திங்கள், 13 ஜூலை, 2026
2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்_ அண்ணாமலை பேச்சு
பதிவு: திங்கட்கிழமை, ஜூலை 13, 2026, ஆனி 29, பாரபவ வருடம் 05.20 AM
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் வி த லீடர்ஸ் மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:-
ஒரு அரசியல் இயக்கம்38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர்.
இது என் குடும்ப கட்சி இல்லை. ஜூன் 5-ல் ஆரம்பிக்கப்பட்ட வி த லீடர்ஸ் அமைப்பு ஒரு அரசியல் இயக்கம்.
இன்றுடன் 38-வது நாள். பெண்கள், கல்லூரி மாணவிகளை பார்க்கும்போது நம் இலக்கில் 50 சதவீதம் தாண்டிவிட்டோம் என தெரிகிறது.
அமைப்பில் சேர்ந்துள்ள 19 லட்சம் பேரில் 17 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். இது நம் வெற்றி.
இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான். தமிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள். இங்கு எல்லாருமே தன்னார்வலர்கள்தான். இங்கு அனைவரும் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம்.
பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடு அனைவரும் நின்றுகொண்டிருக்கிறோம். நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படும். ஆட்சி மாற்றம்6 மாதங்களும் 6 முக்கிய பிரச்சினைகளை எடுத்து வி த லீடர்ஸ் அமைப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளது. 2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம். மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படபோகிறது. தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள். ஆகஸ்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நாம் நடத்துகிறோம். மது எல்லா இடங்களிலும் கலந்துவிட்டது. தைரியமாக மது குடிக்கும் காலம் வந்திருத்துகிறது.இன்னொரு கட்சியை திட்டுவதற்கு, தலைவர்களை குறை கூறுவதற்கான மாநாடு இது அல்ல. எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அமைப்பு இருக்கிறதோ அதுவரை ஜூலையில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடக்கும். 5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது.
5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது.
கஞ்சாவை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களை நாங்கள் தடுக்க இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடிதமிழ்நாட்டில் ஒரு ரேஷன் கார்டுக்கு 4.15 லட்சம் கடன் இருக்கிறது. பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை இதில் இருந்து காப்பாற்ற முடியாது.
இந்த ஆண்டு தவெக அரசு 85 ஆயிரம் கோடிக்கு குறையாமல் கடன் வாங்கும். இந்த தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 14 முதல் 15 லட்சம் கோடியாக இருக்கும். அதனை நாம் சரி செய்ய வேண்டும். அதற்கு அந்த இடத்திற்கு நல்ல தலைவர்களை கொண்டு வரவேண்டும்.வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும் “யார் நம்மைப் பிரித்தாலும், சேவை, தமிழ்நாட்டின் மாற்றம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் இணைந்திருக்கிறோம். நல்ல தலைவர்களை, தன்னார்வலர்களை நாம் கீழே அடிமட்டத்தில் இருந்து எடுக்கப்போகிறோம். அவர்களை மக்களின் வேட்பாளராக நிற்கவைத்து, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, எம்.பி.யாக மாற்றப்போகிறோம். வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறப்போகிறது. .நான் முதலில் இந்தியன்நாட்டிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம். மதுவை ஒழிப்பது மட்டும் நோக்கம் அல்ல, மது குடிப்பவர்களை திருத்துவோம். நான் தேசியவாதி, நான் முதலில் இந்தியன், இரண்டாவது தமிழன்.பண்பாட்டு மீட்சி, ஆட்சியிலே புரட்சி என்பதும் எங்களின் தாரக மந்திரம்.
தவெகவில் அனைவரும் புதியவர்கள்கோவில் நிலத்தை வைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திமுகவினர் அரசியல் செய்தனர். கரூரில் கோவில் நிலத்தில் குடியிருந்தவர்களுக்கு தவெக அரசு அதை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது.
மதத்தின் அடிப்படையில் நான் இந்து. உங்களுக்கு உங்கள் மதம் பெரிது. எனக்கு என் மதம் பெரிது. ஆனால் அது வீட்டில் மட்டுமே. சாதி, மதம், சாதியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு அனைவருக்கும் பொதுவானவராக வருகிறேன். வி த லீடர்ஸ் -ல் தலைவர் கிடையாது. பேனர், புகைப்பட கலாசாரம் இல்லை. தவெகவில் அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள், தடுமாறுவார்கள். அவர்களை நாம் தூக்கிவிடத்தான் வேண்டும். மூர்க்கத்தனமாக, அதிகாரத்தை பிடிக்க நாம் வரவில்லை. நல்ல நோக்கத்துடன் நம் அரசியல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்..முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது உட்பட 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் பாடல் அண்ணாமலை மாநாட்டில் ஒளிபரப்பட்டது. அண்ணாமலை தொடங்கிய வி த லீடர்ஸ் அமைப்பின் செயலி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அண்ணாமலை வி த லீடர்ஸ் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர்.
போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
“நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை” - சென்னை திரும்பிய எ.வ.வேலு பேச்சு
பதிவு: திங்கட்கிழமை, ஜூலை 13, 2026, ஆனி 29, பாரபவ வருடம் 05.100 AM
சென்னை,
“சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள்” என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுகவுக்கு பழக்கம் இல்லை. அரசியலை, அரசியலாக சந்திப்பதில் திமுக சளைத்தது இல்லை. இதயப் பிரச்சினைக்காக 2016ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், மருத்துவர் ஜெயராமனிடம் சிகிச்சைப் பெற்று வருகிறேன்.
2023ல் அதே மருத்துவமனையில் இரண்டாம் முறையாக உடல் பரிசோதனை மேற்கொண்டேன். இப்போது மீண்டும் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என கடந்த ஜூன் 15ம் தேதி விசாவுக்கு விண்ணபித்து, ஜூன் 17ம் தேதி விசா வழங்கினர். 17ம் தேதியே ஜூன் 25ம் தேதி சிங்கப்பூர் செல்ல டிக்கெட் புக் செய்தேன்.
ஆனால், ஜூன் 25ம் தேதி காலையில் என் வீட்டுக்கு காவல்துறை நண்பர்கள் வந்து, சோதனை மேற்கொள்வதாக சொன்னார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். பின்னர் ஜூன் 26ம் தேதி மீண்டும் டிக்கெட் புக்செய்து சிங்கப்பூர் சென்றேன். அங்கு எனக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
எனக்கு ஒவ்வாமை, நரம்பு பிரச்சினை, இதயப் பிரச்சினை என மூன்று பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பாக தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைகள் எனக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த முறை என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது என ரிப்போர்ட் என்னிடம் உள்ளது.
அப்போது என்னை ஜூன் 3ம் தேதி வரச்சொல்லி என் வீட்டில் சம்மன் ஒட்டியதாக எனக்கு தகவல் சொன்னார்கள். அதனை பேக்ஸில் அனுப்ப சொல்லி, நான் மருத்துவ பரிசோதனைகள் முடித்து 10 நாட்களில் வந்துவிடுவேன் என அந்த சம்மனுக்கு பதில் அளித்தேன்.
ஆனால், மீண்டும் 9ம் தேதி வரச்சொல்லி சம்மன் அனுப்பினார்கள். மருத்துவ பரிசோதனைகள் முடித்து நான் ஜூலை 12ம் தேதி சென்னை வந்துவிடுவேன், அதன் பின்னர் எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கடிதம் அனுப்பினேன்.
சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன், முழு ஒத்துழைப்பு தருவதாகவும் சொன்னேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள். நான் மருத்துவத்துக்காக சென்றேனே தவிர, சுற்றுலா செல்லவில்லை. ஆனால், அவரவர் கற்பனைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
திமுகவின் சட்டப்பேரவை கொறடாவாக நான் உள்ளேன். சமீபத்தில் 3 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகமான வினாக்களை நான் தான் எழுப்பினேன். அது என்னுடைய கடமை. நான் பேசவே கூடாது என அவர்கள் நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. இனி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை, குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது” என்றார்.
சென்னை,
“சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள்” என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுகவுக்கு பழக்கம் இல்லை. அரசியலை, அரசியலாக சந்திப்பதில் திமுக சளைத்தது இல்லை. இதயப் பிரச்சினைக்காக 2016ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், மருத்துவர் ஜெயராமனிடம் சிகிச்சைப் பெற்று வருகிறேன்.
