திங்கள், 22 ஜூன், 2026

‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ தொழிற்சாலையில் பரிதாபம் - அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் பலி - கவலைக்கிடமான நிலையில் பலருக்கு தீவிர சிகிச்சை

பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  22, 2026,  ஆனி  08, பாரபவ வருடம்  3.00 AM

திரு​வள்​ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார். 

திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் கடல் உணவு பதப்​படுத்​தும் தனி​யார் தொழிற்​சாலை​யில் அமோனியா வாயு கசிவு ஏற்​பட்டு 2 பெண் தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் வட மாநிலங்​களைச் சேர்ந்த தொழிலா​ளர்​கள் 63 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. பலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தால், உயிரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கக்​கூடும் என அஞ்​சப்​படு​கிறது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்டை வட்​டம் பெரிய​பாளை​யம் அடுத்த கன்​னிகைப்​பேர் பகு​தி​யில் இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. சென்னை வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வரு​கின்​றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் தங்கி வேலை செய்து வரு​கின்​றனர்.

நேற்று காலை வழக்​கம்​போல சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, குளிர்​சாதனப் பிரி​வில் பயன்​படுத்​தப்​படும் அமோனியா வாயு கசிந்​துள்​ளது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை முழு​வதும் வாயு பரவிய​தால் தொழிலா​ளர்​களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்​பட்​டுள்​ளது.

இதில் 60 பெண்​கள், 5 ஆண்​கள் எனமொத்​தம் 65 தொழிலா​ளர்​கள் மயக்கம் அடைந்​தனர். சிலருக்கு வாய், மூக்​கு, கண், காதுகளில் ரத்​தக் கசி​வும் ஏற்​பட்​ட​தால் பதற்​ற​மான சூழல் உரு​வானது. பெரிய​பாளை​யம் போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர், வரு​வாய்த் துறை​யினர் விரைந்து வந்து மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டனர். 

பாதிக்​கப்​பட்ட தொழிலா​ளர்​கள் உடனடி​யாக 108 ஆம்​புலன்ஸ் மற்​றும் பல்​வேறு வாக​னங்​கள் மூலம் அருகே உள்ள மருத்​து​வ​மனை களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

இதில், மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 45 பேரில் ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19) என்ற இளம்​பெண்​ணும், செங்​குன்​றம் அருகே உள்ள சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 20 பேரில் ஒடி​சாவைச் சேர்ந்த மாலோதி (20) என்ற இளம்​பெண்​ணும் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யிலேயே உயி​ரிழந்​தனர்.

பெரிதும் பாதிப்​புக்கு உள்​ளான 7 தொழிலா​ளர்​கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொது​மருத்​து​வ​மனைக்​கும் மேல் சிகிச்​சைக்​காக மாற்​றப்​பட்​டனர். அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்​கிட​மாகஇருப்​ப​தால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது.

அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, அருண்​ராஜ், ராஜ்மோகன், குமார் மற்​றும் எம்​எல்​ஏக்​கள் விஜயகு​மார், ரவி, அருண்​கு​மார் ஆகியோ​ரும் மருத்​து​வ​மனை​களுக்கு சென்று தொழிலா​ளர்​களை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தனர். திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் கவி​தா, காஞ்​சிபுரம் சரக டிஐஜி சஷாங் சாய், திரு​வள்​ளூர் மாவட்ட எஸ்​.பி. சாய் பிரனீத் ஆகியோர் தொழிற்​சாலை​யில் ஆய்வு நடத்​தினர்​.

இதற்​கிடையே, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர் குழு​வினர், கும்​மிடிப்​பூண்டி உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்​களு​டன் இணைந்து பாது​காப்பு உபகரணங்​களு​டன் சம்பவ இடத்​தில் மீட்பு பணி​யில் ஈடு​பட்​டனர். தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரிய அதி​காரி​களும் தொழிற்​சாலை​யில் ஆய்வு மேற்​கொண்​டு வரு​கின்​றனர்.

தொழிற்​சாலை​யைச் சுற்றி ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். அங்கு பணி​யாற்​றிய தொழிலா​ளர்​களில் 100-க்​கும் மேற்​பட்​டோர் மாவட்ட நிர்​வாகம் ஏற்​பாட்​டில் அரு​கில் உள்ள திருமண மண்​டபங்​களில் தங்க வைக்​கப்​பட்​டு, மருத்​து​வப் பரிசோதனை, உணவு உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் செய்து தரப்​பட்​டுள்​ளன.

3 பேர் கைது

அமோனியா வாயு கசிவு தொடர்​பாக பெரிய​பாளை​யம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, தொழிற்​சாலை உரிமை​யாளர்​கள் ஜோசப் ஜெகன், மோகன், மேலா​ளர் டேனியல்​ ஆகிய 3 பேரை கைது செய்​து வி​சா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்​. தொழிற்​சாலை செயல்​பட தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, ஆளுநர் அர்​லேகர் உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரி​வி்த்​துள்​ளனர்.

பிரதமர் நரேந்​திர மோடி வெளி​யிட்ட சமூக வலைதள பதிவில், 

‘திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஏற்​பட்ட விபத்​தில் உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டிருப்​பது குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்​தேன். தங்​களின் அன்​பிற்​குரிய​வர்​களை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். காயம் அடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய பிரார்த்​திக்​கிறேன்’ என தெரி​வித்​துள்​ளார்.

ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர்

விலைம​திப்​பற்ற உயிர்​கள் பறி​போனதும், பல தொழிலா​ளர்​கள் காயமடைந்​ததும் எனக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்​கிறது. மேலும், சிகிச்​சை​யில் உள்ள அனை​வரும் விரை​வில் குணமடைந்து முழு உடல்​நலம் பெற​வும் பிரார்த்​திக்​கிறேன்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்

உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தா​ருக்கு ஆழ்ந்த இரங்​கல். இது​போன்ற துயரச் சம்​பவங்​கள், இனி​யும் ஏற்​ப​டா​மல் இருக்க, தொழிற்​சாலைகளில் உரிய பாது​காப்பு வழி​காட்டு நெறி​முறை​கள் முறை​யாக பின்​பற்​றப்​படு​கிறதா என்று ஆய்​வு​களை நடத்த வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி

வாயுக் கசி​வால் பாதிக்​கப்​பட்ட பலர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் நிலை​யில், அவர்​களை காக்க உரிய மருத்​துவ சிகிச்​சைகள் அளிப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை

நச்சு வாயுவை சுவாசித்து பரி​தாப​மாக உயி​ரிழந்த தொழிலா​ளர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்

கடந்த சில காலங்​களாகவே தொழில் நடக்​கும் பகு​தி​களில் இது​போன்ற அசம்​பா​விதங்​கள் தொடர்​வதும் அதனால் உயிர்​பலிகள் உண்​டாவதும் அச்​சத்தை ஏற்​படுத்​துகின்​றன.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்து உள்​ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...