புதன், 17 ஜூன், 2026

தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

பதிவு: புதன்கிழமை, ஜூன்  17, 2026,  ஆனி  03, பாரபவ வருடம் 07:00

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. 

முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில்   தமிழகத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் 

முதல்-அமைச்சர் விஜய் - யின் உத்தரவுபடி தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் பணியை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தலைமையிலான நிதித்துறை மேற்கொண்டு வந்தது.

தமிழக அரசின் கடந்த ஐந்தாண்டு நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை, சென்னையில் நேற்று, விஜய் அரசு வெளியிட்டது. தமிழகத்திற்கு முந்தைய தி.மு.க., அரசு வைத்து சென்றுள்ள கடன் சுமை, 13.18 லட்சம் கோடி ரூபாய் என்றும், வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாய் என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

வெள்ளை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.

வெள்ளை அறிக்கை

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையில் உள்ள விவரம்:-

தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளது. ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ள தமிழக அரசின் மொத்த  கடனளவில்  ரூ. 10 லட்சம் கோடி நேரடி கடனாகும். எஞ்சிய ரூ. 3.18 லட்சம் கோடி  அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகையாகும்.

60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ. 5 லட்சம் கோடி

கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடனை (ரூ. 5 லட்சம் கோடி) விட கடந்த திமுக ஆட்சியில் மட்டும் அதிக கடன் (ரூ. 5 லட்சம் கோடி) வாங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன் உள்ளது.

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 சதவீதமாக மோசமடைந்துள்ளது.

தமிழத்தில் 2021ம் ஆண்டு ரூ. 46 ஆயிரத்து 538 கோடியாக இருந்த வருவாய்ப்பற்றாக்குறை 2026ம் ஆண்டு ரூ. 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது. 

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச்செலவீனம் குறைந்துள்ளது.

வருவாய்ப்பற்றாக்குறை 2026ம் ஆண்டு ரூ. 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் மொத்த வருவாய் வரவில் வட்டி செலவீனம் 22.8 சதவீதமாகும். 

தமிழகத்தில் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதமாக உள்ளது. 

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அளவு 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் முதலீடுகளுக்கு மட்டுமல்லாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் பற்றாக்குறை 2.2 சதவீதமாக உள்ளது. குஜராத், மராட்டியம், கர்நாடகாவை விட தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக குறைவாகும்.

தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ. 67 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது.

தமிழக அரசின் ஒவ்வொரு 1 ரூபாய் மூலதனச் செலவிற்கும் 2.26 ரூபாய் புதிய கடன் பெறப்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறை ரூ.  72 ஆயிரத்து 667 கோடி கடனில் உள்ளது. 

தமிழகத்தின் மின்சாரத்துறைக்குதான் அதிக கடன் அளவு உள்ளது. மின்சாரத்துறைக்கு மட்டும் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி கடன் உள்ளது.

தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை முழு விவரம்:-

ஆண்டுக்கு சராசரியாக, 14.30 சதவீதம் கடன் வளர்ந்து உள்ளது. ஆனால், மூலதன முதலீடு வெறும், 8.30 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அல்ல, அன்றாட கடன்களை சமாளிக்க கடன் வாங்குகிறோம் என்பது தெளிவான சான்று. ஒவ்வொரு நபர் மீதும் உள்ள கடன், 1.28 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தையும், ஒரு ரூபாய் கூட பொருளாதாரத்திற்கு பங்கு அளிக்கும் முன்பே, இந்த கடன் சுமையுடன் பிறக்கிறது.

கடன் வாங்கும் அளவு குஜராத், 17.6 சதவீதம், மஹாராஷ்டிரா 19.7 சதவீதம், கர்நாடகா, 23.40 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும், 28.30 சதவீதமாக அதிகமாக உள்ளது. தமிழக அரசின் வட்டி செலவு, 67,050 கோடி ரூபாயாக உயர்ந்து. மாநிலத்தின் மொத்த மூலதன திட்டமான, 50,911 கோடி ரூபாயை மிஞ்சியுள்ளது.

எதிர்காலத்தை உருவாக்குவதற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும், வட்டி செலுத்த, 1.32 ரூபாய் செலவாகிறது.

குஜராத் மாநிலம், வருவாய் உபரியுடன் செயல்படுகிறது. கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா வருவாய் செலவு கணக்கில், சமநிலையை பேணுகின்றன. தமிழகம் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாதையில் சென்று விட்டது. 

சொந்த வரி வருவாய்

கடந்த, 2021 - 22ல், 5.93 சதவீதமாக இருந்த சொந்த வரி வருவாய், 2025 - 26ல், 5.45 சதவீதமாக குறைந்துள்ளது. வணிக வரி துறையில் நிலவும் ஊழல் காரணமாக கணிசமாக இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சந்தை நிலவரத்தை பின்பற்றும் வகையில் வழிகாட்டு மதிப்புகள் திருத்தப்படவில்லை. சொத்து பதிவில் இழக்கும் வருவாய் தொடர்ந்து அதிகமாக உள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் முத்திரைத்தாள் வருவாய் விகிதம் சரிவு பாதையில் உள்ளது. ஆயத்தீர்வை வருவாயில் இழப்பு ஏற்படுகிறது.

அதிக கனிம வள ஆதாரங்களை கொண்டிருந்த போதும், அந்த துறை வாயிலாக பெறப்படும் வருவாய் பெரிய அளவில் மாற்றமின்றி உள்ளது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதிப்பகிர்வு குறைந்துள்ளது.

ஊழலற்ற நிர்வாகத்தின் வாயிலாக வருவாய் இழப்புகளை சரிசெய்தல், அரசு கொள்முதலின் செலவை குறைத்தல், பொதுத்துறை நிறுவன சீர்திருத்தம், தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வருவாய் திரட்டல், செலவு தரம், நேர்மையான, நம்பகமான வரவு செலவு திட்டமிடல் ஆகியவற்றின் வாயிலாக நிதிநிலைமை சரிசெய்ய அரசு முடிவு செய்துள்ளது.

முதியோர் வளர்ச்சி

தமிழகம், முதியோர் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் மாநிலமாக உள்ளது. கடந்த, 2011ல் முதியோர்களின் பங்கு, 10.60 சதவீதத்தில் இருந்து, 2031ல் 18.20 சதவீதமாக அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, இந்தியாவிலேயே அதிக அளவாக, 71.70 சதவீத வளர்ச்சி விகிதமாகும்.

கலைஞர் உரிமை தொகை

கலைஞர் உரிமைத் தொகை திட்டம், கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி, இலவச பஸ், உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகை திட்டம், மேம்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு ஆகியவற்றுக்கு, 2025 - 26ல், ஆண்டு தொடர் செலவு, 25,000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதற்கு இணையாக எவ்வித வருவாய் பெருக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், இத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய், 16 ஜூன், 2026

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி - இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

பதிவு: செவ்வாய் கிழமை, ஜூன்  16, 2026,  ஆனி  02, பாரபவ வருடம் 07:00 AM

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 

50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்கள் என்பதால், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

முதல்-அமைச்சர் விஜய்அதன்படி, இன்று (16-ம் தேதி) மற்றும் நாளை (17-ம் தேதி) சென்னை கலைவாணர் அரங்கத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. 

பேரவை நடவடிக்கைகள், செயல்பாடுகள் தொடர்பான பயிலரங்கை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 

“17-வது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு வரும் 16 மற்றும் 17-ந் தேதிகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள 3-வது தளத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த புத்தாக்க பயிற்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

நேரடி ஒளிபரப்பு

இந்த புத்தாக்க பயிற்சியை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவை மரபுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

ஞாயிறு, 14 ஜூன், 2026

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் நடந்த 3 இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  14, 2026, வைகாசி, 31, பாரபவ வருடம் 06:00 AM

சந்திப்பூர்,

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ரக ஏவுகணைகள், போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கும் என்ஏஎஸ்எம்- எம்ஆர் ரக ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது.

கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​களை, நடு​வானில் இடைமறித்து அழிக்​கும் பிஎம்டி ரக ஏவு​கணை, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை​கள் ஒடிசா மாநிலம் சந்​திப்​பூரில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​டுள்​ளன.

அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா, பிரான்​ஸ், இந்​தி​யா, பிரிட்​டன், வடகொரி​யா, இஸ்​ரேல் ஆகிய நாடு​களிடம் மட்​டுமே கண்​டம் விட்டு கண்​டம் பாயும் பாலிஸ்​டிக் ஏவு​கணை​கள் (ஐசிபிஎம்) உள்​ளன. இந்த வகை ஏவு​கணை​கள், பூமி​யின் வளிமண்​டலத்​தைத் தாண்டி வெளியே செல்​லும். பின்​னர் வளிமண்​டலத்​தில் இருந்து பூமிக்​குள் அதிவேக​மாக மீண்​டும் நுழைந்து நிர்​ண​யிக்​கப்​பட்ட இலக்​கு​களை துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும்.

இது​போன்ற கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிப்​பது மிக​வும் கடினம். அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா, இஸ்​ரேல் நாடு​களிடம் மட்​டுமே ஐசிபிஎம் ஏவு​கணை​களை இடைமறித்து அழிக்​கும் தடுப்பு ஏவு​கணை​கள் உள்​ளன. அந்த வரிசை​யில் இப்​போது இந்​தி​யா​வும் இணைந்​திருக்​கிறது.

மத்​திய அரசின் பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு நிறு​வனம் (டிஆர்​டிஓ) கடந்த 10, 11-ம் தேதி​களில் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிக்​கும் பிஎம்டி ஏவு​கணை, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் என்ஏஎஸ்எம்- எம்ஆர் ரக ஏவுகணை சோதனை​களை வெற்​றிகர​மாக நடத்தி உள்​ளது. 

ஒடிசா மாநிலம் சந்​திப்​பூர் ஏவுதளத்​தில் இருந்து நடத்​தப்​பட்ட இந்த 3 சோதனை​களும் முழு வெற்றி அடைந்​துள்​ளன. இவற்​றில் ஒரு ஏவு​கணை பூமிக்கு வெளி​யிலேயே இடைமறித்து தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டது. மற்​றொன்று பூமிக்​குள் வந்த பிறகு இடைமறித்து தாக்கி அழிக்​கும். மூன்​றாவது போர்க் கப்​பல்​களை இடைமறித்து அழிக்​கும் வல்​லமை படைத்​தது.

இதுகுறித்து மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், ‘‘உலகில் சில நாடு​களிடம் மட்​டுமே ஐசிபிஎம் ஏவு​கணை​களை அழிக்​கும் திறன் இருக்​கிறது. இந்​தப் பட்​டியலில் இந்​தி​யா​வும் இணைந்​திருக்​கிறது. புதிய சாதனையைப் படைத்த டிஆர்​டிஓ விஞ்​ஞானிகளைப் பாராட்​டு​கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்​பாக இந்​தி​யப் பாது​காப்​புத் துறை நிபுணர்​கள் கூறிய​தாவது:-

இந்​தி​யா​வின் பாது​காப்​புக்​குச் சீனா​வும் பாகிஸ்​தானும் அச்​சுறுத்​தலாக உள்​ளன. இரு நாடு​களிட​மும் அணு ஆயுதங்​கள் உள்​ளன. பொது​வாக கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​கள் (ஐசிபிஎம்) மூலம் அணு ஆயுதத் தாக்​குதல்​களை நடத்​தும் அபா​யம் உள்​ளது.

இதை கருத்​தில் கொண்டு ஐசிபிஎம் ஏவு​கணை​களை இடைமறித்து அழிக்​கும் பிஎம்டி ஏவு​கணை திட்​டத்​தைக் கடந்த 1999-ம் ஆண்​டில் டிஆர்​டிஓ தொடங்​கியது. பல்​வேறு கட்​டங்​களாகத் தொடர்ந்து சோதனை​கள் நடத்​தப்​பட்டு வந்​தன. இந்​தத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாகக் கடந்த 2000-ம் ஆண்​டில் இஸ்​ரேலிடம் இருந்து ஸ்வார்​டு​பிஷ் என்ற அதிநவீன ரேடார் வாங்​கப்​பட்​டது.

இஸ்​ரேல் அனு​ம​தி​யுடன் இந்த ரேடார்​கள் உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​படு​கின்​றன. இதன்​மூலம் 1,500 முதல் 5,000 கி.மீ. தொலைவு வரையி​லான எதிரி​களின் ஏவு​கணை​களைத் துல்​லிய​மாகக் கண்​டு​பிடிக்க முடி​யும். குறிப்​பாக ஒரே நேரத்​தில் 200 ஏவு​கணை​களைத் தொடர்ந்து கண்​காணிக்க முடி​யும்.

