திங்கள், 27 ஏப்ரல், 2026

மே 4-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் - அர்ச்சனா பட்நாயக்

பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 04:50 PM

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.

வாக்குகள் எண்ணும் வழிமுறைகள்

வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் துவங்கும்.

முதலில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

தபால் வாக்குகள்

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 லட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 லட்சம் அலுவலர்கள் (80 சதவீதம்) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் Zonal/Sector-ல் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.

85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர்.

இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8 வரை பெறப்படும்.

வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 06:40 AM

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெப்பம் அதிகளவில் இருப் பதை உணர முடிகிறது. 

வெப்பத்தை அதிகளவில் உணரச் செய்யக் கூடிய 'சூப்பர் எல்நினோ' அக்டோபர் மாதத்தில் உருவாக இருப்பதால், நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் (2027) வெப்பத்தின் கொடுமை சற்று அதிகமாகவே இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது. கோடை மழைக்கு சாதகமான சூழல் எதுவும் இல்லாத காரணத்தாலும் வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், வடக்கு உள்மாவட்டங்களிலும் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இதில் அதிகபட்சமாக வேலூரில் வெயில் அதிகமாக சுட்டெரிக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு அதாவது இன்று (திங்கட்கிழமை) முதல் 30-ந்தேதி (வியாழக்கிழமை) வரை வெப்பம் சுட்டெரிக்கும் என்றும், இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சி யஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.


இதேபோல், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும், 30-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் எனவும், அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் கடுமையாக இருக்கும் என்றும், சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந் திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலான காலகட்டங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு அவசியம் இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதாவது குடை எடுத்து செல்வது, தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத் தப்பட்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் 28-ந்தேதிக்கு பிறகு கோடை மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள் என ஆங்காங்கே கோடை மழை தீவிரம் அடையக் கூடும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறினார்.

மே 1 அல்லது 2-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என மற்றொரு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவானால் அது வெப்ப அலை என்று கூறப்படுகிறது.

மே 1-ந்தேதிக்கு பிறகு கோடை மழை ஆங்காங்கே பெய்ய வாய்ப்பு இருப்பதால் வெப்ப அலை வீசுமா? என்பதை அப்போதுள்ள சூழலை பொறுத்தே கணிக்க முடியும் என சொல்லப்படுகிறது.


தேர்தல் முடிவுகள் வெளியானதும் செல்வப்பெருந்தகை மாற்றம் - தமிழக காங்கிரஸுக்கு அடுத்த தலைவர் யார்?

பதிவு: திங்கட்கிழமை,  ஏப்ரல் 27, 2026, சித்திரை, 14, பாரபவ வருடம் 03:40 AM

சென்னை,

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான ஓரிரு தினங்​களில் தமிழக காங்​கிரஸுக்கு புதிய தலை​வர் அறிவிக்​கப்​படு​வார் என்​கிற தகவல் வெளி​யாகி​யிருப்​ப​தால் சத்​தி​யமூர்த்தி பவன் அனல் தகிக்​கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தமிழக காங்​கிரஸ் தலை​வ​ராக கே.எஸ்​.அழகிரி நியமனம் செய்​யப்​பட்​டார். காங்​கிரஸ் கட்​சி​யின் விதி​முறை​களின்​படி அவரது பதவிக்​காலம் 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி​யிலேயே நிறைவடைந்​து​விட்​டது. அழகிரி மீது ஏராள​மான புகார்​கள் தலை​மைக்கு சென்​ற​போதும், அகில இந்​திய தலை​மை​யில் நில​விய குழப்​பத்​தால் தமிழக காங்​கிரஸுக்கு புதிய தலை​வர் நியமிப்​ப​தில் தாமதம் ஏற்​பட்​டது. இதற்​கிடை​யில் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் கார்கே சிபாரிசில் கடந்த 2024-ல் தலை​வர் பதவியை தனதாக்​கிக் ​கொண்​டார், செல்​வப்​பெருந்​தகை.

தொண்​டர்​களின் விருப்​பத்​துக்கு மாறாக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக மிகக்​குறுகிய காலத்​திலேயே சத்​தி​யமூர்த்தி பவனில் இருந்து டெல்​லிக்கு புகார்​கள் பறக்க தொடங்​கின. ஆனாலும் கார்​கே​வின் ஆதரவு இருந்​த​தால் அவரது பதவிக்கு எந்த சிக்​கலும் இல்​லை. இந்​நிலை​யில், தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யானதும் செல்​வப்​பெருந்​தகையை மாற்ற அகில இந்​திய தலைமை முடிவு செய்​திருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கிறது.

இதுகுறித்து சத்​தி​ய மூர்த்தி பவன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் குறைந்​த​பட்​சம் 35 தொகு​தி​களிலா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார்.

ராகுல் காந்தி வருத்தம்

ஆனால் ப.சிதம்​பரத்தை கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்​டு​வந்​து, வெறும் 28 இடங்​களுக்கு அகில இந்​திய தலை​மையை ஒப்​புக்​கொள்ள வைத்​தார் செல்​வப்​பெருந்​தகை. இதில் ராகுல் காந்​திக்​குத் தனிப்​பட்ட முறை​யில் பெரிய வருத்​தம் உண்​டு. தொடர்ந்து வேட்​பாளர் தேர்​விலும் தனது ஆதர​வாளர்​களுக்கே செல்​வப்​பெருந்​தகை முக்​கி​யத்​து​வம் கொடுத்​தது பெரும் சர்ச்​சை​யானது. இதன் உச்​ச​மாக, வேட்​பாளர்​கள் தேர்​வில் ‘பணம் விளை​யாடிய​தாக’ முன்​னாள் தமிழக மகளிர் காங்​கிரஸ் தலை​வர் ஹசீனா சையத் கொடுத்த அதிரடி பேட்டி டெல்லி மேலிடத்தை முகம் சுளிக்க வைத்​தது.

மேலும், பிரச்​சா​ரக் கூட்​டம் ஒன்​றில் ராகுல் காந்​தி​யின் பேச்​சைத் தவறாக மொழிபெயர்த்​தது என செல்​வப்​பெருந்​தகை தொடர்ந்து சர்ச்​சைகளில் சிக்​கி​னார். இதையெல்​லாம் கவனத்​தில் கொண்​டு​தான் புதிய தலை​வரை நியமிக்க டெல்லி முடிவுக்கு வந்​திருக்​கிறது. இதைப் புரிந்​து​கொண்​டே, சமீபத்​தில் ‘தலை​வர் பதவி​யில் இருந்து வில​கத் தயார்’ என செல்​வப்​பெருந்​தகை பேட்​டியளித்​திருந்​தார்.

தற்​போது தலை​வர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, மாணிக்​கம் தாகூர், செல்​ல​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோர் தீவிர​மாக முயன்று வரு​கிறார்​கள். முன்​னாள் தலை​வர்​கள் திரு​நாவுக்​கரசர், கே.எஸ் அழகிரி, தங்​க​பாலு போன்​றவர்​களும் வாய்ப்பை எதிர்​பார்த்து காய் நகர்த்தி வரு​கிறார்​கள்.

காங்கிரஸ் தலைமை உறுதி

ஆனால். ஏற்​கெனவே மாநிலத் தலை​வர் பதவி​யில் இல்​லாத புதி​ய​வர்​களை நியமிக்​கவே டெல்லி தலைமை விரும்​பு​கிறது. போட்டியில் யாருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ தெரியாது. ஆனால், செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு புதிய தலை​வரை நியமிக்க வேண்டும் என்பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மிக​வும் உறு​தி​யாக இருக்​கிறது.

இவ்​வாறு அந்த வட்டாரங்கள் தெரி​வித்​தன​.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான மே 4-ம் தேதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஏப்ரல் 26, 2026, சித்திரை, 13, பாரபவ வருடம் 04:10 AM

சென்னை,

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான முடிவு​கள் வெளி​யாகும் மே 4-ம் தேதி அன்​று, தவெக தலை​வர் விஜய் ஆஸ்​திரேலியா செல்​ல​வுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி​ உள்ளது.

தமிழ்​நாட்​டில் 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. இதையொட்​டி, கடந்த ஒரு மாத​கால​மாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வந்​தனர். தேர்​தல் முடிந்​துள்ள நிலை​யில், தற்​போது அவர்​கள் தங்​களை ஆசு​வாசப்​படுத்​திக் கொள்​வதற்​காக சுற்​றுலாத் தலங்​களுக்​கு சென்று வரு​கிறார்​கள்.

அந்த வகையில், தவெக தலை​வர் விஜய்​யும் வரும் மே 4-ம் தேதி ஆஸ்​திரேலியா செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகிப் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அன்​றைய தினம்​தான் தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யாக இருப்​பது​தான் இதற்கு காரணம்.

இதுகுறித்​து, தவெக வட்​டாரங்​கள் கூறிய​தாவது..

பொது​வாக விஜய் தனது படங்​களின் படப்​பிடிப்பு முடிந்த பிறகு, வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொள்​வதை வழக்​க​மாக வைத்​திருந்​தார்.

தற்​போது, தேர்​தல் பணி​கள் முடிவடைந்​துள்ள நிலை​யில், அவர் வெளி​நாடு செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ளார். அதன்​படி, தேர்​தல் முடிவு​கள் வெளி​யாக​வுள்ள 4-ம் தேதி அவர் ஆஸ்​திரேலியா செல்​லக் கூடும் என்று கூறப்​படு​கிறது. இதற்​காக அவர் டிக்​கெட் முன்​ப​திவு செய்​திருப்​ப​தாக​வும் சொல்​லப்​படு​கிறது.

இருப்​பினும், தேர்​தலில் வெற்றி பெற்று நாங்​கள்​தான் ஆட்சி அமைப்​போம் என்​கிற அசைக்க முடி​யாத நம்​பிக்கை இருக்​கிறது. எனவே, அன்​றைய தினம் முடிவு​கள் எங்​களுக்​குச் சாதக​மாக இருந்​தால், தலை​வர் வெளி​நாடு செல்​லும் முடிவைக் கைவிட்​டு​விடு​வார். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப 5,276 பேருந்துகள் இன்று இயக்கம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  ஏப்ரல் 26, 2026, சித்திரை, 13, பாரபவ வருடம் 03:30 AM

சென்னை,

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று வழக்கமான 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 3,184 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 5,276 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் சென்னை போன்றபெருநகரங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

கல்லூரிகளிலும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஏப்ரல் 21-ம் தேதி முதல் இயக்கம்

சென்னையில் இருந்து கடந்த 21-ம் தேதி வழக்கமான 2,092 பேருந்துகள், கூடுதலாக 1,339 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.89 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். 22-ம் தேதி முதல் 23-ம் தேதி நண்பகல் 12 மணி வரை, வழக்கமான 3 ஆயிரம் பேருந்துகள், கூடுதலாக 4,206 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 7,206 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4.38 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.

அந்த வகையில், தேர்தலை கருத்தில் கொண்டு 21-ம் தேதி முதல் 23-ம் தேதி மதியம் 12 மணி வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் 6.26 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையே, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 22-ம் தேதி இரவு லட்சக்கணக்கான மக்கள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். அன்று மதியம் முதல் மாலை வரை பேருந்துகள் இயக்கம் சீராக இருந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர்.

பேருந்து நிலையத்துக்குள் நுழையும் பேருந்துகளில் முண்டியடித்து ஏறினர். நீண்ட நேரம் காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தவர்கள் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

வாகன நெரிசலால் தாமதம்

சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் திட்டமிட்டபடி பேருந்துகளை இயக்க முடியவில்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருந்தபயணிகளை அதிகாரிகள் சமாதானம் செய்து, சில மணி நேரத்தில் பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

23-ம் தேதி காலை வரை சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல, பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கும் போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பகல் 12 மணி அளவில் நிலைமை சீரடைந்தது.

இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு திரும்ப வசதியாக 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும், மற்ற பகுதிகளில் 2,500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

அதேபோல, இன்று சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளுக்கு இடையே 3,345 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வாக்களிப்பதற்காக சென்றவர்கள் மட்டுமின்றி, வாரக் கடைசி நாட்களில் மற்றவர்களும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரிப்பு

வாக்குப்பதிவுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் இல்லாதபேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,800 வரை வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.2,700 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3,200 வரையும், மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.2,400 முதல் ரூ.3ஆயிரம் வரையும், கோவையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.2,800 முதல் ரூ.3,200 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குடும்பத்துடன் பயணம் செய்யும் நடுத்தர மக்கள் இதனால் அதிக சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து துறையும், ஆம்னி பேருந்து சங்கமும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிவரும் நிலையில், சூழ்நிலையைப் பயன்படுத்தி சில தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ப கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சனி, 25 ஏப்ரல், 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் - வரலாற்று வாக்குப் பதிவு சதவீதத்தின் பின்னணி....

பதிவு: சனிக்கிழமை,  ஏப்ரல் 25, 2026, சித்திரை, 12, பாரபவ வருடம் 01:15 AM

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்புகள் வாக்குப் பதிவோடு ஓய்ந்துவிட்டவில்லை. தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் அந்த பரபரப்பை சற்றும் குறைந்துவிடாமல் மே 4 வரை நீட்டிக்கும் போல் தெரிகிறது.

இந்த வரலாற்று வாக்குப் பதிவு சதவீதத்தின் பின்னணியில் எஸ்ஆர்ஐ பணிகள், ஜனநாயகக் கடமையாற்றுவதில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஆர்வம், மகளிர் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளால் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தது என்று 3 காரணங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.

எஸ்ஐஆர் தாக்கம்

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85.15% பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.36 சதவீதம் பதிவானது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீதமும் சென்னை மாவட்டத்தில் 83.74 சதவீதமும் பதிவானது.

இந்த வாக்கு சதவீதங்களே மிகத் தெளிவாக இது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) எதிரொலி என்பதை உறுதி செய்கிறது. இந்தப் பணிகள் நடந்தபோதே வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எஸ்ஐஆர் என்பது வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றே மத்திய அரசு ஆரம்பத்தில் கூறிவருகிறது. போலி வாக்காளர்கள் நீக்கம், டூப்ளிகேஷன் களையப்பட்டதன் காரணமாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வாக்குப் பதிவு சதவீதம் விகிதாச்சாரப்படி அதிகரித்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகம் மட்டுமல்லாது இதற்கு முன்னர் தேர்தலை எதிர்கொண்ட பிஹார் மற்றும் இப்போது தமிழகத்தோடு தேர்தலை சந்தித்த மேற்கு வங்கத்திலும் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதை சான்றாகக் கூறலாம்.

இளைஞர்களின் எழுச்சி

இரண்டாவதாக ஜனநாயகக் கடமையாற்றுவதில் இளைஞர்களின் எழுச்சி காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் 5.73 கோடி. இதில், சுமார் 1 கோடியே 18 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் சுமார் 20 சதவீதம். இளம் வாக்காளர்களில் 14.6 லட்சம் முதன்முறை வாக்காளர்கள்.

இந்த முறை களத்தில் தவெக என்ற புதிய கட்சி களம் கண்டது, இளம் தலைமுறை வாக்காளர்களை அதுவும் குறிப்பாக அரசியல் அறிவே அற்ற வாக்காளர்களைக் கூட வாக்களிக்க வைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

விஜய்க்கு வாக்களித்த பலரும் அவரது படத்துக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ செல்வது போன்ற கொண்டாட்ட மனநிலையிலும், ’எனக்கு வாக்குரிமை இருக்கிறது, அதைச் செலுத்த முழுக்க அரசியல்வாதியாக இல்லாத சினிமா கம் அரசியல் அந்தஸ்தை தரித்துக் கொண்ட விஜய் இருக்கிறார், எனக்குப் பிடித்த உச்ச நடிகர் அரசியலில் களம் இறங்கியிருக்கிறார், அவரை ஆதரிப்பேன், எனக்குப் பிடித்த நடிகர் அவரது கரியர் உச்சத்தை உதறிவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார், அவரை அரசியலில் வெற்றி பெற வைப்பது எனது கடமை’ போன்ற உணர்வுகளாலேயே அந்தக் கட்சிக்காக வாக்களித்துள்ளனர் என்று தேர்ந்த அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

மேலும், விஜய் தன்னை எம்ஜிஆருக்கு நிகராக நிலைநிறுத்தி, நான் அதேபோன்ற கவர்ச்சியை கொண்டிருக்கிறேன், 1977 புரட்சியை ரீரைட் செய்வேன் என்று வசனம் பேசியதால், அதிமுக அதிருப்தி இளம் வாக்காளர்களின் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்திருக்கலாம் என்றும், திமுகவை அவர் தொடர்ச்சியாக வலுவாக தீவிரமாகத் தாக்கிவந்ததால் திமுக மீதான அபிமானத்தை இழந்த இளைஞர்களையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிலாம் எனக் கூறப்படுகிறது.

நாதக வாக்குகள் கணிசமாக விஜய்க்கு போகும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நிலவிய 4 முனைப் போட்டியில் விஜய் ஒருவராக மூன்று கட்சிகளின் மீதும் வாளைச் சுழற்றி வாக்குகளை சின்னாபின்னமாக சிதறிடித்திருப்பார் என்பதே இப்போதைய கணிப்பாக இருக்கிறது.

குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்ற விமர்சனங்கள் இருந்தாலும்கூட உதயநிதியை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே திமுக வளர்த்தெடுத்துவிட்டது. அவரும் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். துணை முதல்வராக அவர் இந்தமுறை பிரச்சாரம் செய்தது திமுக பக்கம் கணிசமாக இளைஞர்களை ஈர்த்திருக்கலாம். இன்னொரு புறம் வாரிசு அடையாளமே அதிருப்தி இளைஞர்களை தவெக பக்கம் தள்ளியிருக்கலாம் என்று கணிக்கின்றனர்.

ஆனால், அதிமுக இதுவரை இரண்டாம் கட்ட இளம் முகங்களை வளர்த்தெடுக்கவில்லை. ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் பலரே இந்த முறையும் வேட்பாளர்களாக இருந்துள்ளனர். விஜய்க்கு வேண்டாம் இங்கேயும் ஒரு துடிப்பான இளைஞர் இருக்கிறார் என்று கொள்ளும் அளவுக்கு தமிழகம் முழுவதும் அறிந்த ‘ப்ராமிஸிங் யூத் கேண்டிடேட்’ அதிமுகவில் இல்லை. அதனால் அதிமுக அதிருப்தி இளைஞர்கள், தவெக பக்கம் சென்றிருக்கலாம் என்றும் கணிக்கின்றனர்.

சினிமா மோகமாக இருந்தாலும், அரசியல் அறிவற்றவர்களாக இருந்தாலும் ஒரு குடிமகனின் அடிப்படைக் கடமையான வாக்குரிமையை செயல்படுத்தும் உந்துதலை விஜய்யின் வருகை தந்துள்ளது. அதுவே, இளைஞர்களின் வாக்களிப்பு அதிகமாக இருந்ததற்கும் காரணம் என்பதை முற்றிலுமாக புறந்தள்ளிவிடமுடியாது என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார். இதை இத்தோடு விட்டுவிடாமல் திராவிடக் கட்சிகள் இளைஞர்களை, இளம் முகங்கள் மூலம் அரசியல்மயமாக்குவதை ஒரு பயிற்சி போல் செயல்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இல்லையேல், கல்வியில் முன்னேறிய மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் மாநிலத்தில்தான் இளைஞர்கள் கண்மூடித்தனமாக ஹீரோ ஒர்ஷிப் செய்கிறார்கள் என்பது இழுக்கு. அப்படியொரு ‘கல்ட்’ உருவாவது ஆபத்து. அவர்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்று வாக்குகளை சிதறடிப்பர் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தேர்தல் முடிவை எழுதும் பெண் சக்தி

தேர்தல் முடிவை எழுதும் அதிகாரம் பெண் சக்தி வசம் வந்துவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலுமே ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் என்ற போக்கு மாறியதில் இருந்தே இந்த அதிகாரம் அவர்களிடம் சென்ற வரலாறு தொடங்கியதாகக் கொள்ளலாம்.

அதனாலேயே மாநிலங்கள் தோறும், தேசிய அளவிலும் பெண்களை முன்வைத்து பல்வேறு திட்ட அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வாக்களித்த பெண் வாக்காளர்கள் சதவீதம் 85.76. ஆண் வாக்காளர்கள் 83.57%.

இந்தத் தேர்தலுக்கு ஆளும் திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் பெண்களுக்கான வாக்குறுதிகளை வாரி வழங்கின. மகளிர் உரிமைத் தொகையை செல்லுமிடமெல்லாம் விமர்சித்த அதிமுக, இந்தத் தேர்தலில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என்று அறிவித்தது. குல விளக்கு திட்டத்தின்கீழ் அனைத்து குடும்பப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்று அறிவித்தது.

தவெக ஒருபடி மேலே சென்று 60 வயது வரையிலான அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 என்று அறிவித்தது.

எங்கள் தேர்தல் அறிக்கையே ‘சூப்பர் ஸ்டார்’ என்று திமுக முன்னிலைப்படுத்தி, மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 வழங்கப்படும், பெண்கள் தங்களுக்கு விரும்பிய வீட்டு உபயோகப் பொருளை வாங்கிக் கொள்ள ரூ.8000-க்கான டோக்கன் வழங்கப்படும் என்று கூறியது. இந்த டோக்கன் அறிவிப்பு பெண் வாக்காளர்களை ஈர்க்கும் என்பதே திமுகவின் கணிப்பு.

அது களத்தில் வேலை செய்ததால் பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்தனரா அல்லது விரும்பிய பொருள் என்ற ஆப்ஷன் மீது ஈடுபாடின்றி ’அதிமுக அறிவிப்புகள்’ ஓகே என்று அதற்கு வாக்களித்தார்களா அல்லது இரண்டுமே வேண்டாம் மாற்றம் தான் வேண்டும், அதை நாம் பல காலமாக திரையில் பார்த்து ரசித்த பிரபல சினிமா முகம் தரலாம் அல்லவா? வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமா என்று வாக்களித்தார்களா என்பது மே 4 தேர்தல் முடிவு சொல்லும்.

எதுவாக இருந்தாலும் பெண் வாக்காளர்களை கவர்வது, அவர்கள் வாக்குகளை பெறுவது என்பது பிரதானக் கட்சிகள், புதிய கட்சிகளின் வியூகமாக இருந்த நிலையில், அதற்கான பலனாக பெண் வாக்கு சதவீதத்தை கொள்ளலாம்.

பிஹார் தேர்தலுக்கு முன்னர், 'முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்' அம்மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 செலுத்தப்பட்டது. மொத்தமாக ரூ.7,500 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்படும் என பிஹார் அரசு தெரிவித்தது. இது தேர்தலில் சிறப்பாக எதிரொலித்தது. பிஹாரில் ஜேடியு - பாஜக வெற்றிக்கு அதுவே வித்திட்டது என ஒட்டுமொத்த ஊடக உலகமும் குறிப்பிட்டது.

இந்நிலையில், பெண் சக்தி தமிழகத்தின் எதிர்காலத்துக்காக எதை தேர்ந்தெடுத்துள்ளது என்பது மே 4 தெரியவரும். அதற்கான முன்னோட்டத்தை மேற்கு வங்க தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடியும் ஏப்.29-ம் தேதி மாலை வெளியாகும் எக்ஸிட் போல்ஸ் ஓரளவுக்கு கட்டியங்கூறும் என எதிர்பார்க்காலம்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

தமிழகத்தில் 84.41% சதவீத வாக்குப்பதிவு - வாக்காளர்கள்... ஆர்வத்துடன் திரண்டனர் - அசம்பாவிதம் எதுவும் இல்லை - மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பதிவு: வெள்ளிக்கிழமை,  ஏப்ரல் 24, 2026, சித்திரை, 11, பாரபவ வருடம் 03:30 AM

சென்னை,

தமிழகத்​தில் இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்​களித்​த​தால், வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்​டி​யுள்​ளது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​த​படி, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் நேற்று ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 14.59 லட்​சம் முதல் தலை​முறை வாக்​காளர்​கள் உட்பட மொத்​தம் 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றிருந்​தனர். இந்​நிலை​யில், தமிழகம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டிருந்த 75,064 வாக்​குச்​சாவடிகளில் வாக்​குப்​ப​திவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்​கியது.

பாது​காப்பு பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர், 83,875 காவல் துறை​யினர், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

வாக்​குச்​சாவடி பணி​யில் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​பட்​டனர். 1.06 லட்​சம் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இயந்​திரங்​கள் பழுது, வாக்​குப்​ப​திவு தாமதம் போன்ற சிக்​கல்​கள் குறை​வாகவே இருந்​தன.

வாக்​குச்​சாவடிகளின் உள்ளே மற்​றும் வெளியே தலா ஒரு கண்​காணிப்பு கேமரா என மொத்​தம் 1.50 லட்​சம் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டு, சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலு​வல​கத்​தில் இருந்து நேரடி​யாக கண்​காணிக்​கப்​பட்​டது.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், திரு​வள்​ளூர் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் பசுமை வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டு, வாக்​காளர்​களை உற்​சாக​மாக வரவேற்​று, மகிழ்ச்​சி​யுடன் வாக்​களிக்க வைத்​தனர்.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை​யாக அடையாளம் காணப்​பட்டு, நுண்​பார்வை​யாளர்​கள் மேற்​பார்​வை​யில், துப்​பாக்​கி ஏந்​திய துணை ராணுவப் படை​யினரின் பாது​காப்​புடன் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. காலை 7 மணிக்கு வாக்​குப்​ப​திவு தொடங்​கு​வதற்கு முன்​பு, அரசி​யல் கட்சி முகவர்​கள் முன்​னிலை​யில் மாதிரி வாக்​குப்​ப​திவு நடத்​தப்​பட்​டது. பின்​னர் மாதிரி வாக்​கு​களை அழித்​து​ விட்​டு, வாக்​குப்​ப​திவு தொடங்​கியது.

காலை முதலே வாக்​காளர்​கள் ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். வெயிலை தவிர்க்​கும் வித​மாக, காலை 7 மணிக்கே முதி​யோர்​கள் அதிக அளவில் வாக்​குச்​சாவடிகளுக்கு வந்து வாக்​கு​களை செலுத்​தினர். சக்கர நாற்​காலி மூலம் முதி​யோர், மாற்​றுத் திற​னாளி​களை அழைத்​துவர தன்​னார்​வலர்​கள் உதவினர். நேற்று முகூர்த்த நாள் என்​ப​தால் பல்​வேறு பகு​தி​களி​லும் புது​மணத் தம்​ப​தி​கள் மணக்​கோலத்​தில் வந்து வாக்​களித்​தனர்.

காலை முதலே வாக்​குப்​ப​திவு

விறு​விறுப்​பாக நடை​பெற்​றது. காலை 9 மணிக்​குள்​ளாக 17.69 சதவீத வாக்​கு​களும், பிற்​பகல் ஒரு மணிக்​குள் 56.81 சதவீத வாக்​கு​களும் பதி​வாகின. குறிப்​பாக, இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து அதிக அளவில் வாக்​களித்​தனர். இதனால், தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்டி பதி​வாகி​யுள்​ளது.

சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநிதி மற்​றும் அவரது குடும்​பத்​தினர், தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக், பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், இளை​ய​ராஜா, ரஜினி​காந்த், கமல்​ஹாசன், அஜித் உள்​ளிட்ட திரை​யுல​கினர் பலரும் வாக்​களித்​தனர்.

சில வாக்​குச்​சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேலும் வாக்​குப்​ப​திவு நீடித்​தது. அசம்​பா​விதங்​கள் எது​வுமின்றி தமிழகம் முழு​வதும் அமை​தி​யாக வாக்​குப்​ப​திவு நடந்து முடிந்​தது. பின்​னர், அரசி​யல் கட்சி முகவர்​கள் முன்​னிலை​யில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சீல் வைக்​கப்​பட்​டு, அந்​தந்த தொகு​தி​க்​கான வாக்கு எண்​ணும் மையத்துக்கு கொண்டு செல்​லப்​பட்​டன.

தமிழகம் முழு​வதும் 63 வாக்கு எண்​ணும் மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அங்கு பாது​காப்பு அறை​யில் (‘ஸ்​டி​ராங் ரூம்’) வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன. இவை சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் 24 மணி நேர​மும் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன. 5 அடுக்கு பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு மையத்​தி​லும் தலா 500 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடைபெறு​கிறது.

எஸ்ஐஆர் பணியால் கிடைத்த பலன்

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.86 சதவீதம் பதிவானது. சென்னை மாவட்டத்தில் 83.09 சதவீதம் பதிவானது.

முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 85.63 சதவீதம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 91.94 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.15 சதவீதம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகின.

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...