வியாழன், 16 ஜூலை, 2026

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM

நாகர்கோவில்,

நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் சேர்ந்து, அவரை கட்டி வைத்து தாக்கியதாக 8 கைதிகளும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர், பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி இவரது கடையில் தென்தாமரைக்குளம் போலீஸார் சோதனை நடத்தியபோது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்ததாக பறிமுதல் செய்யப்பட்டன. அவரைக் கைது செய்த போலீஸார், நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி காலை சிறையில் இருந்த சபரிவர்மன் இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சபரிவர்மனின் தாயார், மனைவி ஆகியோர் அவரது உடலை பார்வையிட்டபோது, உடலில் பலத்த காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால், சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சபரிவர்மன் மரணம் குறித்து, அவரது உறவினர்களிடமும், நாகர்கோவில் கிளைச்சிறை காவலர்கள் மற்றும் கைதிகளிடமும், நாகர்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி,மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் விசாரணை நடத்தினார். சிறையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் ஆதாரங்கள் திரட்டப்பட்டன.

19 இடங்களில் பலத்த காயம்

இந்நிலையில், சபரிவர்மனின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் மாலை வெளியானது. அதில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் பலமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நேசமணிநகர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில் கிளைச்சிறை தலைமை வார்டனான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்த திருமலைநம்பி, வார்டன்களான கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடத்தைச் சேர்ந்த சிவகுமார், தேங்காப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெகன் ஆகிய 3 பேரை. நேற்று முன்தினம் இரவில் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நேசமணிநகர் காவல் நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியிருப்பதாவது: சபரிவர்மன் சிறைக்கு வந்த நாளில் இருந்து, அவருக்கும் சக கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை சிறை வார்டன்கள் சமரசம் செய்துள்ளனர். 12-ம் தேதி இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைதிகள் சிலர் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.

மேலும், சபரிவர்மனின் கை, கால்களைக் கட்டி வைத்து, வார்டன்களுடன் சேர்ந்து கைதிகளும். அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சபரிவர்மன் சிறைக்குள்ளேயே இறந்துவிட்டார்.

உடலை வாங்க மறுப்பு

கைதான வார்டன்கள் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கைதிகளான விஷ்ணு, ஜெகன், சாரதி, பெருமாள், சரத், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 பேர் மீது போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து. அவர்களை நேற்று கைது செய்தனர்.

இதனிடையே, சபரிவர்மனின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் 94981 80936 வாட்ஸ்-அப்பில் புகார் கொடுக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.00 AM

சென்னை,

அரசு அலு​வல​கங்​களில் யாராவது லஞ்​சம் கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக புகார் அளிக்​கும் வித​மாக புதிய வாட்​ஸ்​-அப் எண்ணை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான தவெக அரசு பொறுப்​பேற்​ற​தில் இருந்து லஞ்​சம், ஊழலை ஒழிக்க பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

அதன்​படி, அரசு அலு​வலர்​கள் யாராவது லஞ்​சம் கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக 94981 80936 என்ற வாட்​ஸ்​-அப் எண்​ணில் புகார் கொடுக்​கலாம் என்று அரசு தற்​போது அறி​வித்​துள்​ளது. ஊழலைத் தடுக்​கும் நடவடிக்​கைகளை மேலும் வலுப்​படுத்​தும் நோக்​கில் இந்த வசதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அறிவிப்பு பலகை

இதுகுறித்து அனைத்து துறை​களின் செயலர்​கள், இயக்​குநர்​கள், மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: மாநிலம் முழு​வதும் உள்ள அனைத்து அரசு அலு​வல​கங்​கள் மற்​றும் பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் லஞ்ச ஒழிப்பு விழிப்​புணர்வு அறி​விப்பு பலகைகளை கட்​டா​யம் காட்​சிப்​படுத்த வேண்​டும்.

அதில், ‘லஞ்​சம் வாங்​கு​வதும், கொடுப்​பதும் குற்​றம்’ என்ற வாசகம் தெளி​வாக​வும், மக்​கள் பார்க்​கும் வகை​யிலும் காட்​சிப்​படுத்​தப்பட வேண்​டும். இதுத​விர, தமிழிலும், ஆங்​கிலத்​தி​லும் புகார் அளிக்​கும் நடை​முறை​கள் இடம்​பெற்ற மாதிரி அறி​விப்பு பலகை​யும் அலு​வல​கங்​களில் வைக்​கப்பட வேண்​டும்.

அரசுத் துறை​களின் அதி​காரப்​பூர்வ இணை​யதளங்​களி​லும் வாட்​ஸ்​-அப் புகார் எண் மற்​றும் லஞ்ச ஒழிப்​புத் துறை​யின் (ஊழல் தடுப்​பு, கண்​காணிப்பு இயக்​குநரகம் - DVAC) இணை​யதள முகவரியை வெளி​யிட வேண்​டும்.

வாட்​ஸ்​-அப் மட்​டுமின்​றி, dvac@nic.in என்ற மின்​னஞ்​சல் முகவரி மூல​மாக​வும், 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்​கள் மூல​மாக​வும் பொது​மக்​கள் லஞ்​சம் தொடர்​பான புகார்​களை தெரிவிக்​கலாம்.

எழுத்​துப்​பூர்​வ​மான புகார்​களை ‘இயக்​குநர், லஞ்ச ஒழிப்​புத் துறை, 293, எம்​கேஎன் சாலை, ஆலந்​தூர், சென்​னை-16’ என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்​சல் மூல​மாகவோ அனுப்​பலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

புதன், 15 ஜூலை, 2026

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி - பி.டி.அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பதிவு: புதன்கிழமை, ஜூலை  15, 2026,  ஆனி  31, பாரபவ வருடம்  01.15 AM

சென்னை,

தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் கைது செய்​யப்​பட்ட பி.டி.அரசகு​மார், குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

புதுக்​கோட்​டையைச் சேர்ந்த பி.டி.அரசகு​மார், சென்னை சாலிகி​ராமத்​தைத் தலை​மை​யிட​மாகக் கொண்​டு, ‘தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்​கம்’ என்ற பதிவு செய்​யப்​ப​டாத அமைப்பை நடத்தி வந்​தார். 

திமுக​வின் செய்​தித் தொடர்பு குழுத் துணைத் தலை​வ​ராக இருந்த அரசகு​மார், தனது அரசி​யல் செல்​வாக்​கைப் பயன்​படுத்தி தமிழகம் முழு​வதும் உள்ள தனி​யார் பள்​ளி​களை அணுகி​யுள்​ளார்.

பள்​ளி​களுக்​கான அங்​கீ​காரம், தரம் உயர்த்​துதல் மற்​றும் சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​தின் சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி, பல பள்ளி நிர்வாகி​களிடம் பெரு​மளவு பணம் வசூலித்​துள்​ளார். 

அந்த வகை​யில், ரூ.100 கோடிக்​கும் மேல் மோசடி செய்​த​தாகப் பாதிக்​கப்​பட்ட பள்ளி நிர்​வாகி​கள் புகார் அளித்​துள்​ளனர். அதன் அடிப்​படை​யில், சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார், பி.டி.அரசகு​மாரைக் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

அதைத் தொடர்ந்து அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி ஆதா​ரங்​களை​யும் திரட்​டினர். இந்த மோசடி தொடர்​பாகத் தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து இது​வரை 59 தனி​யார் பள்​ளி​கள் மத்​திய குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​துள்​ளன. 

பி.டி.அரசகு​மாரின் தொடர் மோசடி நடவடிக்​கைகளைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில், சென்னை காவல் ஆணை​யர் அவரை குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைக்க உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். இதற்​கான நகல் சிறை​யில் உள்ள பி.டி.அரசகு​மாரிடம்​ வழங்​கப்​பட்​டது.

செவ்வாய், 14 ஜூலை, 2026

பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண்ணை கொடூரமாக கொன்று பெண் கொலை - 15 சவரன் நகை கொள்ளை

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூலை  14, 2026,  ஆனி  30, பாரபவ வருடம்  07.00 AM

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்து 15 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மளிகை கடைக்காரர் மனைவி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 

இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வனஜா (வயது 55) வீட்டில் இட்லி மாவு விற்பனை செய்து வந்தார். 

இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், ராதாகிருஷ்ணன் மற்றும் வனஜா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

கழுத்தில் கத்திக்குத்து நேற்று காலை ராதாகிருஷ்ணன் வழக்கம்போல் தனது மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வனஜா, கடைக்கு சென்று கணவருக்கு டீ கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். 

மதிய உணவு இடைவேளையின்போது ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டை திறந்து உள்ளே சென்றபோது, வனஜா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்..15 சவரன் நகை கொள்ளைஅவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்து, திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இட்லி மாவு வாங்குவது போல் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வனஜாவை கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட சுமார் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்தனர். பின்னர், வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் அச்சம்மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

வீட்டில் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழவேற்காடு பகுதியில் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 13 ஜூலை, 2026

2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்_ அண்ணாமலை பேச்சு


 பதிவு: திங்கட்கிழமை,  ஜூலை  13, 2026,  ஆனி  29, பாரபவ வருடம்  05.20 AM

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் வி த லீடர்ஸ் மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:-

ஒரு அரசியல் இயக்கம்38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். 

இது என் குடும்ப கட்சி இல்லை. ஜூன் 5-ல் ஆரம்பிக்கப்பட்ட வி த லீடர்ஸ் அமைப்பு ஒரு அரசியல் இயக்கம். 

இன்றுடன் 38-வது நாள். பெண்கள், கல்லூரி மாணவிகளை பார்க்கும்போது நம் இலக்கில் 50 சதவீதம் தாண்டிவிட்டோம் என தெரிகிறது. 

அமைப்பில் சேர்ந்துள்ள 19 லட்சம் பேரில் 17 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். இது நம் வெற்றி. 

இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான். தமிழ்நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள். இங்கு எல்லாருமே தன்னார்வலர்கள்தான். இங்கு அனைவரும் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம்.

பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடு அனைவரும் நின்றுகொண்டிருக்கிறோம். நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களுக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படும். ஆட்சி மாற்றம்6 மாதங்களும் 6 முக்கிய பிரச்சினைகளை எடுத்து வி த லீடர்ஸ் அமைப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளது. 2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம். மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படபோகிறது. தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள். ஆகஸ்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நாம் நடத்துகிறோம். மது எல்லா இடங்களிலும் கலந்துவிட்டது. தைரியமாக மது குடிக்கும் காலம் வந்திருத்துகிறது.இன்னொரு கட்சியை திட்டுவதற்கு, தலைவர்களை குறை கூறுவதற்கான மாநாடு இது அல்ல.  எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அமைப்பு இருக்கிறதோ அதுவரை ஜூலையில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடக்கும்.  5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது. 

5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. அனைத்து பாலியல் குற்றங்கள் பின்னணியிலும் மது உள்ளது.  

கஞ்சாவை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களை நாங்கள் தடுக்க இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடிதமிழ்நாட்டில் ஒரு ரேஷன் கார்டுக்கு 4.15 லட்சம் கடன் இருக்கிறது. பிரம்மாவே வந்தாலும் தமிழ்நாட்டை இதில் இருந்து காப்பாற்ற முடியாது.  

இந்த ஆண்டு தவெக அரசு 85 ஆயிரம் கோடிக்கு குறையாமல் கடன் வாங்கும். இந்த தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 14 முதல் 15 லட்சம் கோடியாக இருக்கும். அதனை நாம் சரி செய்ய வேண்டும். அதற்கு அந்த இடத்திற்கு நல்ல தலைவர்களை கொண்டு வரவேண்டும்.வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும்  “யார் நம்மைப் பிரித்தாலும், சேவை, தமிழ்நாட்டின் மாற்றம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் இணைந்திருக்கிறோம். நல்ல தலைவர்களை, தன்னார்வலர்களை நாம் கீழே அடிமட்டத்தில் இருந்து எடுக்கப்போகிறோம். அவர்களை மக்களின் வேட்பாளராக நிற்கவைத்து, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, எம்.பி.யாக மாற்றப்போகிறோம். வீ தி லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறப்போகிறது. .நான் முதலில் இந்தியன்நாட்டிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம். மதுவை ஒழிப்பது மட்டும் நோக்கம் அல்ல, மது குடிப்பவர்களை திருத்துவோம்.  நான் தேசியவாதி, நான் முதலில் இந்தியன், இரண்டாவது தமிழன்.பண்பாட்டு மீட்சி, ஆட்சியிலே புரட்சி என்பதும் எங்களின் தாரக மந்திரம். 

தவெகவில் அனைவரும் புதியவர்கள்கோவில் நிலத்தை வைத்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திமுகவினர் அரசியல் செய்தனர். கரூரில் கோவில் நிலத்தில் குடியிருந்தவர்களுக்கு தவெக அரசு அதை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. 

மதத்தின் அடிப்படையில் நான் இந்து. உங்களுக்கு உங்கள் மதம் பெரிது. எனக்கு என் மதம் பெரிது. ஆனால் அது வீட்டில் மட்டுமே. சாதி, மதம், சாதியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு அனைவருக்கும் பொதுவானவராக வருகிறேன். வி த லீடர்ஸ் -ல் தலைவர் கிடையாது. பேனர், புகைப்பட கலாசாரம் இல்லை. தவெகவில் அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள், தடுமாறுவார்கள். அவர்களை நாம் தூக்கிவிடத்தான் வேண்டும். மூர்க்கத்தனமாக, அதிகாரத்தை பிடிக்க நாம் வரவில்லை. நல்ல நோக்கத்துடன் நம் அரசியல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்..முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது உட்பட 6 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் பாடல் அண்ணாமலை மாநாட்டில் ஒளிபரப்பட்டது.  அண்ணாமலை தொடங்கிய வி த லீடர்ஸ் அமைப்பின் செயலி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அண்ணாமலை வி த லீடர்ஸ் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர்.  

போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

“நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை” - சென்னை திரும்பிய எ.வ.வேலு பேச்சு

பதிவு: திங்கட்கிழமை,  ஜூலை  13, 2026,  ஆனி  29, பாரபவ வருடம்  05.100 AM

சென்னை,

“சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள்” என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுகவுக்கு பழக்கம் இல்லை. அரசியலை, அரசியலாக சந்திப்பதில் திமுக சளைத்தது இல்லை. இதயப் பிரச்சினைக்காக 2016ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், மருத்துவர் ஜெயராமனிடம் சிகிச்சைப் பெற்று வருகிறேன்.

2023ல் அதே மருத்துவமனையில் இரண்டாம் முறையாக உடல் பரிசோதனை மேற்கொண்டேன். இப்போது மீண்டும் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என கடந்த ஜூன் 15ம் தேதி விசாவுக்கு விண்ணபித்து, ஜூன் 17ம் தேதி விசா வழங்கினர். 17ம் தேதியே ஜூன் 25ம் தேதி சிங்கப்பூர் செல்ல டிக்கெட் புக் செய்தேன்.

ஆனால், ஜூன் 25ம் தேதி காலையில் என் வீட்டுக்கு காவல்துறை நண்பர்கள் வந்து, சோதனை மேற்கொள்வதாக சொன்னார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். பின்னர் ஜூன் 26ம் தேதி மீண்டும் டிக்கெட் புக்செய்து சிங்கப்பூர் சென்றேன். அங்கு எனக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

எனக்கு ஒவ்வாமை, நரம்பு பிரச்சினை, இதயப் பிரச்சினை என மூன்று பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பாக தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைகள் எனக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த முறை என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது என ரிப்போர்ட் என்னிடம் உள்ளது.

அப்போது என்னை ஜூன் 3ம் தேதி வரச்சொல்லி என் வீட்டில் சம்மன் ஒட்டியதாக எனக்கு தகவல் சொன்னார்கள். அதனை பேக்ஸில் அனுப்ப சொல்லி, நான் மருத்துவ பரிசோதனைகள் முடித்து 10 நாட்களில் வந்துவிடுவேன் என அந்த சம்மனுக்கு பதில் அளித்தேன்.

ஆனால், மீண்டும் 9ம் தேதி வரச்சொல்லி சம்மன் அனுப்பினார்கள். மருத்துவ பரிசோதனைகள் முடித்து நான் ஜூலை 12ம் தேதி சென்னை வந்துவிடுவேன், அதன் பின்னர் எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கடிதம் அனுப்பினேன்.

சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன், முழு ஒத்துழைப்பு தருவதாகவும் சொன்னேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள். நான் மருத்துவத்துக்காக சென்றேனே தவிர, சுற்றுலா செல்லவில்லை. ஆனால், அவரவர் கற்பனைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

திமுகவின் சட்டப்பேரவை கொறடாவாக நான் உள்ளேன். சமீபத்தில் 3 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகமான வினாக்களை நான் தான் எழுப்பினேன். அது என்னுடைய கடமை. நான் பேசவே கூடாது என அவர்கள் நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. இனி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை, குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது” என்றார்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதிலடி

பதிவு: திங்கட்கிழமை,  ஜூலை  13, 2026,  ஆனி  29, பாரபவ வருடம்  05.00 AM

தெஹ்ரான்,

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி போர் நிறுத்​தம் தொடர்​பான அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்​பட்​டது. ஆனால், ஈரான் கடலோர பகு​தி​யில் உள்ள வழித்​தடத்​தில்​தான் செல்ல வேண்​டும், ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்​றால் தாக்​குதல் நடத்தப்படும் என்று தொடர்ந்து ஈரான் பிடிவாதம் காட்டியது.

இந்​நிலை​யில், மார்​ஷல் தீவு எண்​ணெய் கப்​பல் அல் ரெஹா​யத், சவுதி கப்​பல் வெட்​யான், லைபீரியா கப்​பல் சைப்​ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்​ணெய் கப்​பல்​கள் ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தியை சமீபத்தில் கடந்​தன. அவற்​றின் மீது ஈரான் ராணுவத்​தினர் தாக்​குதல் நடத்​தினர். பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்​குதல் நடத்தியது.

இந்த சூழலில், அனுமதிக்கப்படாத பாதையில் சென்றதாக ஒரு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. இதுகுறித்து ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘ ஹார்முஸ் ஜலசந்தி அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும், இப்பகுதியில் அமெரிக்கத் தலையீடுகள் முடிவுக்கு வரும் வரையிலும் மூடப்பட்டிருக்கும்; எந்தக் கப்பலும் இதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஹார்முஸ் வழியாகச் சென்ற சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கொள்கலன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடங்கியது.

நேற்று அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கின என்றும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது. ‘சுமார் நான்கு மணி நேரம் கழித்து, தாக்குதல்கள் நிறைவடைந்தன. இந்த முறை சுமார் 140 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என அமெரிக்க ராணுவ கட்டளை மையமான சென்ட்காம் கூறியது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
 

ஞாயிறு, 12 ஜூலை, 2026

“உங்கள் குற்ற உணர்ச்சிக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்காதீர்” - முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் சாடல்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூலை  12, 2026,  ஆனி  28, பாரபவ வருடம்  00.15 AM

சென்னை,

‘உங்களின் குற்ற உணர்ச்சிக்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த முதல்வர் விஜய், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? உங்கள் குற்ற உணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டு கரூரில் தங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களை, அப்பொழுது கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த நீங்கள், முதல்வரான பிறகு அவர்களுக்கு “அரசுப் பணி” வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசுப் பணிகளை மட்டுமே இலக்காக வைத்து, இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

1. தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

2. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.

3. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.

4. அரசுப் பள்ளிகளில் 30.000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன.

5. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

6. நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

7. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர்.

8. அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள். மருத்துவர்கள். அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால் நீங்களோ இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்து, அரசு வேலையை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை வாரி தூற்றியுள்ளீர்கள்.

உங்களின் குற்றவுணர்ச்சியை திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த நீங்கள், அரசு கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்?.

டெட், டிஆர்பி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசு பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கையில், துறை வாரியான ஆள்சேர்ப்பு மற்றும் பணி நியமனத்திற்கான கால அட்டவணையை உங்கள் அரசு ஏன் வெளியிடவில்லை?

எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் ஜோசப் விஜய். கரூர் மக்களுக்கு எப்படி ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களோ அதே போல, மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும். அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

சனி, 11 ஜூலை, 2026

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம்


 பதிவு: சனிக்கிழமை,  ஜூலை  11, 2026,  ஆனி  27, பாரபவ வருடம்  01.30 AM

சென்னை,

தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள நிலை​யில், திருச்சி கிழக்​கு, கரூர், விராலிமலை, பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்தலில் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகு​தியை ராஜி​னாமா செய்​தார். இந்த நிலையில் திருச்சி கிழக்​கில் அவர் வெற்றி பெற்​றதை எதிர்த்​து, அத்​தொகுதி திமுக வேட்​பாளர் இனிகோ இருதய​ராஜ் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இதே​போல, கரூரில் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) தேர்​தல் வெற்​றியை எதிர்த்து தவெக வேட்​பாளர் வி.பி.ம​தி​யழகன், விராலிமலை​யில் சி.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் கே.கே.செல்​லப்​பாண்​டியன், பெருந்​துறை​யில் எஸ்​.ஜெயக்​கு​மாரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் தோப்பு வெங்​க​டாச்​சலம் ஆகியோர் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளனர். அம்​பாச​முத்​திரத்​தில் இசக்கி சுப்​பையா (அதி​முக) வெற்றி பெற்​றது செல்​லாது என்று அறிவிக்​கக் கோரி தொகுதி வாக்​காளர் காந்​தி​ம​தி​நாதன் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இதற்​கிடையே, அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், எஸ்​.ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகிய 4 பேரும் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர். இந்​நிலை​யில், தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள மேற்​கண்ட 5 தொகு​தி​களுக்​கும் இடைத் தேர்​தல் நடத்த தடை விதிக்​கு​மாறும், தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடு​மாறும் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்த வழக்​கறிஞர் கே.வெங்​க​டாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.

‘தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும்​போது இடைத் தேர்​தல் நடத்​தப்​பட்​டால், வழக்​கின் நோக்​கம் அர்த்​தமற்​ற​தாகி​விடும். வழக்​கு​களை நிலு​வை​யில் வைத்​துக் கொண்டு இடைத் தேர்​தலை நடத்​தி​னால், தேவையற்ற சட்ட சிக்​கலை ஏற்​படுத்​தி​விடும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நடை​பெற்ற வாதம்

மனு​தா​ரர் தரப்​பு வழக்​கறிஞர் வி.ஆர்​.சண்​முக​நாதன்

நிலுவை வழக்கு விசா​ரணைக்​குப் பிறகு, தேர்​தலில் தோல்​வி அடைந்​தவரை வெற்றி பெற்​றவ​ராக உயர் நீதி​மன்​றம் ஒரு​வேளை அறிவிக்​கக்​கூடும். அதே நேரம், இடைத் தேர்​தலில் ஒரு எம்​எல்ஏ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டால், ஒரே தொகு​திக்கு 2 எம்​எல்​ஏக்கள் என்ற நிலை உரு​வாகும். எனவே, தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும்​வரை அந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் நடத்​தக்கூடாது என உச்ச நீதி​மன்​றம் பல​ வழக்​கு​களில் தீர்ப்​பளித்​துள்ளது.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏஆர்​எல். சுந்​தரேசன் மற்​றும் நிரஞ்​சன் ராஜகோ​பாலன்: பல தேர்​தல் வழக்​கு​கள் குறை​பாடு​களு​டன் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதுகுறித்த ஆவணங்​கள் தேர்​தல் ஆணை​யத்​துக்கு வரவில்​லை. அதனால், அவற்​றின்​மீது தேர்​தல் ஆணை​யம் எந்த நிலைப்​பாட்​டை​யும் எடுக்க முடி​யாது. மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டப்​படி, காலி​யாக உள்ள தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் நடத்துவது அவசி​ய​மான ஒன்​று.

தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண்

தேர்​தல் வழக்​கு​கள் தொடரப்​படு​வதற்கு முன்பே முதல்​வர் விஜய் உள்​ளிட்​டோர் தங்​கள் எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டனர். அவர்​கள் ராஜி​னாமா செய்​யும்​போது எந்த தேர்​தல் வழக்​கும் நிலு​வை​யில் இல்​லை. முதல்​வர் விஜய் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜி.​மாசிலாமணி: மனு​தா​ரர் இத்தொகு​தி​களின் வாக்​காளர் அல்ல.அவர் வழக்கு தொடர எந்த முகாந்​திர​மும் இல்​லை. மேலும், காலி தொகு​தி​களில் இடைத் தேர்​தல் நடத்​து​வ​தா, வேண்​டாமா என முடிவு எடுக்​கும் அதி​காரம் தேர்​தல் ஆணை​யத்​துக்கு மட்​டுமே உள்​ளது. இவ்​வாறு வாதம் நடந்​தது.

இதையடுத்​து, நீதிப​தி​கள் பிறப்​பித்​துள்ள உத்​தர​வு

தேர்​தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தலை நடத்​துவதன் மூலம் அரசின் பணம் வீணாக செல​விடப்​படு​வதுடன், ஒரே தொகு​திக்கு 2 எம்எல்ஏக்கள் என்ற நிலை உரு​வாகி அரசி​யல் சாசன பிரச்​சினை எழும். அதே​நேரம், தேர்​தல் வழக்​கு​கள் தொடருவதற்கு முன்​பாகவே அத்தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்கப்​பட்​டன என்ற வாதத்தை​யும் ஆராய வேண்​டி​யுள்ளது.

எனவே, இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம், மத்​திய அரசு, சட்​டப்​பேர​வைச் செயலர் மற்​றும் முதல்​வர் விஜய், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகியோர் 3 வாரங்​களில் பதில் அளிக்க வேண்​டும். அது​வரை இந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் தொடர்​பான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் வெளி​யிடக் கூடாது. இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி​கள், விசா​ரணையை ஜூலை 31-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்.

வியாழன், 2 ஜூலை, 2026

தவெக எம்எல்ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் - கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை - செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்குத் தொடர்பா?

பதிவு: வியாழக்கிழமை,  ஜூலை  02, 2026,  ஆனி  18, பாரபவ வருடம்  04.10 AM

சென்னை,

தமிழக சபா​நாயகருக்கு எதி​ராக செயல்​பட, ஆளும் தவெக எம்​எல்​ஏ.​விடம் ரூ.35 கோடி பேரம் பேசி​ய​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக 3 பேரைப் போலீ​ஸார் கைது செய்து தீவிர​மாக விசா​ரித்தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், 234 தொகு​தி​களில் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் (தவெக) 108 இடங்​களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​தது. இதையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கிய காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட்​டு​கள், விடு​தலைச் சிறுத்​தைகள், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆகிய கட்​சிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரி​வித்​தன. இதையடுத்​து, விஜய் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றுக் கொண்​டார்.

சட்​டப்​பேர​வை​யில் நம்​பிக்கை வாக்​கெடுப்பின் போது அதி​முக எம்​எல்​ஏக்​களின் ஒரு பிரி​வினர் தவெக​வுக்கு ஆதரவு அளித்தனர். அப்​போது, எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க கு​திரை பேரம் நடை​பெற்​ற​தாக குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டன. தற்​போது ஒவ்​வொரு கட்​சி​யினரும் வெவ்​வேறு கட்​சிக்​குத் தாவி வரு​கின்​றனர். அதோடு தமிழக அரசு 6 மாதங்​களில் கவிழும் என்று எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து விமர்​சித்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராகத் தீர்​மானம் கொண்டு வர உள்​ள​தாக​வும் ஆளும் கட்சி உறுப்​பின​ராக இருந்​தா​லும் நாங்​கள் சொல்​வது போல் கேட்டு சபா​நாயகருக்கு எதி​ராக வாக்​களிக்க வேண்​டும் என்​றும் கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ என்​.இளை​ய​ராஜா​விடம் சிலர் பேரம் பேசிய தகவல் தற்​போது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: 

கிருஷ்ணகிரி மாவட்​டம், ஊத்​தங்​கரை சட்​டப்​பேர​வைத் தொகு​தி​ தவெக எம்​எல்ஏ டாக்​டர் என்​.இளை​ய​ராஜாவை, சில நாட்​களுக்கு முன்பு சென்​னையைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு என்ற நபர் செல்​போனில் தொடர்பு கொண்​டுள்​ளார். அப்​போது, தான் கருத்​துக் கணிப்பு நிறு​வனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வரு​வ​தாக​வும், முக்​கிய அரசி​யல் கட்​சி​யைச் சேர்ந்த சிலரின் சார்​பில் பேசுவ​தாக​வும் கூறி நேரில் சந்​திக்க விருப்​பம் தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

ஆனால், வேறு பணி​யில் இருப்​ப​தாக கூறி எம்​எல்ஏ இளை​ய​ராஜா அந்த அழைப்பை துண்​டித்​துள்​ளார். அதன் பின்​னரும் மீண்​டும் தொடர்பு கொண்​ட​தாக கூறப்​படும் திரு​நாவுக்​கரசு, தமிழக சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரப்பட உள்​ள​தாக​வும், அந்த தீர்​மானத்​தின் மீதான வாக்​கெடுப்​பின் போது தாங்​கள் சொல்லும் வகை​யில் செயல்பட வேண்​டும் என்​றும் கூறிய​தாக தெரி​கிறது.

அதற்கு பிர​திபல​னாக ரூ.35 கோடி வரை வழங்க தயா​ராக இருப்​ப​தாக ஆசை வார்த்தை கூறிய​தாக​வும், அதற்கு இளை​ய​ராஜா மறுப்பு தெரி​வித்த போது, ‘‘இந்த விவ​காரம் குறித்து வெளி​யில் கூறி​னால் உங்​களுக்​கும், உங்​கள் குடும்​பத்​தினருக்​கும் பின்​விளைவு​கள் ஏற்​படும்’’ என்று மிரட்​டல் விடுத்​த​தாக​வும் கடந்த மாதம் 29-ம் தேதி எம்​எல்ஏ இளை​ய​ராஜா சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் புகார் அளித்​தார்.

அதில், ‘‘மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சட்​டப்​பேரவை உறுப்​பின​ரான என்னை சட்​ட​ விரோத​மாகச் செல்​வாக்கு செலுத்த முயற்​சித்​ததுடன், லஞ்​சம் வழங்க முன்​வந்​தும், உயிருக்கு அச்​சுறுத்​தல் விடுத்​தும் செயல்​பட்​ட​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்​படை​யில், திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்​தினர். செல்​போன் அழைப்பு விவரங்​கள், தொழில்​நுட்ப ஆதா​ரங்​கள் மற்​றும் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில், சென்னை அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு, திருச்​சி​யைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த தியாக​ராஜன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்​தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடை​பெற்ற விசா​ரணை​யில், திமுக முன்​னாள் அமைச்​சரும், கோவை தெற்கு தொகுதி எம்​எல்​ஏவு​மான செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக் குமார், இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட நரேஷை சென்​னை​யில் சந்​தித்​தது தெரிய வந்​துள்​ளது என்று போலீஸ் தரப்​பில் கூறப்​பட்​டுள்​ளது. 

மேலும், செந்​தில் பாலாஜி மற்​றும் அசோக் குமார் ஆகியோரின் அறி​வுரை​யின்​படியே, எம்​எல்ஏ இளை​ய​ராஜாவை திரு​நாவுக்​கரசு தொடர்பு கொண்டு ரூ.35 கோடி பேரம் பேசி​ய​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் மேலும் யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது, கருத்​துக் கணிப்பு நிறு​வனம் என்ற பெயரில் அரசி​யல் தொடர்​பு​கள் ஏற்​படுத்​தப்​பட்​ட​தா, பின்​னணி​யில் வேறு முக்​கிய நபர்​கள் உள்​ளனரா அல்​லது ஆட்​சி​யைக் கவிக்​கும் நோக்​கின் முதல் கட்ட முயற்​சியா என்பது உட்பட பல்​வேறு கோணங்​களில் போலீ​ஸார் தீவிர​மாக வி​சா​ரித்து வரு​கின்​றனர்.

கைது செய்​யப்​பட்ட 3 பேரையும் போலீஸார் காவலில்​ எடுத்​து வி​சா​ரிக்​கும்​ போது மேலும்​ பல திடுக்​கிடும்​ தகவல்​கள்​ வெளி​யாக வாய்​ப்​புள்​ள​தாக கூறப்​படுகிறது.

கரூரில் 2 பேரிடம் விசாரணை

இந்த வழக்கில் கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45), அதன் பங்குதாரர் அதிபன் ரமேஷ் (42) ஆகியோரது வீடுகளில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். 

இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் திமுக பிரமுகர்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 1 ஜூலை, 2026

அரசிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி - 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை - தலைமறைவான முன்னாள் எம்எல்ஏவைக் கைது செய்ய தீவிரம்

பதிவு: புதன்கிழமை,  ஜூலை  01, 2026,  ஆனி  17, பாரபவ வருடம்  06.00 AM

சென்னை,

தமிழகத்தில் தனியார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​களின் தரம் உயர்​வு, கட்​டிடம் கட்ட திட்ட அனு​மதி உள்​ளிட்​ட​வற்றை அரசிடம் இருந்து பெற்​றுத் தரு​வ​தாக ரூ.200 கோடி வரை மோசடி நடை​பெற்​ற​தாக பரபரப்பு குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. 

இதுதொடர்​பாக சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 50-க்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிடம் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

சென்னை தி.நகரில் செயல்​பட்டு வரும் தனி​யார் பள்​ளி​கள் சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில், பி.டி.அரசகு​மார் மீது சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் சமீபத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அந்த புகாரில், 

‘‘தமிழகம் முழு​வதும் உள்ள தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​களின் தரம் உயர்​வு, கூடு​தல் வகுப்​பறை​கள் அமைக்க அனு​ம​தி, கட்​டிட திட்ட ஒப்​புதல் உள்​ளிட்ட பல்​வேறு அரசு அனு​ம​தி​களை விரை​வாக பெற்​றுத் தரு​வ​தாக உறு​தி​யளித்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்​துள்​ளார்’’ என்று குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இதையடுத்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கினர். விசா​ரணை​யின் அடிப்​படை​யில், இந்த வழக்​கில் தொடர்​புடைய​தாகக் கூறப்​படும் திமுக செய்​தித் தொடர்​புக் குழுத் துணைத் தலை​வ​ராக இருந்த பி.டி.அரசகு​மார் கடந்த 27-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார்.

பின்​னர் அவர் நீதி​மன்றத்​தில் ஆஜர்​படுத்​தப்பட்​டு, நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்த மோசடி​யில் முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் உட்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்​ப​தாக விசா​ரணை​யில் தெரிய வந்துள்​ளது. தலைமறை​வாக உள்ள முன்​னாள் எம்​எல்​ஏ​வைத் தனிப்​படை போலீ​ஸார் தீவிர​மாகத் தேடி வரு​கின்​றனர்.

இதற்​கிடை​யில், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், 

‘‘தனி​யார் பள்​ளி​களுக்கு அரசு அங்​கீ​காரம் மற்​றும் பல்​வேறு அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்​கப்​பட்​டிருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது’’ என்று உறு​திப்​படுத்தி உள்​ளார்.

இந்த வழக்​கில் தொடர்​புடைய மற்ற குற்​ற​வாளி​களைக் கண்​டறிவது, பணப் பரிவர்த்​தனை​களை ஆய்வு செய்​வது மற்​றும் கூடு​தல் சாட்​சி​யங்​களைச் சேகரிப்​பது போன்ற பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​வ​தாக​வும் அவர் கூறி​யுள்​ளார். 

இந்த மோசடி​யால் பாதிக்​கப்​பட்ட தனி​யார் பள்ளி நிர்​வாகி​கள் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கம் அல்​லது சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு அலு​வல​கத்தை நேரில் அணுகி அல்​லது தொலைபேசி மூலம் புகார் அளிக்​கலாம். புகார்​தா​ரர்​களின் அடை​யாளம் மற்​றும் விவரங்​கள் ரகசி​ய​மாக வைக்​கப்​படும் என்​று சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உறுதி அளித்​துள்​ளார்.

இதையடுத்​து, பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த பள்ளி நிர்​வாகி​கள் தொடர்ந்து புகார் அளித்து வரு​கின்​றனர். போலீ​ஸார் நடத்​திய விரி​வான விசா​ரணை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த தனி​யார் பள்​ளி​களிடம் ரூ.25 லட்​சம் முதல் ரூ.3 கோடி வரை வசூலிக்​கப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. 

இதனால், இந்த மோசடி​யில் சிக்​கி​யிருக்​கும் மொத்த தொகை ரூ.200 கோடியைத் தாண்ட கூடும் என்ற சந்​தேகம் விசா​ரணை அதி​காரி​களுக்கு ஏற்​பட்​டுள்​ளது.

இது​வரை 50-க்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்​ளி​களின் நிர்​வாகி​களிடம் போலீ​ஸார் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்தி வாக்​குமூலங்​களைப் பதிவு செய்​துள்​ளனர். மேலும், மாவட்ட வாரி​யாகப் பாதிக்​கப்​பட்ட பள்​ளி​களின் முழு​மை​யான பட்​டியலை சமர்ப்​பிக்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட தனி​யார் பள்​ளி​கள் சங்​கங்​களுக்​கும் போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

இந்த மோசடி தொடர்​பாக மேலும் பலர் புகார் அளிக்க முன்​வரக் கூடும் என்​ப​தால், வழக்​கின் பரி​மாணம் இன்​னும் விரிவடை​யும். எனவே, பணப் பரிவர்த்​தனை​கள், வங்​கிக்கணக்கு விவரங்​கள் மற்​றும் தொடர்​புடைய ஆவணங்​களை ஆய்​வு செய்​து போலீ​ஸார்​ வி​சா​ரணை​யைத்​ தீவிரப்​படுத்​தி உள்​ளனர்​.

செவ்வாய், 30 ஜூன், 2026

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - காலி தொகுதிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது


பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஜூன்  30, 2026,  ஆனி  16, பாரபவ வருடம்  00.50 AM

சென்னை,

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.

கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ராஜி​னாமா செய்​துள்​ளார். இதன்​மூலம் காலி தொகு​தி​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக படு​தோல்வி அடைந்​தது. இதையடுத்து அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்கு எதி​ராக எஸ்​.பி.வேலுமணி தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் போர்க்​கொடி தூக்​கினர். 

சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி நடை​பெற்ற நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் 25 பேரும் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். இதனால், அவர்​களின் கட்சிப் பொறுப்​பு​கள் பறிக்​கப்​பட்​டன. அதைத் தொடர்ந்​து, பழனி​சாமி​யுடன் சமா​தான​மாகினர்.

