புதன், 29 ஏப்ரல், 2026

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் - மாசி வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்

பதிவு: புதன்கிழமை,  ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 07:15 AM

மதுரை,

மதுரை சித்திரை திருவிழாசைவமும், வைணவமும் சங்கமிக்கும் விழாவாக நடந்துவரும் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மதுரையை அடுத்த அழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை விழாக்கள் இணைந்த விழாவாக இந்த பெருவிழா நடந்து வருகிறது. 

மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26-ந் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. 

தொடர்ந்து, சிவபெருமானை அம்மன் போருக்கு அழைத்த நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. 

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர், பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. 

சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா சிவசிவா முழக்கத்துடனும் தேரை பக்தர்கள் இழுத்து வருகின்றனர்.

பெரிய தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னால் செல்கிறது. தொடர்ந்து, முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கின்றனர். 

அசைந்து வரும் தேரை காண்பதற்காக மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் இன்று மாலையில் அதிர்வெட்டுகள் முழங்க மதுரைக்கு புறப்படுகிறார். 

வழிநெடுக சுமார் 500 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகருக்கு நாளை (30-ந் தேதி) மதுரை மூன்றுமாவடியில் பக்தர்கள் வெள்ளமென திரண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. 

விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (1-ந் தேதி) அதிகாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். 

இந்த பக்தி பரவசக்காட்சியை காண, தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆந்திராவில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீடு - கூகுள் ஏஐ டேட்டா மையத்துக்கு அடிக்கல் - 1.88 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

 

பதிவு: புதன்கிழமை,  ஏப்ரல் 29, 2026, சித்திரை, 16, பாரபவ வருடம் 01:45 AM

விசாகப்பட்டினம்,

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 3 இடங்​களில் ரூ.1.35 லட்​சம் கோடி முதலீட்​டில் கூகுள் ஏஐ டேட்டா மையம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில், மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவுடன் இணைந்து ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார். இதன் மூலம் 1.88 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும்.

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினம் தர்​ல​வாடா பகு​தி​யில் நேற்று கூகுள் ஏஐ டேட்டா மையத்​துக்​கான அடிக்​கல் நாட்டு விழா விமரிசை​யாக நடந்​தது. விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்ட மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் மற்​றும் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் அடிக்​கல் நாட்​டினர்.

ரூ.1.35 லட்​சம் கோடி முதலீட்​டில் அமைய உள்ள கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் 1.88 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்​ளது. ஒரு கிகா​வாட்​டுக்கு மேல் திறன் கொண்ட இந்த ஏஐ மையம், விசாகப்​பட்​டினத்​தில் 2028-ம் ஆண்​டுக்​குள் அமைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முதலில், தர்​ல​வா​டா​வில் 266.6 ஏக்​கரிலும், பின்​னர் அடவிவரம் பகு​தி​யில் 160 ஏக்​கரிலும், அனகாபல்லி மாவட்​டம் ராம்​பில்லி அருகே 174.80 ஏக்​கரிலும் இந்த டேட்டா மையங்​கள் அமைக்​கப்பட உள்​ளன. இந்த மையம் கட்​டப்​படும்​போதே சிவில், எலக்ட்​ரி​க்கல் மற்​றும் மெக்​கானிக்கல் பிரிவு​களில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்​ளது.

கேம் சேஞ்​சர்

விசாகப்​பட்​டினத்​துக்​குக் கூகுள் ஏஐ டேட்டா மையம் வரவு என்​பது ஒரு கேம் சேஞ்​சர் என ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தெரி​வித்​தார். அவர் மேலும் பேசி​ய​தாவது: விசாகப்​பட்​டினத்​துக்கு மட்​டுமல்ல, ஆந்​தி​ரா​வுக்கே இந்த நிகழ்வு ஒரு கேம் சேஞ்​சர்தான்.

ஆந்​திர வரலாற்​றில் இந்த நாள் மறக்க முடி​யாத நாளாகும். இதனால் நான் மத்​திய அரசுக்​கும், கூகுள் நிறு​வனத்​துக்​கும் மனதார நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் நம் நாட்​டின் தகவல் தொழில்​நுட்​பத்​தில் ஒரு புதிய அத்​தி​யா​யம் தொடங்கி உள்​ளது.

தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் ஆந்​தி​ரா​வின் பங்கு மிக முக்​கிய​மாக மாற உள்​ளது. சர்​வ​தேச டேட்டா நுழைவு வாயி​லாக ஆந்​திரா இருக்​கும். மேலும் பல்​வேறு பிரபல நிறு​வனங்​கள் ஆந்​தி​ரா​வுக்கு வர உள்​ளன. இந்த மையம் 2028 நவம்​பர் மாத இறு​திக்​குள் அமைக்​கப்​படும். வரும் ஜூலை மாதத்​தில் போகாபுரம் விமான நிலை​யத் திறப்பு விழா நடை​பெற உள்​ளது. நாங்​கள் நிறு​வனங்​களு​டன் வெறும் ஒப்​பந்​தங்​கள் மட்​டுமே செய்​வ​தில்​லை. அதை முனைப்​புடன் அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்​வ​தில் குறி​யாக உள்​ளோம். இதனால்​தான் பல நிறு​வனங்​கள் ஆந்​தி​ரா​வில் முதலீடு செய்ய முன்​வரு​கின்​றன. இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு பேசி​னார்.

ஏஐ பட்​டினம்

மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது.... 

நாடே பெரு​மிதம் அடை​யும் விதத்​தில் தொலைநோக்கு பார்வை கொண்ட தலை​வர் சந்​திர​பாபு நாயுடு. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலத்​தில் ஹைத​ரா​பாத்​தில் ஒரு சைப​ரா​பாத் நகரை உரு​வாக்கி அதை தகவல் தொழில்​நுட்பத் தலைநகர​மாக மாற்றி சாதனை படைத்​தவர் சந்​திர​பாபு நாயுடு.

தற்​போது விசாகப்​பட்​டினம் வருங்​காலத்​தில் ஏஐ பட்​டின​மாக மாறும் வித​மாக கூகுள் ஏஐ டேட்டா மையத்தை இங்கு கொண்டு வந்​துள்​ளார். பிரதமர் மோடி, முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகிய இரு​வரும் தொலைநோக்குப் பார்​வை​யுடன் நாட்டை முன்​னோக்கி கொண்டு செல்​பவர்​கள்.

இளைய சமூகத்​துக்கு எடுத்​துக்​காட்​டாக விளங்கி வருபவர் அமைச்​சர் லோகேஷ். இவருடைய தீவிர முயற்​சிகளால் பணி​கள் விரை​வாக நடை​பெறுகின்​றன.

எலக்ட்​ரானிக்ஸ் தயாரிப்​பில் இந்​தியா சிறந்து விளங்​கு​கிறது. செமி கண்​டக்​டர் தயாரிப்​பில் நம் நாடு முக்​கிய இடம் வகிக்​கிறது. ஒரு டாலர் மதிப்​புள்ள ‘சிப்’ கிடைக்​கா​விடில், மில்​லியன் டாலர் பொருட்​களின் உற்​பத்தி நின்று போய் விடும். ரயில்வே துறை மூலம் ஆந்​தி​ரா​வுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. 

ஒரு லட்​சம் கோடி மதிப்​புள்ள ரயில்வே பணி​கள் ஆந்​தி​ரா​வில் நடை​பெற்று வரு​கின்​றன. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஆந்​தி​ரா​வில் ‘தென் கடலோர ரயில்வே வட்​டம்’ தொடங்​கப்பட உள்​ளது. விரை​வில் புல்​லட் ரயில்​கள் தென் இந்​திய மாநிலங்​களில் பறக்க உள்​ளன.

இதனால், சென்​னை, அமராவ​தி, ஹைத​ரா​பாத், பெங்​களூரு நகரங்​கள் பயனடைய உள்​ளன. அமராவ​தி​யில் இருந்து ஹைத​ரா​பாத்​துக்கு வெறும் 70 நிமிடங்​களில்​ சென்​றடைந்​து விடலாம்​. இவ்​​வாறு அஸ்​வினி வைஷ்ணவ்​ கூறி​னார்​. ​

நிகழ்​ச்​சி​யில்​ மத்​திய அமைச்​சர்​ ​ராம்​மோகன்​ ​நா​யுடு, ​மாநில அமைச்​சர்​ லோகேஷ், கூகுள்​ நிறு​வன பிர​தி​நி​தி​கள்​ உட்​பட மேலும்​ பல உயர்​ அ​தி​காரிகள்​ பங்​கேற்​றனர்​.

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

சித்திரை திருவிழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஏப்ரல் 28, 2026, சித்திரை, 15, பாரபவ வருடம் 09:15 AM

மதுரை,

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது. 

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. 

அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன். போரில் தேவர்களை வென்று இறுதியில் சிவபெருமானுடன் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அப்போது வில், அம்புடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் காட்சி தந்தனர். 

இதில், மீனாட்சி அம்மனாக சிவாதித்யன், சுந்தரேசுவரராக சட்டநாத ராஜசேகரன் ஆகியோர் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் கூட்டம் அலைமோதியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது. அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். 

பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக சென்று ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.

தொடர்ந்து 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. 

வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிடத் திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டதைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணைச் சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கத் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. 

பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக்கொண்டனர். 

10 டன் வண்ணமிகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட திருக்கல்யாண மேடையில் திருப்பரங்குன்றத்திலிருந்து முருகன் பெருமான் தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளியுள்ளனர்.

திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் மணக் கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி இன்று பகல் முழுவதும் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். 

இரவு 7.30 மணிக்கு சுந்த ரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.

திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் காண்பதற்காக வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதிகளில் தகர பந்தல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. 

இங்கு வெப்பத்தை தணிக்க 300 டன் வரை குளு குளு ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தண் ணீர் பாட்டில், பிரசாத பை வழங்கப்படுகிறது. 

கோவிலின் பகுதிகளில் பெரிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.

திருக்கல்யாண விழாவுக்காக போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீக்சித் தலைமையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

மேலும் மாசி விதிகளில் போலீசார் உதவி மையம் அமைத்தும், காண்காணிப்பு கோபுரம் மூலமும், டிரோன்கள் மூலமும் கண்காணித்து வருகின்றனர். மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வந்துள்ள பக்தர்களுக்கு தனியார் பக்தர்கள் சபை சார்பில் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது.

திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் நாளை காலை மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வலம் வரும் திருத்தேரோட்டமும், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா மே 1- தேதியும் நடைபெறுகிறது. 

இதன்மூலம் மதுரை மாநகரம் முழுவதும் விழாக் கோலமாகக் காட்சி அளிக்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஏப்ரல் 28, 2026, சித்திரை, 15, பாரபவ வருடம் 07:00 AM

திருச்செந்தூர், 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாகப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்தார். 

அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். 

பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். 

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், 'வெற்றி வேல்' வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் கடற்கரைக்கும் சென்று விஜய் வழிபாடு செய்தார்.

விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அவரைக் காண மக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும் திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - திருமலையில் பக்தர்கள் பாதிப்பு - விற்பனையாளர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

பதிவு: செவ்வாய்க்கிழமை,  ஏப்ரல் 28, 2026, சித்திரை, 15, பாரபவ வருடம் 02:30 AM

திருமலை, 

ஆந்​திர மாநிலத்​தில் திடீரென பெட்​ரோல், டீசலுக்கு ஏற்​பட்​டுள்ள தட்​டுப்​பாட்​டால் பொது​மக்​கள் மிக​வும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். அதி​லும் குறிப்​பாக பல்​வேறு வெளி​மாநிலங்​களில் இருந்து திரு​மலைக்கு வந்த பக்​தர்​கள் தங்​களின் கார், வேன்​களுக்கு போதிய டீசல், பெட்​ரோல் கிடைக்​காமல் பெரும் அவதிப்​படு​கின்​றனர். இதையடுத்​து, டீலர்​களுக்கு முதல்வர் சந்​திர​பாபு நாயுடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

ஆந்​திர மாநிலம் முழு​வதும் திடீரென பெட்​ரோல், டீசலுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதற்கு பல காரணங்​கள் கூறப்​படு​கின்​றன. கடப்​பா, விஜய​வாடா ஆகிய இடங்​களில் உள்ள ஆயில் நிறு​வனங்​களில் ஏற்​பட்​டுள்ள தட்​டுப்​பா​ட்டால், மாநிலம் முழு​வதும் பெட்​ரோல், டீசல் கிடைக்க வில்லை என கூறப்​படு​கிறது. ‘இதெல்​லாம் உண்மை இல்லை. பெட்​ரோல், டீசல் பதுக்​கப்​படு​கிறது.

இதன் மூலம் கள்ள சந்​தை​யில் அதிக விலைக்கு விற்​கலாமென டீலர்​கள் முடி​வெடுத்து வேண்​டுமென்றே மாநிலம் முழு​வதும் பற்​றாக்​குறையை ஏற்​படுத்தி உள்​ளனர்’ என்ற தகவலும் வெளி​யாகி உள்​ளது.

ஆந்​திர மாநிலம் முழு​வதும் சுமார் 4,150 பெட்​ரோல் பங்​க்கு​கள் உள்​ளன. இதில் தற்​போது 70 சதவீதத்​துக்​கும் மேலான பங்​க்கு​களில் ‘நோ ஸ்டாக்’ அறி​விப்பு பலகைகள்தான் காணப்​படு​கின்​றன. அண்டை மாநிலங்​களான தெலங்​கா​னா, தமிழகம், கர்​நாடகா உள்​ளிட்ட மாநிலங்​களில் இந்த பிரச்​சினை இல்​லை. ஆனால் திடீரென ஆந்​தி​ரா​வில் மட்​டும் இப்​பிரச்​சினை தலை​தூக்க காரணம் என்ன என்​பது குறித்து மாவட்ட ஆட்​சி​யர்​கள், டீலர்​களு​டன் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்​தி​னார்.

பொது​மக்​கள், வியா​பாரி​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள், அரசு மற்​றும் தனி​யார் ஊழியர்​கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்​கப்​படு​வர் என்​பதுடன் சுற்​றுலா துறை​யும் பாதிப்​படை​யும் என்​ப​தால் 24 மணி நேரத்​துக்​குள் பெட்​ரோல், டீசல் பிரச்​சினை தீர்க்​கப்பட வேண்​டும் என ஆட்​சி​யர்​களுக்கு அவர் உத்​தர​விட்​டுள்​ளார்.

ஒவ்​வொரு 3 மணி நேரத்​துக்கு ஒரு​முறை இதுதொடர்​பாக மாநிலம் தழு​விய அறிக்​கையை கொடுக்க வேண்​டும் என்​றும் அறிவுறுத்தியுள்​ளார். நேற்று மாலை வரை​யிலும்கூட திருப்​ப​தி, சித்​தூர், நெல்​லூர், குண்​டூர், கடப்​பா, விஜய​வா​டா, விசாகப்​பட்​டினம், கோதாவரி மாவட்​டங்​கள் என ஆந்​திரா முழு​வதும் எரிபொருள் பிரச்​சினை தீர்ந்​த​பாடில்​லை.

பெட்​ரோல், டீசல் வந்​ததும் குறிப்​பிட்ட பெட்​ரோல் பங்​க்கு​கள் முன்பு வாக​னங்​களுடன் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருக்க தொடங்கி விடு​கின்​றனர். இதனால் சில மணி நேரங்​களி​லேயே பெட்​ரோல், டீசல் விற்றுத் தீர்ந்து விடு​கிறது. திரு​மலை​யிலும் இதே நிலைமை உள்​ள​தால், வெளியூர்​களில் இருந்து கார், வேன்​களில் வரும் பக்​தர்​கள் மிக​வும் அவதிக்கு ஆளாகி உள்​ளனர்.

திரு​மலை​யில் உள்ள 2 பெட்​ரோல் பங்​க்கு​களி​லும் நேற்று மதி​யம் முதல் பெட்​ரோல், டீசல் இல்லை எனும் அறி​விப்பு பலகைகள் வைக்​கப்​பட்​ட​தால் வெகு தூரம் செல்​லும் வாகன ஓட்​டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. ​திரு​மலை​யில் தொடர்ந்து தங்​கு​வதற்கு அறை​களும் கிடைக்​காமல், பெட்​ரோல், டீசலுக்​கும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால் கீழே இறங்கி செல்​ல​வும் முடி​யாமல் வாகன ஓட்​டிகள் தவித்து வரு​கின்​றனர். எனவே, உடனடி​யாக இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண வேண்​டும் என பக்​தர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் மூடிய​தால், உலகின் பல்​வேறு நாடு​களி​லும் பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு உள்​ளிட்​ட​வற்​றுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. எனினும், பின்​னர் படிப்​படி​யாக நிலைமை சீரடைந்து வரு​கிறது.

பெட்​ரோல், டீசல் மற்​றும் எல்​பிஜி ஆகிய​வற்​றின் இருப்பை உறுதி செய்ய மத்​திய அரசு அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொண்டு வரு​வ​தாக மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் விளக்​கம் அளித்​துள்​ளது. அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் சட்​டம், 1955 மற்​றும் எல்​பிஜி கட்​டுப்​பாட்டு ஆணை, 2000 ஆகிய​வற்​றின் கீழ், விநி​யோகத்​தைக் கண்​காணிக்​க​வும், பதுக்​கல் மற்​றும் கள்​ளச் சந்​தைக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்​க​வும் மாநில அரசுகளுக்கு அதி​காரம் அளிக்​கப்​பட்​டுள்​ளது என்​றும் பெட்​ரோலிய அமைச்​சகம் தெரி​வித்​திருப்​ப​து குறிப்​பிடத்​தக்​கது.

திங்கள், 27 ஏப்ரல், 2026

மே 4-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் - அர்ச்சனா பட்நாயக்

பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 04:50 PM

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.

வாக்குகள் எண்ணும் வழிமுறைகள்

வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் துவங்கும்.

முதலில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

தபால் வாக்குகள்

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 லட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 லட்சம் அலுவலர்கள் (80 சதவீதம்) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் Zonal/Sector-ல் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.

85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர்.

இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8 வரை பெறப்படும்.

வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 06:40 AM

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெப்பம் அதிகளவில் இருப் பதை உணர முடிகிறது. 

வெப்பத்தை அதிகளவில் உணரச் செய்யக் கூடிய 'சூப்பர் எல்நினோ' அக்டோபர் மாதத்தில் உருவாக இருப்பதால், நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் (2027) வெப்பத்தின் கொடுமை சற்று அதிகமாகவே இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது. கோடை மழைக்கு சாதகமான சூழல் எதுவும் இல்லாத காரணத்தாலும் வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், வடக்கு உள்மாவட்டங்களிலும் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இதில் அதிகபட்சமாக வேலூரில் வெயில் அதிகமாக சுட்டெரிக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு அதாவது இன்று (திங்கட்கிழமை) முதல் 30-ந்தேதி (வியாழக்கிழமை) வரை வெப்பம் சுட்டெரிக்கும் என்றும், இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சி யஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.


இதேபோல், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும், 30-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் எனவும், அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் கடுமையாக இருக்கும் என்றும், சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந் திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலான காலகட்டங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு அவசியம் இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதாவது குடை எடுத்து செல்வது, தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத் தப்பட்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் 28-ந்தேதிக்கு பிறகு கோடை மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள் என ஆங்காங்கே கோடை மழை தீவிரம் அடையக் கூடும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறினார்.

மே 1 அல்லது 2-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என மற்றொரு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவானால் அது வெப்ப அலை என்று கூறப்படுகிறது.

மே 1-ந்தேதிக்கு பிறகு கோடை மழை ஆங்காங்கே பெய்ய வாய்ப்பு இருப்பதால் வெப்ப அலை வீசுமா? என்பதை அப்போதுள்ள சூழலை பொறுத்தே கணிக்க முடியும் என சொல்லப்படுகிறது.


“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...