும் சர்​வ​தேசப் போட்​டிகளில் கலந்​து​கொண்ட விளை​யாட்டு வீரர்​கள், வீராங்​க​னை​கள், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் விளை​யாட்டு வீரர்​கள், கல்​லூரி மாணவ, மாணவி​கள், அரசு அலு​வலர்​கள், காவல் துறை அதி​காரி​கள், பொது​மக்​கள் என 15 ஆயிரம் பேர் பங்​கேற்​றனர்.

இவர்​களு​டன் முதல்வர் விஜய், அமைச்​சர்​கள் ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, வெங்​கடரமணன், மரிய​வில்சன், ரா.குமார், தலை​மைச் செயலர் சாய்​கு​மார், டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ், விளை​யாட்​டுத் துறை செயலர் சந்​தீப்நந்​தூரி, தமிழ்​நாடு விளை​யாட்டுமேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன் உள்​ளிட்​டோரும் மாரத்​தானில் பங்​கேற்று ஓடினர். பின்​னர், வீரர்​களு​டன் கலந்​துரை​யாடிய முதல்​வர் விஜய், அவர்​களு​டன் செல்ஃபி எடுத்​துக் கொண்​டார்.

நிகழ்ச்​சி​யின் முடி​வில் பேசிய அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, “தமிழக வரலாற்​றில் வேறு எந்த முதல்​வரும் மாரத்​தான் ஓடியது இல்​லை. முதல்​வர் விஜய்​தான் முதல்​முறை​யாக 3 கி.மீ. தூரம் வரை மாரத்​தான் ஓடி​யுள்​ளார். அவரைப் போலவே தமிழக​மும் ஆரோக்​கிய​மாக மாறும்” என்​றார்.

முதல்​வர் விஜய் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: இளைஞர்​களின் எதிர்​காலத்​தைப் பாது​காக்​க​வும், குற்​றங்​களைத் தடுக்​க​வும் போதைப் பொருட்​களால் ஏற்​படும் தீமை​கள் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வது அவசி​யம். கல்​வி, விளை​யாட்​டு, திறன் மேம்​பாடு போன்ற ஆக்​கப்​பூர்​வ​மான செயல்​பாடு​களில் இளைஞர்​களை ஈடு​படுத்​து​வதன் மூல​மாக​வும், கடும் சட்ட நடவடிக்​கை கள் மூல​மாக​வும் போதைப் பொருட்​களை ஒழித்​து, வலிமை​யான சமு​தா​யத்​தைப் படைக்க முடி​யும்.

போதைப் பொருட்​கள் தொடர்​பான குற்​றங்​களைத் தடுக்க தமிழக அரசு எடுத்​து​வரும் பல்​வேறு முன்​னெடுப்​பு​களுக்கு அனை​வரும் துணைநின்​று, போதைப் பொருள் இல்​லாத, பாது​காப்​பான, ஆரோக்​கிய​மான தமிழகத்​தை உரு​வாக்​க உறு​தி​யேற்​போம்​. 

இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

வெள்ளி, 26 ஜூன், 2026

“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” - முதல்வர் விஜய்யின் ‘அப்பாவைக் காணோம்’ குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  ஜூன்  26, 2026,  ஆனி  12, பாரபவ வருடம்  03.00 AM

திருவாரூர்,

தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், “என்னை எங்கேயும் தேட வேண்டாம்; நான் மக்கள் மனதில் இருக்கிறேன்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.


திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்தார் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

பின்னர் விழாவில் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் திறக்க முடியவில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில்  நடைபெற்ற திமுக ஆட்சியில் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  சட்டப்பேரவையில் எடுத்துச் சொல்லிப் பேசினார்.

ஆனால் முதல்வராக உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், “எங்கே உங்கள் அப்பாவை காணோம்!” என்கிறார்.  அப்பாவை அங்கே தேடாதீர்கள். அவர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். சட்டப்பேரவையில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன்.

கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாகத் தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது, சென்றிருக்கிறேன். நான் ஆய்வுக் கூட்டம் நடத்தியதைப் போல யாரும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி இருக்க மாட்டார்கள். கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன அந்த கோப்புகளை எடுத்துப் பாருங்கள்.

மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்துள்ளேன் அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடு தான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும், இந்த தமிழ்நாடு உள்ளவரை நான் தான் முதல்வர் என்று சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் முதல்வர், கருணாநிதி கூட்டணி அமைத்தால் கூட்டணி கட்சியை பாதுகாப்பாக வைத்திருப்பார், அவர்களாகத்தான் கூட்டணியை விட்டு  போவார்களே  தவிர, வெளியேற்ற மாட்டார்.

அந்த வழியில்தான் நான் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால் கூட்டணியே வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனையும் பரிசீலிப்போம்,” என்றார்.

இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வியாழன், 25 ஜூன், 2026

அன்புமணியை கட்டியணைத்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்... பாமகவில் முடிவுக்கு வரும் குடும்ப யுத்தம்! - மூத்த மகள் ஸ்ரீகாந்தி அதிருப்தி

பதிவு: வியாழக்கிழமை,  ஜூன்  25, 2026,  ஆனி  11, பாரபவ வருடம்  12.30 AM

தைலாபுரம்,

தனது திருமண நாளில் மகன் அன்புமணியைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதன்மூலம், பாமகவில் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. ‘இனி நல்லது நடக்கும்’ என அன்புமணி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டார். ஆனால் அவரது விருப்பத்தை மீறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் பாமக தலைவர் அன்புமணி. 

இதற்கு பாலமாக இருந்தவர் அவருடைய மனைவியான தருமபுரி எம்எல்ஏ சவுமியா. இதனால், தந்தை - மகன் இடையே விரிசல் ஏற்பட்டது.

2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனை நியமித்துள்ளதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேஜை மீது மைக்கை தூக்கி வீசி எதிர்வினையாற்றினார் அன்புமணி. இதனால் கோபடைந்த ராமதாஸ், என்னுடைய முடிவை ஏற்பவர்கள் கட்சியில் இருக்கலாம், இல்லையென்றால் செல்லலாம் என்றார். பனையூரில் கட்சி அலுவலகம் செயல்படும், என்னை அங்கு வந்து கட்சி நிர்வாகிகள் சந்திக்கலாம் என ராமதாஸுக்கு அன்புமணி பதிலடி கொடுத்தார்.