பல ஆண்​டு​கள் நடத்​திய ஆராய்ச்​சி​யின் பலனாக டிஆர்​டிஓ சார்​பில் ஏடி1, ஏடி2 ஆகிய பெயர்​களில் பிஎம்டி தடுப்பு ஏவு​கணை​கள் தயாரிக்​கப்​பட்டு உள்​ளன. ஸ்வார்​டு​பிஷ் ரேடார் மற்​றும் பிஎம்டி ஏவு​கணை​கள் மூலம் எதிரி​களின் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிக்க முடி​யும். தற்​போது நடத்​தப்​பட்டு உள்ள சோதனை​கள் மூலம் 5,000 கி.மீ. தொலை​வில் இருக்​கும் ஐசிபிஎம் ஏவு​கணை​களை அழிக்​கும் திறனை இந்​தியா பெற்​றிருக்​கிறது.

4 அடுக்கு வான் பாது​காப்பு

எதிரி​களின் போர் விமானங்​கள், ஏவு​கணை​ தாக்​குதலை முறியடிக்க விமானப் படை சார்​பில் 4 அடுக்கு வான் பாது​காப்​புக் கவசம் அமைக்​கப்​படு​கிறது. முதல்​கட்ட வான் பாது​காப்​பில், எதிரி​களின் ட்ரோன்​களை அழிக்க இஸ்​ரேல் தயாரிப்​பான பைதன், டெர்பி ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​படும்.

இரண்​டாவது அடுக்​கில் எதிரி​களின் குறுகிய தொலைவு ஏவு​கணை​களை இடைமறித்து அழிக்க பராக்-8 ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​படும். மூன்​றாவது அடுக்​கில் எதிரி​களின் நடுத்தர தொலைவு ஏவு​கணை​களை நடு​வானில் அழிக்க ரஷ்​யா​வின் எஸ்​-400 ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​படும். நான்​காவது அடுக்​கில் எதிரி​களின் கண்​டம் விட்டு கண்​டம் பா​யும் ஏவு​கணை​களை அழிக்க பிஎம்டி ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்தப்​படும். இந்த வகை ஏவு​கணை​கள் மூலம் பூமி​யின் வளிமண்​டலத்​துக்கு வெளியே எதிரி​களின்​ ஏவு​கணை​கள்​ தகர்க்​கப்​படும்​. இவ்​வாறு நிபுணர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

ஊக்கத்தொகை, உணவு வழங்கி 11 கிராம மக்கள் வெளியேற்றம்

இந்த சோதனைகள் ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம், சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சந்திப்பூர் தளத்தில் அக்னி, பிருத்வி, பிரம்மோஸ் ரகங்களைச் சேர்ந்த ஏவுகணைகளைச் சோதனை செய்யும் போது சுற்று வட்டார கிராம மக்கள் வெளியேற்றப்படுவது வழக்கம்.

இதேபோல டிஆர்டிஓவின் பிஎம்டி ரக ஏவுகணை சோதனைகளுக்காகச் சில நாட்களுக்கு முன்பு சந்திப்பூர் சுற்றுவட்டாரத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தங்குமிடம், குடிநீர், உணவுகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

சனி, 13 ஜூன், 2026

மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு - முதல்வர் விஜய் அறிவிப்பு

பதிவு: சனிக்கிழமை,  ஜூன்  13, 2026, வைகாசி, 30, பாரபவ வருடம் 02:20 AM

சென்னை,

நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்​டூர் அணை திறக்​கப்​ப​டாத நிலை​யில், குறுவை சாகுபடியை ஊக்​குவிக்க ரூ.134.83 கோடி​யில் குறுவை சிறப்பு தொகுப்​புத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு

தமிழகத்​தில் சராசரி​யாக 52.72 லட்​சம் ஏக்​கரில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது. இதில், காவிரி டெல்டா பகு​தி​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை மாவட்​டங்​களின் அனைத்து பகு​தி​களி​லும், கடலூர், திருச்​சி, அரியலூர் மாவட்​டங்​களில் சில பகு​தி​களி​லும் நெற்​ப​யிரே முதன்​மை​யாக சாகுபடி செய்​யப்​படு​கிறது.

டெல்டா மாவட்​டங்​களில் ஆண்​டுக்கு 20.65 லட்​சம் ஏக்​கர் பரப்​பில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது. இதில், குறு​வைப் பரு​வத்​தில் மட்​டும் சராசரி​யாக 5.14 லட்​சம் ஏக்​கரில் சாகுபடி நடை​பெறுகிறது. மேலும், டெல்டா அல்​லாத இதர மாவட்​டங்​களில், ஆண்​டுக்கு 32.07 லட்​சம் ஏக்​கரில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது.

இதில், கார், குறுவை, சொர்​ண​வாரி பரு​வத்​தில் மட்​டும் சராசரி​யாக5.48 லட்​சம் ஏக்​கர் பரப்​பில் நெல் சாகுபடி செய்​யப்​படு​கிறது.

தஞ்​சாவூர், நாகப்​பட்​டினம், திரு​வாரூர், மயி​லாடு​துறை, கடலூர் திருச்​சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்​டங்​களில் குறுவை நெல் சாகுபடி செய்ய, மேட்​டூர் அணை​யில் ஆண்​டு​தோறும் ஜூன் 12-ம் தேதி தண்​ணீர் திறக்​கப்​படு​வது வழக்​கம். நடப்பு தென்​மேற்​குப் பரு​வத்​தில் ‘எல்​நினோ’ எனும் நிகழ்​வால் மழை அளவு 90 சதவீதத்​துக்​கும் குறை​வாக இருக்​கும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ளது. தற்​போது, பரு​வ​மழை தாமத​மாகும் நிலை​யில் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து குறை​வாக உள்​ளது. இதனால் தற்​போது மேட்​டூர் அணையில் நீர்​மட்​டம் 79.56 அடி, நீர் இருப்பு 41.52 டிஎம்​சி​யாக மட்​டுமே உள்​ளது.

எனவே, ஜூன் 12-ம் தேதி மேட்​டூர் அணையை திறப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறு இல்​லாத நிலை உள்​ளது. இதனால், காவிரி டெல்டா மாவட்​டங்​களில் இயல்​பாக நெல் சாகுபடி மேற்​கொள்​ளும் 5 லட்​சம் ஏக்​கரில் சாகுபடி செய்​வதற்​கான வாய்ப்பு மிக​வும் குறை​வாகவே உள்​ளது. எனவே, நெல் உற்​பத்​தியை அதி​கரித்​து, விவ​சா​யிகள் பயனடை​யும் வகை​யில், குறுவை சிறப்பு தொகுப்​புத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இதன்​படி, வடி​முனைக் குழாய் கிணறுகள் (ஃபில்​டர் பாயின்ட்​ஸ்) மூலம் டெல்டா மாவட்​டங்​களில் குறுவை சாகுபடி செய்​யும் விவ​சா​யிகளை ஊக்​குவிக்க ரூ.77.50 கோடி, டெல்டா அல்​லாத மாவட்​டங்​களில் கார், குறு​வை, சொர்​ண​வாரி நெல் சாகுபடியை ஊக்​குவிக்க ரூ.57.33 கோடி என மொத்​தம் ரூ.134.83 கோடி​யில் குறுவை சிறப்பு தொகுப்​புத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும். இந்த திட்​டத்​தில், நெல் இயந்​திரநடவு, நேரடி நெல் விதைப்​புக்​கான ஊக்​கத்​தொகை, உயிர் உரங்​கள், நெல் நுண்​ணூட்ட உரக்​கல​வை, விதை நெல் விநி​யோக மானி​யம், புதி​தாக வெளி​யிடப்​பட்ட நெல் ரகங்​களின் சான்று விதை உற்​பத்​திக்​கான ஊக்​கத்​தொகை ஆகியவை வழங்​கப்​படும்.

இத்​திட்​டத்​தின் மூலம், இயந்​திரமய​மாக்​கல் ஊக்​குவிக்​கப்​படு​வதுடன், நீர் மேலாண்மை மேம்​படுத்​தப்​படும். தரமான விதைகள், தொழில்​நுட்​பங்​கள் பயன்​பாட்​டின் மூலம் நெல் சாகுபடி​யின் பரப்​பு, உற்​பத்​தி, உற்​பத்தி திறன் அதி​கரிக்​கப்​படு​வதுடன், விவ​சா​யிகளின் வரு​மானத்தை உயர்த்​தி, மாநிலத்​தின் உணவுப் பாது​காப்பை வலுப்​படுத்தஉறு​துணை​யாகவும் அமை​யும்.

வேளாண் பொறி​யியல் துறை வாயி​லாக டெல்டா மாவட்​டங்​களில் உள்ள 2,325 கி.மீ. நீள​முள்ள ‘சி’, ‘டி’ வாய்க்​கால்​கள் ரூ.10 கோடி செல​வில் தூர்​வாரப்​பட்​டுள்​ளன. நீர்​வளத் துறை மூலம் ரூ.100 கோடி செலவில் 4,971 கி.மீ. நீள​முள்ள ‘ஏ’, ‘பி’ வாய்க்​கால்​கள் தூர்​வாரும் பணி​ தொடங்​கப்​பட்​டு, 97 சதவீத பணி​கள் முடிவடைந்​துள்​ளன.

