பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 24, 2026, சித்திரை, 11, பாரபவ வருடம் 03:30 AM
சென்னை,
தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்களித்ததால், வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14.59 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் உட்பட மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர், 83,875 காவல் துறையினர், 40,427 காவல் துறை அல்லாத முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாக்குச்சாவடி பணியில் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இயந்திரங்கள் பழுது, வாக்குப்பதிவு தாமதம் போன்ற சிக்கல்கள் குறைவாகவே இருந்தன.
வாக்குச்சாவடிகளின் உள்ளே மற்றும் வெளியே தலா ஒரு கண்காணிப்பு கேமரா என மொத்தம் 1.50 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னையில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களை உற்சாகமாக வரவேற்று, மகிழ்ச்சியுடன் வாக்களிக்க வைத்தனர்.
5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு, நுண்பார்வையாளர்கள் மேற்பார்வையில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பின்னர் மாதிரி வாக்குகளை அழித்து விட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வெயிலை தவிர்க்கும் விதமாக, காலை 7 மணிக்கே முதியோர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குகளை செலுத்தினர். சக்கர நாற்காலி மூலம் முதியோர், மாற்றுத் திறனாளிகளை அழைத்துவர தன்னார்வலர்கள் உதவினர். நேற்று முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு பகுதிகளிலும் புதுமணத் தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர்.
காலை முதலே வாக்குப்பதிவு
விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்குள்ளாக 17.69 சதவீத வாக்குகளும், பிற்பகல் ஒரு மணிக்குள் 56.81 சதவீத வாக்குகளும் பதிவாகின. குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து அதிக அளவில் வாக்களித்தனர். இதனால், தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டி பதிவாகியுள்ளது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அவரது குடும்பத்தினர், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வாக்களித்தனர்.
சில வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நீடித்தது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. பின்னர், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழகம் முழுவதும் 63 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு அறையில் (‘ஸ்டிராங் ரூம்’) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
எஸ்ஐஆர் பணியால் கிடைத்த பலன்
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.86 சதவீதம் பதிவானது. சென்னை மாவட்டத்தில் 83.09 சதவீதம் பதிவானது.
முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 85.63 சதவீதம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 91.94 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.15 சதவீதம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகின.
வெள்ளி, 24 ஏப்ரல், 2026
வியாழன், 23 ஏப்ரல், 2026
இன்று வாக்குப்பதிவு - 4 முனை போட்டி- களத்தில் 4,023 வேட்பாளர்கள்
பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 23, 2026, சித்திரை, 10, பாரபவ வருடம் 02:00 AM
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று (வியாழன்) நடைபெறுகிறது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் தமிழக போலீசாரும், தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
தற்போது கோடையின் வெப்பம் அதிகமாக இருந்தாலும், தலைவர்கள்-வேட்பாளர்களின் பிரசாரங்கள் அதனை விட அனல் கக்கியது.
தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள்நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 4,023 தகுதியுள்ள வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.
தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1,200 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சுதந்திரமாக நடத்த தமிழகத்திற்கு 326 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. அவர்களில் 136 பேர் பொதுப்பார்வையாளர்கள், 40 பேர் போலீஸ் பார்வையாளர்கள், 150 பேர் செலவினப்பார்வையாளர்கள்.
இந்த தேர்தல் காலகட்டத்தில் பறக்கும் படையினரால் ரூ.1,200 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20 லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 75 ஆயிரத்து 64 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கை உறுதி செய்யும் 'விவிபாட்' எந்திரங்கள், கட் டுப்பாட்டு எந்திரம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்க 1 மணி நேரத்திற்கு முன்பதாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர், மற்ற 3 அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பார்கள்.
சிசிடிவி கண்காணிப்பு
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கும். அங்கு நடக்கும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க 3 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டில் வரும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.
தலைமை தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வரும் அறை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று (வியாழன்) நடைபெறுகிறது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் தமிழக போலீசாரும், தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
தற்போது கோடையின் வெப்பம் அதிகமாக இருந்தாலும், தலைவர்கள்-வேட்பாளர்களின் பிரசாரங்கள் அதனை விட அனல் கக்கியது.
தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள்நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 4,023 தகுதியுள்ள வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.
தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1,200 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சுதந்திரமாக நடத்த தமிழகத்திற்கு 326 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. அவர்களில் 136 பேர் பொதுப்பார்வையாளர்கள், 40 பேர் போலீஸ் பார்வையாளர்கள், 150 பேர் செலவினப்பார்வையாளர்கள்.
இந்த தேர்தல் காலகட்டத்தில் பறக்கும் படையினரால் ரூ.1,200 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20 லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 75 ஆயிரத்து 64 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கை உறுதி செய்யும் 'விவிபாட்' எந்திரங்கள், கட் டுப்பாட்டு எந்திரம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்க 1 மணி நேரத்திற்கு முன்பதாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர், மற்ற 3 அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பார்கள்.
சிசிடிவி கண்காணிப்பு
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கும். அங்கு நடக்கும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க 3 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டில் வரும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.
தலைமை தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வரும் அறை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
புதன், 22 ஏப்ரல், 2026
தமிழக தேர்தல் களத்தில் அனல் பறந்த அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் நிறைவு - ‘48 மணி நேர அமைதி கால’ கட்டுப்பாடுகள் என்னென்ன?
பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 22, 2026, சித்திரை, 09, பாரபவ வருடம் 12:15 AM
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று மாலையுடன் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து, வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேர அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில், நேற்று காலை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின், ஆட்டோ ஓட்டியும், இளைஞர்களிடம் செல்ஃபி எடுத்தும் உற்சாகமாக பிரச்சாரம் செய்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தான் போட்டியிடும் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தான் போட்டியிடும் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனப்பேரணி சென்று வாக்கு சேகரித்தார். நேற்று மாலையில் காரைக்குடி பாண்டியன் திரையரங்கம் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தவெக தலைவர் விஜய் நேற்று சென்னையில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். நந்தனத்தில் நடந்த பிரச்சாரத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர், நிலைக் கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
234 தொகுதிகளிலும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் 83,875 போலீஸார், 40,427 அரசுஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், வண்ணப் புகைப்படம், கட்சியின் சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை பலத்த பாதுகாப்புடன் நாளை (ஏப்.22) வாக்குச்சாவடி வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
‘அமைதி கால’ வழிகாட்டுதல்கள்:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. நேற்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேர அமைதி காலத்தில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஏப்.21-ம் தேதி மாலை 6 மணி முதல் 23-ம் தேதி மாலை 6 மணி வரை தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது.
தேர்தல் தொடர்பான விவகாரங்களை திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, குறுஞ்செய்தி, இணையம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்கள் என எந்த வடிவிலான தகவல் தொடர்பு மூலமாகவும் மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லக் கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் என தொகுதி வாக்காளர்கள் அல்லாத அனைவரும் நேற்று மாலை 6 மணிக்கு தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும்.
நேற்று ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை டாஸ்மாக் கடைகள், பார்களை மூடுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று மாலையுடன் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து, வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேர அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில், நேற்று காலை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின், ஆட்டோ ஓட்டியும், இளைஞர்களிடம் செல்ஃபி எடுத்தும் உற்சாகமாக பிரச்சாரம் செய்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தான் போட்டியிடும் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தான் போட்டியிடும் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாகனப்பேரணி சென்று வாக்கு சேகரித்தார். நேற்று மாலையில் காரைக்குடி பாண்டியன் திரையரங்கம் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தவெக தலைவர் விஜய் நேற்று சென்னையில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். நந்தனத்தில் நடந்த பிரச்சாரத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர், நிலைக் கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
234 தொகுதிகளிலும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் 83,875 போலீஸார், 40,427 அரசுஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், வண்ணப் புகைப்படம், கட்சியின் சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை பலத்த பாதுகாப்புடன் நாளை (ஏப்.22) வாக்குச்சாவடி வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
‘அமைதி கால’ வழிகாட்டுதல்கள்:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. நேற்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேர அமைதி காலத்தில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஏப்.21-ம் தேதி மாலை 6 மணி முதல் 23-ம் தேதி மாலை 6 மணி வரை தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது.
தேர்தல் தொடர்பான விவகாரங்களை திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, குறுஞ்செய்தி, இணையம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்கள் என எந்த வடிவிலான தகவல் தொடர்பு மூலமாகவும் மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லக் கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் என தொகுதி வாக்காளர்கள் அல்லாத அனைவரும் நேற்று மாலை 6 மணிக்கு தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும்.
நேற்று ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை டாஸ்மாக் கடைகள், பார்களை மூடுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 21 ஏப்ரல், 2026
தமிழக வாக்காள பெரு மக்களே.. நாளை ஓட்டு போட தயாரா? - தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
முதல்வர் ஸ்டாலின் கொளத்துார் தொகுதியிலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இடைப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள், கொளுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களை, 'கவனிக்கும்' பணி, அனைத்து தொகுதிகளிலும் நடந்து வருகிறது. ரொக்கமாக 500 முதல், 5,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இது தவிர, தங்க நாணயம், மூக்குத்தி, வெள்ளி கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள், வேட்டி, சேலை என இலவச பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஐந்து மாநில தேர்தல்களில் பதிவான ஓட்டுகளும், மே 4ல் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
முதல்வர் ஸ்டாலின் கொளத்துார் தொகுதியிலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இடைப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள், கொளுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களை, 'கவனிக்கும்' பணி, அனைத்து தொகுதிகளிலும் நடந்து வருகிறது. ரொக்கமாக 500 முதல், 5,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இது தவிர, தங்க நாணயம், மூக்குத்தி, வெள்ளி கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள், வேட்டி, சேலை என இலவச பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஐந்து மாநில தேர்தல்களில் பதிவான ஓட்டுகளும், மே 4ல் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
திங்கள், 20 ஏப்ரல், 2026
தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு - உடனடியாக அமலுக்கு வரும் விதிகள்..!
பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 20, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 06:30 AM
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
நாளை (21.4.2026) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:-
(1). தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
(2). யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
(3). பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.
இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126(2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
4). தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் நாளை மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
(5). கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.
(6). வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், நாளை மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.
(7). சட்டமன்றத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு:-
i. அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
ii. தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும்
III. தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
iv. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.
(8). வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
(9). இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
நாளை (21.4.2026) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:-
(1). தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
(2). யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
(3). பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.
இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126(2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
4). தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் நாளை மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
(5). கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.
(6). வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், நாளை மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.
(7). சட்டமன்றத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு:-
i. அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
ii. தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும்
III. தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
iv. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.
(8). வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
(9). இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக உளவுத்துறை ஐ.ஜி. மாற்றம் - செந்தில்வேலனுக்கு பதில் அவினாஷ் குமார் நியமனம்
பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 20, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 01:40 AM
சென்னை,
தமிழக காவல் துறையில் உளவுத் துறை ஐ.ஜி.யாக உள்ள செந்தில்வேலன் மாற்றப்பட்டு, புதிய ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நியாயமாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில், முக்கிய நிர்வாக மாற்றங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டம் - ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
அது மட்டுமின்றி, பல்வேறு காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோரும் மாற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல் துறையின் உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த செந்தில் வேலன் நேற்று மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக, காவல் துறை தொழில்நுட்ப சேவைப் பிரிவு ஐ.ஜி.யாக உள்ள அவினாஷ் குமார் புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறைச் செயலர் உத்தரவு
தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் உளவுத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது.
தேர்தல் விதிமுறைகளை அனைவரும் முறையாக கடைபிடிக்கின்றனரா, வாக்காளர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதா, சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என்றுகண்காணிக்கும் முக்கிய பொறுப்புகள் உளவுத்துறைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 23 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணியின்போது இன்னொரு அறை வெடித்தது - போலீஸார் உட்பட 19 பேர் படுகாயம்
பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 20, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 01:20 AM
விருதுநகர்,
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மீட்புப் பணி நடந்தபோது ஆலையின் இன்னொரு அறை வெடித்துச் சிதறியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான ‘வனஜா’ என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அறையில் சோல்சா வெடி தயாரிக்கும் பணியின்போது உராய்வு காரணமாக திடீரென பட்டாசு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
இந்த விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள்யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. உடல்கள் முழுவதுமாக எரிந்ததால் ஆணா, பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த வச்சக் காரப்பட்டி போலீஸார் மற்றும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்தனர்.
ஆனால், பட்டாசுகளை இருப்பு வைத்திருந்த குடோனும் வெடித்துச் சிதறியதால், ஆலைக்குள் மீட்புப் பணிக்காக யாரும் செல்ல முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே, மீட்புப் பணிகள் தொடங்கின. தொடர்ந்து வெடி மருந்துகள் வெடித்துச் சிதறியதால் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு அதிர்வு உணரப்பட்டது.
இந்த விபத்தில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), சாரதா (40), வீரபத்திரன் (45), இவரது மனைவி சங்கிலித் தங்கம் (40), திருத்தங்கல்லைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56), கோவிந்தநல்லூரைச் சேர்ந்த அருண்குமார் (23), ஆதிப்பட்டியைச் சேர்ந்த வாழவந்தான் மகன் கதிஷ் (14) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், உடல் கருகிய நிலையிலும் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்து, போலீஸார், தீயணைப்பு வீரர்கள், ஜேசிபிவாகனங்களின் உதவியோடு இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இரவு சுமார் 7.45 மணி அளவில் பட்டாசு ஆலையின் இன்னொரு அறை திடீரென வெடித்துச் சிதறியது. இதில், விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன், 3 போலீஸார், 2 பெண்போலீஸார், ஜேசிபி இயந்திரத்துடன் வந்தவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உரிமையாளர் தலைமறைவு: சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோர் விசாரணை நடத்தினர். விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கும் சென்று பார்வையிட்டனர். தமிழக பாஜக தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியபோது, ‘‘விதிமீறலால் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வருகிறது. தேர்தல் நேரம் என்பதால், நிவாரணம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்’’ என்றனர்.
வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இங்கு மத்தாப்பு மற்றும் சோல்சா வெடிகள் தயாரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேன்சி ரகபட்டாசுகள் தயாரிக்க அனுமதி இல்லை. இந்த நிலையில், தடையை மீறி மணி மருந்துகளைப் பயன்படுத்தி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விதிமுறைகளை மீறி, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆலை இயங்கியது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மீட்புப் பணி நடந்தபோது ஆலையின் இன்னொரு அறை வெடித்துச் சிதறியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான ‘வனஜா’ என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அறையில் சோல்சா வெடி தயாரிக்கும் பணியின்போது உராய்வு காரணமாக திடீரென பட்டாசு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
இந்த விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள்யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. உடல்கள் முழுவதுமாக எரிந்ததால் ஆணா, பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த வச்சக் காரப்பட்டி போலீஸார் மற்றும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்தனர்.
ஆனால், பட்டாசுகளை இருப்பு வைத்திருந்த குடோனும் வெடித்துச் சிதறியதால், ஆலைக்குள் மீட்புப் பணிக்காக யாரும் செல்ல முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே, மீட்புப் பணிகள் தொடங்கின. தொடர்ந்து வெடி மருந்துகள் வெடித்துச் சிதறியதால் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு அதிர்வு உணரப்பட்டது.
இந்த விபத்தில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), சாரதா (40), வீரபத்திரன் (45), இவரது மனைவி சங்கிலித் தங்கம் (40), திருத்தங்கல்லைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56), கோவிந்தநல்லூரைச் சேர்ந்த அருண்குமார் (23), ஆதிப்பட்டியைச் சேர்ந்த வாழவந்தான் மகன் கதிஷ் (14) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், உடல் கருகிய நிலையிலும் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்து, போலீஸார், தீயணைப்பு வீரர்கள், ஜேசிபிவாகனங்களின் உதவியோடு இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இரவு சுமார் 7.45 மணி அளவில் பட்டாசு ஆலையின் இன்னொரு அறை திடீரென வெடித்துச் சிதறியது. இதில், விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன், 3 போலீஸார், 2 பெண்போலீஸார், ஜேசிபி இயந்திரத்துடன் வந்தவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உரிமையாளர் தலைமறைவு: சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோர் விசாரணை நடத்தினர். விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கும் சென்று பார்வையிட்டனர். தமிழக பாஜக தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியபோது, ‘‘விதிமீறலால் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வருகிறது. தேர்தல் நேரம் என்பதால், நிவாரணம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்’’ என்றனர்.
வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இங்கு மத்தாப்பு மற்றும் சோல்சா வெடிகள் தயாரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேன்சி ரகபட்டாசுகள் தயாரிக்க அனுமதி இல்லை. இந்த நிலையில், தடையை மீறி மணி மருந்துகளைப் பயன்படுத்தி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விதிமுறைகளை மீறி, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆலை இயங்கியது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...