2023ல் அதே மருத்துவமனையில் இரண்டாம் முறையாக உடல் பரிசோதனை மேற்கொண்டேன். இப்போது மீண்டும் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என கடந்த ஜூன் 15ம் தேதி விசாவுக்கு விண்ணபித்து, ஜூன் 17ம் தேதி விசா வழங்கினர். 17ம் தேதியே ஜூன் 25ம் தேதி சிங்கப்பூர் செல்ல டிக்கெட் புக் செய்தேன்.
ஆனால், ஜூன் 25ம் தேதி காலையில் என் வீட்டுக்கு காவல்துறை நண்பர்கள் வந்து, சோதனை மேற்கொள்வதாக சொன்னார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். பின்னர் ஜூன் 26ம் தேதி மீண்டும் டிக்கெட் புக்செய்து சிங்கப்பூர் சென்றேன். அங்கு எனக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
எனக்கு ஒவ்வாமை, நரம்பு பிரச்சினை, இதயப் பிரச்சினை என மூன்று பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பாக தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைகள் எனக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த முறை என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது என ரிப்போர்ட் என்னிடம் உள்ளது.
அப்போது என்னை ஜூன் 3ம் தேதி வரச்சொல்லி என் வீட்டில் சம்மன் ஒட்டியதாக எனக்கு தகவல் சொன்னார்கள். அதனை பேக்ஸில் அனுப்ப சொல்லி, நான் மருத்துவ பரிசோதனைகள் முடித்து 10 நாட்களில் வந்துவிடுவேன் என அந்த சம்மனுக்கு பதில் அளித்தேன்.
ஆனால், மீண்டும் 9ம் தேதி வரச்சொல்லி சம்மன் அனுப்பினார்கள். மருத்துவ பரிசோதனைகள் முடித்து நான் ஜூலை 12ம் தேதி சென்னை வந்துவிடுவேன், அதன் பின்னர் எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கடிதம் அனுப்பினேன்.
சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன், முழு ஒத்துழைப்பு தருவதாகவும் சொன்னேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள். நான் மருத்துவத்துக்காக சென்றேனே தவிர, சுற்றுலா செல்லவில்லை. ஆனால், அவரவர் கற்பனைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
திமுகவின் சட்டப்பேரவை கொறடாவாக நான் உள்ளேன். சமீபத்தில் 3 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகமான வினாக்களை நான் தான் எழுப்பினேன். அது என்னுடைய கடமை. நான் பேசவே கூடாது என அவர்கள் நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. இனி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை, குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது” என்றார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதிலடி
பதிவு: திங்கட்கிழமை, ஜூலை 13, 2026, ஆனி 29, பாரபவ வருடம் 05.00 AM
தெஹ்ரான்,
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று தொடர்ந்து ஈரான் பிடிவாதம் காட்டியது.
இந்நிலையில், மார்ஷல் தீவு எண்ணெய் கப்பல் அல் ரெஹாயத், சவுதி கப்பல் வெட்யான், லைபீரியா கப்பல் சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்ணெய் கப்பல்கள் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை சமீபத்தில் கடந்தன. அவற்றின் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில், அனுமதிக்கப்படாத பாதையில் சென்றதாக ஒரு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. இதுகுறித்து ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘ ஹார்முஸ் ஜலசந்தி அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும், இப்பகுதியில் அமெரிக்கத் தலையீடுகள் முடிவுக்கு வரும் வரையிலும் மூடப்பட்டிருக்கும்; எந்தக் கப்பலும் இதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஹார்முஸ் வழியாகச் சென்ற சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கொள்கலன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடங்கியது.
நேற்று அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கின என்றும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது. ‘சுமார் நான்கு மணி நேரம் கழித்து, தாக்குதல்கள் நிறைவடைந்தன. இந்த முறை சுமார் 140 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என அமெரிக்க ராணுவ கட்டளை மையமான சென்ட்காம் கூறியது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
ஞாயிறு, 12 ஜூலை, 2026
“உங்கள் குற்ற உணர்ச்சிக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்காதீர்” - முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் சாடல்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 2026, ஆனி 28, பாரபவ வருடம் 00.15 AM
சென்னை,
‘உங்களின் குற்ற உணர்ச்சிக்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த முதல்வர் விஜய், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? உங்கள் குற்ற உணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டு கரூரில் தங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களை, அப்பொழுது கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த நீங்கள், முதல்வரான பிறகு அவர்களுக்கு “அரசுப் பணி” வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசுப் பணிகளை மட்டுமே இலக்காக வைத்து, இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
1. தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
2. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.
3. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
4. அரசுப் பள்ளிகளில் 30.000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன.
5. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
6. நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
7. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர்.
8. அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள். மருத்துவர்கள். அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால் நீங்களோ இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்து, அரசு வேலையை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை வாரி தூற்றியுள்ளீர்கள்.
உங்களின் குற்றவுணர்ச்சியை திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த நீங்கள், அரசு கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்?.
டெட், டிஆர்பி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசு பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கையில், துறை வாரியான ஆள்சேர்ப்பு மற்றும் பணி நியமனத்திற்கான கால அட்டவணையை உங்கள் அரசு ஏன் வெளியிடவில்லை?
எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் ஜோசப் விஜய். கரூர் மக்களுக்கு எப்படி ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களோ அதே போல, மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும். அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை,
‘உங்களின் குற்ற உணர்ச்சிக்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த முதல்வர் விஜய், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? உங்கள் குற்ற உணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டு கரூரில் தங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களை, அப்பொழுது கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த நீங்கள், முதல்வரான பிறகு அவர்களுக்கு “அரசுப் பணி” வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசுப் பணிகளை மட்டுமே இலக்காக வைத்து, இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
1. தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
2. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.
3. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
4. அரசுப் பள்ளிகளில் 30.000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன.
5. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
6. நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
7. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர்.
8. அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள். மருத்துவர்கள். அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால் நீங்களோ இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்து, அரசு வேலையை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை வாரி தூற்றியுள்ளீர்கள்.
உங்களின் குற்றவுணர்ச்சியை திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த நீங்கள், அரசு கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்?.
டெட், டிஆர்பி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசு பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கையில், துறை வாரியான ஆள்சேர்ப்பு மற்றும் பணி நியமனத்திற்கான கால அட்டவணையை உங்கள் அரசு ஏன் வெளியிடவில்லை?
எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் ஜோசப் விஜய். கரூர் மக்களுக்கு எப்படி ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களோ அதே போல, மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும். அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
சனி, 11 ஜூலை, 2026
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம்
பதிவு: சனிக்கிழமை, ஜூலை 11, 2026, ஆனி 27, பாரபவ வருடம் 01.30 AM
சென்னை,
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் திருச்சி கிழக்கில் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல, கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் (அதிமுக) தேர்தல் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் வி.பி.மதியழகன், விராலிமலையில் சி.விஜயபாஸ்கரின் (அதிமுக) வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், பெருந்துறையில் எஸ்.ஜெயக்குமாரின் (அதிமுக) வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர். அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா (அதிமுக) வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொகுதி வாக்காளர் காந்திமதிநாதன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையே, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள மேற்கண்ட 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்குமாறும், தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.வெங்கடாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
‘தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இடைத் தேர்தல் நடத்தப்பட்டால், வழக்கின் நோக்கம் அர்த்தமற்றதாகிவிடும். வழக்குகளை நிலுவையில் வைத்துக் கொண்டு இடைத் தேர்தலை நடத்தினால், தேவையற்ற சட்ட சிக்கலை ஏற்படுத்திவிடும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடைபெற்ற வாதம்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன்
நிலுவை வழக்கு விசாரணைக்குப் பிறகு, தேர்தலில் தோல்வி அடைந்தவரை வெற்றி பெற்றவராக உயர் நீதிமன்றம் ஒருவேளை அறிவிக்கக்கூடும். அதே நேரம், இடைத் தேர்தலில் ஒரு எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்கள் என்ற நிலை உருவாகும். எனவே, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்வரை அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல். சுந்தரேசன் மற்றும் நிரஞ்சன் ராஜகோபாலன்: பல தேர்தல் வழக்குகள் குறைபாடுகளுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்துக்கு வரவில்லை. அதனால், அவற்றின்மீது தேர்தல் ஆணையம் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்துவது அவசியமான ஒன்று.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்
தேர்தல் வழக்குகள் தொடரப்படுவதற்கு முன்பே முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். அவர்கள் ராஜினாமா செய்யும்போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை. முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி: மனுதாரர் இத்தொகுதிகளின் வாக்காளர் அல்ல.அவர் வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை. மேலும், காலி தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்துவதா, வேண்டாமா என முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு
தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசின் பணம் வீணாக செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்கள் என்ற நிலை உருவாகி அரசியல் சாசன பிரச்சினை எழும். அதேநேரம், தேர்தல் வழக்குகள் தொடருவதற்கு முன்பாகவே அத்தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன என்ற வாதத்தையும் ஆராய வேண்டியுள்ளது.
எனவே, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவைச் செயலர் மற்றும் முதல்வர் விஜய், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும். அதுவரை இந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடாது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
வியாழன், 2 ஜூலை, 2026
தவெக எம்எல்ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் - கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை - செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்குத் தொடர்பா?
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 02, 2026, ஆனி 18, பாரபவ வருடம் 04.10 AM
சென்னை,
தமிழக சபாநாயகருக்கு எதிராக செயல்பட, ஆளும் தவெக எம்எல்ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரைப் போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, விஜய் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்எல்ஏக்களின் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். அப்போது, எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது ஒவ்வொரு கட்சியினரும் வெவ்வேறு கட்சிக்குத் தாவி வருகின்றனர். அதோடு தமிழக அரசு 6 மாதங்களில் கவிழும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் நாங்கள் சொல்வது போல் கேட்டு சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் சிலர் பேரம் பேசிய தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் என்.இளையராஜாவை, சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற நபர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தான் கருத்துக் கணிப்பு நிறுவனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரின் சார்பில் பேசுவதாகவும் கூறி நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், வேறு பணியில் இருப்பதாக கூறி எம்எல்ஏ இளையராஜா அந்த அழைப்பை துண்டித்துள்ளார். அதன் பின்னரும் மீண்டும் தொடர்பு கொண்டதாக கூறப்படும் திருநாவுக்கரசு, தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.
அதற்கு பிரதிபலனாக ரூ.35 கோடி வரை வழங்க தயாராக இருப்பதாக ஆசை வார்த்தை கூறியதாகவும், அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்த போது, ‘‘இந்த விவகாரம் குறித்து வெளியில் கூறினால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பின்விளைவுகள் ஏற்படும்’’ என்று மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த மாதம் 29-ம் தேதி எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார்.
அதில், ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரான என்னை சட்ட விரோதமாகச் செல்வாக்கு செலுத்த முயற்சித்ததுடன், லஞ்சம் வழங்க முன்வந்தும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். செல்போன் அழைப்பு விவரங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்தது தெரிய வந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரின் அறிவுரையின்படியே, எம்எல்ஏ இளையராஜாவை திருநாவுக்கரசு தொடர்பு கொண்டு ரூ.35 கோடி பேரம் பேசியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, கருத்துக் கணிப்பு நிறுவனம் என்ற பெயரில் அரசியல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதா, பின்னணியில் வேறு முக்கிய நபர்கள் உள்ளனரா அல்லது ஆட்சியைக் கவிக்கும் நோக்கின் முதல் கட்ட முயற்சியா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் 2 பேரிடம் விசாரணை
இந்த வழக்கில் கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45), அதன் பங்குதாரர் அதிபன் ரமேஷ் (42) ஆகியோரது வீடுகளில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் திமுக பிரமுகர்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
தமிழக சபாநாயகருக்கு எதிராக செயல்பட, ஆளும் தவெக எம்எல்ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரைப் போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, விஜய் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்எல்ஏக்களின் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். அப்போது, எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது ஒவ்வொரு கட்சியினரும் வெவ்வேறு கட்சிக்குத் தாவி வருகின்றனர். அதோடு தமிழக அரசு 6 மாதங்களில் கவிழும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் நாங்கள் சொல்வது போல் கேட்டு சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜாவிடம் சிலர் பேரம் பேசிய தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் என்.இளையராஜாவை, சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற நபர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தான் கருத்துக் கணிப்பு நிறுவனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரின் சார்பில் பேசுவதாகவும் கூறி நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், வேறு பணியில் இருப்பதாக கூறி எம்எல்ஏ இளையராஜா அந்த அழைப்பை துண்டித்துள்ளார். அதன் பின்னரும் மீண்டும் தொடர்பு கொண்டதாக கூறப்படும் திருநாவுக்கரசு, தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.
அதற்கு பிரதிபலனாக ரூ.35 கோடி வரை வழங்க தயாராக இருப்பதாக ஆசை வார்த்தை கூறியதாகவும், அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்த போது, ‘‘இந்த விவகாரம் குறித்து வெளியில் கூறினால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பின்விளைவுகள் ஏற்படும்’’ என்று மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த மாதம் 29-ம் தேதி எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார்.
அதில், ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரான என்னை சட்ட விரோதமாகச் செல்வாக்கு செலுத்த முயற்சித்ததுடன், லஞ்சம் வழங்க முன்வந்தும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். செல்போன் அழைப்பு விவரங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்தது தெரிய வந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரின் அறிவுரையின்படியே, எம்எல்ஏ இளையராஜாவை திருநாவுக்கரசு தொடர்பு கொண்டு ரூ.35 கோடி பேரம் பேசியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, கருத்துக் கணிப்பு நிறுவனம் என்ற பெயரில் அரசியல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதா, பின்னணியில் வேறு முக்கிய நபர்கள் உள்ளனரா அல்லது ஆட்சியைக் கவிக்கும் நோக்கின் முதல் கட்ட முயற்சியா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் 2 பேரிடம் விசாரணை
இந்த வழக்கில் கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45), அதன் பங்குதாரர் அதிபன் ரமேஷ் (42) ஆகியோரது வீடுகளில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் திமுக பிரமுகர்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன், 1 ஜூலை, 2026
அரசிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி - 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை - தலைமறைவான முன்னாள் எம்எல்ஏவைக் கைது செய்ய தீவிரம்
பதிவு: புதன்கிழமை, ஜூலை 01, 2026, ஆனி 17, பாரபவ வருடம் 06.00 AM
சென்னை,
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கட்டிடம் கட்ட திட்ட அனுமதி உள்ளிட்டவற்றை அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பி.டி.அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில்,
‘‘தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிட திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை விரைவாக பெற்றுத் தருவதாக உறுதியளித்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்’’ என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுத் துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் கடந்த 27-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உட்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏவைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘‘தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என்று உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைக் கண்டறிவது, பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வது மற்றும் கூடுதல் சாட்சியங்களைச் சேகரிப்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அல்லது சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகி அல்லது தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம். புகார்தாரர்களின் அடையாளம் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். போலீஸார் நடத்திய விரிவான விசாரணையில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், இந்த மோசடியில் சிக்கியிருக்கும் மொத்த தொகை ரூ.200 கோடியைத் தாண்ட கூடும் என்ற சந்தேகம் விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், மாவட்ட வாரியாகப் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் முழுமையான பட்டியலை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கங்களுக்கும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக மேலும் பலர் புகார் அளிக்க முன்வரக் கூடும் என்பதால், வழக்கின் பரிமாணம் இன்னும் விரிவடையும். எனவே, பணப் பரிவர்த்தனைகள், வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கட்டிடம் கட்ட திட்ட அனுமதி உள்ளிட்டவற்றை அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பி.டி.அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில்,
‘‘தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிட திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை விரைவாக பெற்றுத் தருவதாக உறுதியளித்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்’’ என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுத் துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் கடந்த 27-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உட்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏவைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘‘தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என்று உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைக் கண்டறிவது, பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வது மற்றும் கூடுதல் சாட்சியங்களைச் சேகரிப்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அல்லது சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகி அல்லது தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம். புகார்தாரர்களின் அடையாளம் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். போலீஸார் நடத்திய விரிவான விசாரணையில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், இந்த மோசடியில் சிக்கியிருக்கும் மொத்த தொகை ரூ.200 கோடியைத் தாண்ட கூடும் என்ற சந்தேகம் விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், மாவட்ட வாரியாகப் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் முழுமையான பட்டியலை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கங்களுக்கும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக மேலும் பலர் புகார் அளிக்க முன்வரக் கூடும் என்பதால், வழக்கின் பரிமாணம் இன்னும் விரிவடையும். எனவே, பணப் பரிவர்த்தனைகள், வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 16, 2026, ஆனி 32, பாரபவ வருடம் 07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...
-
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 2026, ஆனி 12, பாரபவ வருடம் 03.00 AM திருவாரூர், தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ க...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...