இருப்​பினும் அவர்​கள் ஏற்​கெனவே வகித்த கட்​சிப் பதவி​கள் திரும்ப வழங்​கப்​பட​வில்​லை. இதற்​கிடையே மரகதம் குமர​வேல், ஜெயக்​கு​மார், சத்​ய​பா​மா, இசக்கி சுப்​பையா ஆகியோர் தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து, தவெக​வில் இணைந்​தனர். தொடர்ந்து விராலிமலை எம்​எல்ஏ சி.​விஜய​பாஸ்​கரும் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். அவரும் தவெக​வில் இணை​ய உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அதிமுகவில் இருந்து 6-வது எம்எல்ஏ: இந்​நிலை​யில், கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதி​முக முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நேற்று ராஜி​னாமா செய்​தார். இதற்​கான கடிதத்தை சென்னை தலை​மைச் செயல​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகரிடம் வழங்​கி​னார். அவரின் ராஜி​னாமா கடிதத்தை ஏற்​ப​தாக பேர​வைத் ​தலை​வர் பிர​பாகரும் உடனே அறி​வித்​தார்.

இதுகுறித்து சட்​டப்​பேர​வைத் தலை​வர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், 

‘‘சட்​டப்​பேரவை விதி 21-ன்​ படி கரூர் தொகுதி எம்​எல்ஏ எம்​.ஆர்​.​ விஜய​பாஸ்​கர், தனது பதவி வில​கல் கடிதத்​தை, தனது கைப்பட எழுதி என்​னிடம் அளித்​துள்​ளார். 

அந்த கடிதம் பேரவை விதி 22-ன்​படிமுறை​யாக உள்​ள​தால் ஏற்​றுக் கொள்​கிறேன்’’ என்று கூறப்​பட்​டுள்​ளது. சில நாட்​களுக்கு முன்பு எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரை அதி​முக​வின் கொள்​கைப் பரப்பு இணைச் செய​லா​ள​ராக பழனி​சாமி நியமித்​தார்.

ஆனாலும், கரூர் மாவட்​டச் செய​லா​ளர் பதவி அவருக்கு வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக கடும் அதிருப்​தி​யில் இருந்த அவர், தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். விரை​வில் தவெக​வில் அவர் சேர​உள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. 

எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ராஜி​னாமா மூலம், சட்​டப்​பேர​வை​யில் அதி​முக எம்​எல்​ஏக்​களின் பலம் 41 ஆக குறைந்​துள்​ளது. காலி​யான தொகு​தி​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

 
பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஜூன்  30, 2026,  ஆனி  16, பாரபவ வருடம்  00.40 AM

சென்னை,

“வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் அரசு சேவைகள் மக்களிடம் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டுக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள் மாநாடு இன்று காலை முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது. அதில் அவர் பேசியது: “வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் முடிவு செய்துதான், நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சினை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.

மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும், அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.

மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.

மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த் துறை, காவல் துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும், சமரசமும் இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்ப்படுகளை செய்தே ஆக வேண்டும்.

மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வி என்பது ஒரு கொண்டாட்டம். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும்.

மேலும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துச் செயல்பட வேண்டும். ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.

மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

வெளிப்படைத் தன்மை என்பது அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும். அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித் துறை கண்காணிக்க வேண்டும்.

கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுப்பணித் துறை (PWD), அறநிலையத் துறை, தீயணைப்பு - மீட்பு மற்றும் வருவாய்த் துறைகள் அனைத்து முக்கிய நிகழ்வுகளின்போதும் காவல்துறையுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான காயப்படுத்தல் வழக்குகள் மற்றும் கொலைகளுக்கு, நில தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரமைக்கப்பட்டு இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் மதிப்பாய்வு நடத்தி அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கவரேஜ் இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் சிசிடிவி நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு, சிசிடிவி கவரேஜ் ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

அதேபோல் CoP/IGP/DIG/SP ஆகியோர் ஆய்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவையிலுள்ள விசாரணை வழக்குகளின் நிலை ஆகியவற்றையும் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் எப்ஐஆர் பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித் துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி (JJ) சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.

கள்ளச் சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் (Illicit distillation) இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை அமலாக்கம் மட்டுமே தீர்க்க முடியாது - போதைப்பொருள் தேவை குறைப்புக்கும் (Drug Demand to be eliminated) சம கவனம் செலுத்தப்பட வேண்டும். சுகாதாரத் துறை அனைத்து மாவட்டங்களிலும் போதைமுறிவு முகாம்களை நடத்த வேண்டும். பழக்கத்திற்கு உள்ளாக்கும் போதை மருந்துகளாக சில மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கலால் துறை அதிகாரிகள் அனைவரும் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். NCORD கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும்.

திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை மண்டலங்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களிடையே கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப்பொருள்களின் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகளில் இலக்கு கொண்ட விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் நடத்தப்பட வேண்டும்.

காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் திருட்டை கண்டறிந்து சுரங்க, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய, சமூகங்களை ஏமாற்றும் PONZI மற்றும் பலமட்ட சந்தைப்படுத்தல் திட்டங்கள் தொடர்கின்றன.

சட்டங்களைக் கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்த, தொடர்புடைய அனைத்து துறைகளும் திறம்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் உரிய கால இடைவெளியில் தணிக்கை செய்ய பொறுப்பேற்கப்பட வேண்டும். உரிமம் இல்லாமல் எந்த அலகும் இயங்கவே கூடாது.

புயலால் பாதிக்கப்படும் கடலோர மாவட்டங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, பேரிடர் தயார்நிலை பற்றி கட்டமைக்கப்பட்ட தணிக்கை நடத்தப்பட வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பருவமழை காலத்திற்கு முன் மீட்பு உள்கட்டமைப்பில் உள்ள தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பது வருத்தமாக உள்ளது. விபத்து அதிகமாக நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உரிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தலைக்கவசம் அணிவது, சீட்பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். புலம்பெயர்ந்தோர், தாக்குதல் அல்லது சுரண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கட்டாயப் பதிவு அமல்படுத்தப்பட வேண்டும்.

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களை குறிவைத்து டிஜிட்டல் கைது மோசடி, ஓடிபி மோசடி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி அதிகரித்துள்ளன. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து சைபர் குற்ற காவல் நிலையங்களும், குற்றங்களைத் தடுக்க மற்றும் கண்டறிய தீவிரமாக பணியாற்றிட வேண்டும்.

காவல் துறை ஆணையர் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொலை, போக்சோ மற்றும் பிற முக்கியமான வழக்குகள் தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுடனும் மாதந்தோறும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். முந்தைய மாதத்திற்கான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆவணப்படுத்தப்பட வேண்டும்; இது மூத்த காவல் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும். 

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். தெளிவும், வெளிப்படைத் தன்மையும் இருக்க வேண்டும்” என்று முதல்வர் விஜய் கூறினார்.
 

திங்கள், 29 ஜூன், 2026

50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் - தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் முகாம்

பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  29, 2026,  ஆனி  15, பாரபவ வருடம்  03.10 AM

சென்னை,

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​கள், அங்​கன்​வாடி மையங்​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், பள்​ளி​கள் என மொத்​தம் 43,051 மையங்​களில் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் சுமார் 50 லட்​சம் பேருக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்​டது. சென்னை பால​வாக்​கத்​தில் குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்​கி, முகாமை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​தார்.

இந்​தி​யா​வில் போலியோவை (இளம்​ பிள்ளை வாதம்) ஒழிப்​ப​தற்​காக 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்கு ஆண்​டு​தோறும் 2 தவணை​களில் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வந்​தது. இதையடுத்​து, போலியோ ஒழிக்​கப்​பட்ட நாடு​கள் பட்​டியலில் இந்​தி​யா​வும் சேர்ந்​துள்​ளது. இதன்​பிறகு, போலியோ பாதிப்பு மீண்​டும் ஏற்​ப​டா​மல் தடுக்​கும் வித​மாக, ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​படு​கிறது. அதன்​படி, இந்த ஆண்​டுக்​கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழு​வதும் நேற்று நடை​பெற்​றது.

தமிழகத்​தில் 5 வயதுக்கு உட்​பட்ட 52.91 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், அரசு மருத்​து​வ​மனை​கள், அங்​கன்​வாடி மையங்​கள், சத்​துணவு மையங்​கள், பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 43,051 மையங்​களில் முகாம் அமைக்​கப்​பட்​டிருந்​தது.

சென்னை பால​வாக்​கத்​தில் உள்ள அரசு ஆதி​தி​ரா​விடர் நல உயர்​நிலைப் பள்​ளி​யில் நடை​பெற்ற முகாமில் முதல்​வர் விஜய் கலந்​து​கொண்​டு, குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கி​யும், அவர்​களுக்கு பிடித்த ‘டெடி பியர்’ பொம்​மை​களை பரி​சாக கொடுத்​தும் போலியோ சொட்டு மருந்துமுகாமைத் தொடங்கி வைத்​தார்.

சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகா​தா​ரம், நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்​குநர் சோமசுந்​தரம், சோழிங்​கநல்​லூர் தொகுதி எம்​எல்ஏ சரவணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். வில்​லி​வாக்​கம் தொகு​திக்கு உட்​பட்ட ராஜமங்​கலம் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யம், அயனாவரம் மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் குழந்​தைகளுக்கு அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா போலியோ சொட்டு மருந்து வழங்​கி​னார்.

தமிழகம் முழு​வதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடை​பெற்​றது. பெற்​றோர் தங்​களது குழந்​தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்​டுச் சென்றனர். அழுது அடம்​பிடித்த குழந்​தைகளுக்கு விளை​யாட்டு காட்​டி​யும், சாக்​லேட், பொம்​மை​கள் வழங்​கி​யும் மருந்து வழங்​கப்​பட்​டது.

பயணத்​தில் இருக்​கும் குழந்​தைகளின் வசதிக்​காக பேருந்​து, ரயில், விமான நிலை​யங்​கள், சோதனைச் சாவடிகளி​லும் மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தது. தொலை​தூரம் மற்​றும் எளி​தில் வந்து செல்ல முடி​யாத பகு​தி​களுக்கு நடமாடும் குழு​வினர் சென்​று, அங்​குள்ள குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்​கினர். இந்த பணி​யில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக​னங்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டன.

பிற மாநிலங்​களில் இருந்து வந்து தமிழகத்​தில் வசிப்​பவர்​களின் குழந்​தைகளுக்​கும் மருந்து வழங்​கப்​பட்​டது. விடு​படும் குழந்​தைகளை அடை​யாளம் காண, சொட்டு மருந்து வழங்​கப்​பட்ட குழந்​தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்​கப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கும் பணி​யில் சுகா​தா​ரப் பணி​யாளர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், ஆசிரியர்​கள், தன்​னார்​வலர்​கள் என 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் ஈடு​படுத்​தப்​பட்​டனர். சென்​னை​யில் 5 வயதுக்கு உட்​பட்ட 5.56 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,646 மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இப்​பணி​யில் 6,564 பேர் ஈடு​பட்​டனர்.

சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 50 லட்​சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்​பட்​டுள்​ளது. விடு​பட்ட குழந்​தைகளுக்கு ஒரு வாரத்​துக்​குள் செவிலியர்​கள்​ வீடு வீடாக வந்​து சொட்​டு மருந்​து வழங்​கு​வார்​கள். இன்​றும், நாளை​யும் தற்​காலிக மையங்​களில் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என்​று அதிகாரிகள் தெரி​வித்​தனர்.

பி.டி அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி - பின்னணி குறித்து விசாரணை தீவிரம்


 பதிவு: திங்கட்கிழமை,  ஜூன்  29, 2026,  ஆனி  15, பாரபவ வருடம்  03.00 AM

சென்னை,

தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் பெற்​றுத் தரு​வ​தாக ரூ.100 கோடி மோசடி விவ​காரத்​தில் திமுக நிர்வாகி கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், பின்​னணி​யில் உள்​ளவர்​கள் குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்​னை, தி.நகரில் செயல்​பட்டு வரும் தனி​யார் பள்ளி சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் அண்​மை​யில் புகார் ஒன்று அளிக்​கப்​பட்​டது. அதில், ‘கடந்த 2 ஆண்​டு​களாக தமிழகத்​தில் உள்ள தனி​யார் பள்ளி நிர்​வாகி​கள் தங்​கள் பள்​ளி​களுக்​கான அங்​கீ​காரம், தரம் உயர்த்​துதல் மற்​றும் திட்ட அனு​மதி ஆகிய​வற்​றைப் பெறு​வ​தில் சிரமங்​களை எதிர் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, சென்​னை, சாலிகி​ராமத்​தில் ‘தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்​கம்’ என்ற பெயரில் பதிவு செய்​யப்​ப​டாத சங்​கத்தை நடத்தி வந்த சாலிகி​ராமம், மெஜஸ்​டிக் காலனியைச் சேர்ந்த பி.டி அரசகு​மார் (59) என்​பவர் தனக்​குள்ள அரசி​யல் மற்​றும் அதி​கார தொடர்​பு​களைப் பயன்​படுத்தி தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்ளி தரம் உயர்​வு, திட்ட அனு​மதி உள்பட பிற சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி தமிழகம் முழு​வதும் உள்ள பல தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிட​மிருந்து பணம் பெற்​றுக் கொண்​டு,உறு​தி​யளித்​த​படி அனு​ம​தி​கள் பெற்​றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்​கும் அதி​க​மான தொகையை வசூலித்து ஏமாற்றி உள்​ளார்.

எனவே, பி.டி அரசகு​மார் மற்​றும் அதன் நிர்​வாகி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என புகாரில் தெரிவிக்​கப்​பட்டு இருந்​தது. இதுகுறித்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, புகாருக்​குள்​ளான திமுக நிர்​வாகி​யான பி.டி.அரசகு​மாரை நேற்​று​முன்​தினம் கைது செய்​தனர். இவரது பின்​னணி​யில் முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வரும், மேலும் சிலரும் இருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதையடுத்​து, இந்த மோசடி​யின் பின்​னணி​யில் வேறு யார்? யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது என்ற பெயர் பட்​டியலை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர். அதன் அடிப்​படை​யில் அடுத்​தக்​கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என போலீ​ஸார்​ தெரி​வித்​துள்​ளனர்​.

ஞாயிறு, 28 ஜூன், 2026

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் - 2 மதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலக மறுப்பு: வைகோ அதிர்ச்சி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  05.05 AM

சென்னை,

தி​முக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக, மதி​முக பொதுக்​குழுக் கூட்​டத்​தின் முடி​வில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ அறி​வித்​தார். இந்​நிலை​யில், மதி​முக​வின் 2 எம்​எல்​ஏக்​களும் ராஜி​னாமா செய்ய மறுத்​துள்​ள​தால் வைகோ அதிர்ச்சி அடைந்​துள்​ளார்.

மதி​முக​வின் 32-வது பொதுக்​குழு கூட்​டம் சென்னை அண்ணா நகரில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் அவைத் தலை​வர் ஆடிட்​டர் ஆ.அர்​ஜுன​ராஜ் தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில், பொதுச் செய​லா​ளர் வைகோ, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி., பொருளாளர் செந்​தில​திபன் முன்​னிலை வகித்​தனர். துணைப் பொதுச் செய​லா​ளர்​கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்​டர் ரொஹை​யா, பூமி​நாதன், ஜீவன், டாக்​டர் சி.கிருஷ்ணன் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்ட பொதுக்​குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​ட நிலை​யில், 2 எம்​எல்​ஏக்​கள் செந்​தில் செல்​வன், தி.​மு.​ராஜேந்​திரன் மட்​டும் கூட்​டத்​துக்கு வரவில்​லை.

பொதுக்​குழு​வில் திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் இருந்து மதி​முக வில​கு​வ​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறிவித்து, அதற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. தமிழகத்​தில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசுக்கு வாழ்த்​து, மேகே​தாட்டு அணைப் பிரச்​சினை​யில் புதிய நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என்ற கோரிக்​கையை அரசு திரும்​பப் பெற வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 23 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

​பின்னர், செய்​தி​யாளர்​களிடம் வைகோ கூறிய​தாவது: திமுக கூட்​ட​ணி​யில் இருந்து மதிமுக உடனடி​யாக வெளி​யேற வேண்​டும் என்ற கருத்தை பொதுக்​குழு உறுப்​பினர்​கள் அனை​வரும் ஒரு​மன​தாக வலி​யுறுத்​தினர். அவர்​களது விருப்​பத்​துக்கு இணங்க, கூட்​ட​ணி​யில் இருந்து வில​கும் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

தமிழகத்​தில் பாஜக​வின் ஆதிக்​கம் ஊடுரு​வக் கூடாது என்ற ஒரே காரணத்​துக்​காகவே, கடந்த 9 ஆண்​டு​களாக திமுக கூட்​ட​ணி​யில் உறு​தி​யாக நீடித்​தோம்.

தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு, அதி​முக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முயன்​ற​தாக பரவலாக செய்​தி​கள் வெளிவந்​தன. பரஸ்​பரம் எதிர் துரு​வங்​களாக இருந்த இரு கட்​சிகளும் இப்​படி ஒரு ரகசிய உடன்​படிக்​கையை மேற்​கொண்​டது உண்​மை​யாக இருக்​கு​மா​னால், அதை​விட பெரிய அரசி​யல் மோசடி வேறு இருக்க முடி​யாது. இந்த தகவலை அறிந்த உடனேயே திமுக உடனான உறவை முறித்​துக் கொள்ள முடிவு செய்​தோம்.

மதி​முக சார்​பில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர்​களில், சீர்​காழி எம்​எல்ஏ செந்தில் செல்​வன் ஏற்​கெனவே திமுக​வில் இணைந்​து​விட்​டார். கடையநல்​லூர் எம்​எல்ஏ ராஜேந்​திரன் பொதுக்​குழு​வில் பங்கேற்காவிட்டாலும், மதி​முக​விலேயே தொடர்​வ​தாக உறுதி அளித்​துள்​ளார்.

மதி​முக​வில் இருந்து வெளி​யேறிய முன்​னாள் துணைப் பொதுச் செய​லா​ளர், என் மீதும், என் மகன் துரை வைகோ மீதும் அபாண்​ட​மான குற்​றச்​சாட்​டு​களை சுமத்தி வரு​கிறார். முதல்​வர் விஜய்​யிடம் நான் ரூ.50 கோடி வாங்​கிய​தாக​வும், சென்னை ஓஎம்​ஆர், அண்ணா சாலை​யில் பிரம்​மாண்ட கட்​டிடங்​களை வாங்​கி​யுள்​ள​தாக​வும் கூறப்​படும் புகார்​கள் முற்​றி​லும் பொய்​யானவை.

இந்த பழிச்​சொற்​களுக்​குப் பின்​னால் இருந்து யாரோ ஒரு சிலர் அவரை இயக்​கு​கின்​றனர். எனவே, இதுதொடர்​பான செய்​தியை வெளி​யிட்ட நாளிதழ் மற்​றும் புகார் கூறிய நபர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்​ளேன். திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறி​யுள்ள நாங்​கள், முதல்​வர் விஜய் தலை​மையி​லான ஆட்​சிக்கு ஆதரவு அளிக்​கிறோம். வரவிருக்​கும் இடைத்​தேர்​தலில் தவெகவை ஆதரிப்​போம்.

உள்​ளாட்​சித் தேர்​தலிலும் தவெக​வுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்​ளது. தவெக ஆட்​சி​யில் ஊழல் ஒழிக்​கப்​பட்​டுள்​ளது. சமூக நீதி மற்​றும் இரு​மொழிக் கொள்​கை​யில் அவர்​கள் உறு​தி​யாக உள்​ளனர். அண்​ணா​வின் கொள்​கைகளைப் பின்​பற்றி வரு​வ​தால், தவெக அரசின் செயல்​பாடு​கள் எங்​களுக்கு திருப்தி அளிக்​கின்​றன.

எங்​கள் கட்சி எம்​எல்​ஏவை திமுக தன் பக்​கம் இழுத்​திருப்​பது ஆரோக்​கிய​மான அரசி​யல் அல்ல. இதை ‘குதிரை பேரம்’ என்று சொல்​வ​தா, ‘ஒட்டக பேரம்’ என்று சொல்​வதா எனத் தெரிய​வில்​லை. மேலும், எங்​களது 2 எம்​எல்​ஏக்​களும் ராஜி​னாமா செய்​தால், அவர்​களுக்கு ஆதர​வாக இடைத்​தேர்​தலில் பிரச்​சா​ரம் செய்​வேன் என விஜய் கூறி​யிருந்​தார். ஆனால், எதிர்​வரும் இடைத்​தேர்​தலில் மதி​முக போட்​டி​யிடாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதற்​கிடையே, திமுக கூட்​ட​ணியில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற மதி​முக​வின் 2 எம்​எல்​ஏக்​களும் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்ய மறுப்பு தெரி​வித்​துள்​ளனர். இதனால், வைகோ மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

கடையநல்​லூர் எம்​எல்ஏ ராஜேந்​திரன் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: தொகுதி மக்​கள் நாள்​தோறும் என்​னிடம் வெளிப்​படுத்தி வரும் உணர்வை மதித்​தும், தலை​வர் வைகோ மீதோ, எம்​எல்​ஏ​வான என் மீதோ களங்​கம் படர்​வதைத் தவிர்க்​கும் பொருட்​டும் பதவி வில​கல் என்ற முடிவை தலைமை இப்​போது மேற்​கொள்ள வேண்​டாம். குறைந்​த​பட்​சம் 6 மாதம் பொறுத்​திருப்​போம். கூட்​டணி குறித்து தாங்​களும், கட்​சி​யும் எடுக்​கும் முடிவை மதிக்​கிறேன். எனவே, பதவி வில​கல் தொடர்​பாக வைகோ​விடம் இருந்து கிடைக்​கப்​பெற்ற உத்​தர​வை, என்​னால் செயல்​படுத்த இயலாது. அதனால், பொதுக்​குழு​வில் கலந்து கொள்​ள​வில்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் - செல்வப்பெருந்தகை மாற்றம்


 பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  05.00 AM

சென்னை,

தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராக விருதுநகர் எம்​.பி. மாணிக்​கம் தாகூரை நியமித்து காங்​கிரஸ் தேசிய பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

தமிழக காங்​கிரஸ் கமிட்டி தலை​வ​ராக செல்​வப்​பெருந்​தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டார். நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது அவரது செயல்​பாடு​களால் மூத்த தலை​வர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்​த​தாக கூறப்​படு​கிறது.

இதன் காரண​மாக அவர், எந்த நேரத்​தி​லும் மாற்​றப்​படலாம் என்ற பேச்சு எழுந்​தது. பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​ட​தாக அவரும் தொடர்ந்து கூறி வந்த நிலை​யில், தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராக விருதுநகர் எம்​.பி. மாணிக்​கம் தாகூரை நியமித்து அகில இந்​திய காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

இதுகுறித்து சத்​தி​யமூர்த்தி பவன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: 

நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 35 தொகு​தியி​லா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார். ஆனால், ப.சிதம்​பரத்தை கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்டு வந்து, தேசி​யத் தலை​மையை 28 இடங்​களுக்கு ஒப்​புக்​கொள்ள வைத்​தார் செல்​வப்​பெருந்​தகை. இதுத​விர, வேட்​பாளர்​கள் தேர்​வில் குளறு​படி நடந்​த​தாக தமிழக மகளிர் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ஹசீனா சையத் கிளப்​பிய குற்​றச்​சாட்டு சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதன் அடிப்​படை​யிலேயே, செல்​வப்​பெருந்​தகையை மாற்ற டெல்லி தலைமை முடிவு எடுத்​தது.

மாநிலத் தலை​வர் பதவியைக் கைப்​பற்ற கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, செல்​லக்​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோ​ரும் தீவிர​மாக முயற்சி மேற்​கொண்டு வந்​தனர். இந்த நிலை​யில், அகில இந்​திய காங்​கிரஸ் நிர்​வாகி பிர​வீன் சக்​ர​வர்த்​தி​யின் முழு ஆதர​வுடன் மாநிலத் தலை​வர் பதவியை மாணிக்​கம் தாகூர் கைப்​பற்​றி​யுள்​ளார். இவ்​வாறு காங்​கிரஸ் வட்​டாரங்​கள் கூறுகின்​றன.

சிவகங்​கை​யில் பிறந்த மாணிக்​கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்​கிரஸ் கட்​சி​யின் மாணவர் அமைப்​பில் (என்​எஸ்​யூஐ) இணைந்​தார். கடந்த 2009, 2019, 2024 மக்​களவை பொதுத் தேர்​தல்​களில் விருதுநகர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்று எம்​.பி.​யா​னார். 2014 பொதுத் தேர்​தலில் இத்​தொகு​தி​யில் தோல்​வியடைந்​தார். கட்​சி​யின் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களி​லும், பிற மாநிலங்​களின் தேர்​தல் பொறுப்​பாள​ராக​வும் பணி​யாற்​றி​யுள்​ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரக் களத்​தில் இருந்தே திமுகவை இவர் கடுமை​யாக விமர்​சித்து வரு​கிறார். 

முன்​னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை விரை​வில் காங்​கிரஸில் இருந்து விலகி திமுக​வில் இணைய உள்​ள​தாக​ தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

‘திரைக்கதை மன்னன்’ - கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஜூன்  28, 2026,  ஆனி  14, பாரபவ வருடம்  04.50 AM

சென்னை,

‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி

பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்று காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பிரபல இயக்​குநரும் நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ், மாரடைப்​பால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் ஸ்​டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள், ரஜினி​காந்த், கமல்​ஹாசன் உள்​ளிட்ட திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்​தினர். அரசு மரியாதையுடன் இறு​திச் சடங்​கு​கள் இன்று நடை​பெறுகின்​றன.

இயக்​குநர் கே.​பாக்​ய​ராஜ் 2 நாட்​களுக்கு முன்பு கோவா​வில் நடந்த நடிகை குஷ்பு மகள் திரு​மணத்​தில் கலந்​து​கொண்​டார். பின்​னர் சென்னை திரும்​பிய

அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்​கொண்ட பிறகு வீட்​டுக்கு வந்​தார். அப்​போது அவருக்கு திடீரென நெஞ்​சுவலி ஏற்​பட்​டுள்​ளது. உடனடி​யாக சென்னை கிரீம்ஸ் சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்​றி, அவர் உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, பாக்​யராஜ் உடல் மருத்​து​வ​மனை​யில் இருந்து நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அவரது வீட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது. அங்கு அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தி​னார். பின்​னர் பாக்​ய​ராஜின் மனைவி பூர்​ணி​மா, மகன் சாந்​தனு, மகள் சரண்யா வுக்கு ஆறு​தல் கூறி​னார்.

திமுக தலை​வர் ஸ்​டா​லின், எம்​.பி.க்​கள் டி.ஆர்.​பாலு, ஆ.ராசா ஆகியோ​ரும் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்தி, குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவித்தனர்.

அமைச்​சர்​கள் ராஜ்மோகன், வன்​னியரசு, விசிக தலை​வர் திரு​மாவளவன், புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம், காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார், மநீம தலை​வர் கமல்​ஹாசன், நடிகர் ரஜினி​காந்த், பிரபு, விக்​ரம்​பிரபு, ஜெய​ராம், சார்​லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்​குநர்​கள் மணிரத்​னம், பார்த்​திபன், ஆர்.சுந்​தர்​ராஜன், பி.​வாசு, பாண்​டிய​ராஜன், சமுத்​திரக்​கனி, ஹெச்​.​வினோத், லோகேஷ் கனக​ராஜ், சுசீந்​திரன். சந்​தான​பார​தி, இசை அமைப்​பாளர் தேவா உள்​ளிட்​டோர் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர்.

பெண்​கள் உட்பட ஏராள​மான பொது​மக்​கள், ரசிகர்​கள் நீண்ட வரிசை​யில் வந்து அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர். பாக்​ய​ராஜின் திரைப்​படக் காட்​சிகள், பிரபல வசனங்​களை பலரும் சமூக வலை​தளங்​களில் பகிர்ந்​து, அவரது நினை​வு​களை சோகத்​துடன் பகிர்ந்து வரு​கின்​றனர். பாக்​ய​ராஜ் மறைவையொட்டி முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்த் திரை​யுல​கின் தலைசிறந்த இயக்​குநர், நடிகர், திரைக்​கதை ஆசிரியர், வசனகர்த்​தா, இசை அமைப்​பாளர் என பன்​முகத் திறமை​யால் முத்​திரை பதித்த கே.​பாக்​ய​ராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்​சி​யும், ஆழ்ந்த வேதனை​யும் அடைந்​தேன்.

தனித்​து​வ​மான கதை​யாக்​கம், நகைச்​சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்​வியல் மற்​றும் குடும்ப உறவு​களின் ஆழமான உணர்​வு​களைப் பிர​திபலிக்​கும் திரைப்​படங்​கள் மூலம் தமிழ் மக்​களின் மனதில் நீங்கா இடம்​பிடித்த கே.​பாக்​ய​ராஜின் பங்​களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்​பரிய​தாகும். அவரது ஒவ்​வொரு படைப்​பும் பொழுது​போக்​கோடு, மனித நேயம் மற்​றும் சமூக விழு​மி​யங்​களைப் பேசும்; காலத்​தால் அழி​யாத நினை​வு​களாக என்​றும் நிலைத்​திருக்​கும். அவரது மறைவு தமிழ்த் திரை​உல​குக்கு ஈடு​செய்ய முடி​யாத பேரிழப்​பாகும். அவரை இழந்து வாடும் குடும்​பத்​தினர், உறவினர்​கள், நண்​பர்​கள், திரைத்​துறை​யினர், ரசிகர்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை​யும், அனு​தாபங்​களை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அவரது ஆன்மா இறைவன் திரு​வடி​யில் இளைப்​பாறப் பிரார்த்​திக்​கிறேன்.

இறுதிச் சடங்கில் அரசு மரியாதை: திரைத்​துறை​யில் கே.​பாக்​ய​ராஜின் பங்​களிப்​பைப் போற்​றி, அஞ்​சலி செலுத்​தும் வகை​யில் அவரது இறு​திப் பயணத்​துக்கு அரசு மரி​யாதை வழங்​கப்​படும். இவ்​வாறு முதல்​வர் அறி​வித்​துள்​ளார். யதார்த்​த​மான நடிகர், இயக்​குநர் என்று அறியப்​பட்​ட​வர் கே.​பாக்​ய​ராஜ். அது மட்​டுமின்​றி, தனது தனிச் சிறப்​பான பாணி​யால் எதிர்​பா​ராத, அதே​நேரம் ரசிக்​கக்​கூடிய திருப்​பங்​களைக் கொண்ட திரைக்​கதை அமைப்​ப​தில் வல்​ல​வ​ராகத் திகழ்ந்​தவர்.

அவர் இயக்​கிய படங்​கள் தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி என பல மொழிகளி​லும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்​றன. அதனால், இந்​திய அளவில் ‘திரைக்​கதை மன்​னன்’ என்று கொண்​டாடப்​பட்​டார். முக்​கிய பிர​முகர்​கள், திரை​யுல​கினர், ரசிகர்​கள், பொது​மக்​களின் இறுதி அஞ்​சலிக்கு பிறகு, பாக்​ய​ராஜ் உடல் இன்று நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் இருந்து ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​பட்​டு, பெசன்ட்​நகர் மின் மயானத்​தில் இறு​திச் சடங்​கு​கள் நடை​பெற உள்​ளன.

இயக்​குநர் பார​தி​ராஜா கடந்த 10-ம் தேதி கால​மா​னார். தனது குரு​வான பார​தி​ராஜா மறைந்த 17-வது நாளி​ல் பாக்​ய​ராஜ் மறைந்​தது ரசிகர்​கள்​, திரை​யுல​கினர்​ மத்​தி​யில்​ சோகத்​தை ஏற்​படுத்​தியுள்​ளது.

சனி, 27 ஜூன், 2026

போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி 3 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் - அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட 15,000 பேர் பங்கேற்பு

பதிவு: சனிக்கிழமை,  ஜூன்  27, 2026,  ஆனி  13, பாரபவ வருடம்  01.50 AM

சென்னை,

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார். ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சர்​வ​தேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்​தையொட்டி சென்​னை​யில் நடை​பெற்ற மாரத்​தான் ஓட்​டத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​து, அதில் பங்​கேற்​றார். அவருடன் அமைச்​சர்​கள், தலை​மைச் செயலர், டிஜிபி உள்​ளிட்ட அதி​காரி​களும் மாரத்​தானில் கலந்​து​கொண்​டனர்.

சர்​வ​தேச போதைப் பொருள் ஒழிப்​பு, சட்​ட​விரோத கடத்​தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, மாணவர்​கள், இளைஞர்​கள், பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் சென்​னை​யில் ‘ஸ்​டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்​ஸ்’ என்ற கருத்​துடன் நேற்று மாரத்​தான் ஓட்​டம் நடத்​தப்​பட்​டது.

நிகழ்ச்​சிக்கு தலைமை வகித்த முதல்​வர் விஜய், விழிப்​புணர்​வுப் பலகை​யில் ‘ஸ்​டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்​ஸ், ஸ்போர்ட்ஸை எடு, ட்ரக்ஸை விடு’ என்று எழுதி கையெழுத்​திட்​டார். அவரது தலை​மை​யில் அனை​வரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறு​தி​மொழி ஏற்​றுக்​கொண்​டனர். இதன்​பிறகு, மெரினா காம​ராஜர் சாலை​யில் உள்ள அண்ணா நினை​விடத்​தில் இருந்து தீவுத்​திடல் வரை மாரத்​தான் ஓட்​டம் தொடங்​கியது.

முதல்​வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். 
6 கி.மீ. தூரம் நடை​பெற்ற ஓட்​டத்​தில், ஒலிம்​பிக் மற்​றும் சர்​வ​தேசப் போட்​டிகளில் கலந்​து​கொண்ட விளை​யாட்டு வீரர்​கள், வீராங்​க​னை​கள், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் விளை​யாட்டு வீரர்​கள், கல்​லூரி மாணவ, மாணவி​கள், அரசு அலு​வலர்​கள், காவல் துறை அதி​காரி​கள், பொது​மக்​கள் என 15 ஆயிரம் பேர் பங்​கேற்​றனர்.

இவர்​களு​டன் முதல்வர் விஜய், அமைச்​சர்​கள் ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, வெங்​கடரமணன், மரிய​வில்சன், ரா.குமார், தலை​மைச் செயலர் சாய்​கு​மார், டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ், விளை​யாட்​டுத் துறை செயலர் சந்​தீப்நந்​தூரி, தமிழ்​நாடு விளை​யாட்டுமேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன் உள்​ளிட்​டோரும் மாரத்​தானில் பங்​கேற்று ஓடினர். பின்​னர், வீரர்​களு​டன் கலந்​துரை​யாடிய முதல்​வர் விஜய், அவர்​களு​டன் செல்ஃபி எடுத்​துக் கொண்​டார்.

நிகழ்ச்​சி​யின் முடி​வில் பேசிய அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, “தமிழக வரலாற்​றில் வேறு எந்த முதல்​வரும் மாரத்​தான் ஓடியது இல்​லை. முதல்​வர் விஜய்​தான் முதல்​முறை​யாக 3 கி.மீ. தூரம் வரை மாரத்​தான் ஓடி​யுள்​ளார். அவரைப் போலவே தமிழக​மும் ஆரோக்​கிய​மாக மாறும்” என்​றார்.

முதல்​வர் விஜய் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: இளைஞர்​களின் எதிர்​காலத்​தைப் பாது​காக்​க​வும், குற்​றங்​களைத் தடுக்​க​வும் போதைப் பொருட்​களால் ஏற்​படும் தீமை​கள் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வது அவசி​யம். கல்​வி, விளை​யாட்​டு, திறன் மேம்​பாடு போன்ற ஆக்​கப்​பூர்​வ​மான செயல்​பாடு​களில் இளைஞர்​களை ஈடு​படுத்​து​வதன் மூல​மாக​வும், கடும் சட்ட நடவடிக்​கை கள் மூல​மாக​வும் போதைப் பொருட்​களை ஒழித்​து, வலிமை​யான சமு​தா​யத்​தைப் படைக்க முடி​யும்.

போதைப் பொருட்​கள் தொடர்​பான குற்​றங்​களைத் தடுக்க தமிழக அரசு எடுத்​து​வரும் பல்​வேறு முன்​னெடுப்​பு​களுக்கு அனை​வரும் துணைநின்​று, போதைப் பொருள் இல்​லாத, பாது​காப்​பான, ஆரோக்​கிய​மான தமிழகத்​தை உரு​வாக்​க உறு​தி​யேற்​போம்​. 

இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

வெள்ளி, 26 ஜூன், 2026

“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” - முதல்வர் விஜய்யின் ‘அப்பாவைக் காணோம்’ குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  ஜூன்  26, 2026,  ஆனி  12, பாரபவ வருடம்  03.00 AM

திருவாரூர்,

தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், “என்னை எங்கேயும் தேட வேண்டாம்; நான் மக்கள் மனதில் இருக்கிறேன்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.


திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்தார் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

பின்னர் விழாவில் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் திறக்க முடியவில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில்  நடைபெற்ற திமுக ஆட்சியில் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  சட்டப்பேரவையில் எடுத்துச் சொல்லிப் பேசினார்.

ஆனால் முதல்வராக உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், “எங்கே உங்கள் அப்பாவை காணோம்!” என்கிறார்.  அப்பாவை அங்கே தேடாதீர்கள். அவர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். சட்டப்பேரவையில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன்.

கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாகத் தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது, சென்றிருக்கிறேன். நான் ஆய்வுக் கூட்டம் நடத்தியதைப் போல யாரும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி இருக்க மாட்டார்கள். கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன அந்த கோப்புகளை எடுத்துப் பாருங்கள்.

மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்துள்ளேன் அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடு தான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும், இந்த தமிழ்நாடு உள்ளவரை நான் தான் முதல்வர் என்று சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் முதல்வர், கருணாநிதி கூட்டணி அமைத்தால் கூட்டணி கட்சியை பாதுகாப்பாக வைத்திருப்பார், அவர்களாகத்தான் கூட்டணியை விட்டு  போவார்களே  தவிர, வெளியேற்ற மாட்டார்.

அந்த வழியில்தான் நான் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால் கூட்டணியே வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனையும் பரிசீலிப்போம்,” என்றார்.

இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

பதிவு: வியாழக்கிழமை, ஜூலை  16, 2026,  ஆனி  32, பாரபவ வருடம்  07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...