பதிவு: வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 06, 2026, தை 23, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார். நிகிதாவை கைது செய்ய வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது; தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். மடப்புரத்தில் அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படைக் காவலர்களால் கடந்த ஜூன் 28ம் தேதி விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் இது குறித்தான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அஜித் குமாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ், மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தில் 6 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு காது செய்யப்பட்டனர். மேலும் துணை கண்காணிப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் புகார் அளித்த நிகிதா, திருப்புவனம் காவல்துறையினர், இந்து அறநிலைத்துறை அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அஜித்குமாரின் தாய் சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மதுரை உயர் நீதிமன்றத்தில் சிறையில் உள்ள காவலர்கள் பிணை கேட்டும் போது, சிபிஐ வழங்கிய பதில் மனுவில், தங்க நகை திருடியதாக நீக்கிதா கொடுத்த புகாரில் உண்மைத்தன்மை இல்லை என்றும், தனிப்படை காவலர்கள் முன்விரோதம் இன்றி, தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தாக அஜித்குமார் தெரிவித்தனர். மேலும், இது அஜித்குமார் கொடுரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தற்கு தனது கண்டனத்தை நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மடப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார் என்று தெரிய வேண்டும் நிகிதாவை கைது செய்ய வேண்டும் யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது என்றவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறும் போது இவ்வுலகில் காயமடைந்தவர்களுக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் இவ்வழக்கில் தொடர்புடைய பிரவீன்குமார் அழகு பொண்ணு அஜித்குமார் ஆகியோர்களின் செல்போன்களை மீட்டெடுத்து அதில் உள்ள ஆதாரங்களை வெளிகொனர வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக