வியாழன், 21 மே, 2026

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்திய அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு வந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவரது மறைவின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர் பூமியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன். உங்கள் போதனைகள், உங்கள் விழுமியங்கள், உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதில் ராஜீவ் காந்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அளித்துள்ளார். இளம் இந்தியாவின் ஆற்றலை முழுமையாக நம்பிய அவர், வாக்களிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். கிராம அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தார்.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கணினி மயமாக்கல் ஆகியற்றின் வாயிலாக இந்தியாவை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி வழிநடத்தினார். அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் வாயிலாக நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அஞ்சலிகள்” என தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 17 மே, 2026

தமிழக அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள் என்னென்ன..? - ஓர் அலசல்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மே  17, 2026, வைகாசி, 03, பாரபவ வருடம் 10:30 AM

சென்னை,

தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர். 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின் படி, ஒரு மாநிலத்தில் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. 

அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியேற்கலாம்.

தற்போது முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 பேர் மட்டுமே பதவியேற்றுள்ளதால், இன்னும் 25 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வாய்ப்பு உள்ளது. 

அதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன.

இந்த நிலையில்,முதல்-அமைச்சர் மற்றும் 9 அமைச்சர்களுக்கும் நேற்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை, பெண்கள் நலன் உள்ளிட்ட துறைகளும், ஊரக வளர்ச்சித்துறை ஆனந்துக்கும், பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனாவுக்கும், சுகாதாரம் அருண்ராஜுக்கும், செங்கோட்டையனுக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு முக்கிய துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அந்த வகையில் வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள், சமூக நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுலா, கைத்தறி, வணிகவரி, போக்குவரத்து, இந்துசமய அறநிலையத்துறை, உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகள் இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளன.

இந்த துறைகளும் இன்னும் சில நாட்களில் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அதில் த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் அளிக்கப்பட உள்ளதாக த.வெ.க. வட்டாரத்தில் கூறப்பட்டது.

கேரள முதல்-மந்திரியாகிறார், வி.டி.சதீசன்- தமிழக முதல்வர் விஜய், ராகுல்காந்தி, பங்கேற்பு - நாளை பதவி ஏற்பு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மே  17, 2026, வைகாசி, 03, பாரபவ வருடம் 09:30 AM

திருவனந்தபுரம், கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந்தேதி வெளியானது. 

மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

காங்கிரஸ் 63 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 தொகுதிகளை கைப்பற்றியது. 

மேலும் கேரள காங்கிரஸ்(ஜோசப்) 7 இடங்களிலும், புரட்சி சோஷியலிஸ்ட் கட்சி(ஆர்.எஸ்.பி.) 3 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கேரள மாநில கட்சி (சி.எம்.பி.கே.எஸ்.சி.) தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள்(காங்கிரஸ் ஆதரவு) 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா முதன் முறையாக 3 தொகுதிகளிலும் வென்றது.

காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றி மூலம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பதவி காலம் அத்துடன் முடிவுக்கு வந்தது. 

இதற்கிடையே, காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவியது. 

10 நாட்கள் இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது..

இதையடுத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகரை, வி.டி.சதீசன் சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டு கொண்டார். 

அதற்கேற்ப கவர்னரும் அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் பதவி ஏற்பு விழாவை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அரியணையில் அமர உள்ளதால், பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் சித்தராமையா (கர்நாடகம்), ரேவந்த்ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சிங் சுகு (இமாசல பிரதேசம்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். 

விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 16 மே, 2026

தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு - முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - முழு விபரம்

பதிவு: சனிக்கிழமை,  மே  16, 2026, வைகாசி, 02, பாரபவ வருடம் 05:30 PM

சென்னை,

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். 

அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்த சூழலில் இன்று முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், கவர்னர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகள் பின்வருமாறு;-.

முதல்-அமைச்சர் விஜய் - பொது நிர்வாகத்துறை, உள்துறை, காவல் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல்.

அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி, குடும்பநலத்துறை 

அமைச்சர் ஆனந்த் - ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை 

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை 

அமைச்சர் செங்கோட்டையன் - நிதித்துறை

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமர் - மின்சாரம், மற்றும் நீதித்துறை 

அமைச்சர் கீர்த்தனா - தொழில்துறை

அமைச்சர் டி.கே.பிரபு - இயற்கை வளத்துறை 

அமைச்சர் ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை 

அமைச்சர் வெங்கராமன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - 17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள்

பதிவு: சனிக்கிழமை,  மே  16, 2026, வைகாசி, 02, பாரபவ வருடம் 03:30 PM

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 

அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அறிவித்து இருந்தார். 

அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. 

தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்று, த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் ஒரு இடத்தை எதிர்பார்ப்பதால் அதுகுறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. 

அடுத்த 3 நாட்களில் இந்தப் பணிகளை எல்லாம் முடித்து, அமைச்சரவை பட்டியலை தயாரிக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. 

அந்த வகையில், ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு அமைச்சரவையில் 26 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை முடிவு செய்யப்பட்ட பிறகு துறைகளும் ஒதுக்கப்படும். 

அதன்பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை  கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.  தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் ஆரம்பமாகும். 

கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததுடன், அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். 

இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் உரை வழங்குவார். 

அதன்பின்னர், 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால், இந்த முறை ஒரே பட்ஜெட்டாக இருக்குமா, அல்லது வேளாண்மைக்கும் தனியாக தாக்கல் செய்யப்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு அதன் மீதான  விவாதம் நடைபெறும். 

தொடர்ந்து, நிதி அமைச்சர் பதில் உரை வழங்குவார். அதன்பிறகு, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். 

எப்படியும், 40 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்பதால், புதிய அரசு எப்படி செயல்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகளையும் தாண்டி, பொதுமக்களிடமும் இருக்கிறது.

வெள்ளி, 15 மே, 2026

மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் - திட்டத்தை மறுசீரமைக்க முடிவு - புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1,000 வழங்கப்பட்டது

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே  15, 2026, வைகாசி, 01, பாரபவ வருடம் 02:30 AM

சென்னை,

தலைமைச் செயலகத்தில் தொழில், வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சாய்குமார், துறை செயலர் அருண் ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மே மாதத்​துக்​கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். இத்​திட்​டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்​ள​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் படித்த மாணவர்​கள் இடைநிற்​றல் இல்​லாமல் உயர்​கல்​வியைத் தொடர்​வதற்​காக புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் ஆகிய கல்வி உதவித் தொகை திட்​டங்​கள் முந்​தைய திமுக ஆட்​சி​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டன. 

அதன்​படி, புது​மைப்​பெண் திட்​டத்​தில் மாணவி​களுக்​கும், தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தில் மாணவர்​களுக்​கும் மாதம்​தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. மாணவ, மாணவி​களின் வங்​கிக் கணக்​கில் ஒவ்​வொரு மாத​மும் 7-ம் தேதி இந்த தொகை வரவு வைக்​கப்​பட்டு வந்​தது.

இந்த நிலை​யில், தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. முந்​தைய அரசுகளால் கொண்டு வரப்​பட்ட முக்​கிய மக்​கள் நலத் திட்​டங்​கள் தொடரும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் உறுதியளித்​தார். 

இதன் தொடர்ச்​சி​யாக, புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​பட்டு வந்த ரூ.1,000 உதவித் தொகை அனைத்து மாணவ, மாணவி​களின் வங்​கிக் கணக்​கிலும் நேற்று வரவு வைக்​கப்​பட்​டது. இதனால் மாணவர்​கள், பெற்​றோர் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

இதற்​கிடையே, தமிழகம் முழு​வதும் 1.31 கோடி பெண்​களின் வங்​கிக் கணக்​கில் ஒவ்​வொரு மாதம் 15-ம் தேதி​யும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்​கப்​பட்டு வரு​கிறது. 

இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில், 

‘மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்​படு​கிறது. நடப்பு மே மாதத்​துக்​கான உரிமைத் தொகை, பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதே​நேரம் முதல்​வரின் அறி​விப்பை திமுக தலை​வர் ஸ்டா​லின் விமர்​சனம் செய்​துள்​ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில், 

‘தி​முக அரசின் திட்​டங்​கள் தொடரும் என்று சட்​டப்​பேர​வை​யில் சொன்​னீர்​கள்? மகளிர் உரிமைத் தொகையை மே 15-ம் தேதி வரவு வைக்க வேண்​டும். ஏற்​கெனவே உள்ள திட்​டத்தை தொடர எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்​யப் போகிறீர்​கள்? மாதம் ரூ.2,500 தரு​வ​தாக வாக்​குறுதி தந்​து​விட்​டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்​தடிப்​பது​தான் உங்​கள் மாற்​ற​மா?’ என்று கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

முதல்​வர் ஆலோ​சனை

அரசின் நிதி​நிலை​யைப் பொருத்து நலத் ​திட்​டங்​களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்​டும். அரசின் நிதி​நிலை தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிடப்படும் என்று கடந்த 10-ம் தேதி முதல்​வ​ராக பதவி​யேற்ற விழா​விலேயே விஜய் தெரி​வித்​திருந்​தார்.

அந்த வகை​யில் தமிழக அரசின் நிதி​நிலை தொடர்​பாக துறை​சார்ந்த உயர் அதி​காரி​களு​டன் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

தலை​மைச் செயலர் ​சாய்​கு​மார், நிதித் துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் உள்​ளிட்ட அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். நடப்பு ஆண்​டுக்​கான பட்​ஜெட், புதிய திட்​டங்​களுக்​குத் தேவைப்​படும் நிதி ஒதுக்​கீடு, முந்​தைய திமுக ஆட்​சி​யில் நிதி​சார் செயல்​பாடு​கள் தொடர்​பான வெள்ளை அறிக்கை தயாரிப்பு உள்​ளிட்ட அம்​சங்​கள் குறித்து இக்​கூட்​டத்​தில் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டுள்​ளது. 

தொடர்ந்​து, தொழில் முதலீட்​டுக் கழகம் மற்​றும் வர்த்​தகத் துறை செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக்​ கூட்​ட​மும்​ நடை​பெற்​றது.

வியாழன், 14 மே, 2026

நம்பிக்கை தீர்மானத்துக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு - வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி - திமுக அணியினர் வெளிநடப்பு

பதிவு: வியாழக்கிழமை,  மே 14, 2026, சித்திரை, 31, பாரபவ வருடம் 02:55 AM

சென்னை, 

சட்​டப்​பேர​வை​யில் நடை​பெற்ற பெரும்​பான்​மைக்​கான வாக்​கெடுப்​பில் 144 எம்​எல்​ஏக்​கள் ஆதர​வுடன் முதல்​வர் விஜய்​யின் தவெக அரசு வெற்றி பெற்​றது.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் 108 தொகு​தி​களை கைப்​பற்​றி, தனிப்​பெரும் கட்சியாக தவெக உரு​வெடுத்​துள்​ளது. எனினும், ஆட்சி அமைக்க மொத்​தம் 118 இடங்​கள் தேவைப்​பட்ட நிலை​யி்ல், காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய கட்​சிகளைச் சேர்ந்த 13 உறுப்​பினர்​களின் ஆதர​வைத் தவெக பெற்​றது. இதையடுத்து 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்​லேகர் தெரிவித்தார்.

கடந்த 10-ம் தேதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்து, ஆளுநர் அறி​வுறுத்​தலின்​படி, சட்​டப்​பேர​வை​யில் விஜய்​யின் தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான நம்​பிக்கை வாக்​கெடுப்பு நேற்று நடை​பெற்​றது. பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகர் கேட்​டுக்​கொண்​டபடி. நம்​பிக்கை வாக்​கெடுப்​புக்​கான தீர்​மானத்தை முதல்​வர் விஜய் முன்​மொழிந்​தார்.

தொடர்ந்​து, எஸ்​.​ராஜேஷ் கு​மார் (காங்​கிரஸ்), ஆர்​.செல்​லசு​வாமி (மார்க்​சிஸ்ட்), வன்​னியரசு (விசிக), அ.மு.ஷாஜ​கான் (ஐயூஎம்​எல்), அமமுக​வில் இருந்து நீக்​கப்​பட்ட எஸ்​.​காம​ராஜ் (சுயேச்​சை), டி.​ராமச்​சந்​திரன் (இந்​திய கம்​யூனிஸ்ட்) ஆகியோர் அரசுக்கு ஆதர​வாக பேசினர்.

பிரேமலதா விஜய​காந்த் (தே​மு​தி​க), தமி​முன் அன்​சாரி (மஜக), நித்​தி​யானந்​தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். போஜ​ராஜன் (பாஜக), சவுமியா அன்​புமணி (பாமக) ஆகியோர் நடுநிலை வகிப்​ப​தாக தெரி​வித்​தனர்.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி, அதி​முக எம்​எல்​ஏக்​கள் 2 அணி​களாக செயல்​பட்டு வரு​வதை குறிப்​பிட்​டு, அரசுக்கு எதி​ராக வாக்​களிக்க உள்​ள​தாக தெரி​வித்​தார். இதையடுத்​து, அதி​முக​வின் சி.வி.சண்முகம் தரப்பில் எஸ்​.பி.வேலுமணி பேச வாய்ப்பு தரப்​பட்​டது. அதற்கு பழனி​சாமி உள்​ளிட்​டோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். பேர​வைத் தலை​வர் அனு​மதி அளித்​ததை அடுத்​து, வேலுமணி அரசுக்கு ஆதரவு அளிப்​ப​தாக தெரி​வித்​தார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், ‘பெரும்​பான்மை மக்​கள் தவெக​வுக்கு வாக்​களிக்​க​வில்​லை’ என்று பேசி​யதுடன், வாக்கெடுப்​பில் பங்​கேற்​காமல் வெளிநடப்பு செய்​வ​தாக அறி​வித்​தார். திமுகவுடன் தேமுதிக, மஜக, கொமதேக, மமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து முதல்​வர் விஜய் பேசும்​போது, ‘‘இந்த அரசு நிச்​ச​யம் மதச்​சார்​பற்ற அரசாகத்​தான் செயல்​படும். குதிரை பேரத்​தில் இந்த அரசு ஈடு​பட​வில்​லை. குதிரை வேகத்​தில் செயல்​படு​கிறது. தமிழகத்​தின் முன்​னேற்​றத்​துக்கு உழைத்த தலை​வர்​கள் வழி​காட்​டிய கொள்​கை​களில் இருந்து இம்​மியள​வும் வில​காமல் இந்த ஆட்சி நடை​பெறும். எனவே, நான் முன்​மொழிந்த தீர்​மானத்தை உறுப்​பினர்​கள் ஏகமன​தாக நிறைவேற்​றித் தரவேண்​டும்’’ என்​றார்.

இதையடுத்​து, பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கச்​செய்​து, ஆதரிப்​பவர்​கள், எதிர்ப்​பவர்​கள், நடுநிலை வகிப்​பவர்​கள் என எண்​ணிக் கணிக்​கு​மாறு பேர​வைச் செயலர் கி.சீனி​வாசனுக்குப் பேரவைத் தலைவர் அறி​வுறுத்​தி​னார்.

அதன்​படி, பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​கள் எண்​ணிக் கணிக்​கப்​பட்​டனர். உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கக்​கூறி, பெயர் வாசிக்​கப்​பட்டு அவர்​கள் நிலைப்​பாடு கணக்​கில் கொள்​ளப்​பட்​டது.

இதையடுத்​து, வாக்​கெடுப்பு விவரத்தை பேர​வைத் தலை​வர் அறி​வித்​தார். அதன்​படி, 144 உறுப்​பினர்​கள் அரசுக்கு ஆதர​வளிப்​ப​தாக​வும், 22 உறுப்​பினர்​கள் எதி​ராக வாக்​களித்​த​தாக​வும், 5 உறுப்​பினர்​கள் நடுநிலை வகித்​த​தாக​வும் அறி​வித்​தார். இதன்​மூலம் வாக்​கெடுப்​பில் தவெக அரசு பெரும்​பான்மை பெற்​றுள்​ள​தாக​வும் அறி​வித்​தார்​. இதையடுத்​து, அனைத்​து உறுப்​பினர்​களுக்​கும்​ முதல்​வர்​ விஜய்​ நன்​றி தெரிவித்​தார்​.
 

புதன், 13 மே, 2026

நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்ததால் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து - சிபிஐ தீவிர விசாரணை


 பதிவு: புதன்கிழமை,  மே 13, 2026, சித்திரை, 30, பாரபவ வருடம் 02:55 AM

புதுடெல்லி,

வி​னாத்​தாள் கசிந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தால், மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழு​வதும் நடை​பெற்​றது. மொத்​தம் 22.80 லட்​சம் மாணவ, மாணவி​கள் இந்த தேர்வை எழு​தினர். இந்​தச் சூழலில் நீட் தேர்​வுக்கு முன்​பாக ராஜஸ்​தானில் வினாத்​தாள் கசிந்​த​தாக புகார் எழுந்​தது.

இதுகுறித்து மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் மற்​றும் ராஜஸ்​தான் போலீ​ஸார் இணைந்து நடத்​திய விசா​ரணை​யில் பல்​வேறு மாநிலங்​களில் வினாத்​தாள் கசிந்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​படு​வ​தாக தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது.

இதுதொடர்​பாக என்​டிஏ நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவி​லான தேர்​வு​களை நேர்​மை​யாக​வும், நம்​பகத்​தன்​மை​யுட​னும் நடத்த என்​டிஏ உறுதி பூண்​டிருக்​கிறது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பான புகார்​களை விசா​ரிக்க மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களைக் கேட்​டுக் கொண்​டோம். 

அந்த அமைப்​பு​கள் விசா​ரணை நடத்தி என்​டிஏ​விடம் விரி​வான அறிக்​கையை சமர்ப்​பித்​தன. அதன் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மறு​தேர்வு தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும்.

நீட் மறு​தேர்​வுக்​குப் புதி​தாக ஆன்​லைனில் விண்​ணப்​பங்​களைச் சமர்ப்​பிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. தேர்​வுக் கட்​ட​ண​மும் செலுத்த வேண்​டாம். ஏற்​கெனவே செலுத்​திய தேர்​வுக் கட்​ட​ணம் திரும்ப வழங்​கப்​படும். என்​டிஏ-​வின் சொந்த நிதி​யில் மறு​தேர்வு நடத்​தப்​படும். 

மாணவ, மாணவி​கள் ஏற்கெனவே எழு​திய தேர்வு மையங்களில் மறு​தேர்வு நடத்​தப்​படும். மறு​தேர்​வுக்​கான தேதி, ஹால் டிக்​கெட் குறித்து என்​டிஏ சார்பில் அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​படும்.

மேலும் விவரங்​களுக்கு neet-ug@nta.ac.in இ-மெ​யில் முகவரி மற்​றும் 011-40759000 / 011-69227700 தொலைபேசி எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.

தேசிய தேர்வு முகமை தலை​வர் சுபோத் குமார் சிங் கூறும்​போது, “மாணவ, மாணவி​களின் எதிர்​காலத்​தைப் பாழாக்க ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம். முறை​கேடு​களில் ஈடு​படு​பவர்​கள் அகற்​றப்​படு​வார்​கள். வலு​வான பாது​காப்பு நடை​முறை​களோடு நீட் மறு​தேர்வு நடத்​தப்​படும். இதுதொடர்​பாக விரை​வில் விரி​வான வழி​காட்டு நெறிகள் வெளி​யிடப்​படும். இதன்​மூலம் எதிர்​காலத்​தில் தவறுகள் நடை​பெறு​வது தடுக்​கப்​படும்" என்று தெரி​வித்​துள்​ளார்.

நீட் மறு​தேர்வு குறித்து என்​டிஏ வட்​டாரங்​கள் கூறும்​போது, “வி​னாத்​தாள் கசிவு காரண​மாகவே நீட் மறு​தேர்வு நடத்​தப்பட உள்​ளது. பாடத்​திட்​டம், வி​னாத்​தாள், தேர்வு நேரத்​தில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​டாது. மே மாத இறுதி அல்​லது ஜூன்​ மாதத்​தில்​ மறு​தேர்​வு நடத்​தப்​படக்​ கூடும்​" என்​று தெரிவித்​தன.

ரூ.100 கோடி வரை…


நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக சிபிஐ நேற்று வழக்​குப் பதிவு செய்து முதல் கட்ட விசா​ரணையை தொடங்கி உள்​ளது. இதுகுறித்து சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

நீட் தேர்​வுக்​கான வினாத்​தாளை அச்​சடித்த அச்​சகம் அல்​லது வாக​னங்​களில் வினாத்​தாள் கொண்டு செல்​லப்​பட்ட போது வினாத்​தாள் கசிந்​திருக்​கக் கூடும் என்று சந்​தேகிக்​கிறோம். முதல் வினாத்​தாளை வழங்​கிய அச்சக ஊழியருக்கு ரூ.10 கோடி வரை வழங்​கப்​பட்டு இருக்​கலாம் என்று தெரி​கிறது.

வினாத்​தாள் சில இடங்​களில் ரூ.28 லட்​சம் வரை விற்​பனை செய்​யப்பட்டு உள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்​யப்​பட்டு இருப்​ப​தாகத் தெரி​கிறது.

இந்த வழக்​கில் இது​வரை கைதானவர்​களில் பெரும்​பாலானோர் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள். கேரளா​வில் மருத்​து​வக் கல்​லூரி மாணவர் பிடிபட்டு உள்​ளார். 

இதே வழக்​கில் மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக்​கில் சுபம் காரி​னார் என்​பவர் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இவர் போபாலில் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​யில் பயின்று வரு​கிறார். ராஜஸ்​தான், மகா​ராஷ்டி​ரா, கேரளா, உத்தராகண்ட் உள்​ளிட்ட பல மாநிலங்​களின் போலீ​ஸாரிடம் இருந்து ஆதா​ரங்​களைப் பெற்று முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்​படும். தவறு செய்​தவர்​கள் நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள். இவ்வாறு சிபிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து பல்​வேறு மாணவர் சங்​கங்​கள் சார்​பில் டெல்​லி​யின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று போராட்​டங்​கள் நடை​பெற்​றன.

டெல்லி மட்​டுமன்றி பாட்​னா, கோட்​டா, சிகார், டேராடூன் உள்ளிட்ட பல்​வேறு நகரங்​களி​லும்​ நேற்​று போ​ராட்​டங்​கள்​ நடத்தப்பட்டன.

செவ்வாய், 12 மே, 2026

சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஜே.சி.டி. பிரபாகர்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 07:00 AM

சென்னை,

தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. 

17-வது சட்டமன்றத்தின் சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளும் கட்சியான தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார்.

இன்று மாலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 

இதனால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார். 

துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவிக்க உள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஜே.சி.டி.பிரபாகர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எழிலன் நாகநாதனை எதிர்த்து போட்டியிட்டு 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:55 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். 

இந்தச் சூழலில், அவர் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். 

சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார்.

சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார். முதல்வர் ஜோசப் விஜய்யை வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார்

முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:45 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். 

இந்தச் சூழலில், அவர் நேற்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, அன்புமணி வாசலுக்கே வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

இந்த சந்திப்பின்போது பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் ஜோசப் விஜய்யை வரவேற்று உபசரித்தார்.

அன்புமணிக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அன்புமணியும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அன்புமணியுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின்னர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

அதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:30 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். 

இந்தச் சூழலில், அவர் நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க சென்னை அண்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆரத் தழுவி வரவேற்றார். 

வைகோவுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற நிலையில், பதிலுக்கு வைகோவும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், வைகோவுடன் சிறிது நேரம் உரையாடினார். இதன் பின்னர் வைகோவும், விஜய்யும் கைகோத்தபடி வெளியே வந்தனர். 

அப்போது இருவரும் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியோடு வந்தனர். அதன்பின்னர் ஜோசப் விஜய்யை வைகோ காரில் வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  மே 12, 2026, சித்திரை, 29, பாரபவ வருடம் 03:00 AM

சென்னை,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் நேற்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
                         
இந்தச் சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 11 மே, 2026

ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க - வெளிநாட்டு பயணங்களை ஒத்திவையுங்கள் -Work From Home - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பதிவு: திங்கட்கிழமை,  மே 11, 2026, சித்திரை, 28, பாரபவ வருடம் 04:50 AM

புதுடெல்லி,

ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பெட்ரோல் - டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும் என மோடி கூறியுள்ளார்.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 9,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

ஹைதராபாத் - பணஜி பொருளாதார வழித்தடத்தில் அமைந்துள்ள குடேபெல்லூர் முதல் மஹபூப்நகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் திட்டம், சங்காரெட்டி மாவட்டத்தில் அமைய உள்ள ஜஹீராபாத் தொழிற்பேட்டை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அப்போது அவர் பேசியதாவது:

சாத்தியமான இடங்களில் மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நிறுவனங்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் காரணமாக பயணம் குறையும், எரிபொருள் பயன்பாடு குறையும் மற்றும் பொருளாதார அழுத்தமும் மக்களுக்கு குறையும்.

"கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது, ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற பல முறைகளை நாம் உருவாக்கினோம். அதற்கு மக்கள் பழகியும் விட்டனர். இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், அதுபோன்ற நடைமுறையை மீண்டும் தொடங்குவதுதான். 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் 

இது தேசிய நலனுக்கானதாக இருக்கும். வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH), ஆன்லைன் கருத்தரங்குகள் மற்றும் விர்சுவல் கூட்டங்களுக்கு மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பயணங்களை குறைக்கும் விதமாக ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு முறைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட இந்த முறைகள், தற்போதைய உலகளாவிய நெருக்கடியான சூழலிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன டிஜிட்டல் தளங்கள் மூலம் உற்பத்தித்திறனை குறைக்காமல் பேணிக்காக்க முடியும். அதே நேரத்தில் எரிபொருள் தேவையையும் குறைக்க முடியும். 

சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறையுங்கள் 

இறக்குமதியை குறைத்து அந்நியச் செலாவணியை சேமிக்க வேண்டும் உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளதால், அந்நியச் செலாவணியை சேமிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை சேமிப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.

சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் பயன்பாட்டை குறைப்பதும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். ஒவ்வொரு குடும்பமும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்தால், அது தேச நலனுக்காக ஆற்றும் மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரான் - அமெரிக்கா இடையேயான போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக சிலிண்டருக்கான பற்றாக்குறை இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை. வணிக சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் 

பெட்ரோல், டீசல் விலையும் வரும் 15 ஆம் தேதிக்குள் ரூ.4 முதல் 5 வரை உயரக்கூடும் என்று சில தகவல் வெளியானது. இந்த சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். 

பெட்ரோல் - டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியையும் சேமிக்க, அவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும். ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். 

வீட்டில் இருந்தே வேலை.. 

கடினமான பொருளாதார சூழ்நிலையில் நாட்டின் வளங்களை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது (WFH), ஆன்லைன் மீட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற முறைகளுக்கு மக்கள் எளிதாக பழகி விட்டனர். எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த இதேபோன்ற ஒரு நடைமுறையை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா அந்நிய செலவாணி செலவிடுதை குறைக்கும்" என்றார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில், கச்சா எண்ணெய் விலை 126 டாலராக உள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் 30 ஆயிரம் கோடி அளவிற்கு பாரத் பெட்ரோலியம், இந்திய ஆயில் நிறுவனங்களுக்கு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. 

54 ஆயிரம் டன்னாக அதிகரிப்பு 

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க வங்கதேசத்தில் எண்ணெய் வாங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பணி நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க இந்தியா எல்பிஜி உற்பத்தியை 36 ஆயிரம் டன்னில் இருந்து 54 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் சூழலை கருத்தில்கொண்டு, இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களை தேவைக்கேற்ப மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். 

இவ்வாறு செய்வதன் வாயிலாக, அன்னிய செலாவணியை சேமிப்பது மட்டுமின்றி, போரினால் ஏற்படும் பாதகமான விளைவுகளையும் குறைக்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளில், சூரிய ஆற்றல் துறையில் உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பிடித்துள்ளது. பெட்ரோல் எத்தனால் கலப்பு திட்டத்தில் பல்வேறு முன்னோடி பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மத்திய அரசு, முதற்கட்டமாக 100 சதவீத வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவதில் அரசு கவனம் செலுத்தியது. தற்போது, குழாய் வழி எரிவாயுவை சிக்கனமான முறையில் வினியோகிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 

மேலும், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு அமைப்புகளையும் அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த தொடர் முயற்சி காரணமாக, உலக அளவில் நிலவும் பெரும் எரிசக்தி நெருக்கடியை இந்தியா திறம்பட சமாளித்து வருகிறது.

சீர்திருத்தங்களின் விரைவுப் பாதையில் பயணித்து வரும் இந்தியா, அதே வேளையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது. ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம். 

ஓராண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா வேண்டாம். பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறையுங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், காசிபேட் - விஜயவாடா ரயில் தட திட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும், ஹைதராபாத்தில் உள்ள க்ரீன்பீல்டு பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் முனையத்தையும், காசிபேட் ரயில் மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 

வாரங்கலில் உள்ள பிரதமர் மித்ரா பூங்காவும் தொடக்கி வைக்கப்பட்டது. தெலுங்கானா கவர்னர் சிவ பிரதாப் சுக்லா, காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஞாயிறு, 10 மே, 2026

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்! - ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மே 10, 2026, சித்திரை, 27, பாரபவ வருடம் 12:00 PM

சென்னை,

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 

இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் பதவியேற்றுக் கொண்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அவருக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவளித்தன. 

விசிக நேற்று மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும், கடைசி நேரத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது. அதன்படி, தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை விட அதிகமாக ஆதரவு கிடைத்தது.

நேற்று மாலை 6.15 மணிக்கு விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, விஜய் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை விஜய் சந்தித்தார். அப்போது, 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் வழங்கினார். 

தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.


தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார்... ‘ஜோசப் விஜய் சந்திரசேகரன் எனும் நான்...’

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மே 10, 2026, சித்திரை, 27, பாரபவ வருடம் 05:30 AM

சென்னை,

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது.  

இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. 

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன.  இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.  

தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.

இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது.  எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.  இதனால், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு த.வெ.க.விடம் இருந்தது.  இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நேற்று முன்தினம் அறிவித்தன. 

தொடர்ந்து, வி.சி.க.வும் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்தது.  இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.  எனினும், ஆட்சியில் பங்கு கொள்ள மாட்டோம் என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்தன.  இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.

இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்யும்போது, த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கும்.  இது பெரும்பான்மைக்கும் (118) கூடுதல் ஆகும்.

இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.  

அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.  அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.  அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். 

அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். 

இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 13-ந்தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.

சனி, 9 மே, 2026

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. கையெழுத்திட்ட வீடியோ வெளியீடு - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி

பதிவு: சனிக்கிழமை,  மே 09, 2026, சித்திரை, 26, பாரபவ வருடம் 06:30 AM

சென்னை,

தமிழக அரசியலில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.  

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை (118) நிரூபிக்க வேண்டிய சூழலில், இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் அக்கட்சி தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது.  இதனால், 113 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. கைவசம் உள்ளனர்.  

இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.  இதனால், தலா 2 எம்.எல்.ஏ.க்கள் என இந்த எண்ணிக்கை 117 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளது.  வி.சி.க. இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதன் ஆதரவு கிடைக்கும்போது, த.வெ.க.வின் மொத்த பலம் 119 ஆக இருக்கும்.

எனினும், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்வது, தற்காலிக சபாநாயகர் ஆகியவற்றால், 2 எண்ணிக்கை குறைந்து, த.வெ.க.விடம் 117 என்ற எண்ணிக்கையே இருக்கும்.  பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு தேவையாக உள்ளது.

இதனால், விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.  இந்நிலையில், நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார்.

அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கினார்.

இந்த நிலையில், கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.  

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை.  அவர் விலை போய் இருக்கலாம் என்றார். 

 விஜய் பதவி வெறியில் இருக்கிறார்.  த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றும் கூறினார்.  

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். 

இதனை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் மீண்டும் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.  

இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர்.  காமராஜை காணவில்லை என கவர்னரிடம் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். 

அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, கவர்னரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை.  அந்த கடிதம் போலியானது.  காமராஜ் பெயரில் கவர்னருக்கு வாட்ஸ்அப் மூலம் போலி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என கூறினார்.உங்களுக்கு 108 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர்.  அறுதி பெரும்பான்மையே இன்னும் இல்லை.

 நீங்கள் தூய சக்தி.  தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள்.  ஆனால், ராவணன் சீதையை தூக்கியதுபோல், ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.வை தூக்க பார்த்துள்ளனர்.  உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.  மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? என த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அ.ம.மு.க. ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர்.  

ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை.  இதுதொடர்பாக போலீசில் நாங்கள் புகார் அளிப்போம்.  அந்த கடிதங்களை ஆராய வேண்டும்.  அதுபற்றி விசாரணை நடத்த கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன்.

போலீசிடமும் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.  தி.மு.க.வின் கோட்டையான மன்னார்குடியில், நாங்கள் உழைத்து, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

ஒரேயொரு எம்.எல்.ஏ. எங்களிடம் உள்ளார்.  அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றார்.  மோசடி கடிதம் த.வெ.க.தான் அனுப்பியது என்று குற்றச்சாட்டாக கூறுகிறீர்களா? என நிருபர்கள் சந்தேகம் தெரிவித்தனர். 

அதற்கு, மோசடி கடிதம், யார் ராமசாமி அனுப்பியிருப்பாரா? த.வெ.க.தான் அனுப்பியுள்ளது.  த.வெ.க. சார்பில் கவர்னரிடம் வாட்ஸ்அப் மூலம் கடித நகல் கொடுக்கப்பட்டு உள்ளது.  உண்மை கடிதம் எங்கே? என கவர்னர் தரப்பில் கேட்கப்பட்டதற்கு, பின்னர் வந்து தருகிறோம் என கூறியுள்ளனர். 

இதுதொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து, எங்களிடம் கேட்கப்பட்டது.  இதனை அறிந்து எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என்றார்.மோசடி சக்திகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அந்த மோசடி கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை.  

த.வெ.க. மோசடியில் ஈடுபட்டு உள்ளது என ஆவேசத்துடன் கூறினார். . கடிதம் கொடுத்து காமராஜை கைப்பற்றி விடலாம் என நினைத்தனர்.  த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும்படி புகார் அளிப்பேன்.  தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னர் சந்தேகிக்கிறார் என்றார். 

 போலி கடிதம் கொடுத்து மோசடி நடந்திருக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார்.  இதேபோன்று எம்.எல்.ஏ. காமராஜும், நான் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறேன் என்று கூறினார்.கடிதத்தில் உள்ளது என்னுடைய கையெழுத்து இல்லை என்று மறுத்துள்ளார்.  

இந்த நிலையில், த.வெ.க. தரப்பில் போலி கடிதம் தயாரிக்கப்பட்டு உள்ளது என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  போலி கடிதம் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கிண்டி காவல் நிலையத்தில் டி.டி.வி. தினகரன் புகார் அளித்துள்ளார்.

 இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு வீடியோ வெளியிட்டு த.வெ.க. பதிலளித்து உள்ளது.  அ.ம.மு.க. எம்.எல்.ஏ. சுய நினைவுடன்தான் கடிதம் கொடுத்துள்ளார்.  அ.ம.மு.க. பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன், அவர் தன்னிச்சையாக மற்றும் மகிழ்ச்சியுடன் த.வெ.க.வுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கடிதம் எழுதினார்.யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. 

 

இதனை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கூறி, காமராஜ் கடிதம் கொடுத்த வீடியோ ஒன்று த.வெ.க. தரப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. . அதில், காரில் அமர்ந்தபடி கடிதத்தில், காமராஜ் கையெழுத்திடும் காட்சிகள் உள்ளன.  த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் கூறிய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது.  

 உண்மையை மறைத்து விட்டு பொய்யான தகவலை அவர் பேசி வருகிறார் என்றும் த.வெ.க. தெரிவித்து உள்ளது.  இதனால், இந்த விவகாரம் பரபரப்பு அடைந்துள்ளது. 

மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி

பதிவு: சனிக்கிழமை,  மே 09, 2026, சித்திரை, 26, பாரபவ வருடம் 06:00 AM

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எனினும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  

காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது.  

கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்தபோதும் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் உள்ளது.  

இந்நிலையில், நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார்.  

அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.  அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. 

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை.  அவர் விலை போய் இருக்கலாம் என்றார்.  விஜய் பதவி வெறியில் இருக்கிறார்.  த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று கூறினார்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். 

இதனை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் மீண்டும் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.  இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர்.  

காமராஜை காணவில்லை என கவர்னரிடம் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, கவர்னரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை.  

அக்கடிதம் போலியானது.  காமராஜ் பெயரில் கவர்னருக்கு வாட்ஸ்அப் மூலம் போலி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என கூறினார்.

உங்களுக்கு 108 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர்.  அறுதி பெரும்பான்மையே இன்னும் இல்லை.  நீங்கள் தூய சக்தி.  தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள்.  ஆனால், ராவணன் சீதையை தூக்கியதுபோல், ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.வை தூக்க பார்த்துள்ளனர்.  

உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.  மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? என த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அ.ம.மு.க. ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர்.  ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை.  இதுதொடர்பாக போலீசில் நாங்கள் புகார் அளிப்போம்.

அந்த கடிதங்களை ஆராய வேண்டும்.  அதுபற்றி விசாரணை நடத்த கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன்.  மீண்டும் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.  

தி.மு.க.வின் கோட்டையான மன்னார்குடியில், நாங்கள் உழைத்து, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

ஒரேயொரு எம்.எல்.ஏ. எங்களிடம் உள்ளார்.  அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றார்.

மோசடி கடிதம் த.வெ.க.தான் அனுப்பியது என்று குற்றச்சாட்டாக கூறுகிறீர்களா? என நிருபர்கள் சந்தேகம் தெரிவித்தனர். . அதற்கு, மோசடி கடிதம், யார் ராமசாமி அனுப்பியிருப்பாரா? த.வெ.க.தான் அனுப்பியுள்ளது.

த.வெ.க. சார்பில் கவர்னரிடம் வாட்ஸ்அப் மூலம் கடித நகல் கொடுக்கப்பட்டு உள்ளது.  உண்மை கடிதம் எங்கே? என கவர்னர் தரப்பில் கேட்கப்பட்டதற்கு, பின்னர் வந்து தருகிறோம் என கூறியுள்ளனர். 

இதுதொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து, எங்களிடம் கேட்கப்பட்டபோது அதிர்ச்சி ஏற்பட்டது என்றார்.

மோசடி சக்திகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அந்த மோசடி கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை.  த.வெ.க. மோசடியில் ஈடுபட்டு உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

கடிதம் கொடுத்து காமராஜை கைப்பற்றி விடலாம் என நினைத்தனர்.  த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும்படி புகார் அளிப்பேன்.  தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னர் சந்தேகிக்கிறார் என்றார்.  

போலி கடிதம் கொடுத்து மோசடி நடந்திருக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார்.  

இதேபோன்று எம்.எல்.ஏ. காமராஜும், நான் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறேன் என்று கூறினார்.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல் நீடிப்பு

பதிவு: சனிக்கிழமை,  மே 09, 2026, சித்திரை, 26, பாரபவ வருடம் 05:10 AM

சென்னை,

தற்போதைய நிலவரப்படி த.வெ.க. பெரும்பான்மையை காட்டுவதற்கு 2 இடங்கள் தேவைப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. 

த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் ஆட்சி அமைப்பதற்கு த.வெ.க.வுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. 

தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 

தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. 

மேலும் வி.சி.க. ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். 

அதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சியும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து விஜய் இன்று மாலை கவர்னரை சென்று சந்தித்தார். 

அப்போது தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை கவர்னரிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

இதையடுத்து நாளை தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது விஜய்க்கு ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதுவரை த.வெ.க. ஆதரவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

த.வெ.க. தலைவர் விஜய் கவர்னரை சந்தித்தபோது, வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்களை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. 

அவ்வாறு இருக்கும்பட்சத்தில், கவர்னர் ஏற்கனவே கேட்டபடி ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மை இடங்கள் த.வெ.க.வுக்கு இல்லை என்றே தெரிகிறது. 

இதனால் த.வெ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி த.வெ.க. பெரும்பான்மையை காட்டுவதற்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகின்றன. 

இந்த சூழலில், த.வெ.க.வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு எவ்வாறு அமையப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20% மாணவர்கள் தேர்ச்சி - 2,639 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் பெற்று சாதனை

பதிவு: சனிக்கிழமை,  மே 09, 2026, சித்திரை, 26, பாரபவ வருடம் 04:30 AM

சென்னை,

தமிழகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு​திய 7.92 லட்​சம் மாணவ, மாணவி​களில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். வழக்​கம்​போல, மாணவி​களே முன்​னிலை​யில் உள்​ளனர்.

489 அரசுப் பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 2,639 பள்​ளி​கள் 100 சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன. தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் இந்த ஆண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை 3,412 தேர்வு மையங்​களில் நடை​பெற்​றது. பதிவு செய்த 7 லட்​சத்து 99,528 மாணவ, மாணவி​களில் 7 லட்​சத்து 91,654 பேர் தேர்வு எழு​தினர். 7,874 பேர் (0.98%) பங்​கேற்​க​வில்​லை.

இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறி​வித்​த​படி, சென்னை டிபிஐ வளாகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​களை பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் நேற்று காலை 9.30 மணிக்கு வெளி​யிட்​டார். தொடர்ந்​து, தேர்​வுத் துறை இணை​யதளத்​தி​லும் முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன. 

மாணவர்​களின் செல்​போன் எண்ணுக்கு குறுஞ்​செய்​தி​யாக​வும் (எஸ்​எம்​எஸ்), பள்​ளி​களுக்கு மின்​னஞ்​சலிலும் மதிப்​பெண்​களு​டன் தேர்வு முடிவு விவரங்​கள் அனுப்​பப்​பட்​டன. முதல்​முறை​யாக வாட்​ஸ்​அப் மூல​மாக​வும் தேர்வு முடிவு​களை அறிந்து கொள்ள ஏற்​பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்வு எழு​தி​ய​தில் 7 லட்​சத்து 53,694 பேர் (95.20%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர். கடந்த ஆண்​டை​விட (95.03%) இது 0.17 சதவீதம் அதி​கம். மாணவி​கள் 97 சதவீத​மும், மாணவர்​கள் 93.19 சதவீத​மும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். தேர்ச்சி விகிதத்​தில் மாணவர்​களை​விட மாணவி​கள் 3.81 சதவீதம் அதி​கம். கடந்த 2013 முதல் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்​தில் மாணவி​களே முன்​னிலை வகிக்​கின்​றனர்.

அரசுப் பள்ளி மாணவர்​கள் 1,695 பேர் உட்பட மொத்​தம் 16,024 பேர் ஏதேனும் ஒரு பாடத்​தில் 100 மதிப்​பெண் (‘சென்​டம்’) பெற்​றுள்​ளனர். மாவட்ட அளவி​லான தேர்ச்​சி​யில் 98.87 சதவீதத்​துடன் ஈரோடு முதலிடம் பெற்​றுள்​ளது. சிவகங்கை (98.05%), கன்​னி​யாகுமரி (97.63%) மாவட்​டங்​கள் அடுத்த 2 இடங்​களில் உள்​ளன. கடைசி இடத்​தில் விழுப்​புரம் (85.92%) உள்​ளது. 

தலைநகர் சென்​னை​யில் தேர்ச்சி சதவீதம் 95.43 ஆக உள்​ளது. அரசுப் பள்​ளி​கள் பிரி​விலும் ஈரோடு (98.24%) மாவட்​டம் முதலிடத்​தில் உள்​ளது. சிவகங்கை (96.97%), திருச்சி (96.55%) அதற்​கடுத்த 2 இடங்​களைப் பிடித்​துள்​ளன. விழுப்​புரம் (82.10%) மாவட்​டம் கடைசி இடத்​தில் உள்​ளது. இத்​தேர்​வில் 7,536 பள்​ளி​களைச் சேர்ந்த மாணவ, மாணவி​கள் தேர்வு எழு​தினர். இதில் 489 அரசுப் பள்​ளி​கள் உட்பட 2,639 பள்​ளி​கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன.

தனி​யார் பள்​ளி​களின் தேர்ச்சி கடந்த 2023-ல் 99.08%, கடந்த 2024-ல் 98.70%, கடந்த 2025-ல் 98.88% என்று இருந்த நிலை​யில் தற்​போது 98.72% ஆக குறைந்​துள்​ளது. அதே​நேரம், அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்​டை​விட சற்று உயர்ந்​துள்​ளது.

25,521 தனித் தேர்​வர்​களில் 6,171 பேர் (24%) மட்​டுமே தேர்ச்சி பெற்​றனர். 8,855 மாற்​றுத்திறன் மாணவர்​களில் 6,811 பேர் (76.92%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர். கடந்த ஆண்​டை​விட (93.20%) இது 16.28% குறைவு. 250 சிறைக் கைதி​களில் 238 பேர் (95.20%) தேர்ச்சி பெற்​றுள்ளனர். பிளஸ் 1 வகுப்​பில் தனித் தேர்​வர்​களாக 20,444 பேர் தேர்வு எழு​தி​ய​தில் 8,491 பேர் (41.53%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

தேர்​வுத் துறை இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) தற்​காலிக மதிப்​பெண் பட்​டியல் மே 13-ம் தேதி வெளி​யிடப்​படு​கிறது. மாணவர்​கள் தாங்​கள் படித்த பள்​ளி​கள் வாயி​லாக​வும், தனித் தேர்​வர்​கள் தேர்வு மைய தலைமை ஆசிரியர்​கள் மூல​மாக​வும் மதிப்​பெண் பட்​டியலை பெற்​றுக் கொள்​ளலாம். அசல் மதிப்​பெண் சான்​றிதழ் ஜூன் மாதம் வழங்​கப்​படும். விடைத்​தாள் நகல் கோரி மே 12 முதல் 16-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்.

ஜூனில் துணைத் தேர்வு

பொதுத் தேர்வு எழுத முடி​யாதவர்​கள், தேர்​வில் வெற்றி வாய்ப்பை தவற​விட்​ட​வர்​கள் இந்த கல்வி ஆண்​டிலேயே உயர்​கல்​வியைத் தொடர ஏது​வாக, ஜூன் 29 முதல் ஜூலை 7-ம் தேதி வரை துணைத் தேர்வு நடத்​தப்பட உள்​ளது. இதற்கு மே 18 முதல் ஜூன் 2-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். மறும​திப்​பீடு, மறுகூட்​டல் கோரி ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று தேர்​வுத் துறை தெரி​வித்​துள்​ளது.

கட்​ஆஃப் குறை​யும்

பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்கு பிர​தான​மான கணிதம், இயற்​பியல், வேதி​யியல் பாடங்​களில் மாணவர்​களின் தேர்ச்சி கடந்த ஆண்​டை​விட சற்று குறைந்​துள்​ளது. தவிர, முழு மதிப்​பெண் (‘சென்​டம்’) பெற்​றவர்​களின் எண்​ணிக்​கை​யும் குறைந்​துள்​ளது. கடந்த 2025-ல் வேதி​யியல் 3,181, கணிதம் 3,022, இயற்​பியல் 1,125 பேர் என ‘சென்​டம்’ பெற்ற நிலை​யில், தற்​போது வேதி​யியல் 632, கணிதம் 732, இயற்​பியல் 105 பேர் என குறைந்​துள்​ளது.

இதனால், கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது கட்​ஆஃப் 180-200 பிரி​வில் 2 முதல் 4 வரை​யும், 160-179 பிரி​வில் 6 முதல் 8 வரை​யும் மதிப்​பெண் குறை​யும். இதுத​விர, நீட் தேர்வு தேவைப்​ப​டாத கால்​நடை மருத்​து​வம் போன்ற இதர மருத்​து​வப் படிப்​பு​களுக்​கும் கட்​ஆஃப் மதிப்​பெண் கணிச​மாக குறை​யும் என்று கூறப்​படு​கிறது.

மாணவர்​களுக்கு மனநல ஆலோ​சனை

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மன உறுதி, மனநலனைக் காக்கும் வகையில் தமிழக அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ‘டெலி கவுன்சலிங்’ தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் தயங்காமல் ‘14416’ அல்லது ‘104’ ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் ‘14417’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

கணிதத்தில் 732 மாணவர்கள் 100-க்கு 100

 பாட​வாரி​யாக 100-க்கு 100 பெற்​றவர்​களின் எண்​ணிக்கை:

தமிழ் - 83

ஆங்​கிலம் - 21

இயற்​பியல் - 105

வேதி​யியல் - 632

உயி​ரியல் - 784

கணிதம் - 732

தாவர​வியல் -31

விலங்​கியல் - 18

கணினி அறி​வியல் - 6,945

வணி​க​வியல் - 683

கணக்​குப் பதி​வியல் - 1,946

பொருளா​தா​ரம் - 440

வரலாறு - 282

புவி​யியல் - 42

கணினி பயன்​பாடு​கள் - 2,099

வணி​க கணிதம்​ மற்றும்

புள்​ளி​யியல் - 463

புள்​ளி​யியல் - 17

மனை​யியல் - 6

கணினி அறிவியலில் தேர்ச்சி வீதம் அதிகம்

 பிளஸ் 2 தேர்​வில் கணினி அறி​வியல் பாடத்​தில் தேர்ச்சி வீதம் அதி​க​மாக​வும், பொருளா​தார பாடத்​தில் குறை​வாக​வும் காணப்​படு​கிறது. தேர்ச்சி வீதம் வரு​மாறு:

மொழிப்​பாடம் - 98.96%

ஆங்​கிலம் - 98.74%

இயற்​பியல் - 98.87%

வேதி​யியல் - 98.82%

உயி​ரியல் - 99.49%

கணிதம் - 99.12%

தாவர​வியல் - 98.62%

விலங்​கியல் - 98.69%

கணினி அறி​வியல் - 99.84%

வணி​க​வியல் - 97.55%

கணக்​குப் பதி​வியல் - 98.94%

வரலாறு - 97.90%

புவி​யியல் - 99.32%

புள்​ளி​யியல் - 99.58

பொருளா​தா​ரம் - 97.54%

மனை​யியல் - 96.89%

பாடப் பிரிவு​கள் (குரூப்) வாரி​யாக தேர்ச்சி வீதம்:

அறி​வியல் பிரிவு - 96.90%

வணி​க​வியல் - 92.67%

கலை - 85.19%

தொழிற்​பாடம் - 85.97%​

மாவட்ட வாரியாக ஒட்டுமொத்த தேர்ச்சி (%)

ஈரோடு 98.87

சிவகங்கை 98.05

கன்னியாகுமரி 97.63

திருநெல்வேலி 97.54

திருச்சி 97.50

தூத்துக்குடி 97.24

தஞ்சாவூர் 97.19

தென்காசி 97.18

விருதுநகர் 97.17

நாமக்கல் 97.04

திருப்பூர் 97.03

ராமநாதபுரம் 96.70

கோவை 96.66

சேலம் 96.61

கரூர் 96.20

மதுரை 96.13

திண்டுக்கல் 95.92

புதுக்கோட்டை 95.88

கடலூர் 95.57

சென்னை 95.43

காஞ்சிபுரம் 95.31

தேனி 95.27

பெரம்பலூர் 94.53

நாகப்பட்டினம் 94.38

கள்ளக்குறிச்சி 94.26

நீலகிரி 94.13

திருவள்ளூர் 94.11

திருப்பத்தூர் 93.68

மயிலாடுதுறை 93.51

தருமபுரி 93.49

செங்கல்பட்டு 93.25

தி.மலை 92.87

அரியலூர் 91.70

கிருஷ்ணகிரி 91.31

திருவாரூர் 91.00

வேலூர் 90.73

ராணிப்பேட்டை 88.20

விழுப்புரம் 85.92















“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...