மாமல்லபுரத்தில் 2025 சித்திரை மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டிலும் அன்புமணியை புகழாமல், மாநாட்டுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்ததாக கூறி, திருக்கச்சூர் ஆறுமுகத்தை ராமதாஸ் பாராட்டினார். இதனால் தந்தை - மகன் இடையே விரிசல் அதிகரித்தது.

தைலாபுரத்தில் கடந்த 2025 மே 16-ம் தேதி ராமதாஸ் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை 100-க்கும் மேற்பட்டவர்கள் புறக்கணித்தனர். அவர்களை வர விடாமல் அன்புமணி தடுத்துவிட்டார் என்றார் ராமதாஸ். மேலும் அவர், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியின் பதவியில் இருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களை நியமித்தார்.

தலைமை பண்பு இல்லாதவர், கோபக்காரர், தாய் மீது பாட்டிலை தூக்கி வீசினார், நிர்வாக திறன் இல்லதாவர், மத்திய அமைச்சராக்கியது நான் செய்த பெரிய தவறு, பாஜகவுடன் கூட்டணிக்காக கணவனும், மனைவியும் எனது இரு கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர், பாமக தலைவர் என்ற பதவிக்கு மூடி சூட நாள் குறித்து மருமகள் சவுமியா நெருக்கடி கொடுத்தார் என மிக கடுமையாக மகன் மற்றும் மருமகளை ராமதாஸ் விமர்ச்சித்தார்.

மேலும், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டேன், என்னுடைய பெயரை அன்புமணி இணைந்து போடக் கூடாது, வேண்டுமென்றால் இனிஷியலை போட்டுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தது பாமக தொண்டர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைக்க, தன்னிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பை பொருட்படுத்தாமல், அன்புமணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தார் பழனிசாமி.

பாமக எனும் கட்சி, கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது. இது ராமதாஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. நீதிமன்ற கதவுகளை தட்டியும் சாதகமான அரசியல் சூழல் ராமதாஸுக்கு ஏற்படவில்லை. திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியும் கைகூடவில்லை. தந்தை, மகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டனர். இதனால் வேறு வழியின்றி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் கூட்டணி அமைத்து சுமார் 40 தொகுதிகளில் களம் கண்ட ராமதாஸ், அனைத்திலும் டெபாசிட் இழந்தார். பல தொகுதிகளில் 4 இலக்க எண்களில் வாக்கு கிடைக்கவில்லை.

அதேநேரத்தில் கிளசரின் போட்டுக் கொண்டு பேத்திகள் அழுவதாகவும், தருமபுரி அதர்மபுரியாக மாறிவிடும் என ராமதாஸின் மிக கடுமையான விமர்சனத்தையும் மீறி சவுமியா அன்புமணி உட்பட 4 பாமக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.

தேர்தலுக்கு பிறகு அன்புமணியின் கை ஓங்கியது. தைலாபுரத்துக்கு வருவதை பாமகவினர் குறைத்துக் கொண்டனர். யாரையும் சந்திக்காமல் பொது பிரச்சினைகளை கூறி, சில அறிக்கைகளை மட்டும் ராமதாஸ் வெளியிட்டு வந்தார்.

இதற்கிடையில் தந்தை - மகனை மீண்டும் ஒருங்கிணைக்க குடும்ப உறவுகளும், முக்கிய நபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக ராமதாஸின் திருமண நாள் சரியானதாக இருக்கும் என நாள் குறிக்கப்பட்டது.

அதன்பேரில் ராமதாஸ் - சரஸ்வதி இணையரின் 61-வது திருமண நாளை ஒட்டி, அவர்களிடம் ஆசி பெற தைலாபுரத்துக்கு மனைவி சவுமியா, மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா, இரு மருமகன்கள், பேர பிள்ளைகள் சகிதம் அன்புமணி இன்று (ஜூன் 24)  வருகை தந்தார். ஆரத்தி எடுத்து ராமதாஸ் தரப்பினர் வரவேற்றனர்.

ஒன்றரை ஆண்டுகளாக மகனை சந்திப்பதை தவிர்த்து வந்த ராமதாஸ், தற்சமயம் மகனை கண்டதும் கட்டி தழுவினார். இருவரும் கண்ணீர் சிந்தி உள்ளனர். தாயையும் அன்புமணி அரவணைத்தார். 


மேலும் பேர பிள்ளைகள் மற்றும் கொள்ளு பேர பிள்ளைகளையும் ராமதாஸ் - சரஸ்வதி கொஞ்சி மகிழ்ந்தனர். அப்போது அவர்களது கால்களில் விழுந்து அன்புமணி, சவுமியா உள்ளிட்ட அனைவரும் ஆசி பெற்றனர். ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறும்போது, “அப்பா - அம்மாவின் 61-வது திருமண நாள். இதனால் குடும்பத்துடன் சென்று வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டோம். இனி, நல்லது நடக்கும்” என்றார். ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது பாமகவினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

மூத்த மகள் ஸ்ரீகாந்தி அதிருப்தி

பாமக நிறுவனரும் தந்தையுமான ராமதாஸை குடும்பத்துடன் வந்து அன்புமணி சந்தித்தபோது, அவரது இளைய சகோதரி கவிதா உடன் இருந்துள்ளார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, அவரது மகன் முகுந்தன் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர்.

தலைவர் பதவியை தன் வசப்படுத்திக் கொண்டதாக அறிவித்த ராமதாஸ், மகனை செயல் தலைவர் பதவியில் இருக்கலாம் என்றார். இதனை அன்புமணி ஏற்கவில்லை. இதனால் மகனுக்கு வழங்கப்பட்ட செயல் தலைவர் பதவியை பறித்து, மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு ராமதாஸ் வழங்கினார்.

தந்தை - மகன் ஒன்றாக இணைந்தாலும் குடும்பத்தில் உள்ள பிரச்சினை நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருக்கிறது. பாமக செயல் தலைவர் பதவியில் ஸ்ரீகாந்தி இருப்பதால், கட்சியிலும் புகைச்சல் தொடரும் என்பதுதான் நிதர்சனம்.

புதன், 24 ஜூன், 2026

தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் - மத்திய அரசுடன் மோதலை விரும்​ப​வில்​லை - முதல்வர் விஜய் திட்டவட்டம்

பதிவு: புதன்கிழமை,  ஜூன்  24, 2026,  ஆனி  10, பாரபவ வருடம்  6.00 AM

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று பேசிய முதல்வர் விஜய்.

‘‘நமக்கு எப்​போதும் தமிழகத்​தின் வளர்ச்​சி​தான் முக்​கி​யம். எனவே, மத்​திய அரசுடன் கண்​மூடித்​தன​மான மோதலை விரும்​ப​வில்​லை’’ என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேரவைத் தொடரின் கடைசி நாளான நேற்​று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது எதிர்க்​கட்​சிகளுக்குப் பதிலளித்து முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: 

நமது தமிழகம் மின்​மிகை மாநில​மாக இருந்​தா​லும், கடந்த காலங்​களில் ஏற்​பட்ட நிர்​வாக குளறு​படிகள், சிலரின் திட்​ட​மிட்ட நடவடிக்​கைகள் மின்​வெட்​டுக்​குக் காரண​மாக இருக்​கின்​றன.

விரை​வில் இந்த மின்​வெட்டு நிலைமை அறவே நீக்​கப்​படும். சட்​டம் - ஒழுங்கு சரி​யாக இருக்க வேண்​டும் என்​ப​தில் மாற்று கருத்து இல்​லை. அதே போல், பெண்​கள் பாதிக்​கப்​படு​வதை​யும் இங்கு யாராலும் சகித்​துக் கொள்ள முடி​யாது. 

அதற்​கான கடுமை​யான நடவடிக்​கையை அரசு எடுத்து வரு​கிறது. அதே​போல், போதைப்​பொருள் நடமாட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​த​வும் நம் அரசு கடுமை​யான நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்​போம்.

இவை எல்​லாம் பல ஆண்​டு​களாக இருக்​கும் பிரச்​சினை​கள். கடந்த 10 மாதங்​களாக நமது மாநிலத்​தில் சட்​டம் - ஒழுங்கு டிஜிபி இல்​லை. கடந்த ஆட்​சி​யில் நடந்​ததற்கு எல்​லாம் நமது ஆட்​சி​யில்​தான் விடையே கண்​டு​பிடித்து இருக்​கிறோம். 

போதைப் பொருள் நடமாட்​டம் தாறு​மாறாக பரவி​யுள்​ளது. இவற்றை எல்​லாம் ஆரம்​பக் கட்​டத்​திலேயே யார் கட்​டுப்​படுத்தி இருக்க வேண்​டும். அப்​போது காவல் துறை யார் கட்​டுப்​பாட்​டில் இருந்​தது. காவல் துறையைக் கட்​டுப்​பாட்​டில் வைத்​துக் கொண்டு ஆரம்​பக் கட்​டத்​திலேயே போதைப் பொருள் நடமாட்​டத்தை ஏன் கட்​டுப்​படுத்​த​வில்​லை? நம்​முடன் சேர்த்து மக்​கள் மீதும் அவதூறு பரப்​பு​கிறார்​கள்.

மக்​கள் நமக்கு ஓட்​டுப் போட்​டதும், குடும்​பம் குடும்​ப​மாக மக்​கள் ஆதரவு தெரி​வித்​ததும் தவறு என்​கிறார்​கள். இது இப்​போது இல்​லை. எம்​ஜிஆர் காலத்​தில் இருந்தே இருக்​கிறது. எம்​ஜிஆர் வெற்றி பெற்ற போது, அப்​போதும் மக்​களைத் தவறாகப் பேசி​யிருக்​கிறார்​கள். 

கடந்த 50 ஆண்​டு​களாக ஒரே ‘டெக்​னிக்'. தொழில்​நுட்​பம் எல்​லாம் மாறி வேறு எங்​கேயோ சென்று கொண்​டிருக்​கிறது. கொஞ்​சம் டெக்​னிக்​கை​யா​வது மாற்ற வேண்​டும். மக்​களுக்கு பயனுள்ள ஆக்​கப்​பூர்​வ​மான கருத்​துகள் இருந்​தால் சொல்​லலாம்.

5 நிமிடம் பேசி​யதற்கே கொளத்​தூர் இந்த ஆட்​டம் ஆடியது. பேசு பேசு என்​றால் அப்​புறம் நான் என்ன செய்​வது? ஆளுநர் உரையன்​று, தேசிய கீதம் 2 முறை பாடினது தவறு. அப்​படி ஒரு நிகழ்வு நடந்​ததே இல்​லை. மரபையே மாற்றி விட்​டீர்​கள் என்று எதிர்க்​கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் கூறினர். 

கடந்த 2021 ஆகஸ்ட் 2-ல் முன்​னாள் முதல்​வர் கருணாநிதி படத்​தைத் திறந்து வைக்​கும் நிகழ்ச்சி நடந்​தது. அப்​போது, தேசிய கீதத்​தைத் தொடர்ந்து தமிழ்த்​தாய் வாழ்த்து என்று சொன்​னார்​கள்.

அது ஞாபகம் இருக்​கிற​தா? தேசிய கீதத்தைத் தமிழ்த்​தாய் வாழ்த்​துக்கு முன்​பும், அதே நிகழ்ச்​சி​யில் 2 முறை​யும் பாடப்​பட்​டது நினை​வில் இருக்​கிற​தா? இதை கேட்​டால் அது குடியரசுத் தலை​வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்று சொல்​வார்​கள். 

நமது அமைச்​சர்​களுக்​கும், எம்​எல்​ஏக்​களுக்​கும் ஒன்​றும் தெரி​யாது என்று சொல்​கிறார்​கள். எங்​களுக்கு ஒன்​றும் தெரி​யாது​தான். எங்​கள் எம்​எல்​ஏக்​களுக்கு மக்​கள் பணி செய்ய தெரிந்த அளவுக்​கு, மக்​கள் பணத்தை சுருட்ட தெரி​யாது​தான்.

உங்​களைப் போல் முறை​கேடு​கள் செய்​வதை நாங்​கள் தெரிந்து கொள்ள போவ​தில்​லை. நமது அரசு விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​துக்​குப் பக்க பலமாக​வும், உறு​துணை​யாக​வும் நிற்​கும். நாம் மத்​தி​யில் கூட்​டாட்​சி, மாநிலத்​தில் சுயாட்சி என்ற கொள்​கை​யைக் கொண்​ட​வர்​கள்​தான். 

தற்​போதைய மத்​திய அரசு சார்ந்த கட்​சி​யின் அரசி​யலில் கொள்கை அளவில் நேர் எதி​ராக நிற்​கிறோம். அதே நேரத்​தில் கண்ணை மூடிக்​கொண்டு மத்​திய அரசுடன் மோதல் போக்கை விரும்​புபவர்​கள் அல்ல. நமக்கு எப்​போதும் தமிழக வளர்ச்சி மட்​டும்​தான் முக்​கி​யம்.

அதற்​காக நம்​முடைய அரசி​யல் ரீதி​யான கொள்​கைகளை​யோ, மாநில உரிமை​களையோ கொஞ்​ச​மும் விட்டு தரமாட்​டோம். எனவே, நம் மக்​களுக்​கோ, சிறு​பான்மை சகோ​தர்​களுக்​கோ, ஆதரவு இயக்​கங்​களுக்கோ எவ்​வித சந்​தேக​மும் வேண்​டாம். 

நாம் யாருடைய அணி​யும் இல்​லை. மாநில உரிமை​யில் எப்​போதும் உறு​தி​யாக இருப்​போம். அரசி​யல் வேறு, மத்​திய - மாநில அரசுகளுக்கு இடையே இருக்​கும்​ நிர்​வாக அணுகு​முறை வேறு. இதில்​ தெளி​வாக இருக்​கிறோம்​. 

இவ்​வாறு முதல்​வர்​ விஜய்​ பேசி​னார்​.

செவ்வாய், 23 ஜூன், 2026

தமிழக சட்டசபை முட்டுக்காடுக்கு மாறுகிறதா? பரபரப்பு தகவல்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன்  23, 2026,  ஆனி  09, பாரபவ வருடம்  5.50 AM

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் (2006-11) சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் புதிய சட்டசபை கட்டப்பட்டது. 

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சட்டசபை கட்டிடத்தை அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியாக மாற்றினார். 

தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் சட்டசபை செயல்பட்டு வருகிறது.

கோட்டை வளாகத்தின் நெரிசலைக் குறைக்கவும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வித போக்குவரத்துப் பாதிப்பும் இன்றி எளிதாக வந்து செல்லவும் சட்டசபையை முட்டுக்காட்டில் கட்டப்படும் வரும் கலைஞர் சர்வதேச மாநாட்டு மையத்துக்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரூ.535 கோடியில் உலகத்தரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த மையத்தில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய மாபெரும் கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதன் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 22 ஜூன், 2026

முதல்-அமைச்சராக ‘முதல்’ பிறந்தநாளை கொண்டாடும் ஜோசப் விஜய்... இன்று புதிய அறிவிப்பு வெளியாகிறது?

பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  22, 2026,  ஆனி  08, பாரபவ வருடம்  3.50 AM

சென்னை,

'உச்ச நடிகர்' என்ற அடையாளத்தை தாண்டி, தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்று வரலாறு உச்சரிக்க தொடங்கி உள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22ம் தேதி) கொண்டாடுகிறார் விஜய். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை இப்போதே அவரது கட்சியினர் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

தமிழக வெற்றிக்கழகம்தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி ஒற்றை அறிக்கை மூலம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் சூட்டினார்.

'விசில்' சத்தம்

விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும், மதுரையில் 2-வது மாநாட்டையும் நடத்தி தமிழக அரசியலை அதிர செய்தார். லட்சக்கணக்கான மக்கள் கூடிய அந்த மாநாடுகளை இந்தியாவே உற்று நோக்கியது. 

அரசியலில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்த விஜய், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளை கொள்கை தலைவர்களாக அறிவித்தார். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே சட்டசபை பொதுதேர்தலை த.வெ.க. எதிர்கொண்டது. 

விசில் சின்னத்துடன் கூட்டணியின்றி மக்களை சந்தித்த விஜய், 'உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டு வந்திருக்கிறேன், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசாரம் மேற்கொண்டார். அவரின் பிரசாரம் மக்கள் மனதை தொட்டது. அவர் பிரசாரத்திற்கு சென்ற, செல்லாத இடங்களிலும் 'விசில்' சத்தம் தெறிக்க விட்டது.

முதல்-அமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள்திரையில் மட்டுமல்ல. தேர்தலிலும் விஜய் 'சர்க்கார்' அமைய மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். 

'உச்ச நடிகர்' என்ற அடையாளத்தை தாண்டி தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்று வரலாறு உச்சரிக்க தொடங்கியது.

மே 10-ந்தேதி ஆட்சி பொறுப்பேற்று, ஒரு மாதத்தை நிறைவு செய்து இருக்கும் முதல்-அமைச்சர் விஜய்க்கு இன்று (திங்கட்கிழமை) 52-வது பிறந்தநாள்.

இதுவரை, நடிகராக பிறந்தநாளை கொண்டாடிய விஜய் முதல்-அமைச்சராக தனது 'முதல்' பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. 

தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், சட்டசபையில் நாளை அவருக்கு சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து கூற இருக்கிறார்கள்.

இன்று புதிய அறிவிப்புமுதல்-அமைச்சராக பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சட்டசபையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம், நல உதவிகள் வழங்க த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ தொழிற்சாலையில் பரிதாபம் - அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் பலி - கவலைக்கிடமான நிலையில் பலருக்கு தீவிர சிகிச்சை

பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  22, 2026,  ஆனி  08, பாரபவ வருடம்  3.00 AM

திரு​வள்​ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார். 

திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் கடல் உணவு பதப்​படுத்​தும் தனி​யார் தொழிற்​சாலை​யில் அமோனியா வாயு கசிவு ஏற்​பட்டு 2 பெண் தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் வட மாநிலங்​களைச் சேர்ந்த தொழிலா​ளர்​கள் 63 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. பலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தால், உயிரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கக்​கூடும் என அஞ்​சப்​படு​கிறது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்டை வட்​டம் பெரிய​பாளை​யம் அடுத்த கன்​னிகைப்​பேர் பகு​தி​யில் இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. சென்னை வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வரு​கின்​றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் தங்கி வேலை செய்து வரு​கின்​றனர்.

நேற்று காலை வழக்​கம்​போல சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, குளிர்​சாதனப் பிரி​வில் பயன்​படுத்​தப்​படும் அமோனியா வாயு கசிந்​துள்​ளது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை முழு​வதும் வாயு பரவிய​தால் தொழிலா​ளர்​களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்​பட்​டுள்​ளது.

இதில் 60 பெண்​கள், 5 ஆண்​கள் எனமொத்​தம் 65 தொழிலா​ளர்​கள் மயக்கம் அடைந்​தனர். சிலருக்கு வாய், மூக்​கு, கண், காதுகளில் ரத்​தக் கசி​வும் ஏற்​பட்​ட​தால் பதற்​ற​மான சூழல் உரு​வானது. பெரிய​பாளை​யம் போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர், வரு​வாய்த் துறை​யினர் விரைந்து வந்து மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டனர். 

பாதிக்​கப்​பட்ட தொழிலா​ளர்​கள் உடனடி​யாக 108 ஆம்​புலன்ஸ் மற்​றும் பல்​வேறு வாக​னங்​கள் மூலம் அருகே உள்ள மருத்​து​வ​மனை களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

இதில், மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 45 பேரில் ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19) என்ற இளம்​பெண்​ணும், செங்​குன்​றம் அருகே உள்ள சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 20 பேரில் ஒடி​சாவைச் சேர்ந்த மாலோதி (20) என்ற இளம்​பெண்​ணும் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யிலேயே உயி​ரிழந்​தனர்.

பெரிதும் பாதிப்​புக்கு உள்​ளான 7 தொழிலா​ளர்​கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொது​மருத்​து​வ​மனைக்​கும் மேல் சிகிச்​சைக்​காக மாற்​றப்​பட்​டனர். அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்​கிட​மாகஇருப்​ப​தால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது.

அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, அருண்​ராஜ், ராஜ்மோகன், குமார் மற்​றும் எம்​எல்​ஏக்​கள் விஜயகு​மார், ரவி, அருண்​கு​மார் ஆகியோ​ரும் மருத்​து​வ​மனை​களுக்கு சென்று தொழிலா​ளர்​களை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தனர். திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் கவி​தா, காஞ்​சிபுரம் சரக டிஐஜி சஷாங் சாய், திரு​வள்​ளூர் மாவட்ட எஸ்​.பி. சாய் பிரனீத் ஆகியோர் தொழிற்​சாலை​யில் ஆய்வு நடத்​தினர்​.

இதற்​கிடையே, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர் குழு​வினர், கும்​மிடிப்​பூண்டி உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்​களு​டன் இணைந்து பாது​காப்பு உபகரணங்​களு​டன் சம்பவ இடத்​தில் மீட்பு பணி​யில் ஈடு​பட்​டனர். தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரிய அதி​காரி​களும் தொழிற்​சாலை​யில் ஆய்வு மேற்​கொண்​டு வரு​கின்​றனர்.

தொழிற்​சாலை​யைச் சுற்றி ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். அங்கு பணி​யாற்​றிய தொழிலா​ளர்​களில் 100-க்​கும் மேற்​பட்​டோர் மாவட்ட நிர்​வாகம் ஏற்​பாட்​டில் அரு​கில் உள்ள திருமண மண்​டபங்​களில் தங்க வைக்​கப்​பட்​டு, மருத்​து​வப் பரிசோதனை, உணவு உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் செய்து தரப்​பட்​டுள்​ளன.

3 பேர் கைது

அமோனியா வாயு கசிவு தொடர்​பாக பெரிய​பாளை​யம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, தொழிற்​சாலை உரிமை​யாளர்​கள் ஜோசப் ஜெகன், மோகன், மேலா​ளர் டேனியல்​ ஆகிய 3 பேரை கைது செய்​து வி​சா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்​. தொழிற்​சாலை செயல்​பட தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, ஆளுநர் அர்​லேகர் உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரி​வி்த்​துள்​ளனர்.

பிரதமர் நரேந்​திர மோடி வெளி​யிட்ட சமூக வலைதள பதிவில், 

‘திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஏற்​பட்ட விபத்​தில் உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டிருப்​பது குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்​தேன். தங்​களின் அன்​பிற்​குரிய​வர்​களை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். காயம் அடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய பிரார்த்​திக்​கிறேன்’ என தெரி​வித்​துள்​ளார்.

ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர்

விலைம​திப்​பற்ற உயிர்​கள் பறி​போனதும், பல தொழிலா​ளர்​கள் காயமடைந்​ததும் எனக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்​கிறது. மேலும், சிகிச்​சை​யில் உள்ள அனை​வரும் விரை​வில் குணமடைந்து முழு உடல்​நலம் பெற​வும் பிரார்த்​திக்​கிறேன்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்

உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தா​ருக்கு ஆழ்ந்த இரங்​கல். இது​போன்ற துயரச் சம்​பவங்​கள், இனி​யும் ஏற்​ப​டா​மல் இருக்க, தொழிற்​சாலைகளில் உரிய பாது​காப்பு வழி​காட்டு நெறி​முறை​கள் முறை​யாக பின்​பற்​றப்​படு​கிறதா என்று ஆய்​வு​களை நடத்த வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி

வாயுக் கசி​வால் பாதிக்​கப்​பட்ட பலர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் நிலை​யில், அவர்​களை காக்க உரிய மருத்​துவ சிகிச்​சைகள் அளிப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை

நச்சு வாயுவை சுவாசித்து பரி​தாப​மாக உயி​ரிழந்த தொழிலா​ளர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்

கடந்த சில காலங்​களாகவே தொழில் நடக்​கும் பகு​தி​களில் இது​போன்ற அசம்​பா​விதங்​கள் தொடர்​வதும் அதனால் உயிர்​பலிகள் உண்​டாவதும் அச்​சத்தை ஏற்​படுத்​துகின்​றன.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்து உள்​ளனர்.


ஞாயிறு, 21 ஜூன், 2026

தீவிர கண்காணிப்பு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  21, 2026,  ஆனி  07, பாரபவ வருடம்  3.00 AM

சென்னை,

இளநிலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் மறு​தேர்வு நாடு முழு​வதும் இன்று நடை​பெறுகிறது. 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் தேர்வை எழுதுகின்​றனர். இதையொட்​டி, பாது​காப்​பு, கண்​காணிப்பு நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம் 1.30 மணிக்​குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பிறகு வருபவர்​கள் எக்​காரணம் கொண்​டும் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 

தேர்வு முடிவு​களை இந்த மாத இறு​திக்​குள் வெளி​யிட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் நீட் தேர்​வில் தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. அதே​போல, ராணுவக் கல்​லூரி​களில் உள்ள பிஎஸ்சி நர்​சிங் படிப்​புக்​கான மாணவர் சேர்க்​கைக்​கும் நீட் தேர்வு கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது.

நீட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது. அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. விண்​ணப்​பித்​திருந்த 22.80 லட்​சம் பேரில் 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தேர்வு எழு​தினர்.

வினாத்தாள் கசிந்தது

 இதற்​கிடையே, நீட் தேர்​வுக்​கான வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​தது உறுதி செய்​யப்​ பட்​ட​தால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்​திய அரசு ரத்து செய்​தது. வினாத்​தாள் கசிவுக்கு காரண​மானவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். நீட் மறு​தேர்வு ஜூன் 21-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, நீட் மறு​தேர்வு நாடு முழு​வதும் இன்று நடை​பெறுகிறது. நாடு முழு​வதும் மொத்​தம் 551 நகரங்​கள் மற்​றும் துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், சிங்​கப்​பூர் உட்பட 14 நாடு​கள் என சுமார் 5,500 மையங்​களில்நடை​பெறும் தேர்வை 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் எழுதுகின்றனர். தமிழகத்​தில் மட்​டும் 307 தேர்வு மையங்​களில் 1.42 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தேர்​வில் பங்​கேற்க உள்​ளனர்.

ஏற்​கெனவே வினாத்​தாள் கசிந்​துள்​ள​தால், மீண்​டும் அது​போன்ற சம்​பவம் நடை​பெறாமல் இருக்க பல்​வேறு பாது​காப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. வினாத்​தாள்​கள் பாது​காப்​பான முறை​யில் தேர்வு மையங்​கள் உள்ள நகரங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளன. வினாத்​தாள்​களை கொண்டு செல்ல ஹெலி​காப்​டர்​களும் பயன்​படுத்​தப்​பட்​டன.

தேர்வு மையங்களில் சிசிடிவி: அதே​போல, அனைத்து நீட் தேர்வு மையங்​களை​யும் சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் கண்​காணிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. தேர்வு மையங்​களை கண்​காணிக்க ஒருங்​கிணைப்​பாளர்​கள், கண்​காணிப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். போலீ​ஸாரும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படு​கின்​றனர். நீட் மறு​தேர்வு பணி​களில் 2 லட்​சம் அலு​வலர்​கள் ஈடுபடுகின்​றனர்.

வழக்​க​மாக, நீட் தேர்வு பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடை​பெறும். நிர்​வாக நடை​முறை​களால் மாணவர்​களின் தேர்வு நேரம் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, இந்த முறை கூடு​தலாக 15 நிமிடங்​கள் தேர்வு நேரம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும்.

தேர்வு மையத்​துக்​குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்​களுக்கு அனு​மதி அளிக்​கப்​படும். தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம் 1.30 மணிக்​குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பிறகு வருபவர்​கள் எக்​காரணம் கொண்​டும் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தேர்வு அறைக்கு செல்​வதற்கு முன்பு மாணவர்​கள் மெட்​டல் டிடெக்​டர் மூலம் சோதனை செய்​யப்பட உள்​ளனர். ஆள்​மாறாட்ட மோசடியைத் தடுக்​கும் வகை​யில் ஆதார் அடிப்​படையி​லான பயோமெட்​ரிக் சோதனை​யும் கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது. மதம், கலாச்​சா​ரம் சார்ந்த ஆடைகள், மோதிரம், வளை​யல், கம்​மல், மூக்​குத்​தி, செயின், கண்​ணாடி, தாயத்​து, பெல்ட், அதிக உயரம் கொண்ட ஷூக்​கள், காலணி​கள் அணிந்து வரவும், செல்​போன், கால்​குலேட்​டர், ஸ்மார்ட் வாட்ச் உள்​ளிட்ட மின்​னணுக் கருவி​களை எடுத்து வரவும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

13 மொழிகளில் தேர்வு

நீட் தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடை​பெறுகிறது. இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் (தாவர​வியல், விலங்​கியல்) பாடங்​களில் தலா 50 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் கேட்​கப்​படும். அதில், 180 கேள்வி​களுக்கு பதில் அளிக்க வேண்​டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்​பெண் என மொத்​தம் 720 மதிப்​பெண்​கள் வழங்​கப்​படும். ஒரு தவறான பதி​லுக்கு 1 மதிப்​பெண் (நெகட்​டிவ்) குறைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. நீட் தேர்வு முடிவு​களை இம்மாத இறு​திக்​குள்​ வெளி​யிட தேசி​யத்​ தேர்​வு​கள்​ முகமை திட்​டமிட்​டுள்​ளது.

சனி, 20 ஜூன், 2026

மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது - சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்து முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

பதிவு: சனிக்கிழமை,  ஜூன்  20, 2026,  ஆனி  06, பாரபவ வருடம்  1.00 AM

சென்னை,

சட்டப்பேரவையில் நேற்று மேகேதாட்டு அணை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய்.

கா​விரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்​டு​வில் அணை கட்ட முயற்​சிக்​கும் கர்​நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தும், புதிய அணை கட்​டும் திட்​டத்​துக்கு எவ்​வித அனு​ம​தி​யும் அளிக்​கக் கூடாது என்று மத்​திய அரசை வலி​யுறுத்​தி​யும் சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் கொண்​டு​வந்த அரசினர் தனித் தீர்​மானம், அனைத்​துக் கட்​சிகளின் ஆதர​வுடன் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.

மேகே​தாட்​டு அணை தொடர்பாக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் நேற்று அரசினர் தனித் தீர்​மானம் கொண்டு வந்​தார். அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: காவிரி நடு​வர் மன்​றம் கடந்த 2007 பிப்​.5-ம் தேதி அளித்த இறுதி தீர்ப்​பு, உச்ச நீதி​மன்​றம் கடந்த 2018 பிப்​.16-ம் தேதி அளித்த தீர்ப்பு ஆகிய​வற்றை மதிக்​காமல், சம்​பந்​தப்​பட்ட படுகை மாநிலங்​களின் ஒப்​புதலை​யும், மத்​திய அரசின் எந்​த​வித அனு​ம​தி​யை​யும் பெறாமல் தன்​னிச்​சை​யாக மேகே​தாட்​டு​வில் அணை கட்ட கர்​நாடக அரசு முயற்​சிப்​பதை ஏற்க முடி​யாது. கர்​நாடக அரசின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

கர்​நாடக அரசின் மேகே​தாட்டு அணை திட்​டத்​துக்கு தொழில்​நுட்​பம், சுற்​றுச்​சூழல் உட்பட எவ்​வித அனு​ம​தி​யை​யும் மத்​திய அரசு அளிக்​கக் கூடாது. காவிரி நடு​வர் மன்​ற​மும், உச்ச நீதி​மன்​ற​மும், காவிரிப் படுகை ஒரு பற்​றாக்​குறை படுகை எனக் குறிப்​பிட்​டு, படு​கை​யின் மொத்த நீரை​யும், படுகை மாநிலங்​களுக்கு பகிர்ந்​தளித்​து​விட்​ட​தால், காவிரிப் படு​கை​யில் புதிய திட்​டங்​களை மேற்​கொள்​ளவோ, கூடு​தலாக நீரை பயன்​படுத்​தவோ இயலாது.

இந்த விவ​காரம் தமிழகம் மற்​றும் கர்​நாடக மாநிலங்​களின் உணர்​வுப்​பூர்​வ​மான பிரச்​சினை. எனவே, மேகே​தாட்​டு​விலோ, காவிரிப் படு​கை​யில் வேறு எந்த இடத்​திலோ அணை அல்​லது புதிய நீர்த்​தேக்​கத் திட்​டத்​தை, பிற படுகை மாநிலங்​களின் ஒப்​புதலின்​றி​யும், மத்​திய அரசின் அனு​ம​தி​யின்​றி​யும் மேற்​கொள்​ளக் கூடாது என கர்​நாட​காவை மத்​திய அரசு அறி​வுறுத்த வேண்​டும். கர்​நாடக அரசின் விரி​வான திட்ட அறிக்​கையை மத்​திய நீர்வளக் குழு​மம் பரிசீலிக்​கவோ, அதன்​மீது நடவடிக்கை மேற்​கொள்​ளவோ, அதற்கு அனு​மதி வழங்​கவோ கூடாது. மாநிலங்​களுக்கு இடையி​லான நதிநீர் தாவா சட்​டத்​தின்​கீழ் புதிய நடு​வர் மன்​றத்தை மத்​திய அரசு அமைக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தீர்​மானத்தை முன்​மொழிந்து முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: 

அரசி​யல் கட்​சிகளுக்​குள் கொள்​கை, நிலைப்​பாடு​களில் வேறு​பாடு​கள் இருக்​கலாம். ஆனால், மக்​களுக்​கான பிரச்​சினை என்​றால், எல்லா கட்​சிகளுமே மக்​கள் பக்​கம்​தான் நிற்​கும். நமது விவ​சா​யிகள், மக்​களுக்​காக நிற்க வேண்​டியது நமது கடமை. நதிநீர் உரிமை​யைப் பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும் நம் அனை​வருக்​கும் உள்​ளது.

அந்த உணர்வு அடிப்​படை​யில், கட்சி வேறு​பாடு​களை ஒதுக்கி வைத்​து​விட்​டு, யாரும் யாரை​யும் குறை சொல்​லாமல் ஒட்​டுமொத்த தமிழகத்​துக்​காக நாம் அனை​வரும் ஓரணி​யில் நிற்​பவர்​கள் என்​பதை நிரூபிக்க வேண்​டும். 

நமது விவ​சா​யிகள், தமிழக மக்​களுக்​காக கொண்டு வரப்​படும் இந்த தீர்​மானத்தை ஒரு​மித்த கருத்​துடன் அனை​வரும் நிறைவேற்​றித் தரவேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இதைத் தொடர்ந்​து, தீர்​மானத்​தின் மீதான விவாதத்​தில் பேசிய திமுக, அதி​முக, காங்​கிரஸ், விசிக, பாமக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், தேமு​திக, கொமதேக, மதி​முக, மமக, மஜக உள்​ளிட்ட பல்​வேறு கட்​சிகளின் உறுப்பினர்களும் தங்​கள் ஆதர​வைத் தெரி​வித்​தனர்.

உதயநிதியின் கோரிக்கை ஏற்பு

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசும்​போது, ‘‘மேகே​தாட்டு அணை கட்​டும் பிரச்​சினை ஒரு புதிய விவாதம் என்​ப​தால், மாநிலங்​களுக்கு இடையி​லான நதிநீர் தாவா சட்​டத்​தின்​படி, புதிய நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என மத்​திய அரசை இந்த பேரவை வலி​யுறுத்​துகிறது எனும் திருத்​தத்தை சேர்க்க வேண்​டும்’’ என்றார்.

அதற்கு முதல்​வர் விஜய், ‘‘மேகே​தாட்டு பிரச்​சினை குறித்து எனது தலை​மை​யில் கடந்த மே 26-ம் தேதி நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில், தனி நடு​வர் மன்​றம் அமைப்​பது குறித்து சட்ட வல்​லுநர்​களு​டன் ஆலோ​சிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, தனி நடு​வர் மன்​றம் அமைக்​கத் தேவை​யான சட்ட நடவடிக்​கைகள் ஏற்​கெனவே எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

எனவே, எதிர்க்​கட்​சித் தலை​வர் அளித்த கருத்தை தனித் தீர்​மானத்​தில் கூடு​தலாக சேர்க்​கலாம்’’ என்​றார். அதன்​பிறகு, முதல்​வர் முன்​மொழிந்த திருத்​தப்​பட்ட தீர்​மானம், பேர​வை​யில் குரல் வாக்​கெடுப்பு மூல​மாக ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது. தீர்​மானத்​துக்​கு ஆதர​வு அளித்​த அனைத்​துக்​ கட்​சிகளுக்​கும்​ முதல்​வர்​ நன்​றி தெரிவித்​தார்​.

நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்

முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, வீராசாமி, கண்ணன், ஆறுமுகம், சுவாமிநாதன், நாஞ்சில் முருகேசன் ஆகியோரது மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. 

அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலர் சி.கு.ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. 

இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் பிரபாகர் வாசித்து முடித்ததும், அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

வியாழன், 18 ஜூன், 2026

“விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவுக்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய்..” - கவர்னர் அர்லேகர்

பதிவு: வியாழக்கிழமை, ஜூன்  18, 2026,  ஆனி  04, பாரபவ வருடம்  2.00 PM

சென்னை,

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. 

முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி, கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், 17-வது சட்டசபையில் உரையாற்றுவதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் காரில் புறப்பட்டார். 

வரவேற்பு

காலை 9.50 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த கவர்னர் அர்லேகருக்கு, பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் கவர்னரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

சட்டசபை கூட்டம் தொடங்கியதுதொடர்ந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்தபடி, கவர்னர் அர்லேகர் சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு வருகை தந்தார். 

அவருடன் கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவான் உடன் வந்தார். சரியாக, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. 

சபாநாயகர் இருக்கைக்கு கவர்னர் அர்லேகர் வந்தார். அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கைக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும், இடதுபுறம் உள்ள இருக்கைக்கு கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவானும் வந்தனர். .

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து

முதலில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழில் வணக்கம் தெரிவித்து, தனது உரையை கவர்னர் அர்லேகர் தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

விசில் புரட்சி

தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும். 

பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக சாதனை படைத்துள்ளது. விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய்.  

சிங்கப்பெண் அதிரடிப்படைமாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, நலன், சமூகநீதி, சமவாய்ப்பு ஆகியவை தவெக அரசின் அடிப்படை கொள்கைகள் ஆகும். இதனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும். 

போதைப் பொருளைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு படை அமைக்கப்படும். 

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.

மதுரை, கோவை மெட்ரோ ரெயில்

தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். கோவை, மதுரை மற்றும் ஓசூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

விரைவில் அனுமதி அளிப்பார்கள் என நம்புகிறேன்.

இரு மொழிக் கொள்கை

தமிழக வெற்றிக் கழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். பின்பற்றும். இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது. 

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட உள்ளது. 

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.

கடன் சுமைகடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரட்டிப்பாகி, ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது. இதனால் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது.

ஒலிம்பிக் மையங்கள்மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 

தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

உலகத் தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறையில் அமைப்பு ரீதியான மாற்றத்தை தவெக அரசு மேற்கொள்ள உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக சீரமைக்கப்படும். 

கோவில் நிதி கோவில்களுக்கு மட்டுமே செலவு செய்யப்படும்..மேகதாது அணைகர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். மேகதாது விவகாரத்தில் அரசின் சட்ட நடவடிக்கை தொடரும். 

மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை விரைந்து விடுவிக்க வேண்டும்.

சட்ட விரோத கனிமவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

நிதிப் பகிர்வு

மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். 

சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாகப் பெறுவதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும்.

சென்னையில் சுப்ரீம்கோர்ட்டு கிளைசென்னையில் சுப்ரீம்கோர்ட்டு கிளை அமைக்க வலியுறுத்தப்படும்.

 முதலீடுகளை ஈர்க்க முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்க AI பயன்படுத்தப்படும். கீழடி, ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பு

அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை. உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இவ்வாறு கவர்னர் அர்லேகர் கூறினார்.

தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது - கவர்னர் உரையாற்றுகிறார்

 பதிவு: வியாழக்கிழமை, ஜூன்  18, 2026,  ஆனி  04, பாரபவ வருடம் 06:00

சென்னை,

சட்டசபை கூட்டம் தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. 

புதிய அரசு பதவி ஏற்ற பின்னர், சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. 

சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும். 

இதற்காக அவருக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

கவர்னர் உரைபேரவை மண்டபத்தில் கூடவுள்ள கூட்டத்தில், கவர்னர் அர்லேகர் பங்கேற்று, உரையாற்றுவார். 

புதிய அரசின் திட்டங்கள், நோக்கங்கள் அந்த உரையில் இடம் பெறும். 

இன்று காலை 9.50 மணிக்கு சட்டசபைக்கு வரும் கவர்னருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும்.

சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்பார்கள்.

தொடர்ந்து சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வரும் கவர்னர், கூட்டத்தில் பங்கேற்று ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். 

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகும். பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபையின் அலுவல் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.

புதிய அறிவிப்புகள்

இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப் படும். 

மேலும் இந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சிகள் திட்டம்அதே நேரம் தமிழகத்தில் தற்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள், மின்வெட்டு பிரச்சினைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளன. 

இதனால் கேள்வி நேரத்தில் அனல் பறக்கும் கேள்விகள், அதற்கு அரசு சார்பில் அளிக்கப்படும் அதிரடி பதில்கள் என இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...