செவ்வாய், 30 ஜூன், 2026
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - காலி தொகுதிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 30, 2026, ஆனி 16, பாரபவ வருடம் 00.50 AM
சென்னை,
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.
கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் காலி தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.
சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 பேரும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், அவர்களின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பழனிசாமியுடன் சமாதானமாகினர்.
இருப்பினும் அவர்கள் ஏற்கெனவே வகித்த கட்சிப் பதவிகள் திரும்ப வழங்கப்படவில்லை. இதற்கிடையே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து 6-வது எம்எல்ஏ: இந்நிலையில், கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரிடம் வழங்கினார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக பேரவைத் தலைவர் பிரபாகரும் உடனே அறிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘‘சட்டப்பேரவை விதி 21-ன் படி கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது பதவி விலகல் கடிதத்தை, தனது கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்.
அந்த கடிதம் பேரவை விதி 22-ன்படிமுறையாக உள்ளதால் ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக பழனிசாமி நியமித்தார்.
ஆனாலும், கரூர் மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்த அவர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் தவெகவில் அவர் சேரஉள்ளதாகவும் கூறப்படுகிறது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா மூலம், சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 41 ஆக குறைந்துள்ளது. காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 30, 2026, ஆனி 16, பாரபவ வருடம் 00.40 AM
சென்னை,
“வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் அரசு சேவைகள் மக்களிடம் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டுக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள் மாநாடு இன்று காலை முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது. அதில் அவர் பேசியது: “வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் முடிவு செய்துதான், நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சினை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.
மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும், அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.
மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.
மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த் துறை, காவல் துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.
முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும், சமரசமும் இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்ப்படுகளை செய்தே ஆக வேண்டும்.
மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வி என்பது ஒரு கொண்டாட்டம். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும்.
மேலும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துச் செயல்பட வேண்டும். ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.
மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
வெளிப்படைத் தன்மை என்பது அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும். அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித் துறை கண்காணிக்க வேண்டும்.
கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுப்பணித் துறை (PWD), அறநிலையத் துறை, தீயணைப்பு - மீட்பு மற்றும் வருவாய்த் துறைகள் அனைத்து முக்கிய நிகழ்வுகளின்போதும் காவல்துறையுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான காயப்படுத்தல் வழக்குகள் மற்றும் கொலைகளுக்கு, நில தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரமைக்கப்பட்டு இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் மதிப்பாய்வு நடத்தி அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கவரேஜ் இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் சிசிடிவி நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு, சிசிடிவி கவரேஜ் ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
அதேபோல் CoP/IGP/DIG/SP ஆகியோர் ஆய்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவையிலுள்ள விசாரணை வழக்குகளின் நிலை ஆகியவற்றையும் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் எப்ஐஆர் பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித் துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி (JJ) சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.
கள்ளச் சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் (Illicit distillation) இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை அமலாக்கம் மட்டுமே தீர்க்க முடியாது - போதைப்பொருள் தேவை குறைப்புக்கும் (Drug Demand to be eliminated) சம கவனம் செலுத்தப்பட வேண்டும். சுகாதாரத் துறை அனைத்து மாவட்டங்களிலும் போதைமுறிவு முகாம்களை நடத்த வேண்டும். பழக்கத்திற்கு உள்ளாக்கும் போதை மருந்துகளாக சில மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கலால் துறை அதிகாரிகள் அனைவரும் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். NCORD கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும்.
திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை மண்டலங்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களிடையே கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப்பொருள்களின் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகளில் இலக்கு கொண்ட விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் நடத்தப்பட வேண்டும்.
காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் திருட்டை கண்டறிந்து சுரங்க, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய, சமூகங்களை ஏமாற்றும் PONZI மற்றும் பலமட்ட சந்தைப்படுத்தல் திட்டங்கள் தொடர்கின்றன.
சட்டங்களைக் கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்த, தொடர்புடைய அனைத்து துறைகளும் திறம்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் உரிய கால இடைவெளியில் தணிக்கை செய்ய பொறுப்பேற்கப்பட வேண்டும். உரிமம் இல்லாமல் எந்த அலகும் இயங்கவே கூடாது.
புயலால் பாதிக்கப்படும் கடலோர மாவட்டங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, பேரிடர் தயார்நிலை பற்றி கட்டமைக்கப்பட்ட தணிக்கை நடத்தப்பட வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பருவமழை காலத்திற்கு முன் மீட்பு உள்கட்டமைப்பில் உள்ள தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பது வருத்தமாக உள்ளது. விபத்து அதிகமாக நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உரிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தலைக்கவசம் அணிவது, சீட்பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். புலம்பெயர்ந்தோர், தாக்குதல் அல்லது சுரண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கட்டாயப் பதிவு அமல்படுத்தப்பட வேண்டும்.
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களை குறிவைத்து டிஜிட்டல் கைது மோசடி, ஓடிபி மோசடி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி அதிகரித்துள்ளன. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து சைபர் குற்ற காவல் நிலையங்களும், குற்றங்களைத் தடுக்க மற்றும் கண்டறிய தீவிரமாக பணியாற்றிட வேண்டும்.
காவல் துறை ஆணையர் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொலை, போக்சோ மற்றும் பிற முக்கியமான வழக்குகள் தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுடனும் மாதந்தோறும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். முந்தைய மாதத்திற்கான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆவணப்படுத்தப்பட வேண்டும்; இது மூத்த காவல் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். தெளிவும், வெளிப்படைத் தன்மையும் இருக்க வேண்டும்” என்று முதல்வர் விஜய் கூறினார்.
திங்கள், 29 ஜூன், 2026
50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் - தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் முகாம்
பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 29, 2026, ஆனி 15, பாரபவ வருடம் 03.10 AM
சென்னை,
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுமார் 50 லட்சம் பேருக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சென்னை பாலவாக்கத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதன்பிறகு, போலியோ பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உட்பட மொத்தம் 43,051 மையங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியும், அவர்களுக்கு பிடித்த ‘டெடி பியர்’ பொம்மைகளை பரிசாக கொடுத்தும் போலியோ சொட்டு மருந்துமுகாமைத் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் சோமசுந்தரம், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். அழுது அடம்பிடித்த குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியும், சாக்லேட், பொம்மைகள் வழங்கியும் மருந்து வழங்கப்பட்டது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தொலைதூரம் மற்றும் எளிதில் வந்து செல்ல முடியாத பகுதிகளுக்கு நடமாடும் குழுவினர் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். இந்த பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
பிற மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும் மருந்து வழங்கப்பட்டது. விடுபடும் குழந்தைகளை அடையாளம் காண, சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் 5 வயதுக்கு உட்பட்ட 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,646 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பணியில் 6,564 பேர் ஈடுபட்டனர்.
சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்குள் செவிலியர்கள் வீடு வீடாக வந்து சொட்டு மருந்து வழங்குவார்கள். இன்றும், நாளையும் தற்காலிக மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுமார் 50 லட்சம் பேருக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சென்னை பாலவாக்கத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதன்பிறகு, போலியோ பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உட்பட மொத்தம் 43,051 மையங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியும், அவர்களுக்கு பிடித்த ‘டெடி பியர்’ பொம்மைகளை பரிசாக கொடுத்தும் போலியோ சொட்டு மருந்துமுகாமைத் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் சோமசுந்தரம், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். அழுது அடம்பிடித்த குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியும், சாக்லேட், பொம்மைகள் வழங்கியும் மருந்து வழங்கப்பட்டது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தொலைதூரம் மற்றும் எளிதில் வந்து செல்ல முடியாத பகுதிகளுக்கு நடமாடும் குழுவினர் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். இந்த பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
பிற மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும் மருந்து வழங்கப்பட்டது. விடுபடும் குழந்தைகளை அடையாளம் காண, சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் 5 வயதுக்கு உட்பட்ட 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,646 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பணியில் 6,564 பேர் ஈடுபட்டனர்.
சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்குள் செவிலியர்கள் வீடு வீடாக வந்து சொட்டு மருந்து வழங்குவார்கள். இன்றும், நாளையும் தற்காலிக மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.டி அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி - பின்னணி குறித்து விசாரணை தீவிரம்
பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 29, 2026, ஆனி 15, பாரபவ வருடம் 03.00 AM
சென்னை,
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி விவகாரத்தில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை, தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ‘கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் திட்ட அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னை, சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வந்த சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியைச் சேர்ந்த பி.டி அரசகுமார் (59) என்பவர் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயர்வு, திட்ட அனுமதி உள்பட பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு,உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றி உள்ளார்.
எனவே, பி.டி அரசகுமார் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, புகாருக்குள்ளான திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமாரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இவரது பின்னணியில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரும், மேலும் சிலரும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த மோசடியின் பின்னணியில் வேறு யார்? யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற பெயர் பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு, 28 ஜூன், 2026
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் - 2 மதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலக மறுப்பு: வைகோ அதிர்ச்சி
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 2026, ஆனி 14, பாரபவ வருடம் 05.05 AM
சென்னை,
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக, மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இந்நிலையில், மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய மறுத்துள்ளதால் வைகோ அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மதிமுகவின் 32-வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., பொருளாளர் செந்திலதிபன் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, பூமிநாதன், ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில், 2 எம்எல்ஏக்கள் செந்தில் செல்வன், தி.மு.ராஜேந்திரன் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை.
பொதுக்குழுவில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்து, மேகேதாட்டு அணைப் பிரச்சினையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கருத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வலியுறுத்தினர். அவர்களது விருப்பத்துக்கு இணங்க, கூட்டணியில் இருந்து விலகும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் ஊடுருவக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே, கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் உறுதியாக நீடித்தோம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முயன்றதாக பரவலாக செய்திகள் வெளிவந்தன. பரஸ்பரம் எதிர் துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் இப்படி ஒரு ரகசிய உடன்படிக்கையை மேற்கொண்டது உண்மையாக இருக்குமானால், அதைவிட பெரிய அரசியல் மோசடி வேறு இருக்க முடியாது. இந்த தகவலை அறிந்த உடனேயே திமுக உடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தோம்.
மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில், சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் ஏற்கெனவே திமுகவில் இணைந்துவிட்டார். கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் பொதுக்குழுவில் பங்கேற்காவிட்டாலும், மதிமுகவிலேயே தொடர்வதாக உறுதி அளித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் துணைப் பொதுச் செயலாளர், என் மீதும், என் மகன் துரை வைகோ மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். முதல்வர் விஜய்யிடம் நான் ரூ.50 கோடி வாங்கியதாகவும், சென்னை ஓஎம்ஆர், அண்ணா சாலையில் பிரம்மாண்ட கட்டிடங்களை வாங்கியுள்ளதாகவும் கூறப்படும் புகார்கள் முற்றிலும் பொய்யானவை.
இந்த பழிச்சொற்களுக்குப் பின்னால் இருந்து யாரோ ஒரு சிலர் அவரை இயக்குகின்றனர். எனவே, இதுதொடர்பான செய்தியை வெளியிட்ட நாளிதழ் மற்றும் புகார் கூறிய நபர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நாங்கள், முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்போம்.
உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. தவெக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் இருமொழிக் கொள்கையில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தவெக அரசின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கின்றன.
எங்கள் கட்சி எம்எல்ஏவை திமுக தன் பக்கம் இழுத்திருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இதை ‘குதிரை பேரம்’ என்று சொல்வதா, ‘ஒட்டக பேரம்’ என்று சொல்வதா எனத் தெரியவில்லை. மேலும், எங்களது 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால், அவர்களுக்கு ஆதரவாக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என விஜய் கூறியிருந்தார். ஆனால், எதிர்வரும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வைகோ மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வரும் உணர்வை மதித்தும், தலைவர் வைகோ மீதோ, எம்எல்ஏவான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை தலைமை இப்போது மேற்கொள்ள வேண்டாம். குறைந்தபட்சம் 6 மாதம் பொறுத்திருப்போம். கூட்டணி குறித்து தாங்களும், கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன். எனவே, பதவி விலகல் தொடர்பாக வைகோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, என்னால் செயல்படுத்த இயலாது. அதனால், பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக, மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இந்நிலையில், மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய மறுத்துள்ளதால் வைகோ அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மதிமுகவின் 32-வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., பொருளாளர் செந்திலதிபன் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, பூமிநாதன், ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில், 2 எம்எல்ஏக்கள் செந்தில் செல்வன், தி.மு.ராஜேந்திரன் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை.
பொதுக்குழுவில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்து, மேகேதாட்டு அணைப் பிரச்சினையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கருத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வலியுறுத்தினர். அவர்களது விருப்பத்துக்கு இணங்க, கூட்டணியில் இருந்து விலகும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் ஊடுருவக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே, கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் உறுதியாக நீடித்தோம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முயன்றதாக பரவலாக செய்திகள் வெளிவந்தன. பரஸ்பரம் எதிர் துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் இப்படி ஒரு ரகசிய உடன்படிக்கையை மேற்கொண்டது உண்மையாக இருக்குமானால், அதைவிட பெரிய அரசியல் மோசடி வேறு இருக்க முடியாது. இந்த தகவலை அறிந்த உடனேயே திமுக உடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தோம்.
மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில், சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் ஏற்கெனவே திமுகவில் இணைந்துவிட்டார். கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் பொதுக்குழுவில் பங்கேற்காவிட்டாலும், மதிமுகவிலேயே தொடர்வதாக உறுதி அளித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் துணைப் பொதுச் செயலாளர், என் மீதும், என் மகன் துரை வைகோ மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். முதல்வர் விஜய்யிடம் நான் ரூ.50 கோடி வாங்கியதாகவும், சென்னை ஓஎம்ஆர், அண்ணா சாலையில் பிரம்மாண்ட கட்டிடங்களை வாங்கியுள்ளதாகவும் கூறப்படும் புகார்கள் முற்றிலும் பொய்யானவை.
இந்த பழிச்சொற்களுக்குப் பின்னால் இருந்து யாரோ ஒரு சிலர் அவரை இயக்குகின்றனர். எனவே, இதுதொடர்பான செய்தியை வெளியிட்ட நாளிதழ் மற்றும் புகார் கூறிய நபர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நாங்கள், முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்போம்.
உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. தவெக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் இருமொழிக் கொள்கையில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தவெக அரசின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கின்றன.
எங்கள் கட்சி எம்எல்ஏவை திமுக தன் பக்கம் இழுத்திருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இதை ‘குதிரை பேரம்’ என்று சொல்வதா, ‘ஒட்டக பேரம்’ என்று சொல்வதா எனத் தெரியவில்லை. மேலும், எங்களது 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால், அவர்களுக்கு ஆதரவாக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என விஜய் கூறியிருந்தார். ஆனால், எதிர்வரும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வைகோ மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வரும் உணர்வை மதித்தும், தலைவர் வைகோ மீதோ, எம்எல்ஏவான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை தலைமை இப்போது மேற்கொள்ள வேண்டாம். குறைந்தபட்சம் 6 மாதம் பொறுத்திருப்போம். கூட்டணி குறித்து தாங்களும், கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன். எனவே, பதவி விலகல் தொடர்பாக வைகோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, என்னால் செயல்படுத்த இயலாது. அதனால், பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் - செல்வப்பெருந்தகை மாற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 2026, ஆனி 14, பாரபவ வருடம் 05.00 AM
சென்னை,
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவரது செயல்பாடுகளால் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர், எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அவரும் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது:
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 35 தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். ஆனால், ப.சிதம்பரத்தை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டு வந்து, தேசியத் தலைமையை 28 இடங்களுக்கு ஒப்புக்கொள்ள வைத்தார் செல்வப்பெருந்தகை. இதுதவிர, வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்ததாக தமிழக மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஹசீனா சையத் கிளப்பிய குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையிலேயே, செல்வப்பெருந்தகையை மாற்ற டெல்லி தலைமை முடிவு எடுத்தது.
மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, செல்லக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோரும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியின் முழு ஆதரவுடன் மாநிலத் தலைவர் பதவியை மாணிக்கம் தாகூர் கைப்பற்றியுள்ளார். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
சிவகங்கையில் பிறந்த மாணிக்கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் (என்எஸ்யூஐ) இணைந்தார். கடந்த 2009, 2019, 2024 மக்களவை பொதுத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார். 2014 பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தோல்வியடைந்தார். கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும், பிற மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இருந்தே திமுகவை இவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘திரைக்கதை மன்னன்’ - கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 2026, ஆனி 14, பாரபவ வருடம் 04.50 AM
சென்னை,
‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி
பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்று காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
இயக்குநர் கே.பாக்யராஜ் 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் நடந்த நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை திரும்பிய
அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பாக்யராஜ் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் விஜய், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா வுக்கு ஆறுதல் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, விசிக தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மநீம தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், பிரபு, விக்ரம்பிரபு, ஜெயராம், சார்லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்குநர்கள் மணிரத்னம், பார்த்திபன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, பாண்டியராஜன், சமுத்திரக்கனி, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன். சந்தானபாரதி, இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாக்யராஜின் திரைப்படக் காட்சிகள், பிரபல வசனங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது நினைவுகளை சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். பாக்யராஜ் மறைவையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசை அமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனித நேயம் மற்றும் சமூக விழுமியங்களைப் பேசும்; காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரைஉலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.
இறுதிச் சடங்கில் அரசு மரியாதை: திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார். யதார்த்தமான நடிகர், இயக்குநர் என்று அறியப்பட்டவர் கே.பாக்யராஜ். அது மட்டுமின்றி, தனது தனிச் சிறப்பான பாணியால் எதிர்பாராத, அதேநேரம் ரசிக்கக்கூடிய திருப்பங்களைக் கொண்ட திரைக்கதை அமைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர்.
அவர் இயக்கிய படங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றன. அதனால், இந்திய அளவில் ‘திரைக்கதை மன்னன்’ என்று கொண்டாடப்பட்டார். முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு, பாக்யராஜ் உடல் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
இயக்குநர் பாரதிராஜா கடந்த 10-ம் தேதி காலமானார். தனது குருவான பாரதிராஜா மறைந்த 17-வது நாளில் பாக்யராஜ் மறைந்தது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி
பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்று காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
இயக்குநர் கே.பாக்யராஜ் 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் நடந்த நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை திரும்பிய
அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பாக்யராஜ் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் விஜய், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா வுக்கு ஆறுதல் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, விசிக தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மநீம தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், பிரபு, விக்ரம்பிரபு, ஜெயராம், சார்லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்குநர்கள் மணிரத்னம், பார்த்திபன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, பாண்டியராஜன், சமுத்திரக்கனி, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன். சந்தானபாரதி, இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாக்யராஜின் திரைப்படக் காட்சிகள், பிரபல வசனங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது நினைவுகளை சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். பாக்யராஜ் மறைவையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசை அமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனித நேயம் மற்றும் சமூக விழுமியங்களைப் பேசும்; காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரைஉலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.
இறுதிச் சடங்கில் அரசு மரியாதை: திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார். யதார்த்தமான நடிகர், இயக்குநர் என்று அறியப்பட்டவர் கே.பாக்யராஜ். அது மட்டுமின்றி, தனது தனிச் சிறப்பான பாணியால் எதிர்பாராத, அதேநேரம் ரசிக்கக்கூடிய திருப்பங்களைக் கொண்ட திரைக்கதை அமைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர்.
அவர் இயக்கிய படங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றன. அதனால், இந்திய அளவில் ‘திரைக்கதை மன்னன்’ என்று கொண்டாடப்பட்டார். முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு, பாக்யராஜ் உடல் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
இயக்குநர் பாரதிராஜா கடந்த 10-ம் தேதி காலமானார். தனது குருவான பாரதிராஜா மறைந்த 17-வது நாளில் பாக்யராஜ் மறைந்தது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 16, 2026, ஆனி 32, பாரபவ வருடம் 07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...






