ஞாயிறு, 12 ஜூலை, 2026

“உங்கள் குற்ற உணர்ச்சிக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்காதீர்” - முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் சாடல்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூலை  12, 2026,  ஆனி  28, பாரபவ வருடம்  00.15 AM

சென்னை,

‘உங்களின் குற்ற உணர்ச்சிக்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த முதல்வர் விஜய், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? உங்கள் குற்ற உணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டு கரூரில் தங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களை, அப்பொழுது கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த நீங்கள், முதல்வரான பிறகு அவர்களுக்கு “அரசுப் பணி” வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசுப் பணிகளை மட்டுமே இலக்காக வைத்து, இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

1. தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

2. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.

3. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.

4. அரசுப் பள்ளிகளில் 30.000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன.

5. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

6. நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

7. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர்.

8. அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள். மருத்துவர்கள். அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால் நீங்களோ இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்து, அரசு வேலையை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை வாரி தூற்றியுள்ளீர்கள்.

உங்களின் குற்றவுணர்ச்சியை திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த நீங்கள், அரசு கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்?.

டெட், டிஆர்பி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசு பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கையில், துறை வாரியான ஆள்சேர்ப்பு மற்றும் பணி நியமனத்திற்கான கால அட்டவணையை உங்கள் அரசு ஏன் வெளியிடவில்லை?

எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் ஜோசப் விஜய். கரூர் மக்களுக்கு எப்படி ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களோ அதே போல, மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும். அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

சனி, 11 ஜூலை, 2026

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம்


 பதிவு: சனிக்கிழமை,  ஜூலை  11, 2026,  ஆனி  27, பாரபவ வருடம்  01.30 AM

சென்னை,

தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள நிலை​யில், திருச்சி கிழக்​கு, கரூர், விராலிமலை, பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்தலில் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகு​தியை ராஜி​னாமா செய்​தார். இந்த நிலையில் திருச்சி கிழக்​கில் அவர் வெற்றி பெற்​றதை எதிர்த்​து, அத்​தொகுதி திமுக வேட்​பாளர் இனிகோ இருதய​ராஜ் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இதே​போல, கரூரில் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) தேர்​தல் வெற்​றியை எதிர்த்து தவெக வேட்​பாளர் வி.பி.ம​தி​யழகன், விராலிமலை​யில் சி.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் கே.கே.செல்​லப்​பாண்​டியன், பெருந்​துறை​யில் எஸ்​.ஜெயக்​கு​மாரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் தோப்பு வெங்​க​டாச்​சலம் ஆகியோர் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளனர். அம்​பாச​முத்​திரத்​தில் இசக்கி சுப்​பையா (அதி​முக) வெற்றி பெற்​றது செல்​லாது என்று அறிவிக்​கக் கோரி தொகுதி வாக்​காளர் காந்​தி​ம​தி​நாதன் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இதற்​கிடையே, அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், எஸ்​.ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகிய 4 பேரும் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர். இந்​நிலை​யில், தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள மேற்​கண்ட 5 தொகு​தி​களுக்​கும் இடைத் தேர்​தல் நடத்த தடை விதிக்​கு​மாறும், தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடு​மாறும் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்த வழக்​கறிஞர் கே.வெங்​க​டாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.

‘தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும்​போது இடைத் தேர்​தல் நடத்​தப்​பட்​டால், வழக்​கின் நோக்​கம் அர்த்​தமற்​ற​தாகி​விடும். வழக்​கு​களை நிலு​வை​யில் வைத்​துக் கொண்டு இடைத் தேர்​தலை நடத்​தி​னால், தேவையற்ற சட்ட சிக்​கலை ஏற்​படுத்​தி​விடும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நடை​பெற்ற வாதம்

மனு​தா​ரர் தரப்​பு வழக்​கறிஞர் வி.ஆர்​.சண்​முக​நாதன்

நிலுவை வழக்கு விசா​ரணைக்​குப் பிறகு, தேர்​தலில் தோல்​வி அடைந்​தவரை வெற்றி பெற்​றவ​ராக உயர் நீதி​மன்​றம் ஒரு​வேளை அறிவிக்​கக்​கூடும். அதே நேரம், இடைத் தேர்​தலில் ஒரு எம்​எல்ஏ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டால், ஒரே தொகு​திக்கு 2 எம்​எல்​ஏக்கள் என்ற நிலை உரு​வாகும். எனவே, தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும்​வரை அந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் நடத்​தக்கூடாது என உச்ச நீதி​மன்​றம் பல​ வழக்​கு​களில் தீர்ப்​பளித்​துள்ளது.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏஆர்​எல். சுந்​தரேசன் மற்​றும் நிரஞ்​சன் ராஜகோ​பாலன்: பல தேர்​தல் வழக்​கு​கள் குறை​பாடு​களு​டன் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதுகுறித்த ஆவணங்​கள் தேர்​தல் ஆணை​யத்​துக்கு வரவில்​லை. அதனால், அவற்​றின்​மீது தேர்​தல் ஆணை​யம் எந்த நிலைப்​பாட்​டை​யும் எடுக்க முடி​யாது. மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டப்​படி, காலி​யாக உள்ள தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் நடத்துவது அவசி​ய​மான ஒன்​று.

தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண்

தேர்​தல் வழக்​கு​கள் தொடரப்​படு​வதற்கு முன்பே முதல்​வர் விஜய் உள்​ளிட்​டோர் தங்​கள் எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டனர். அவர்​கள் ராஜி​னாமா செய்​யும்​போது எந்த தேர்​தல் வழக்​கும் நிலு​வை​யில் இல்​லை. முதல்​வர் விஜய் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜி.​மாசிலாமணி: மனு​தா​ரர் இத்தொகு​தி​களின் வாக்​காளர் அல்ல.அவர் வழக்கு தொடர எந்த முகாந்​திர​மும் இல்​லை. மேலும், காலி தொகு​தி​களில் இடைத் தேர்​தல் நடத்​து​வ​தா, வேண்​டாமா என முடிவு எடுக்​கும் அதி​காரம் தேர்​தல் ஆணை​யத்​துக்கு மட்​டுமே உள்​ளது. இவ்​வாறு வாதம் நடந்​தது.

இதையடுத்​து, நீதிப​தி​கள் பிறப்​பித்​துள்ள உத்​தர​வு

தேர்​தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தலை நடத்​துவதன் மூலம் அரசின் பணம் வீணாக செல​விடப்​படு​வதுடன், ஒரே தொகு​திக்கு 2 எம்எல்ஏக்கள் என்ற நிலை உரு​வாகி அரசி​யல் சாசன பிரச்​சினை எழும். அதே​நேரம், தேர்​தல் வழக்​கு​கள் தொடருவதற்கு முன்​பாகவே அத்தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்கப்​பட்​டன என்ற வாதத்தை​யும் ஆராய வேண்​டி​யுள்ளது.

எனவே, இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம், மத்​திய அரசு, சட்​டப்​பேர​வைச் செயலர் மற்​றும் முதல்​வர் விஜய், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகியோர் 3 வாரங்​களில் பதில் அளிக்க வேண்​டும். அது​வரை இந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் தொடர்​பான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் வெளி​யிடக் கூடாது. இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி​கள், விசா​ரணையை ஜூலை 31-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்.

வியாழன், 2 ஜூலை, 2026

தவெக எம்எல்ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் - கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை - செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்குத் தொடர்பா?

பதிவு: வியாழக்கிழமை,  ஜூலை  02, 2026,  ஆனி  18, பாரபவ வருடம்  04.10 AM

சென்னை,

தமிழக சபா​நாயகருக்கு எதி​ராக செயல்​பட, ஆளும் தவெக எம்​எல்​ஏ.​விடம் ரூ.35 கோடி பேரம் பேசி​ய​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக 3 பேரைப் போலீ​ஸார் கைது செய்து தீவிர​மாக விசா​ரித்தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், 234 தொகு​தி​களில் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் (தவெக) 108 இடங்​களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​தது. இதையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கிய காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட்​டு​கள், விடு​தலைச் சிறுத்​தைகள், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆகிய கட்​சிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரி​வித்​தன. இதையடுத்​து, விஜய் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றுக் கொண்​டார்.

சட்​டப்​பேர​வை​யில் நம்​பிக்கை வாக்​கெடுப்பின் போது அதி​முக எம்​எல்​ஏக்​களின் ஒரு பிரி​வினர் தவெக​வுக்கு ஆதரவு அளித்தனர். அப்​போது, எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க கு​திரை பேரம் நடை​பெற்​ற​தாக குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டன. தற்​போது ஒவ்​வொரு கட்​சி​யினரும் வெவ்​வேறு கட்​சிக்​குத் தாவி வரு​கின்​றனர். அதோடு தமிழக அரசு 6 மாதங்​களில் கவிழும் என்று எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து விமர்​சித்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராகத் தீர்​மானம் கொண்டு வர உள்​ள​தாக​வும் ஆளும் கட்சி உறுப்​பின​ராக இருந்​தா​லும் நாங்​கள் சொல்​வது போல் கேட்டு சபா​நாயகருக்கு எதி​ராக வாக்​களிக்க வேண்​டும் என்​றும் கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ என்​.இளை​ய​ராஜா​விடம் சிலர் பேரம் பேசிய தகவல் தற்​போது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: 

கிருஷ்ணகிரி மாவட்​டம், ஊத்​தங்​கரை சட்​டப்​பேர​வைத் தொகு​தி​ தவெக எம்​எல்ஏ டாக்​டர் என்​.இளை​ய​ராஜாவை, சில நாட்​களுக்கு முன்பு சென்​னையைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு என்ற நபர் செல்​போனில் தொடர்பு கொண்​டுள்​ளார். அப்​போது, தான் கருத்​துக் கணிப்பு நிறு​வனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வரு​வ​தாக​வும், முக்​கிய அரசி​யல் கட்​சி​யைச் சேர்ந்த சிலரின் சார்​பில் பேசுவ​தாக​வும் கூறி நேரில் சந்​திக்க விருப்​பம் தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

ஆனால், வேறு பணி​யில் இருப்​ப​தாக கூறி எம்​எல்ஏ இளை​ய​ராஜா அந்த அழைப்பை துண்​டித்​துள்​ளார். அதன் பின்​னரும் மீண்​டும் தொடர்பு கொண்​ட​தாக கூறப்​படும் திரு​நாவுக்​கரசு, தமிழக சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரப்பட உள்​ள​தாக​வும், அந்த தீர்​மானத்​தின் மீதான வாக்​கெடுப்​பின் போது தாங்​கள் சொல்லும் வகை​யில் செயல்பட வேண்​டும் என்​றும் கூறிய​தாக தெரி​கிறது.

அதற்கு பிர​திபல​னாக ரூ.35 கோடி வரை வழங்க தயா​ராக இருப்​ப​தாக ஆசை வார்த்தை கூறிய​தாக​வும், அதற்கு இளை​ய​ராஜா மறுப்பு தெரி​வித்த போது, ‘‘இந்த விவ​காரம் குறித்து வெளி​யில் கூறி​னால் உங்​களுக்​கும், உங்​கள் குடும்​பத்​தினருக்​கும் பின்​விளைவு​கள் ஏற்​படும்’’ என்று மிரட்​டல் விடுத்​த​தாக​வும் கடந்த மாதம் 29-ம் தேதி எம்​எல்ஏ இளை​ய​ராஜா சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் புகார் அளித்​தார்.

அதில், ‘‘மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சட்​டப்​பேரவை உறுப்​பின​ரான என்னை சட்​ட​ விரோத​மாகச் செல்​வாக்கு செலுத்த முயற்​சித்​ததுடன், லஞ்​சம் வழங்க முன்​வந்​தும், உயிருக்கு அச்​சுறுத்​தல் விடுத்​தும் செயல்​பட்​ட​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்​படை​யில், திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்​தினர். செல்​போன் அழைப்பு விவரங்​கள், தொழில்​நுட்ப ஆதா​ரங்​கள் மற்​றும் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில், சென்னை அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு, திருச்​சி​யைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த தியாக​ராஜன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்​தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடை​பெற்ற விசா​ரணை​யில், திமுக முன்​னாள் அமைச்​சரும், கோவை தெற்கு தொகுதி எம்​எல்​ஏவு​மான செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக் குமார், இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட நரேஷை சென்​னை​யில் சந்​தித்​தது தெரிய வந்​துள்​ளது என்று போலீஸ் தரப்​பில் கூறப்​பட்​டுள்​ளது. 

மேலும், செந்​தில் பாலாஜி மற்​றும் அசோக் குமார் ஆகியோரின் அறி​வுரை​யின்​படியே, எம்​எல்ஏ இளை​ய​ராஜாவை திரு​நாவுக்​கரசு தொடர்பு கொண்டு ரூ.35 கோடி பேரம் பேசி​ய​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் மேலும் யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது, கருத்​துக் கணிப்பு நிறு​வனம் என்ற பெயரில் அரசி​யல் தொடர்​பு​கள் ஏற்​படுத்​தப்​பட்​ட​தா, பின்​னணி​யில் வேறு முக்​கிய நபர்​கள் உள்​ளனரா அல்​லது ஆட்​சி​யைக் கவிக்​கும் நோக்​கின் முதல் கட்ட முயற்​சியா என்பது உட்பட பல்​வேறு கோணங்​களில் போலீ​ஸார் தீவிர​மாக வி​சா​ரித்து வரு​கின்​றனர்.

கைது செய்​யப்​பட்ட 3 பேரையும் போலீஸார் காவலில்​ எடுத்​து வி​சா​ரிக்​கும்​ போது மேலும்​ பல திடுக்​கிடும்​ தகவல்​கள்​ வெளி​யாக வாய்​ப்​புள்​ள​தாக கூறப்​படுகிறது.

கரூரில் 2 பேரிடம் விசாரணை

இந்த வழக்கில் கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45), அதன் பங்குதாரர் அதிபன் ரமேஷ் (42) ஆகியோரது வீடுகளில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். 

இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் திமுக பிரமுகர்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 1 ஜூலை, 2026

அரசிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி - 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை - தலைமறைவான முன்னாள் எம்எல்ஏவைக் கைது செய்ய தீவிரம்

பதிவு: புதன்கிழமை,  ஜூலை  01, 2026,  ஆனி  17, பாரபவ வருடம்  06.00 AM

சென்னை,

தமிழகத்தில் தனியார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​களின் தரம் உயர்​வு, கட்​டிடம் கட்ட திட்ட அனு​மதி உள்​ளிட்​ட​வற்றை அரசிடம் இருந்து பெற்​றுத் தரு​வ​தாக ரூ.200 கோடி வரை மோசடி நடை​பெற்​ற​தாக பரபரப்பு குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. 

இதுதொடர்​பாக சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 50-க்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிடம் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

சென்னை தி.நகரில் செயல்​பட்டு வரும் தனி​யார் பள்​ளி​கள் சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில், பி.டி.அரசகு​மார் மீது சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் சமீபத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அந்த புகாரில், 

‘‘தமிழகம் முழு​வதும் உள்ள தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​களின் தரம் உயர்​வு, கூடு​தல் வகுப்​பறை​கள் அமைக்க அனு​ம​தி, கட்​டிட திட்ட ஒப்​புதல் உள்​ளிட்ட பல்​வேறு அரசு அனு​ம​தி​களை விரை​வாக பெற்​றுத் தரு​வ​தாக உறு​தி​யளித்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்​துள்​ளார்’’ என்று குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இதையடுத்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கினர். விசா​ரணை​யின் அடிப்​படை​யில், இந்த வழக்​கில் தொடர்​புடைய​தாகக் கூறப்​படும் திமுக செய்​தித் தொடர்​புக் குழுத் துணைத் தலை​வ​ராக இருந்த பி.டி.அரசகு​மார் கடந்த 27-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார்.

பின்​னர் அவர் நீதி​மன்றத்​தில் ஆஜர்​படுத்​தப்பட்​டு, நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்த மோசடி​யில் முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் உட்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்​ப​தாக விசா​ரணை​யில் தெரிய வந்துள்​ளது. தலைமறை​வாக உள்ள முன்​னாள் எம்​எல்​ஏ​வைத் தனிப்​படை போலீ​ஸார் தீவிர​மாகத் தேடி வரு​கின்​றனர்.

இதற்​கிடை​யில், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், 

‘‘தனி​யார் பள்​ளி​களுக்கு அரசு அங்​கீ​காரம் மற்​றும் பல்​வேறு அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்​கப்​பட்​டிருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது’’ என்று உறு​திப்​படுத்தி உள்​ளார்.

இந்த வழக்​கில் தொடர்​புடைய மற்ற குற்​ற​வாளி​களைக் கண்​டறிவது, பணப் பரிவர்த்​தனை​களை ஆய்வு செய்​வது மற்​றும் கூடு​தல் சாட்​சி​யங்​களைச் சேகரிப்​பது போன்ற பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​வ​தாக​வும் அவர் கூறி​யுள்​ளார். 

இந்த மோசடி​யால் பாதிக்​கப்​பட்ட தனி​யார் பள்ளி நிர்​வாகி​கள் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கம் அல்​லது சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு அலு​வல​கத்தை நேரில் அணுகி அல்​லது தொலைபேசி மூலம் புகார் அளிக்​கலாம். புகார்​தா​ரர்​களின் அடை​யாளம் மற்​றும் விவரங்​கள் ரகசி​ய​மாக வைக்​கப்​படும் என்​று சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உறுதி அளித்​துள்​ளார்.

இதையடுத்​து, பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த பள்ளி நிர்​வாகி​கள் தொடர்ந்து புகார் அளித்து வரு​கின்​றனர். போலீ​ஸார் நடத்​திய விரி​வான விசா​ரணை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த தனி​யார் பள்​ளி​களிடம் ரூ.25 லட்​சம் முதல் ரூ.3 கோடி வரை வசூலிக்​கப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. 

இதனால், இந்த மோசடி​யில் சிக்​கி​யிருக்​கும் மொத்த தொகை ரூ.200 கோடியைத் தாண்ட கூடும் என்ற சந்​தேகம் விசா​ரணை அதி​காரி​களுக்கு ஏற்​பட்​டுள்​ளது.

இது​வரை 50-க்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்​ளி​களின் நிர்​வாகி​களிடம் போலீ​ஸார் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்தி வாக்​குமூலங்​களைப் பதிவு செய்​துள்​ளனர். மேலும், மாவட்ட வாரி​யாகப் பாதிக்​கப்​பட்ட பள்​ளி​களின் முழு​மை​யான பட்​டியலை சமர்ப்​பிக்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட தனி​யார் பள்​ளி​கள் சங்​கங்​களுக்​கும் போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

இந்த மோசடி தொடர்​பாக மேலும் பலர் புகார் அளிக்க முன்​வரக் கூடும் என்​ப​தால், வழக்​கின் பரி​மாணம் இன்​னும் விரிவடை​யும். எனவே, பணப் பரிவர்த்​தனை​கள், வங்​கிக்கணக்கு விவரங்​கள் மற்​றும் தொடர்​புடைய ஆவணங்​களை ஆய்​வு செய்​து போலீ​ஸார்​ வி​சா​ரணை​யைத்​ தீவிரப்​படுத்​தி உள்​ளனர்​.

செவ்வாய், 30 ஜூன், 2026

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - காலி தொகுதிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது


பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஜூன்  30, 2026,  ஆனி  16, பாரபவ வருடம்  00.50 AM

சென்னை,

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.

கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ராஜி​னாமா செய்​துள்​ளார். இதன்​மூலம் காலி தொகு​தி​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக படு​தோல்வி அடைந்​தது. இதையடுத்து அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்கு எதி​ராக எஸ்​.பி.வேலுமணி தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் போர்க்​கொடி தூக்​கினர். 

சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி நடை​பெற்ற நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் 25 பேரும் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். இதனால், அவர்​களின் கட்சிப் பொறுப்​பு​கள் பறிக்​கப்​பட்​டன. அதைத் தொடர்ந்​து, பழனி​சாமி​யுடன் சமா​தான​மாகினர்.

இருப்​பினும் அவர்​கள் ஏற்​கெனவே வகித்த கட்​சிப் பதவி​கள் திரும்ப வழங்​கப்​பட​வில்​லை. இதற்​கிடையே மரகதம் குமர​வேல், ஜெயக்​கு​மார், சத்​ய​பா​மா, இசக்கி சுப்​பையா ஆகியோர் தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து, தவெக​வில் இணைந்​தனர். தொடர்ந்து விராலிமலை எம்​எல்ஏ சி.​விஜய​பாஸ்​கரும் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். அவரும் தவெக​வில் இணை​ய உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அதிமுகவில் இருந்து 6-வது எம்எல்ஏ: இந்​நிலை​யில், கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நேற்று ராஜி​னாமா செய்​தார். இதற்​கான கடிதத்தை சென்னை தலை​மைச் செயல​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகரிடம் வழங்​கி​னார். அவரின் ராஜி​னாமா கடிதத்தை ஏற்​ப​தாக பேர​வைத் ​தலை​வர் பிர​பாகரும் உடனே அறி​வித்​தார்.

இதுகுறித்து சட்​டப்​பேர​வைத் தலை​வர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், 

‘‘சட்​டப்​பேரவை விதி 21-ன்​ படி கரூர் தொகுதி எம்​எல்ஏ எம்​.ஆர்​.​ விஜய​பாஸ்​கர், தனது பதவி வில​கல் கடிதத்​தை, தனது கைப்பட எழுதி என்​னிடம் அளித்​துள்​ளார். 

அந்த கடிதம் பேரவை விதி 22-ன்​படிமுறை​யாக உள்​ள​தால் ஏற்​றுக் கொள்​கிறேன்’’ என்று கூறப்​பட்​டுள்​ளது. சில நாட்​களுக்கு முன்பு எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரை அதி​முக​வின் கொள்​கைப் பரப்பு இணைச் செய​லா​ள​ராக பழனி​சாமி நியமித்​தார்.

ஆனாலும், கரூர் மாவட்​டச் செய​லா​ளர் பதவி அவருக்கு வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக கடும் அதிருப்​தி​யில் இருந்த அவர், தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். விரை​வில் தவெக​வில் அவர் சேர​உள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. 

எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ராஜி​னாமா மூலம், சட்​டப்​பேர​வை​யில் அதி​முக எம்​எல்​ஏக்​களின் பலம் 41 ஆக குறைந்​துள்​ளது. காலி​யான தொகு​தி​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

 
பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஜூன்  30, 2026,  ஆனி  16, பாரபவ வருடம்  00.40 AM

சென்னை,

“வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் அரசு சேவைகள் மக்களிடம் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டுக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள் மாநாடு இன்று காலை முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது. அதில் அவர் பேசியது: “வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் முடிவு செய்துதான், நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சினை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.

மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும், அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.

மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.

மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த் துறை, காவல் துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும், சமரசமும் இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்ப்படுகளை செய்தே ஆக வேண்டும்.

மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வி என்பது ஒரு கொண்டாட்டம். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும்.

மேலும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துச் செயல்பட வேண்டும். ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.

மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

வெளிப்படைத் தன்மை என்பது அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும். அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித் துறை கண்காணிக்க வேண்டும்.

கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுப்பணித் துறை (PWD), அறநிலையத் துறை, தீயணைப்பு - மீட்பு மற்றும் வருவாய்த் துறைகள் அனைத்து முக்கிய நிகழ்வுகளின்போதும் காவல்துறையுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான காயப்படுத்தல் வழக்குகள் மற்றும் கொலைகளுக்கு, நில தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரமைக்கப்பட்டு இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் மதிப்பாய்வு நடத்தி அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கவரேஜ் இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் சிசிடிவி நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு, சிசிடிவி கவரேஜ் ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

அதேபோல் CoP/IGP/DIG/SP ஆகியோர் ஆய்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவையிலுள்ள விசாரணை வழக்குகளின் நிலை ஆகியவற்றையும் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் எப்ஐஆர் பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித் துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி (JJ) சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.

கள்ளச் சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் (Illicit distillation) இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை அமலாக்கம் மட்டுமே தீர்க்க முடியாது - போதைப்பொருள் தேவை குறைப்புக்கும் (Drug Demand to be eliminated) சம கவனம் செலுத்தப்பட வேண்டும். சுகாதாரத் துறை அனைத்து மாவட்டங்களிலும் போதைமுறிவு முகாம்களை நடத்த வேண்டும். பழக்கத்திற்கு உள்ளாக்கும் போதை மருந்துகளாக சில மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கலால் துறை அதிகாரிகள் அனைவரும் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். NCORD கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும்.

திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை மண்டலங்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களிடையே கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப்பொருள்களின் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகளில் இலக்கு கொண்ட விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் நடத்தப்பட வேண்டும்.

காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் திருட்டை கண்டறிந்து சுரங்க, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய, சமூகங்களை ஏமாற்றும் PONZI மற்றும் பலமட்ட சந்தைப்படுத்தல் திட்டங்கள் தொடர்கின்றன.

சட்டங்களைக் கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்த, தொடர்புடைய அனைத்து துறைகளும் திறம்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் உரிய கால இடைவெளியில் தணிக்கை செய்ய பொறுப்பேற்கப்பட வேண்டும். உரிமம் இல்லாமல் எந்த அலகும் இயங்கவே கூடாது.

புயலால் பாதிக்கப்படும் கடலோர மாவட்டங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, பேரிடர் தயார்நிலை பற்றி கட்டமைக்கப்பட்ட தணிக்கை நடத்தப்பட வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பருவமழை காலத்திற்கு முன் மீட்பு உள்கட்டமைப்பில் உள்ள தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பது வருத்தமாக உள்ளது. விபத்து அதிகமாக நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உரிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தலைக்கவசம் அணிவது, சீட்பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். புலம்பெயர்ந்தோர், தாக்குதல் அல்லது சுரண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கட்டாயப் பதிவு அமல்படுத்தப்பட வேண்டும்.

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களை குறிவைத்து டிஜிட்டல் கைது மோசடி, ஓடிபி மோசடி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி அதிகரித்துள்ளன. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து சைபர் குற்ற காவல் நிலையங்களும், குற்றங்களைத் தடுக்க மற்றும் கண்டறிய தீவிரமாக பணியாற்றிட வேண்டும்.

காவல் துறை ஆணையர் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொலை, போக்சோ மற்றும் பிற முக்கியமான வழக்குகள் தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுடனும் மாதந்தோறும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். முந்தைய மாதத்திற்கான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆவணப்படுத்தப்பட வேண்டும்; இது மூத்த காவல் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும். 

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். தெளிவும், வெளிப்படைத் தன்மையும் இருக்க வேண்டும்” என்று முதல்வர் விஜய் கூறினார்.
 

திங்கள், 29 ஜூன், 2026

50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் - தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் முகாம்

பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  29, 2026,  ஆனி  15, பாரபவ வருடம்  03.10 AM

சென்னை,

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​கள், அங்​கன்​வாடி மையங்​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், பள்​ளி​கள் என மொத்​தம் 43,051 மையங்​களில் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் சுமார் 50 லட்​சம் பேருக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்​டது. சென்னை பால​வாக்​கத்​தில் குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்​கி, முகாமை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​தார்.

இந்​தி​யா​வில் போலியோவை (இளம்​ பிள்ளை வாதம்) ஒழிப்​ப​தற்​காக 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்கு ஆண்​டு​தோறும் 2 தவணை​களில் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வந்​தது. இதையடுத்​து, போலியோ ஒழிக்​கப்​பட்ட நாடு​கள் பட்​டியலில் இந்​தி​யா​வும் சேர்ந்​துள்​ளது. இதன்​பிறகு, போலியோ பாதிப்பு மீண்​டும் ஏற்​ப​டா​மல் தடுக்​கும் வித​மாக, ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​படு​கிறது. அதன்​படி, இந்த ஆண்​டுக்​கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழு​வதும் நேற்று நடை​பெற்​றது.

தமிழகத்​தில் 5 வயதுக்கு உட்​பட்ட 52.91 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், அரசு மருத்​து​வ​மனை​கள், அங்​கன்​வாடி மையங்​கள், சத்​துணவு மையங்​கள், பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 43,051 மையங்​களில் முகாம் அமைக்​கப்​பட்​டிருந்​தது.

சென்னை பால​வாக்​கத்​தில் உள்ள அரசு ஆதி​தி​ரா​விடர் நல உயர்​நிலைப் பள்​ளி​யில் நடை​பெற்ற முகாமில் முதல்​வர் விஜய் கலந்​து​கொண்​டு, குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கி​யும், அவர்​களுக்கு பிடித்த ‘டெடி பியர்’ பொம்​மை​களை பரி​சாக கொடுத்​தும் போலியோ சொட்டு மருந்துமுகாமைத் தொடங்கி வைத்​தார்.

சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகா​தா​ரம், நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்​குநர் சோமசுந்​தரம், சோழிங்​கநல்​லூர் தொகுதி எம்​எல்ஏ சரவணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். வில்​லி​வாக்​கம் தொகு​திக்கு உட்​பட்ட ராஜமங்​கலம் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யம், அயனாவரம் மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் குழந்​தைகளுக்கு அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா போலியோ சொட்டு மருந்து வழங்​கி​னார்.

தமிழகம் முழு​வதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடை​பெற்​றது. பெற்​றோர் தங்​களது குழந்​தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்​டுச் சென்றனர். அழுது அடம்​பிடித்த குழந்​தைகளுக்கு விளை​யாட்டு காட்​டி​யும், சாக்​லேட், பொம்​மை​கள் வழங்​கி​யும் மருந்து வழங்​கப்​பட்​டது.

பயணத்​தில் இருக்​கும் குழந்​தைகளின் வசதிக்​காக பேருந்​து, ரயில், விமான நிலை​யங்​கள், சோதனைச் சாவடிகளி​லும் மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தது. தொலை​தூரம் மற்​றும் எளி​தில் வந்து செல்ல முடி​யாத பகு​தி​களுக்கு நடமாடும் குழு​வினர் சென்​று, அங்​குள்ள குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்​கினர். இந்த பணி​யில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக​னங்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டன.

பிற மாநிலங்​களில் இருந்து வந்து தமிழகத்​தில் வசிப்​பவர்​களின் குழந்​தைகளுக்​கும் மருந்து வழங்​கப்​பட்​டது. விடு​படும் குழந்​தைகளை அடை​யாளம் காண, சொட்டு மருந்து வழங்​கப்​பட்ட குழந்​தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்​கப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கும் பணி​யில் சுகா​தா​ரப் பணி​யாளர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், ஆசிரியர்​கள், தன்​னார்​வலர்​கள் என 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் ஈடு​படுத்​தப்​பட்​டனர். சென்​னை​யில் 5 வயதுக்கு உட்​பட்ட 5.56 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,646 மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இப்​பணி​யில் 6,564 பேர் ஈடு​பட்​டனர்.

சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 50 லட்​சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்​பட்​டுள்​ளது. விடு​பட்ட குழந்​தைகளுக்கு ஒரு வாரத்​துக்​குள் செவிலியர்​கள்​ வீடு வீடாக வந்​து சொட்​டு மருந்​து வழங்​கு​வார்​கள். இன்​றும், நாளை​யும் தற்​காலிக மையங்​களில் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என்​று அதிகாரிகள் தெரி​வித்​தனர்.

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...