மேலும், குறுவை சாகுபடிக்கு 10,714 டன் நெல் விதைகள், 4.02 லட்​சம் டன் உரங்​கள் இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ளன. அத்​துடன் விவ​சா​யிகள் பயன்​பெறும் வகை​யில் தடை​யில்லா மும்​முனை மின்​சா​ரம் நாள் ஒன்​றுக்கு 18 மணி நேரம் வழங்​கப்​படும். எனவே, டெல்டா மற்​றும் டெல்டா அல்​லாத மாவட்​டங்​களைச் சேர்ந்த விவ​சா​யிகள் குறுவை சிறப்பு தொகுப்​புத் திட்​டத்​தின் கீழ்​ வழங்​கப்​படும்​ உதவி​களைப்​ பெற்று பயனடைய​லாம்​. 

இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

வெள்ளி, 12 ஜூன், 2026

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு, கோவையில் 2-வது எய்ம்ஸ் - நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

பதிவு: வெள்ளிக்கிழமை,  ஜூன்  12, 2026, வைகாசி, 29, பாரபவ வருடம் 05:30 AM

புதுடெல்லி,

நிதி ஆயோக் கூட்டத்துக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்.

வளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக முன்னேறிச் செல்கிறது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், ‘‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி தரவேண்டும். கோவையில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திட்ட கமிஷனுக்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் 11-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், விஜய் (தமிழகம்), சிவகுமார் (கர்நாடகா), சதீசன் (கேரளா), சுவேந்து அதிகாரி (மேற்கு வங்கம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), யோகி ஆதித்யநாத் (உத்தரப் பிரதேசம்), புஷ்கர் சிங் தாமி (உத்தராகண்ட்), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்) உட்பட 28 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். யூனியன் பிரதேசங்கள் சார்பில் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை.

ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவராஜ் சிங்சவுகான், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, குமாரசாமி, தர்மேந்திரபிரதான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றது இதுவே முதல் முறை.

வளர்ச்சி அடைந்த இந்தியா

‘வளர்ந்த இந்தியா@2047-க்கான அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாடு’ என்ற கருப்பொருளில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் பிரதமர் மோடி பேசியதாவது..

இக்கட்டான சூழலிலும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா தன்னம்பிக்கையுடன் வேகமாக முன்னேறிச் செல்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு மாநிலங்கள் இடையே ஒத்துழைப்பு நீடிக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். வேலைவாய்ப்புக்கு ஏற்ப அவர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்திய நிறுவனங்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக பொருட்களை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச சந்தையில் போட்டியிட முடியும். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்களித்து வருகின்றனர். அவர்களது கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்புக்கு மாநில அரசுகள் முன்னுரிமை தரவேண்டும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

பல்வேறு மாநில முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பேசினர். தமிழக முதல்வர் விஜய் பேசியதாவது...

அதிகாரம் அளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவு கூட்டாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாகமட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும். 2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழகத்தை உயர்த்தும் இலக்குடன் பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் இளைஞர் திறன், வேலை வாய்ப்பு இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் பயிற்சிகள் வழங்கப்படும்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி தர வேண்டும். கோவையில் 2-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கும். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு உதாரணமாக விளங்கும் திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய இலக்கியமாக’ அறிவிக்க வேண்டும்.

நிதி பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம், மக்கள்தொகை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், 100 நாள்வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். சிறப்பான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கொள்கைகளுடன் மத்திய அரசுடன் இணைந்து தமிழகம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது ஆகும். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது தமிழகத்துக்கு தரவேண்டிய நிலுவை நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமரிடம், அவர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்துக்கு நிலுவை நிதியை விரைந்து வழங்க கோரிக்கை

தேசிய கல்விக் கொள்கை அல்லது மும்மொழிக் கொள்கையை திணிக்காமல், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். ‘வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்’, ‘அனைவருக்கும் வீடு’ திட்டங்களுக்கு போதிய நிதியுதவி அளிக்க வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ள காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம்-2045, ஒகேனக்கல் 3-ம் கட்ட குடிநீர் திட்டத்துக்கான ரூ.2,283 கோடி நிதியுதவிக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும்.

இலங்கை, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குலசேகரபட்டினம் விண்வெளி மையத்தை ‘தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக’ அறிவிக்க வேண்டும். சென்னை - கன்னியாகுமரி அதிவேக ரயில் திட்டம், செங்கல்பட்டு - திருச்சி, திருச்சி – கரூர், கரூர் –கோவை, சென்னை மாதவரம் – சோழவரம் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

வியாழன், 11 ஜூன், 2026

இந்திய பிரதமராக நீண்ட காலம் பணியாற்றி சாதனை - பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து

பதிவு: வியாழக்கிழமை,  ஜூன்  11, 2026, வைகாசி, 28, பாரபவ வருடம் 01:30 AM

புதுடெல்லி,

இந்தியாவில் தொடர்ந்து நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக 4,399 நாட்கள் பிரதமர் பதவியில் பணியாற்றி இந்த சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளது. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் நேரு, 4,398 நாட்கள் பணியாற்றியது சாதனையாக இருந்தது. இந்த சூழலில் ட்ரம்ப் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் என்ற சாதனையை படைத்துள்ள எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். 

அவர் மிகச்சிறந்த பிரதமர்! அவர் வலிமையான, ஆரோக்கியமான மற்றும் ஞானம் கொண்டவர். அவர் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றுவார்” என்று ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இச்சாதனை நமது தேசத்தின் சரித்திரத்தில் பெரும் மைல்கல் என்று கூறியுள்ளார். இது வளர்ச்சியடைந்த பாரதத்தின் நீண்ட நெடிய பயணத்தின் முக்கிய அடையாளம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இது மக்கள் சேவையாற்றும் மக்களின் தலைவருக்கு நாட்டு மக்கள் அளித்துள்ள மகுடம் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளில் நாடு மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது என்றும் அந்த மாற்றங்களின் மையப்புள்ளியாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நலனை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பெரும் பங்காற்றி வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த காலங்களில் வளர்ச்சியின் பயன்களைப் பெறாமலிருந்த விளிம்புநிலை மக்களுக்கு அனைத்து உதவிகளையும் நேரடியாக கிடைக்க வகை செய்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேலும் பல ஆண்டுகள் வெற்றியுடன் திகழும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

உலக அளவில் முதன்மை நாடாக இந்திய தலைமையேற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறியுள்ளார். 

புதன், 10 ஜூன், 2026

“பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” - முதல்வர் விஜய் எச்சரிக்கை - சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை தொடக்க விழாவில் பேச்சு

பதிவு: புதன்கிழமை,  ஜூன்  10, 2026, வைகாசி, 27, பாரபவ வருடம் 05:30 AM

சென்னை,

“பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும்” என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் விஜய் பேசினார்.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார். அப்போது, குழந்​தைகள், பெண்​களின் பாதுகாப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்த அவர், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே அதுதொடர்​பான கோப்​பில் கையெழுத்திட்​டார்.

இதைத் தொடர்ந்​து, அதிரடிப்படை​யின் ஐ.ஜி.​யாக பவானீஸ்​வரி நியமிக்​கப்​பட்​டார். இந்த படை​யில் மேலும், ஒரு எஸ்​.பி. 2 டிஎஸ்​பி, மற்​றும் 4 ஆய்​வாளர்​கள் உட்பட 30-க்கும் மேற்​பட்ட போலீ​ஸார் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

சிங்​கப்​பெண் அதிரடிப் படை​யில் இடம்​பெறும் பெண் போலீ​ஸார் மற்​றும் பெண் எஸ்​.ஐ.களுக்கு நேவி ப்ளூ நிற சட்டை - காக்கி பேன்ட் என்ற சிறப்பு சீருடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்நிலையில், சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்டத்தை முதல்​வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.

பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை வாகனத்தில் சென்று முதல்வர் பார்வையிட்டார். எஸ்.பி ஷானாஸ் தலைமையிலான சிங்கப்பெண் அதிரடிப் படை காவல்துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் முதலிலும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது சர்ச்சையை உருவாக்கிய நிலையில், இன்று நடைப்பெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது.

விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை லட்சினையை முதல்வர் வெளியிட ஐ.ஜி பவானீஸ்​வரி பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் சிங்கப்பெண் அதிரடிப்படை ரோந்து வாகனத்தை முதல்வர் விஜய்யே இயக்கி துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் விஜய், “ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். அந்த மாதிரியான நிகழ்ச்சிதான் இன்றைய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா. நம் பாட்டி, அம்மா, தங்கைகள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சொன்னோம். அது தேர்தலுக்காக சொன்னது இல்லை, மனதிலிருந்து உண்மையாக சொன்னதுதான்.

பெண்களுக்கான பாதுகாப்பில் எப்போதும் ஜீரோ டாலரன்ஸ் தான். அதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் சொன்னது எல்லாவற்றையும் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வருவோம், அதில் தெளிவாக உள்ளோம். அதனால்தான் ஆட்சிக்கு வந்த உடனே இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். தமிழக பெண்கள் பாதுகாப்பாக, தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். அதற்கான முதல்படி தான் இது. பெண்களுக்கு நடக்கும் இன்றைய கொடுமைகளை பார்க்கும்போது மனது பதறுகிறது, கண்கள் கலங்குகிறது. அவர்கள் எல்லாம் நம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தானே. இதற்கான காரணத்தை ரீல்ஸில் தேட முடியாது உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கொடுமைகள் நடக்க காரணம் போதைப்பொருள் நடமாட்டம் தான். இதனை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இது இப்போது மே 10-ம் தேதி முதல் இருக்கும் பிரச்சினை இல்லை. பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சினை. போதைப்பொருள் நடமாட்டத்தை பல ஆண்டுகளாக கண்டுக்கொள்ளாமல் விட்டதுதான், அந்த வேர் இவ்வளவு பரவுவதற்கு காரணம். இதனை கண்டுகொள்ளாமல் விட்டது யார் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதனைப் பற்றி பேசி இப்போது பிரயோஜனம் இல்லை. முதலில் இந்த போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிந்தால் தான் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதியாகும். அப்போதுதான் சட்டம் - ஒழுங்கும் சரியாகும்.

பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம், சட்டம் - ஒழுங்கு ஆகிய மூன்றும் ஒன்று ஒன்று தொடர்புடையது. பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் சட்டம் - ஒழுங்கு மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை, இதில் சமூக ஒழுங்கும், தனிமனித கட்டுப்பாடும் சம்பந்தப்பட்டது. தனிமனிதன் ஒழுங்காக கட்டுப்பாட்டோடு இருந்தாலே சமூகமும் நன்றாக மாறும். பெண்கள் பயமில்லாமல் வாழும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு.

பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும். அந்த வேகத்தில் நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்பட கூடாது என்பதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும்.

இந்த திட்டத்துக்காக 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது, 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முன்பே, அதனை தடுக்கும் பணியில் இந்தப் படை ஈடுபடும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ட்ரோன் முறையில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஓர் அரசின் நோக்கம் நேர்மையாக இருந்தாலே போதும், அந்த அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்” என்று முதல்வர் விஜய் பேசினார்.
 

செவ்வாய், 9 ஜூன், 2026

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் - இண்டியா கூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தல்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஜூன்  09, 2026, வைகாசி, 26, பாரபவ வருடம் 04:50 AM

புதுடெல்லி,

இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மூத்த தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்றனர்.

நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இண்டியாகூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இண்டியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. இண்டியா கூட்டணி கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மொத்தம் 23 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகளை முன்வைத்தனர். 5 அம்சங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஒருமித்தகருத்து எட்டப்பட்டது.

விலைவாசி உயர்வு: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆர்) வாக்கு திருட்டு நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் கடிதம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விரைவில் தலைமை நீதிபதியிடம் கடிதம் அளிக்கப்படும். நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு குளறுபடியால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

தற்போதைய பொருளாதார சூழல், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினைகள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இண்டியா கூட்டணி கூட்டத்தை நடத்த அனைத்து கட்சிகளும் ஒப்புக் கொண்டு உள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி), மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கேரள காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (எம்), ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சி, பாரத் ஆதிவாசி கட்சி, லோக் தளம், அகில இந்திய பார்வர்டு பிளாக், சேக்தாரி காம்கர் பக்சா உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, “நாங்கள் இண்டியா கூட்டணியில் இல்லை’’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

பதிவு: புதன்கிழமை, ஜூன்  17, 2026,  ஆனி  03, பாரபவ வருடம் 07:00 சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத...