செவ்வாய், 30 ஜூன், 2026

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - காலி தொகுதிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது


பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஜூன்  30, 2026,  ஆனி  16, பாரபவ வருடம்  00.50 AM

சென்னை,

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.

கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ராஜி​னாமா செய்​துள்​ளார். இதன்​மூலம் காலி தொகு​தி​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக படு​தோல்வி அடைந்​தது. இதையடுத்து அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்கு எதி​ராக எஸ்​.பி.வேலுமணி தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் போர்க்​கொடி தூக்​கினர். 

சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி நடை​பெற்ற நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் 25 பேரும் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். இதனால், அவர்​களின் கட்சிப் பொறுப்​பு​கள் பறிக்​கப்​பட்​டன. அதைத் தொடர்ந்​து, பழனி​சாமி​யுடன் சமா​தான​மாகினர்.

இருப்​பினும் அவர்​கள் ஏற்​கெனவே வகித்த கட்​சிப் பதவி​கள் திரும்ப வழங்​கப்​பட​வில்​லை. இதற்​கிடையே மரகதம் குமர​வேல், ஜெயக்​கு​மார், சத்​ய​பா​மா, இசக்கி சுப்​பையா ஆகியோர் தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து, தவெக​வில் இணைந்​தனர். தொடர்ந்து விராலிமலை எம்​எல்ஏ சி.​விஜய​பாஸ்​கரும் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். அவரும் தவெக​வில் இணை​ய உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அதிமுகவில் இருந்து 6-வது எம்எல்ஏ: இந்​நிலை​யில், கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நேற்று ராஜி​னாமா செய்​தார். இதற்​கான கடிதத்தை சென்னை தலை​மைச் செயல​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகரிடம் வழங்​கி​னார். அவரின் ராஜி​னாமா கடிதத்தை ஏற்​ப​தாக பேர​வைத் ​தலை​வர் பிர​பாகரும் உடனே அறி​வித்​தார்.

இதுகுறித்து சட்​டப்​பேர​வைத் தலை​வர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், 

‘‘சட்​டப்​பேரவை விதி 21-ன்​ படி கரூர் தொகுதி எம்​எல்ஏ எம்​.ஆர்​.​ விஜய​பாஸ்​கர், தனது பதவி வில​கல் கடிதத்​தை, தனது கைப்பட எழுதி என்​னிடம் அளித்​துள்​ளார். 

அந்த கடிதம் பேரவை விதி 22-ன்​படிமுறை​யாக உள்​ள​தால் ஏற்​றுக் கொள்​கிறேன்’’ என்று கூறப்​பட்​டுள்​ளது. சில நாட்​களுக்கு முன்பு எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரை அதி​முக​வின் கொள்​கைப் பரப்பு இணைச் செய​லா​ள​ராக பழனி​சாமி நியமித்​தார்.

ஆனாலும், கரூர் மாவட்​டச் செய​லா​ளர் பதவி அவருக்கு வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக கடும் அதிருப்​தி​யில் இருந்த அவர், தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். விரை​வில் தவெக​வில் அவர் சேர​உள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. 

எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ராஜி​னாமா மூலம், சட்​டப்​பேர​வை​யில் அதி​முக எம்​எல்​ஏக்​களின் பலம் 41 ஆக குறைந்​துள்​ளது. காலி​யான தொகு​தி​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

 
பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஜூன்  30, 2026,  ஆனி  16, பாரபவ வருடம்  00.40 AM

சென்னை,

“வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் அரசு சேவைகள் மக்களிடம் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டுக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள் மாநாடு இன்று காலை முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது. அதில் அவர் பேசியது: “வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் முடிவு செய்துதான், நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சினை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.

மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும், அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.

மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.

மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த் துறை, காவல் துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும், சமரசமும் இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்ப்படுகளை செய்தே ஆக வேண்டும்.

மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வி என்பது ஒரு கொண்டாட்டம். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும்.

மேலும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துச் செயல்பட வேண்டும். ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.

மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

வெளிப்படைத் தன்மை என்பது அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும். அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித் துறை கண்காணிக்க வேண்டும்.

கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுப்பணித் துறை (PWD), அறநிலையத் துறை, தீயணைப்பு - மீட்பு மற்றும் வருவாய்த் துறைகள் அனைத்து முக்கிய நிகழ்வுகளின்போதும் காவல்துறையுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான காயப்படுத்தல் வழக்குகள் மற்றும் கொலைகளுக்கு, நில தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரமைக்கப்பட்டு இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் மதிப்பாய்வு நடத்தி அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கவரேஜ் இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் சிசிடிவி நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு, சிசிடிவி கவரேஜ் ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

அதேபோல் CoP/IGP/DIG/SP ஆகியோர் ஆய்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவையிலுள்ள விசாரணை வழக்குகளின் நிலை ஆகியவற்றையும் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் எப்ஐஆர் பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித் துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி (JJ) சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.

கள்ளச் சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் (Illicit distillation) இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை அமலாக்கம் மட்டுமே தீர்க்க முடியாது - போதைப்பொருள் தேவை குறைப்புக்கும் (Drug Demand to be eliminated) சம கவனம் செலுத்தப்பட வேண்டும். சுகாதாரத் துறை அனைத்து மாவட்டங்களிலும் போதைமுறிவு முகாம்களை நடத்த வேண்டும். பழக்கத்திற்கு உள்ளாக்கும் போதை மருந்துகளாக சில மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கலால் துறை அதிகாரிகள் அனைவரும் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். NCORD கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும்.

திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை மண்டலங்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களிடையே கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப்பொருள்களின் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகளில் இலக்கு கொண்ட விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் நடத்தப்பட வேண்டும்.

காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் திருட்டை கண்டறிந்து சுரங்க, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய, சமூகங்களை ஏமாற்றும் PONZI மற்றும் பலமட்ட சந்தைப்படுத்தல் திட்டங்கள் தொடர்கின்றன.

சட்டங்களைக் கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்த, தொடர்புடைய அனைத்து துறைகளும் திறம்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் உரிய கால இடைவெளியில் தணிக்கை செய்ய பொறுப்பேற்கப்பட வேண்டும். உரிமம் இல்லாமல் எந்த அலகும் இயங்கவே கூடாது.

புயலால் பாதிக்கப்படும் கடலோர மாவட்டங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, பேரிடர் தயார்நிலை பற்றி கட்டமைக்கப்பட்ட தணிக்கை நடத்தப்பட வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பருவமழை காலத்திற்கு முன் மீட்பு உள்கட்டமைப்பில் உள்ள தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பது வருத்தமாக உள்ளது. விபத்து அதிகமாக நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உரிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தலைக்கவசம் அணிவது, சீட்பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். புலம்பெயர்ந்தோர், தாக்குதல் அல்லது சுரண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கட்டாயப் பதிவு அமல்படுத்தப்பட வேண்டும்.

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களை குறிவைத்து டிஜிட்டல் கைது மோசடி, ஓடிபி மோசடி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி அதிகரித்துள்ளன. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து சைபர் குற்ற காவல் நிலையங்களும், குற்றங்களைத் தடுக்க மற்றும் கண்டறிய தீவிரமாக பணியாற்றிட வேண்டும்.

காவல் துறை ஆணையர் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொலை, போக்சோ மற்றும் பிற முக்கியமான வழக்குகள் தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுடனும் மாதந்தோறும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். முந்தைய மாதத்திற்கான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆவணப்படுத்தப்பட வேண்டும்; இது மூத்த காவல் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும். 

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். தெளிவும், வெளிப்படைத் தன்மையும் இருக்க வேண்டும்” என்று முதல்வர் விஜய் கூறினார்.
 

திங்கள், 29 ஜூன், 2026

50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் - தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் முகாம்

பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  29, 2026,  ஆனி  15, பாரபவ வருடம்  03.10 AM

சென்னை,

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​கள், அங்​கன்​வாடி மையங்​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், பள்​ளி​கள் என மொத்​தம் 43,051 மையங்​களில் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் சுமார் 50 லட்​சம் பேருக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்​டது. சென்னை பால​வாக்​கத்​தில் குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்​கி, முகாமை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​தார்.

இந்​தி​யா​வில் போலியோவை (இளம்​ பிள்ளை வாதம்) ஒழிப்​ப​தற்​காக 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்கு ஆண்​டு​தோறும் 2 தவணை​களில் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வந்​தது. இதையடுத்​து, போலியோ ஒழிக்​கப்​பட்ட நாடு​கள் பட்​டியலில் இந்​தி​யா​வும் சேர்ந்​துள்​ளது. இதன்​பிறகு, போலியோ பாதிப்பு மீண்​டும் ஏற்​ப​டா​மல் தடுக்​கும் வித​மாக, ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​படு​கிறது. அதன்​படி, இந்த ஆண்​டுக்​கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழு​வதும் நேற்று நடை​பெற்​றது.

தமிழகத்​தில் 5 வயதுக்கு உட்​பட்ட 52.91 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், அரசு மருத்​து​வ​மனை​கள், அங்​கன்​வாடி மையங்​கள், சத்​துணவு மையங்​கள், பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 43,051 மையங்​களில் முகாம் அமைக்​கப்​பட்​டிருந்​தது.

சென்னை பால​வாக்​கத்​தில் உள்ள அரசு ஆதி​தி​ரா​விடர் நல உயர்​நிலைப் பள்​ளி​யில் நடை​பெற்ற முகாமில் முதல்​வர் விஜய் கலந்​து​கொண்​டு, குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கி​யும், அவர்​களுக்கு பிடித்த ‘டெடி பியர்’ பொம்​மை​களை பரி​சாக கொடுத்​தும் போலியோ சொட்டு மருந்துமுகாமைத் தொடங்கி வைத்​தார்.

சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகா​தா​ரம், நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்​குநர் சோமசுந்​தரம், சோழிங்​கநல்​லூர் தொகுதி எம்​எல்ஏ சரவணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். வில்​லி​வாக்​கம் தொகு​திக்கு உட்​பட்ட ராஜமங்​கலம் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யம், அயனாவரம் மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் குழந்​தைகளுக்கு அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா போலியோ சொட்டு மருந்து வழங்​கி​னார்.

தமிழகம் முழு​வதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடை​பெற்​றது. பெற்​றோர் தங்​களது குழந்​தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்​டுச் சென்றனர். அழுது அடம்​பிடித்த குழந்​தைகளுக்கு விளை​யாட்டு காட்​டி​யும், சாக்​லேட், பொம்​மை​கள் வழங்​கி​யும் மருந்து வழங்​கப்​பட்​டது.

பயணத்​தில் இருக்​கும் குழந்​தைகளின் வசதிக்​காக பேருந்​து, ரயில், விமான நிலை​யங்​கள், சோதனைச் சாவடிகளி​லும் மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தது. தொலை​தூரம் மற்​றும் எளி​தில் வந்து செல்ல முடி​யாத பகு​தி​களுக்கு நடமாடும் குழு​வினர் சென்​று, அங்​குள்ள குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்​கினர். இந்த பணி​யில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக​னங்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டன.

பிற மாநிலங்​களில் இருந்து வந்து தமிழகத்​தில் வசிப்​பவர்​களின் குழந்​தைகளுக்​கும் மருந்து வழங்​கப்​பட்​டது. விடு​படும் குழந்​தைகளை அடை​யாளம் காண, சொட்டு மருந்து வழங்​கப்​பட்ட குழந்​தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்​கப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கும் பணி​யில் சுகா​தா​ரப் பணி​யாளர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், ஆசிரியர்​கள், தன்​னார்​வலர்​கள் என 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் ஈடு​படுத்​தப்​பட்​டனர். சென்​னை​யில் 5 வயதுக்கு உட்​பட்ட 5.56 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,646 மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இப்​பணி​யில் 6,564 பேர் ஈடு​பட்​டனர்.

சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 50 லட்​சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்​பட்​டுள்​ளது. விடு​பட்ட குழந்​தைகளுக்கு ஒரு வாரத்​துக்​குள் செவிலியர்​கள்​ வீடு வீடாக வந்​து சொட்​டு மருந்​து வழங்​கு​வார்​கள். இன்​றும், நாளை​யும் தற்​காலிக மையங்​களில் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என்​று அதிகாரிகள் தெரி​வித்​தனர்.

பி.டி அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி - பின்னணி குறித்து விசாரணை தீவிரம்


 பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  29, 2026,  ஆனி  15, பாரபவ வருடம்  03.00 AM

சென்னை,

தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் பெற்​றுத் தரு​வ​தாக ரூ.100 கோடி மோசடி விவ​காரத்​தில் திமுக நிர்வாகி கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், பின்​னணி​யில் உள்​ளவர்​கள் குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்​னை, தி.நகரில் செயல்​பட்டு வரும் தனி​யார் பள்ளி சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் அண்​மை​யில் புகார் ஒன்று அளிக்​கப்​பட்​டது. அதில், ‘கடந்த 2 ஆண்​டு​களாக தமிழகத்​தில் உள்ள தனி​யார் பள்ளி நிர்​வாகி​கள் தங்​கள் பள்​ளி​களுக்​கான அங்​கீ​காரம், தரம் உயர்த்​துதல் மற்​றும் திட்ட அனு​மதி ஆகிய​வற்​றைப் பெறு​வ​தில் சிரமங்​களை எதிர் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, சென்​னை, சாலிகி​ராமத்​தில் ‘தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்​கம்’ என்ற பெயரில் பதிவு செய்​யப்​ப​டாத சங்​கத்தை நடத்தி வந்த சாலிகி​ராமம், மெஜஸ்​டிக் காலனியைச் சேர்ந்த பி.டி அரசகு​மார் (59) என்​பவர் தனக்​குள்ள அரசி​யல் மற்​றும் அதி​கார தொடர்​பு​களைப் பயன்​படுத்தி தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்ளி தரம் உயர்​வு, திட்ட அனு​மதி உள்பட பிற சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி தமிழகம் முழு​வதும் உள்ள பல தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிட​மிருந்து பணம் பெற்​றுக் கொண்​டு,உறு​தி​யளித்​த​படி அனு​ம​தி​கள் பெற்​றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்​கும் அதி​க​மான தொகையை வசூலித்து ஏமாற்றி உள்​ளார்.

எனவே, பி.டி அரசகு​மார் மற்​றும் அதன் நிர்​வாகி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என புகாரில் தெரிவிக்​கப்​பட்டு இருந்​தது. இதுகுறித்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, புகாருக்​குள்​ளான திமுக நிர்​வாகி​யான பி.டி.அரசகு​மாரை நேற்​று​முன்​தினம் கைது செய்​தனர். இவரது பின்​னணி​யில் முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வரும், மேலும் சிலரும் இருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதையடுத்​து, இந்த மோசடி​யின் பின்​னணி​யில் வேறு யார்? யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது என்ற பெயர் பட்​டியலை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர். அதன் அடிப்​படை​யில் அடுத்​தக்​கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என போலீ​ஸார்​ தெரி​வித்​துள்​ளனர்​.

ஞாயிறு, 28 ஜூன், 2026

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் - 2 மதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலக மறுப்பு: வைகோ அதிர்ச்சி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  05.05 AM

சென்னை,

தி​முக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக, மதி​முக பொதுக்​குழுக் கூட்​டத்​தின் முடி​வில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ அறி​வித்​தார். இந்​நிலை​யில், மதி​முக​வின் 2 எம்​எல்​ஏக்​களும் ராஜி​னாமா செய்ய மறுத்​துள்​ள​தால் வைகோ அதிர்ச்சி அடைந்​துள்​ளார்.

மதி​முக​வின் 32-வது பொதுக்​குழு கூட்​டம் சென்னை அண்ணா நகரில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் அவைத் தலை​வர் ஆடிட்​டர் ஆ.அர்​ஜுன​ராஜ் தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில், பொதுச் செய​லா​ளர் வைகோ, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி., பொருளாளர் செந்​தில​திபன் முன்​னிலை வகித்​தனர். துணைப் பொதுச் செய​லா​ளர்​கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்​டர் ரொஹை​யா, பூமி​நாதன், ஜீவன், டாக்​டர் சி.கிருஷ்ணன் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்ட பொதுக்​குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​ட நிலை​யில், 2 எம்​எல்​ஏக்​கள் செந்​தில் செல்​வன், தி.​மு.​ராஜேந்​திரன் மட்​டும் கூட்​டத்​துக்கு வரவில்​லை.

