வியாழன், 14 மே, 2026

நம்பிக்கை தீர்மானத்துக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு - வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி - திமுக அணியினர் வெளிநடப்பு

பதிவு: வியாழக்கிழமை,  மே 14, 2026, சித்திரை, 31, பாரபவ வருடம் 02:55 AM

சென்னை, 

சட்​டப்​பேர​வை​யில் நடை​பெற்ற பெரும்​பான்​மைக்​கான வாக்​கெடுப்​பில் 144 எம்​எல்​ஏக்​கள் ஆதர​வுடன் முதல்​வர் விஜய்​யின் தவெக அரசு வெற்றி பெற்​றது.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் 108 தொகு​தி​களை கைப்​பற்​றி, தனிப்​பெரும் கட்சியாக தவெக உரு​வெடுத்​துள்​ளது. எனினும், ஆட்சி அமைக்க மொத்​தம் 118 இடங்​கள் தேவைப்​பட்ட நிலை​யி்ல், காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய கட்​சிகளைச் சேர்ந்த 13 உறுப்​பினர்​களின் ஆதர​வைத் தவெக பெற்​றது. இதையடுத்து 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்​லேகர் தெரிவித்தார்.

கடந்த 10-ம் தேதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்து, ஆளுநர் அறி​வுறுத்​தலின்​படி, சட்​டப்​பேர​வை​யில் விஜய்​யின் தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான நம்​பிக்கை வாக்​கெடுப்பு நேற்று நடை​பெற்​றது. பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகர் கேட்​டுக்​கொண்​டபடி. நம்​பிக்கை வாக்​கெடுப்​புக்​கான தீர்​மானத்தை முதல்​வர் விஜய் முன்​மொழிந்​தார்.

தொடர்ந்​து, எஸ்​.​ராஜேஷ் கு​மார் (காங்​கிரஸ்), ஆர்​.செல்​லசு​வாமி (மார்க்​சிஸ்ட்), வன்​னியரசு (விசிக), அ.மு.ஷாஜ​கான் (ஐயூஎம்​எல்), அமமுக​வில் இருந்து நீக்​கப்​பட்ட எஸ்​.​காம​ராஜ் (சுயேச்​சை), டி.​ராமச்​சந்​திரன் (இந்​திய கம்​யூனிஸ்ட்) ஆகியோர் அரசுக்கு ஆதர​வாக பேசினர்.

பிரேமலதா விஜய​காந்த் (தே​மு​தி​க), தமி​முன் அன்​சாரி (மஜக), நித்​தி​யானந்​தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். போஜ​ராஜன் (பாஜக), சவுமியா அன்​புமணி (பாமக) ஆகியோர் நடுநிலை வகிப்​ப​தாக தெரி​வித்​தனர்.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி, அதி​முக எம்​எல்​ஏக்​கள் 2 அணி​களாக செயல்​பட்டு வரு​வதை குறிப்​பிட்​டு, அரசுக்கு எதி​ராக வாக்​களிக்க உள்​ள​தாக தெரி​வித்​தார். இதையடுத்​து, அதி​முக​வின் சி.வி.சண்முகம் தரப்பில் எஸ்​.பி.வேலுமணி பேச வாய்ப்பு தரப்​பட்​டது. அதற்கு பழனி​சாமி உள்​ளிட்​டோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். பேர​வைத் தலை​வர் அனு​மதி அளித்​ததை அடுத்​து, வேலுமணி அரசுக்கு ஆதரவு அளிப்​ப​தாக தெரி​வித்​தார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், ‘பெரும்​பான்மை மக்​கள் தவெக​வுக்கு வாக்​களிக்​க​வில்​லை’ என்று பேசி​யதுடன், வாக்கெடுப்​பில் பங்​கேற்​காமல் வெளிநடப்பு செய்​வ​தாக அறி​வித்​தார். திமுகவுடன் தேமுதிக, மஜக, கொமதேக, மமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து முதல்​வர் விஜய் பேசும்​போது, ‘‘இந்த அரசு நிச்​ச​யம் மதச்​சார்​பற்ற அரசாகத்​தான் செயல்​படும். குதிரை பேரத்​தில் இந்த அரசு ஈடு​பட​வில்​லை. குதிரை வேகத்​தில் செயல்​படு​கிறது. தமிழகத்​தின் முன்​னேற்​றத்​துக்கு உழைத்த தலை​வர்​கள் வழி​காட்​டிய கொள்​கை​களில் இருந்து இம்​மியள​வும் வில​காமல் இந்த ஆட்சி நடை​பெறும். எனவே, நான் முன்​மொழிந்த தீர்​மானத்தை உறுப்​பினர்​கள் ஏகமன​தாக நிறைவேற்​றித் தரவேண்​டும்’’ என்​றார்.

இதையடுத்​து, பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கச்​செய்​து, ஆதரிப்​பவர்​கள், எதிர்ப்​பவர்​கள், நடுநிலை வகிப்​பவர்​கள் என எண்​ணிக் கணிக்​கு​மாறு பேர​வைச் செயலர் கி.சீனி​வாசனுக்குப் பேரவைத் தலைவர் அறி​வுறுத்​தி​னார்.

அதன்​படி, பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​கள் எண்​ணிக் கணிக்​கப்​பட்​டனர். உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கக்​கூறி, பெயர் வாசிக்​கப்​பட்டு அவர்​கள் நிலைப்​பாடு கணக்​கில் கொள்​ளப்​பட்​டது.

இதையடுத்​து, வாக்​கெடுப்பு விவரத்தை பேர​வைத் தலை​வர் அறி​வித்​தார். அதன்​படி, 144 உறுப்​பினர்​கள் அரசுக்கு ஆதர​வளிப்​ப​தாக​வும், 22 உறுப்​பினர்​கள் எதி​ராக வாக்​களித்​த​தாக​வும், 5 உறுப்​பினர்​கள் நடுநிலை வகித்​த​தாக​வும் அறி​வித்​தார். இதன்​மூலம் வாக்​கெடுப்​பில் தவெக அரசு பெரும்​பான்மை பெற்​றுள்​ள​தாக​வும் அறி​வித்​தார்​. இதையடுத்​து, அனைத்​து உறுப்​பினர்​களுக்​கும்​ முதல்​வர்​ விஜய்​ நன்​றி தெரிவித்​தார்​.
 

புதன், 13 மே, 2026

நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்ததால் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து - சிபிஐ தீவிர விசாரணை


 பதிவு: புதன்கிழமை,  மே 13, 2026, சித்திரை, 30, பாரபவ வருடம் 02:55 AM

புதுடெல்லி,

வி​னாத்​தாள் கசிந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தால், மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழு​வதும் நடை​பெற்​றது. மொத்​தம் 22.80 லட்​சம் மாணவ, மாணவி​கள் இந்த தேர்வை எழு​தினர். இந்​தச் சூழலில் நீட் தேர்​வுக்கு முன்​பாக ராஜஸ்​தானில் வினாத்​தாள் கசிந்​த​தாக புகார் எழுந்​தது.

இதுகுறித்து மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் மற்​றும் ராஜஸ்​தான் போலீ​ஸார் இணைந்து நடத்​திய விசா​ரணை​யில் பல்​வேறு மாநிலங்​களில் வினாத்​தாள் கசிந்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​படு​வ​தாக தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது.

இதுதொடர்​பாக என்​டிஏ நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவி​லான தேர்​வு​களை நேர்​மை​யாக​வும், நம்​பகத்​தன்​மை​யுட​னும் நடத்த என்​டிஏ உறுதி பூண்​டிருக்​கிறது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பான புகார்​களை விசா​ரிக்க மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களைக் கேட்​டுக் கொண்​டோம். 

அந்த அமைப்​பு​கள் விசா​ரணை நடத்தி என்​டிஏ​விடம் விரி​வான அறிக்​கையை சமர்ப்​பித்​தன. அதன் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மறு​தேர்வு தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும்.

நீட் மறு​தேர்​வுக்​குப் புதி​தாக ஆன்​லைனில் விண்​ணப்​பங்​களைச் சமர்ப்​பிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. தேர்​வுக் கட்​ட​ண​மும் செலுத்த வேண்​டாம். ஏற்​கெனவே செலுத்​திய தேர்​வுக் கட்​ட​ணம் திரும்ப வழங்​கப்​படும். என்​டிஏ-​வின் சொந்த நிதி​யில் மறு​தேர்வு நடத்​தப்​படும். 

மாணவ, மாணவி​கள் ஏற்கெனவே எழு​திய தேர்வு மையங்களில் மறு​தேர்வு நடத்​தப்​படும். மறு​தேர்​வுக்​கான தேதி, ஹால் டிக்​கெட் குறித்து என்​டிஏ சார்பில் அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​படும்.

மேலும் விவரங்​களுக்கு neet-ug@nta.ac.in இ-மெ​யில் முகவரி மற்​றும் 011-40759000 / 011-69227700 தொலைபேசி எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.

தேசிய தேர்வு முகமை தலை​வர் சுபோத் குமார் சிங் கூறும்​போது, “மாணவ, மாணவி​களின் எதிர்​காலத்​தைப் பாழாக்க ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம். முறை​கேடு​களில் ஈடு​படு​பவர்​கள் அகற்​றப்​படு​வார்​கள். வலு​வான பாது​காப்பு நடை​முறை​களோடு நீட் மறு​தேர்வு நடத்​தப்​படும். இதுதொடர்​பாக விரை​வில் விரி​வான வழி​காட்டு நெறிகள் வெளி​யிடப்​படும். இதன்​மூலம் எதிர்​காலத்​தில் தவறுகள் நடை​பெறு​வது தடுக்​கப்​படும்" என்று தெரி​வித்​துள்​ளார்.

நீட் மறு​தேர்வு குறித்து என்​டிஏ வட்​டாரங்​கள் கூறும்​போது, “வி​னாத்​தாள் கசிவு காரண​மாகவே நீட் மறு​தேர்வு நடத்​தப்பட உள்​ளது. பாடத்​திட்​டம், வி​னாத்​தாள், தேர்வு நேரத்​தில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​டாது. மே மாத இறுதி அல்​லது ஜூன்​ மாதத்​தில்​ மறு​தேர்​வு நடத்​தப்​படக்​ கூடும்​" என்​று தெரிவித்​தன.

ரூ.100 கோடி வரை…


நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக சிபிஐ நேற்று வழக்​குப் பதிவு செய்து முதல் கட்ட விசா​ரணையை தொடங்கி உள்​ளது. இதுகுறித்து சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

நீட் தேர்​வுக்​கான வினாத்​தாளை அச்​சடித்த அச்​சகம் அல்​லது வாக​னங்​களில் வினாத்​தாள் கொண்டு செல்​லப்​பட்ட போது வினாத்​தாள் கசிந்​திருக்​கக் கூடும் என்று சந்​தேகிக்​கிறோம். முதல் வினாத்​தாளை வழங்​கிய அச்சக ஊழியருக்கு ரூ.10 கோடி வரை வழங்​கப்​பட்டு இருக்​கலாம் என்று தெரி​கிறது.

வினாத்​தாள் சில இடங்​களில் ரூ.28 லட்​சம் வரை விற்​பனை செய்​யப்பட்டு உள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்​யப்​பட்டு இருப்​ப​தாகத் தெரி​கிறது.

இந்த வழக்​கில் இது​வரை கைதானவர்​களில் பெரும்​பாலானோர் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள். கேரளா​வில் மருத்​து​வக் கல்​லூரி மாணவர் பிடிபட்டு உள்​ளார். 

இதே வழக்​கில் மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக்​கில் சுபம் காரி​னார் என்​பவர் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இவர் போபாலில் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​யில் பயின்று வரு​கிறார். ராஜஸ்​தான், மகா​ராஷ்டி​ரா, கேரளா, உத்தராகண்ட் உள்​ளிட்ட பல மாநிலங்​களின் போலீ​ஸாரிடம் இருந்து ஆதா​ரங்​களைப் பெற்று முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்​படும். தவறு செய்​தவர்​கள் நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள். இவ்வாறு சிபிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து பல்​வேறு மாணவர் சங்​கங்​கள் சார்​பில் டெல்​லி​யின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று போராட்​டங்​கள் நடை​பெற்​றன.

டெல்லி மட்​டுமன்றி பாட்​னா, கோட்​டா, சிகார், டேராடூன் உள்ளிட்ட பல்​வேறு நகரங்​களி​லும்​ நேற்​று போ​ராட்​டங்​கள்​ நடத்தப்பட்டன.

செவ்வாய், 12 மே, 2026

சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஜே.சி.டி. பிரபாகர்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 07:00 AM

சென்னை,

தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. 

17-வது சட்டமன்றத்தின் சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளும் கட்சியான தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார்.

இன்று மாலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 

இதனால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார். 

துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவிக்க உள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஜே.சி.டி.பிரபாகர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எழிலன் நாகநாதனை எதிர்த்து போட்டியிட்டு 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:55 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். 

இந்தச் சூழலில், அவர் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். 

சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார்.

சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார். முதல்வர் ஜோசப் விஜய்யை வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார்

முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:45 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். 

இந்தச் சூழலில், அவர் நேற்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, அன்புமணி வாசலுக்கே வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

இந்த சந்திப்பின்போது பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் ஜோசப் விஜய்யை வரவேற்று உபசரித்தார்.

அன்புமணிக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அன்புமணியும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அன்புமணியுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின்னர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

அதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:30 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். 

இந்தச் சூழலில், அவர் நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க சென்னை அண்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆரத் தழுவி வரவேற்றார். 

வைகோவுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற நிலையில், பதிலுக்கு வைகோவும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், வைகோவுடன் சிறிது நேரம் உரையாடினார். இதன் பின்னர் வைகோவும், விஜய்யும் கைகோத்தபடி வெளியே வந்தனர். 

அப்போது இருவரும் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியோடு வந்தனர். அதன்பின்னர் ஜோசப் விஜய்யை வைகோ காரில் வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:00 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் நேற்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
                         
இந்தச் சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி - வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

பதிவு: புதன்கிழமை, ஜூன்  17, 2026,  ஆனி  03, பாரபவ வருடம் 07:00 சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத...