வெள்ளி, 8 மே, 2026

தமிழகத்தில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 08, 2026, சித்திரை, 25, பாரபவ வருடம் 06:00 AM

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. 

இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். 

இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டது. 

இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

மாணவ- மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இதன்படி, பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.  

தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.  

பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று, பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனி தேர்வர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். 

அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆதரவுடன் அடுத்த முதல்​வர்? - ஆளுநரை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்?

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 08, 2026, சித்திரை, 25, பாரபவ வருடம் 04:25 AM

சென்னை,

தனித்தே நின்று 108 இடங்​களை வென்​றும் ஆட்​சிக் கட்​டிலில் அமர முடி​யாமல் அல்​லாடிக் கொண்​டிருக்​கிறார் விஜய். எனினும் அறு​திப் பெரும்​பான்​மைக்கு மிக அரு​கில் நிற்​ப​தால் எப்​படி​யும் விஜய் தமிழக முதல்​வ​ரா​வார் என தவெக-​வினர் நம்​பு​கிறார்​கள். இதற்கு நடு​வே, அதி​முக ஆட்​சி​யமைக்க திமுக நிபந்​தனையற்ற ஆதரவை வழங்க முன்​வந்​திருப்​ப​தாக​வும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இன்று ஆளுநரை சந்​தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்​றும் தகவல்​கள் தடதடக்​கின்​றன.

திமுக-வை எதிர்த்​தும் விமர்​சித்​தும் மட்​டுமே ஆட்​சி​யைப் பிடித்த இயக்​கம் அதி​முக. இந்த இரண்டு கட்​சிகளும் எதிரெ​திர் துரு​வங்​களாக நிற்​பது​தான் இரண்டு கட்​சிகளுக்​குமே நல்​லது. அப்​படி இருப்​ப​தால் மட்​டுமே கடந்த 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக இந்த இரண்டு கட்​சிகள் மட்​டுமே மாறி மாறி ஆட்​சி​யைப் பிடித்து வரு​கின்​றன. இதனால் இவர்​களிடம் ஐம்​பது வருடங்​களுக்கு முன்பு ஆட்​சியை பறி​கொடுத்த காங்​கிரஸால் அதற்​குப் பிறகு எழவே முடிய​வில்​லை.

இந்த நிலை​யில்​தான், திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாக பாஜக தமிழகத்​தில் தலை​தூக்​கியது. ஆனால், அந்​தக் கட்​சி​யாலும் இப்​போது வரைக்​கும் திரா​விடக் கட்​சிகள் தயவில்​லாமல் முன்​னுக்கு வரமுடிய​வில்​லை. என்​ற​போதும், விஜய்​யின் வரவால் இம்​முறை திரா​விடக் கட்​சிகளின் தலைமை இல்​லாத ஓர் அரசாங்​கம் தமிழகத்​தில் அமை​யும் சூழல் உரு​வாகி இருக்​கிறது. காங்​கிரஸ், பாஜ கட்​சிகளால் சாதிக்க முடி​யாத இந்த அதிச​யத்தை சாதித்​துக் காட்டி இருக்​கிறார் விஜய்.

இருந்த போதும் அறு​திப் பெரும்​பான்​மைக்​காக, இப்​போது திமுக கூட்​ட​ணி​யில் வெற்றி பெற்ற கட்​சிகளின் தயவை நாடி நிற்​கிறார் விஜய். இது தொடர்​பாக தவெக தரப்​பில் இருந்து கம்​யூனிஸ்ட் தலை​வர்​களிடம் பேசி வரு​கிறார்​கள். அதேபோல் பழைய பாசத்​தில் விசிக தலை​வர் திரு​மாவளவனிடம் நேற்று முன்​தினம் மாலை ஆதவ் அர்​ஜுனா நேரடி​யாகவே பேசி இருக்​கிறார். 

முதலில் ஆலோ​சித்து முடிவை தெரி​விப்​ப​தாக சொன்ன திரு​மாவளவன், இரவு 8 மணிக்​குமேல் ஆதவ் தரப்​பில் இருந்து தொடர்பு கொண்​ட​போது வேறு​வித​மாக பதில் சொல்லி இருக்​கிறார். கம்யூனிஸ்ட்களும் தவெக தரப்​புக்கு பிடி​கொடுக்​க​வில்​லை. என்றாலும் விஜய்யை ஆட்​சி​யமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்​டும் என்ற கருத்தை இந்த மூன்று கட்​சிகளுமே வலி​யுறுத்தி வரு​கின்​றன. அதே​நேரத்​தில், இந்​தக் கட்​சிகளை திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்​டும் என ஸ்டா​லின் வேண்டுகோள் விடுத்​திருக்​கிறார்.

விசிக, கம்​யூனிஸ்ட்​களின் ஆதர​வுக்கு பங்​கம் வந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காகவே பாமக தரப்​புடன் அதி​காரப்பூர்வ பேச்சுவார்த்தை எது​வும் நடத்​த​வில்லை தவெக. இருப்​பினும் இரண்டு தரப்​பிலும் சிலர் நட்பு ரீதி​யில் பேசி​ய​போது, தங்​களுக்கு துணை முதல்​வர் பதவியை தரு​வதுடன் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தங்களை ஆதரிக்க வேண்​டும் என்​றும் பாமக தரப்​பில் கோரிக்கை வைத்​த​தாகச் சொல்​கிறார்​கள். இதற்கு சாத்​தி​யமில்லை என்​ப​தால் மேற்​கொண்டு இதுபற்றி தவெக தரப்​பில் பேச்​சு​வார்த்​தையை தொடர​வில்லை என்​கிறார்​கள்.

இப்​படி​யான சூழலில்​தான், திமுக ஆதர​வுடன் அதி​முக ஆட்​சி​யமைக்க ஆலோ​சனை நடப்​ப​தாக நேற்று முன்​தினம் ஒரு செய்தி காட்​டுத் தீயாய் கசிந்​தது. இதைத் தொடர்ந்து விஜய்க்கு அளிக்​கப்​பட்​டிருந்த போலீஸ் கான்​வாய் விலக்​கப்​பட்​டதும் பல்​வேறு ஊகங்​களுக்கு வழி​வகுத்​தது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திமுக உள்​வட்ட நிர்​வாகி​கள் சிலர், “இந்​தத் தேர்​தலில் திமுக கூட்​டணி தோற்​றதை​விட தனது தந்தை ஸ்டா​லின் தோற்​றதை உதயநிதி ஸ்டா​லி​னால் ஜீரணித்​துக் கொள்ள முடிய​வில்​லை. என்ன விலை கொடுத்​தாவது இதை சரிசெய்ய வேண்​டும் என்​

ப​தில் தீவிர​மாய் இருக்​கிறார் உதயநி​தி. அதி​முக உடன் திமுக கைகோர்க்​கிறது என்ற செய்​தி​யும் உதயநிதி தரப்​பில் இருந்தே கசிந்​திருக்​கிறது. இது தொடர்​பாக பழனி​சாமி​யின் மகன் மிதுனுடன் நேற்று முன்​தினம் உதயநிதி பேசி​ய​தாக​வும் சொல்கிறார்​கள்.

திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாக காலூன்றி இருக்​கும் விஜய், ஆட்​சி​யில் அமர்ந்​தால் திரா​விடக் கட்​சிகளில் ஒன்று நிச்​ச​யம் காணா​மல் போய்​விடும். ஏற்​கெனவே கரைந்து கொண்​டிருக்​கும் அதி​முக அந்த இடத்​துக்கு தள்​ளப்பட நிறையவே வாய்ப்​பிருக்​கிறது. 

இதையெல்​லாம் உணர்ந்​தே, அதி​முக தரப்​பிலும் ‘தி​முக ஆதர​வுடன் அதி​முக ஆட்சி’ என்ற செய்​தி​களை யாரும் மறுக்​க​வில்​லை. மாறாக, “118 எம்​எல்​ஏ-க்​கள் ஆதர​வுடன் ஆளுநரை சந்​திப்​பார் பழனி​சாமி” என திட​மாகச் சொல்லி இருக்​கிறார் புதுச்​சேரி மாநில அதி​முக அமைப்​பாளர் அன்​பழகன்.

இது தொடர்​பாக செய்​தி​யாளர்​களுக்கு பதில் சொன்ன அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் செம்​மலைகூட, “தி​முக ஆதரவு குறித்து பொதுச் செய​லா​ளர் முடி​வெடுப்​பார்” என்​று​தான் சொல்லி இருக்​கிறார்.

திமுக - அதி​முக ஆட்சி குறித்த செய்​தி​களை டெல்லி பாஜக தலை​மை​யும் ரசிக்க ஆரம்​பித்​திருக்​கிறது. அதற்​குக் காரணம், விஜய்க்கு காங்​கிரஸ் ஆதர​வுக் ‘கரம்’ நீட்டி இருப்​பது. விஜய் செல்​வாக்​கில் தமிழகத்​தில் மீண்​டும் காங்​கிரஸ் தலை​தூக்கி விடக்​கூ​டாது என்​ப​தில் கவன​மாக இருக்​கிறது பாஜக. அதன் காரண​மாகவே, அறு​திப் பெரும்​பான்மை எம்​எல்​ஏ-க்​களின் பட்​டியலைக் கேட்டு விஜய்யை ஆட்​சி​யமைக்க அழைக்​காமல் இழுத்​திருக்​கிறார் ஆளுநர்.

விஜய் ஆட்​சிக்கு வராமல் தடுப்​ப​தற்​காக பழனி​சாமியை வெளி​யில் இருந்து ஆதரிக்​கும் முடிவுக்கு திமுக வந்​திருப்​ப​தாக சொல்​பவர்​கள், “இது தொடர்​பாக டெல்​லி​யின் அனு​ம​தி​யோடு அதி​முக சில மூவ்​களை எடுத்து வரு​கிறது. அதன்​படி நேற்றே பழனி​சாமி ஆளுநரை சந்​திப்​ப​தாக இருந்​தது. 

ஆனால், விஜய்க்கு சாக்​குப் போக்கு சொல்​லிக் கொண்​டிருந்​த​தால் நேற்று ஆளுநர் - பழனி​சாமி சந்​திப்பு நடக்​க​வில்​லை. 

புதுச்​சேரி சென்ற பழனி​சாமி அங்கு தங்​கவைக்​கப்​பட்​டுள்ள அதி​முக எம்​எல்​ஏ-க்​களிடம் ஆலோ​சனை நடத்​தி​னார். திமுக ஆதரவு குறித்து அப்​போது பேசப்​பட்​ட​தாக தெரி​கிறது. இதைத் தொடர்ந்​து, இன்று திமுக ஆதரவு கடிதத்​துடன் ஆளுநரை பழனி​சாமி சந்​திக்​கக் கூடும் என தெரி​கிறது.

விஜய்க்கு ஆட்​சி​யமைக்க வாய்ப்பு அமை​யாத காரணத்​தால் நாங்கள் பழனி​சாமிக்கு நிபந்​தனையற்ற ஆதரவை அளிக்கிறோம் என திமுக தரப்​பில் விளக்​கம் கொடுக்​கப்​படலாம். தங்​களின் இந்த முடி​வால் விஜய்யை ஆட்​சி​யமைக்க முடி​யாமல் தடுத்​து​விட முடி​யும் என நம்​பு​கிறார் உதயநி​தி. 

அதே​போல், பழனிசாமி​யும் ஆட்சி அதி​காரத்தை கைப்​பற்​று​வ​தால் அதி​முக-வை பிள​வில் இருந்து காப்​பாற்ற முடி​யும் என நினைக்​கிறார்” என்கிறார்​கள்.

யாருமே நினைத்​துக்​கூட பார்க்க முடி​யாத அதி​முக ஆட்சி திமுக ஆதர​வில் அமை​யு​மா... திமுக எதிர்ப்​பிலேயே வளர்ந்த அதி​முக-​வின் எம்​எல்​ஏ-க்​கள் அத்​தனை பேரும் ஒரே​முக​மாய் இதை ஏற்​பார்​களா... அல்​லது திமுக உறவை காரணம் காட்டி அதி​முக-​வில் பிளவு ஏற்​படுமா என்ற கேள்வி​களுக்கு எல்​லாம் விடை தெரி​யும் நாள் வெகுதூரத்​தில் இல்​லை.

தவெக தலைவர் விஜய் பதவியேற்பதில் சிக்கல் நீடிப்பு - 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கட்டாயம் என ஆளுநர் மீண்டும் உறுதி

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 08, 2026, சித்திரை, 25, பாரபவ வருடம் 03:50 AM

சென்னை,

திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சி தீவிரம்

 சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தார். அப்போது, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர். 

அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே, அதற்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது’’ என்று உறுதிபட தெரிவித்தார்.

இதன்பிறகு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு திரும்பிய விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தேவைப்படும் 5 இடங்களுக்கு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

ஆளுநரின் முடிவை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதா, திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரும் நடவடிக்கையில் தவெக முக்கிய நிர்வாகிகள் நேரடியாக களத்தில் இறங்கினர். 

சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரை தவெக துணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் சந்தித்து, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம். ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிப்பார்கள். விஜய் ஏற்கெனவே கூறியபடி, எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் கட்டாயம் பங்கு வழங்கப்படும்’’ என்றார்.

சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கட்சித் தலைவர் காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் நேற்று சந்தித்து ஆதரவு கோரினார். 

அவரிடம் காதர் மொகிதீன், ‘‘நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக எடுக்கும் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு. ஸ்டாலின் சொன்னால் ஆதரவு அளிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார். 

கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிப்பதாகவும் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவனிடம் தவெக முக்கிய தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியதாக கூறப்படுகிறது. அவரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அழைக்காதது ஏன்? ஆளுநர் விளக்கம் 

 ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் 2-வது நாளாக நேற்றும் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார் என்றும், அழைக்கவில்லை என்றும் மாறி மாறி தகவல்கள் வெளியாகின. இதனால், விஜய் முதல்வராக பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 

இதற்கிடையே, தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்யை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைத்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவு என்பது, ஆட்சி அமைப்பதற்கு இன்றியமையாதது. அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை இந்த சந்திப்பின்போது ஆளுநர் விளக்கினார். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 7 மே, 2026

திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா இல்லை - தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமையுமா?

பதிவு: வியாழக்கிழமை,  மே 07, 2026, சித்திரை, 24, பாரபவ வருடம் 04:25 AM

சென்னை,

தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்எல்ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்' (தவெக), தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது. 

அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் தவெக கோரியிருந்தது. இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய், நேற்று பிற்பகல் 1 மணியளவில் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். 

இந்தக் கூட்டத்தில், ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் நிபந்தனைகளை எப்படிக் கையாள்வது, அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்களிப்பு வழங்குவது மற்றும் பதவியேற்பு விழா குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் குழுவினர் நேரில் வந்து தமது ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.

ஆலோசனை முடிந்து பிற்பகல் 3 மணியளவில் பனையூர் அலுவலகத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். சரியாக 3.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை அவர் அடைந்தார். அங்கு ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் பூங்கொத்து கொடுத்து விஜய்யை வரவேற்றார். தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்த விஜய்க்கு, ஆளுநர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர், 108 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் விஜய் முறைப்படி சமர்ப்பித்தார்.

புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளுநருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு முக்கிய சட்ட நடைமுறையை ஆளுநர் சுட்டிக்காட்டினார். 

அதாவது, தவெக.வுக்கு ஆதரவு அளிக்கும் 118 எம்எல்ஏக்கள் அடங்கிய பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

அந்தப் பட்டியலை ஆய்வு செய்த பிறகே, முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தவெகவை பொறுத்த வரை பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு, அதன்பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால், ஆளுநர் முழு பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்ததால், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று 7-ம் தேதி விஜய் முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறாமல் தள்ளிப்போகிறது. 

எனினும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆளுநர் எம்எல்ஏ.க்களின் முழு பட்டியலைக் கேட்டுள்ளதால், அதை தயாரித்து வழங்கும் பணிகளில் தவெக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து திரும்பிய விஜய், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து ஆதரவு கடிதங்களைப் பெற்று, ஓரிரு தினங்களில் முழு பட்டியலையும் ஆளுநரிடம் வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆளுநரின் அழைப்பு எப்போது வரும்? அடுத்தகட்டமாகப் பதவியேற்பு விழா எந்தத் தேதியில் அமையும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று தவெக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விஜய் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட ஆலோசனைக் குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார். 

அதன்பின்னர் நேற்று இரவு தவெக சட்ட ஆலோசனைக் குழுவினர் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை 2-வது முறையாகச் சந்தித்துப் பேசினர். 

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஆட்சி அமைப்பதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க அ.தி.மு.க. தீவிரம் - தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை


 பதிவு: வியாழக்கிழமை,  மே 07, 2026, சித்திரை, 24, பாரபவ வருடம் 03:15 AM

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல் த.வெ.க. உள்ளது.  இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க.வில் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என தகவல் வெளியானது.  

இதனையொட்டி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது.  

ஆனால் திடீரென இந்த கூட்டம் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. . இந்த நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் நேற்று காலை தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ., பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர். 

இந்த ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர். 

இந்த சந்திப்புக்கு பிறகு கே.பி. முனுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, அ.தி.மு.க. பெரிய இயக்கம் என்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆதரவு கிடையாது என்றும் கூறினார். 

இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த சூழலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே உயர்மட்ட அளவில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.  

காலை முதலே கட்சியின் மூத்த தலைவர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது என கூறப்படுகிறது. 

த.வெ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அ.தி.மு.க.வுக்கு வெளியில் இருந்து தி.மு.க. ஆதரவு அளிக்க முடிவு என்றும் தகவல் தெரிவிக்கின்றது.  

தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.  எனினும் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.  இதனால், அக்கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. பக்கம் சென்று விடுவர்.

அந்த வகையில், தி.மு.க.வுக்கு 68 இடங்கள் இருக்கும்.  எனினும், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்போது, மொத்த எண்ணிக்கை 121 ஆக இருக்கும்.  பெரும்பான்மையாக ஆட்சியமைக்க 118 இடங்கள் வேண்டும். 

அந்த வகையில், போதிய அளவிலான இடங்களை இந்த கூட்டணி கொண்டிருக்கும்.  இதனால், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் உள்ளது.  

தி.மு.க. வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. 

தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுவதால், அரசு அமைப்பதற்கு ஆதரவு கோரி அதிமுக தரப்பு திமுகவிடம் மறைமுகமான தூதுகளை அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. 

எனினும், அதிமுகவின் இந்த முன்மொழிவை திமுக தலைமை நிராகரித்துவிட்டதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் திமுக உறுதியாக உள்ளது என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி எனும் திகில் கிளப்பும் செய்தி றெக்கை கட்டி பறக்கும் நிலையில், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காங்கிரஸ் கட்சி (மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள்) இழைத்த துரோகத்தையும் மீறி, ஒரு வலிமையான எதிர்க்கட்சியாகச் செயல்படவே திமுக முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்குமாறு அதிமுக தரப்பு பாஜகவை வற்புறுத்தி வருகிறது. இது மக்களின் தேர்தல் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகம் வெல்லும் என்று நம்புவோம்’ எனத் தெரிவித்து இப்போது பந்தினை அதிமுக பக்கம் தள்ளிவிட்டுள்ளார்.

ஒரு பக்கம் திமுக - அதிமுக கூட்டணி பற்றிய தகவல்கள் தடதடக்கும் நிலையில், மறுபக்கம் திமுக இந்த செய்திகளை புறந்தள்ளியுள்ளது. ஆனாலும், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து என்னவேண்டுமானாலும் நடக்கும் என்பதால், எதிர்பார்ப்புகள் இப்போதே எகிறத் தொடங்கிவிட்டது.

புதன், 6 மே, 2026

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகிற 8-ந்தேதி வெளியாகுமா? - பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை முக்கிய தகவல்


பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 09:15 AM

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. 

இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 8-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

மாணவ- மாணவிகளும் தேர்வு முடிவுகளை அறிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை சார்ந்த சில அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. 

எனினும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலை பெறவேண்டும்.

இதனால் திட்டமிட்டபடி வருகிற 8-ந்தேதி பிளஸ்-2 முடிவுகளை வெளியிட முடியாது. 

புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றனர். 

தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக முடிவு - இன்று அவசர ஆலோசனை


 பதிவு:  புதன்கிழமை,  மே 06, 2026, சித்திரை, 23, பாரபவ வருடம் 09:10 AM

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 

ஆனால் 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம். மேலும், சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்கெடுப்பும் நடைபெறும்.

இதில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ள முடியும்; இதனால் ஒரு தொகுதியை த.வெ.க. இழக்கும். எனவே த.வெ.க.வுக்கு சட்டசபையில் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும். 

பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும். தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். 

த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய அரசியல் நிலவரப்படி, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு தர வாய்ப்பு அதிகம். 

ஏனெனில் காங்கிரசின் ஒரு பிரிவு முன்பே த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. மேலும் த.வெ.க. வெற்றிக்குப்பின் ராகுல் காந்தி, விஜய்க்கு தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்படி அ.தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகளையும் இணைக்க வேண்டிய நிலை த.வெ.க.வுக்கு உள்ளது. அதில் 4 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள பா.ம.க., த.வெ.க.வுடன் கூட்டணி சேர ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. எனவே எந்த நேரத்திலும் அன்புமணி ராமதாஸ்-விஜய் சந்திப்பு நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே த.வெ.க.வுடன் சேர்ந்தால் அமைச்சரவை பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்த கட்சிகளிடம் எல்லாம் உள்ளது. எனவே அமைச்சர் பதவி இல்லாமல் இந்த கட்சிகள் த.வெ.க.வுடன் இணைய வாய்ப்பு மிக குறைவு. 

இவ்வாறு கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்கப்பட்டால், தமிழக அரசியலில் இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.

இதனிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் அந்தஸ்தை இழந்ததுடன், மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. எனவே அரசியலில் தங்களது நிலையை வலுப்படுத்தவும், மக்களுக்கான பணிகளை தொடரவும் விஜய்க்கு ஒரு ஆண்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்தும் அந்த கட்சிக்குள் நிலவுகிறது. 

ஒருவேளை அ.தி.மு.க. ஆதரவு அளித்தால் த.வெ.க. மற்ற கட்சிகளின் ஆதரவு எதுவும் தேவைப்படாது. அதே நேரத்தில் த.வெ.க.வும் யாருக்கும் ஆட்சியில் பங்கு தரதேவையில்லை. சுயமாகவே ஆட்சியை நடத்தலாம்.

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...