பொதுக்​குழு​வில் திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் இருந்து மதி​முக வில​கு​வ​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறிவித்து, அதற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. தமிழகத்​தில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசுக்கு வாழ்த்​து, மேகே​தாட்டு அணைப் பிரச்​சினை​யில் புதிய நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என்ற கோரிக்​கையை அரசு திரும்​பப் பெற வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 23 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

​பின்னர், செய்​தி​யாளர்​களிடம் வைகோ கூறிய​தாவது: திமுக கூட்​ட​ணி​யில் இருந்து மதிமுக உடனடி​யாக வெளி​யேற வேண்​டும் என்ற கருத்தை பொதுக்​குழு உறுப்​பினர்​கள் அனை​வரும் ஒரு​மன​தாக வலி​யுறுத்​தினர். அவர்​களது விருப்​பத்​துக்கு இணங்க, கூட்​ட​ணி​யில் இருந்து வில​கும் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

தமிழகத்​தில் பாஜக​வின் ஆதிக்​கம் ஊடுரு​வக் கூடாது என்ற ஒரே காரணத்​துக்​காகவே, கடந்த 9 ஆண்​டு​களாக திமுக கூட்​ட​ணி​யில் உறு​தி​யாக நீடித்​தோம்.

தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு, அதி​முக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முயன்​ற​தாக பரவலாக செய்​தி​கள் வெளிவந்​தன. பரஸ்​பரம் எதிர் துரு​வங்​களாக இருந்த இரு கட்​சிகளும் இப்​படி ஒரு ரகசிய உடன்​படிக்​கையை மேற்​கொண்​டது உண்​மை​யாக இருக்​கு​மா​னால், அதை​விட பெரிய அரசி​யல் மோசடி வேறு இருக்க முடி​யாது. இந்த தகவலை அறிந்த உடனேயே திமுக உடனான உறவை முறித்​துக் கொள்ள முடிவு செய்​தோம்.

மதி​முக சார்​பில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர்​களில், சீர்​காழி எம்​எல்ஏ செந்தில் செல்​வன் ஏற்​கெனவே திமுக​வில் இணைந்​து​விட்​டார். கடையநல்​லூர் எம்​எல்ஏ ராஜேந்​திரன் பொதுக்​குழு​வில் பங்கேற்காவிட்டாலும், மதி​முக​விலேயே தொடர்​வ​தாக உறுதி அளித்​துள்​ளார்.

மதி​முக​வில் இருந்து வெளி​யேறிய முன்​னாள் துணைப் பொதுச் செய​லா​ளர், என் மீதும், என் மகன் துரை வைகோ மீதும் அபாண்​ட​மான குற்​றச்​சாட்​டு​களை சுமத்தி வரு​கிறார். முதல்​வர் விஜய்​யிடம் நான் ரூ.50 கோடி வாங்​கிய​தாக​வும், சென்னை ஓஎம்​ஆர், அண்ணா சாலை​யில் பிரம்​மாண்ட கட்​டிடங்​களை வாங்​கி​யுள்​ள​தாக​வும் கூறப்​படும் புகார்​கள் முற்​றி​லும் பொய்​யானவை.

இந்த பழிச்​சொற்​களுக்​குப் பின்​னால் இருந்து யாரோ ஒரு சிலர் அவரை இயக்​கு​கின்​றனர். எனவே, இதுதொடர்​பான செய்​தியை வெளி​யிட்ட நாளிதழ் மற்​றும் புகார் கூறிய நபர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்​ளேன். திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறி​யுள்ள நாங்​கள், முதல்​வர் விஜய் தலை​மையி​லான ஆட்​சிக்கு ஆதரவு அளிக்​கிறோம். வரவிருக்​கும் இடைத்​தேர்​தலில் தவெகவை ஆதரிப்​போம்.

உள்​ளாட்​சித் தேர்​தலிலும் தவெக​வுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்​ளது. தவெக ஆட்​சி​யில் ஊழல் ஒழிக்​கப்​பட்​டுள்​ளது. சமூக நீதி மற்​றும் இரு​மொழிக் கொள்​கை​யில் அவர்​கள் உறு​தி​யாக உள்​ளனர். அண்​ணா​வின் கொள்​கைகளைப் பின்​பற்றி வரு​வ​தால், தவெக அரசின் செயல்​பாடு​கள் எங்​களுக்கு திருப்தி அளிக்​கின்​றன.

எங்​கள் கட்சி எம்​எல்​ஏவை திமுக தன் பக்​கம் இழுத்​திருப்​பது ஆரோக்​கிய​மான அரசி​யல் அல்ல. இதை ‘குதிரை பேரம்’ என்று சொல்​வ​தா, ‘ஒட்டக பேரம்’ என்று சொல்​வதா எனத் தெரிய​வில்​லை. மேலும், எங்​களது 2 எம்​எல்​ஏக்​களும் ராஜி​னாமா செய்​தால், அவர்​களுக்கு ஆதர​வாக இடைத்​தேர்​தலில் பிரச்​சா​ரம் செய்​வேன் என விஜய் கூறி​யிருந்​தார். ஆனால், எதிர்​வரும் இடைத்​தேர்​தலில் மதி​முக போட்​டி​யிடாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதற்​கிடையே, திமுக கூட்​ட​ணியில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற மதி​முக​வின் 2 எம்​எல்​ஏக்​களும் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்ய மறுப்பு தெரி​வித்​துள்​ளனர். இதனால், வைகோ மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

கடையநல்​லூர் எம்​எல்ஏ ராஜேந்​திரன் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: தொகுதி மக்​கள் நாள்​தோறும் என்​னிடம் வெளிப்​படுத்தி வரும் உணர்வை மதித்​தும், தலை​வர் வைகோ மீதோ, எம்​எல்​ஏ​வான என் மீதோ களங்​கம் படர்​வதைத் தவிர்க்​கும் பொருட்​டும் பதவி வில​கல் என்ற முடிவை தலைமை இப்​போது மேற்​கொள்ள வேண்​டாம். குறைந்​த​பட்​சம் 6 மாதம் பொறுத்​திருப்​போம். கூட்​டணி குறித்து தாங்​களும், கட்​சி​யும் எடுக்​கும் முடிவை மதிக்​கிறேன். எனவே, பதவி வில​கல் தொடர்​பாக வைகோ​விடம் இருந்து கிடைக்​கப்​பெற்ற உத்​தர​வை, என்​னால் செயல்​படுத்த இயலாது. அதனால், பொதுக்​குழு​வில் கலந்து கொள்​ள​வில்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் - செல்வப்பெருந்தகை மாற்றம்


 பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  05.00 AM

சென்னை,

தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராக விருதுநகர் எம்​.பி. மாணிக்​கம் தாகூரை நியமித்து காங்​கிரஸ் தேசிய பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

தமிழக காங்​கிரஸ் கமிட்டி தலை​வ​ராக செல்​வப்​பெருந்​தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டார். நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது அவரது செயல்​பாடு​களால் மூத்த தலை​வர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்​த​தாக கூறப்​படு​கிறது.

இதன் காரண​மாக அவர், எந்த நேரத்​தி​லும் மாற்​றப்​படலாம் என்ற பேச்சு எழுந்​தது. பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​ட​தாக அவரும் தொடர்ந்து கூறி வந்த நிலை​யில், தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராக விருதுநகர் எம்​.பி. மாணிக்​கம் தாகூரை நியமித்து அகில இந்​திய காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

இதுகுறித்து சத்​தி​யமூர்த்தி பவன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: 

நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 35 தொகு​தியி​லா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார். ஆனால், ப.சிதம்​பரத்தை கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்டு வந்து, தேசி​யத் தலை​மையை 28 இடங்​களுக்கு ஒப்​புக்​கொள்ள வைத்​தார் செல்​வப்​பெருந்​தகை. இதுத​விர, வேட்​பாளர்​கள் தேர்​வில் குளறு​படி நடந்​த​தாக தமிழக மகளிர் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ஹசீனா சையத் கிளப்​பிய குற்​றச்​சாட்டு சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதன் அடிப்​படை​யிலேயே, செல்​வப்​பெருந்​தகையை மாற்ற டெல்லி தலைமை முடிவு எடுத்​தது.

மாநிலத் தலை​வர் பதவியைக் கைப்​பற்ற கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, செல்​லக்​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோ​ரும் தீவிர​மாக முயற்சி மேற்​கொண்டு வந்​தனர். இந்த நிலை​யில், அகில இந்​திய காங்​கிரஸ் நிர்​வாகி பிர​வீன் சக்​ர​வர்த்​தி​யின் முழு ஆதர​வுடன் மாநிலத் தலை​வர் பதவியை மாணிக்​கம் தாகூர் கைப்​பற்​றி​யுள்​ளார். இவ்​வாறு காங்​கிரஸ் வட்​டாரங்​கள் கூறுகின்​றன.

சிவகங்​கை​யில் பிறந்த மாணிக்​கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்​கிரஸ் கட்​சி​யின் மாணவர் அமைப்​பில் (என்​எஸ்​யூஐ) இணைந்​தார். கடந்த 2009, 2019, 2024 மக்​களவை பொதுத் தேர்​தல்​களில் விருதுநகர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்று எம்​.பி.​யா​னார். 2014 பொதுத் தேர்​தலில் இத்​தொகு​தி​யில் தோல்​வியடைந்​தார். கட்​சி​யின் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களி​லும், பிற மாநிலங்​களின் தேர்​தல் பொறுப்​பாள​ராக​வும் பணி​யாற்​றி​யுள்​ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரக் களத்​தில் இருந்தே திமுகவை இவர் கடுமை​யாக விமர்​சித்து வரு​கிறார். 

முன்​னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை விரை​வில் காங்​கிரஸில் இருந்து விலகி திமுக​வில் இணைய உள்​ள​தாக​ தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

‘திரைக்கதை மன்னன்’ - கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  04.50 AM

சென்னை,

‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி

பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்று காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பிரபல இயக்​குநரும் நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ், மாரடைப்​பால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் ஸ்​டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள், ரஜினி​காந்த், கமல்​ஹாசன் உள்​ளிட்ட திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்​தினர். அரசு மரியாதையுடன் இறு​திச் சடங்​கு​கள் இன்று நடை​பெறுகின்​றன.

இயக்​குநர் கே.​பாக்​ய​ராஜ் 2 நாட்​களுக்கு முன்பு கோவா​வில் நடந்த நடிகை குஷ்பு மகள் திரு​மணத்​தில் கலந்​து​கொண்​டார். பின்​னர் சென்னை திரும்​பிய

அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்​கொண்ட பிறகு வீட்​டுக்கு வந்​தார். அப்​போது அவருக்கு திடீரென நெஞ்​சுவலி ஏற்​பட்​டுள்​ளது. உடனடி​யாக சென்னை கிரீம்ஸ் சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்​றி, அவர் உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, பாக்​யராஜ் உடல் மருத்​து​வ​மனை​யில் இருந்து நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அவரது வீட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது. அங்கு அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தி​னார். பின்​னர் பாக்​ய​ராஜின் மனைவி பூர்​ணி​மா, மகன் சாந்​தனு, மகள் சரண்யா வுக்கு ஆறு​தல் கூறி​னார்.

திமுக தலை​வர் ஸ்​டா​லின், எம்​.பி.க்​கள் டி.ஆர்.​பாலு, ஆ.ராசா ஆகியோ​ரும் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்தி, குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவித்தனர்.

அமைச்​சர்​கள் ராஜ்மோகன், வன்​னியரசு, விசிக தலை​வர் திரு​மாவளவன், புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம், காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார், மநீம தலை​வர் கமல்​ஹாசன், நடிகர் ரஜினி​காந்த், பிரபு, விக்​ரம்​பிரபு, ஜெய​ராம், சார்​லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்​குநர்​கள் மணிரத்​னம், பார்த்​திபன், ஆர்.சுந்​தர்​ராஜன், பி.​வாசு, பாண்​டிய​ராஜன், சமுத்​திரக்​கனி, ஹெச்​.​வினோத், லோகேஷ் கனக​ராஜ், சுசீந்​திரன். சந்​தான​பார​தி, இசை அமைப்​பாளர் தேவா உள்​ளிட்​டோர் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர்.

பெண்​கள் உட்பட ஏராள​மான பொது​மக்​கள், ரசிகர்​கள் நீண்ட வரிசை​யில் வந்து அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர். பாக்​ய​ராஜின் திரைப்​படக் காட்​சிகள், பிரபல வசனங்​களை பலரும் சமூக வலை​தளங்​களில் பகிர்ந்​து, அவரது நினை​வு​களை சோகத்​துடன் பகிர்ந்து வரு​கின்​றனர். பாக்​ய​ராஜ் மறைவையொட்டி முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்த் திரை​யுல​கின் தலைசிறந்த இயக்​குநர், நடிகர், திரைக்​கதை ஆசிரியர், வசனகர்த்​தா, இசை அமைப்​பாளர் என பன்​முகத் திறமை​யால் முத்​திரை பதித்த கே.​பாக்​ய​ராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்​சி​யும், ஆழ்ந்த வேதனை​யும் அடைந்​தேன்.

தனித்​து​வ​மான கதை​யாக்​கம், நகைச்​சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்​வியல் மற்​றும் குடும்ப உறவு​களின் ஆழமான உணர்​வு​களைப் பிர​திபலிக்​கும் திரைப்​படங்​கள் மூலம் தமிழ் மக்​களின் மனதில் நீங்கா இடம்​பிடித்த கே.​பாக்​ய​ராஜின் பங்​களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்​பரிய​தாகும். அவரது ஒவ்​வொரு படைப்​பும் பொழுது​போக்​கோடு, மனித நேயம் மற்​றும் சமூக விழு​மி​யங்​களைப் பேசும்; காலத்​தால் அழி​யாத நினை​வு​களாக என்​றும் நிலைத்​திருக்​கும். அவரது மறைவு தமிழ்த் திரை​உல​குக்கு ஈடு​செய்ய முடி​யாத பேரிழப்​பாகும். அவரை இழந்து வாடும் குடும்​பத்​தினர், உறவினர்​கள், நண்​பர்​கள், திரைத்​துறை​யினர், ரசிகர்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை​யும், அனு​தாபங்​களை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அவரது ஆன்மா இறைவன் திரு​வடி​யில் இளைப்​பாறப் பிரார்த்​திக்​கிறேன்.

இறுதிச் சடங்கில் அரசு மரியாதை: திரைத்​துறை​யில் கே.​பாக்​ய​ராஜின் பங்​களிப்​பைப் போற்​றி, அஞ்​சலி செலுத்​தும் வகை​யில் அவரது இறு​திப் பயணத்​துக்கு அரசு மரி​யாதை வழங்​கப்​படும். இவ்​வாறு முதல்​வர் அறி​வித்​துள்​ளார். யதார்த்​த​மான நடிகர், இயக்​குநர் என்று அறியப்​பட்​ட​வர் கே.​பாக்​ய​ராஜ். அது மட்​டுமின்​றி, தனது தனிச் சிறப்​பான பாணி​யால் எதிர்​பா​ராத, அதே​நேரம் ரசிக்​கக்​கூடிய திருப்​பங்​களைக் கொண்ட திரைக்​கதை அமைப்​ப​தில் வல்​ல​வ​ராகத் திகழ்ந்​தவர்.

அவர் இயக்​கிய படங்​கள் தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி என பல மொழிகளி​லும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்​றன. அதனால், இந்​திய அளவில் ‘திரைக்​கதை மன்​னன்’ என்று கொண்​டாடப்​பட்​டார். முக்​கிய பிர​முகர்​கள், திரை​யுல​கினர், ரசிகர்​கள், பொது​மக்​களின் இறுதி அஞ்​சலிக்கு பிறகு, பாக்​ய​ராஜ் உடல் இன்று நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் இருந்து ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​பட்​டு, பெசன்ட்​நகர் மின் மயானத்​தில் இறு​திச் சடங்​கு​கள் நடை​பெற உள்​ளன.

இயக்​குநர் பார​தி​ராஜா கடந்த 10-ம் தேதி கால​மா​னார். தனது குரு​வான பார​தி​ராஜா மறைந்த 17-வது நாளி​ல் பாக்​ய​ராஜ் மறைந்​தது ரசிகர்​கள்​, திரை​யுல​கினர்​ மத்​தி​யில்​ சோகத்​தை ஏற்​படுத்​தியுள்​ளது.

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...